புதிய பதிவுகள்2

’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன்

1 month 2 weeks ago
’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார். மேலும், முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக தங்களுடைய பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 400 தமிழ்க் குடும்பங்களே இவ்வாறான இடப்பெயர்வைச் சந்தித்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுடைய சொந்த இடமான முள்ளிக்குளத்தில் மீள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு தமது சொந்த இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அக்காலப்பகுதியில் 150 நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி வாழ ஆரம்பித்தனர். அது நீடிக்கவில்லை. மீள் குடியேறி வெறுமனே ஐந்து வருடங்களிலேயே கடந்த 2007ஆம் ஆண்டு மீளவும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு முள்ளிக்குளம் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து இரண்டு தசாப்த காலங்களை அண்மித்துள்ள நிலையில் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் அயல் கிராமங்களான மலைக்காடு மற்றும் காயாக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மலைக்காடு, காயாக்குழி ஆகிய கிராமங்களில் 250 இற்கும் மேற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் அகதி என்னும் அவல வாழ்வை வாழ்கின்றனர். இது தவிர 175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் மேலும் பல குடும்பங்கள் ஆங்காங்கே சிதறி வாழ்வதாகவும் முள்ளிக்குளம் கிராம மக்கள் முறையிடுகின்றனர். இவ்வாறாக முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய நெற் செய்கைக்குரிய காணிகள், தோட்டக் காணிகள், குடியிருப்புக்காணிகள், நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளடங்கலாக 1500க்கும் அதிகமான ஏக்கர்கள் வனவளத்திணைக்களத்தாலும் கடற்படையாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில் சின்னத்தனக்கன் குளம், பெரியதனக்கன்குளம், பரவெளிக்குளம், பாலடிக்குளம், செட்டியார்குளம், அரக்குளம், புதுக்குளம் உள்ளிட்டவை முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. அதேவேளை, தமிழ் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களும் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளன . இத்தகைய சூழலில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் கிராமத்தை விடுவிப்புச் செய்வதுடன் தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றனர். குறிப்பாக தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த 2017 ஆண்டு காலப்பகுதியில் இரண்டுமாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் பலனாக அப்போதைய ஆளுநர் வருகை தந்து காணிகள் விடுவிப்புச் செய்வதாக உத்தரவாதமளிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் 77 ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளும் மக்களால் துப்புரவாக்கப்பட்டுள்ளன. மக்களால் துப்புரவு செய்யப்பட்ட பகுதிகளைத் தீயிட்டு கொளு த்துவதற்கு கடற்படையினர் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அந்தக் காணிகள் துப்புரவு செய்வதும் கைவிடப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் அந்தக் காணிகளில் மீள் குடியேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன . இவ்வாறாக முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் எவரும் மீள் குடியமர்த்தப்படாத நிலையிலும் அங்கு பாடசாலை இயங்கி வருகின்றது. அங்குள்ள தேவாலயத்திற்கும் மக்கள் சென்று வருகின்றனர். முள்ளிக்குளம் பகுதியில் இயங்கிவருகின்ற முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மலைக்காட்டுப் பகுதியில் வசிக்கின்ற முள்ளிக்குளத்தை சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளே முள்ளிக்குளம் பாடசாலைக்குக் காலையில் சென்று மாலையில் திரும்புகின்றனர். அதேபோல், முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரலோகமாதா தேவாலயத்துக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறாக தமது சொந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போல, சென்று வருகின்ற அவலத்தைச் சுமந்து அகதி வாழ்க்கையை முள்ளிக்குளம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாம் வாழ்ந்த, தவழ்ந்த, விளையாடிய, பயிர்செய்த நிலங்கள் அனைத்தும் கண்முன்னே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்க தமது நிலத்தில் மீள் குடியேற்ற முடியாத நிலையில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் அகதி என்னும் அவல வாழ்வுக்கு முடிவு கட்டப்படவேண்டும். அந்த மக்கள் உடன் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். முள்ளிக்குளம் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/முள்ளிக்குளம்-கிராமத்தை-முற்றாக-அபகரித்து-விட்டனர்/175-364454

2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!

1 month 2 weeks ago
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா! அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது . இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை சனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்” இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுகிறது. இந்நிகழ்வில் சீன தூதுவராலயத்தின் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1446908

கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு!

1 month 2 weeks ago
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக இலங்கையை வந்தடைந்த பயணியிமிருந்தே இந்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடைய அந்தப் பெண் பயணி, தனது பொதிகளில் பாம்புகளை மறைத்து வைத்திருந்தார். https://athavannews.com/2025/1446891

தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு; புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர!

1 month 2 weeks ago
தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு; புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர! பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் . மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- மஹிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள். அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியைத் தரும் நாளாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பைத் தோற்கடித்து 30 வருடகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர் .நாட்டில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட தலைவருக்கு இவ்வாறா நன்றிக்கடன் செலுத்துவது- என்றார். https://newuthayan.com/article/தமிழ்_டயஸ்போராக்களுக்காக_மஹிந்தவின்_மாளிகை_பறிப்பு;

நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி!

1 month 2 weeks ago
நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளார். இதில், CEB உள்ளிட்ட ஒரு குழு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று (11) தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் அசாதாரண நடவடிக்கை இலங்கையில் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி சட்டத்தரணி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://athavannews.com/2025/1446888

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

1 month 2 weeks ago
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக்களித்தார். போல்சனாரோவின் சட்டத்தரணிகள் இந்த தண்டனை அபத்தமானது எனக் கூறியுள்ளதுடன், மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, 2033 வரை அவர் பொதுப் பதவிக்குப் போட்டியிடுவதையும் தடை செய்தது. வெளிநாடு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போல்சனாரோ, இந்த இறுதி கட்ட விசாரணையில் நேரில் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்ப்பின் மூலமாக 70 வயதான போல்சனாரோ, இப்போது தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் துரதிர்ஷ்டவசமான வாய்ப்பை எதிர்கொள்கிறார். அவரது சட்டத்தரணிகள் அவரை சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று வாதிடுவார்கள் – அதே போல் குறைந்த தண்டனைக்கு வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது கடினமாக இருக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இது பொதுவாக ஐந்து நீதிபதிகளில் இருவர் விடுவிக்க வாக்களித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். போல்சனாரோ ஐந்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இவை அனைத்தும் 2022 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றது தொடர்பானது. ஆனால், 2026 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க இது வடிவமைக்கப்பட்டதாக அவர் கடந்த காலத்தில் கூறியிருந்தார். ஏற்கனவே தனித்தனி குற்றச்சாட்டுகளின் பேரில் பொதுப் பதவியில் இருந்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார். சதித் திட்டம் தொடர இராணுவத்திடம் போதுமான ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனவரி 8, 2023 அன்று போல்சனாரோவின் ஆதரவாளர்களால் அரசாங்க கட்டிடங்களைத் தாக்குவதில் மும்முரமாக இருந்தனர். இதன்‍போது சுமார் 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். https://athavannews.com/2025/1446881

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 month 2 weeks ago
முன்பு சிலர் என்னை மகளிர் உலகக் கிண்ண போட்டியை நடாத்தும் படி கேட்டிருந்தார்கள். சிலர் பங்கு பற்றுவதாக சொன்னார்கள். சொன்னவர்கள் இப்பொழுதும் பங்கேற்க விருப்பம் என்றால் நான் நடாத்துகிறேன்

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

1 month 2 weeks ago
ஆம் இன வாதம் நியாயமானதுதான். கறுப்பினத்தவர் மீதுள்ள வெள்ளையின இனவாதம் நியாயமானது. பலதீனர்மேல் இஸ்ரேலியர்களின் இனவாதம் இயல்பானது. உலக நாடுகளின் அமோக ஆதரவுள்ள சிங்களவரின் இனவாதம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலக அரசியல் வரலாறு தெரியாதவர்களால் இதனை உணர முடியாது. அரை நூறாண்டுகளாக மிகப் பெரும் விலை கொடுத்துப் போராடி எல்லாவற்றையும் இழந்து இன்று எங்கு வந்து நிற்கிறோம் பார்த்தீர்களா ?

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

1 month 2 weeks ago
வந்த புதிதில் மேலைத்தேய கழிவறைகளை ஆசிய முறையில் பயன்படுத்த வெளிக்கிட்ட பலரின் அனுபவங்களை சொல்லவா? சறுக்கி விழுந்த அனுபவங்களை எடுத்துரைக்கவா? 😅 அதிலும் ஆரம்ப காலங்களில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் வீடுகளில் இன்றும் கொமட் அருகில் வெறும் கொக்கோ கோலா போத்தில் கண்கொள்ளா காட்சி தருவதை விபரிக்கவா?😂

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 2 weeks ago
ஒருவனை மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என சொல்ல கேள்விப்பட்டுளேன். அதே போல் உடையாரை மாதிரி இன்னொருவன் இந்த குமாரசாமி 🙂 எங்களை மாதிரி யாராவது இங்கே இருக்கின்றீர்களா? இருந்தால் வந்து ஒரு வணக்கம் சொல்லுங்கள்.🤣

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

1 month 2 weeks ago
வேறொரு கோணத்தில் அரசியல் செய்து பாராளுமன்றம் சென்றவர். ஜெனீவாவையும் பார்த்து வரட்டும். என்ன செய்கின்றார் என பொறுத்திருந்து பார்க்கலாம். எத்தனையோ மொள்ளமாரி முடிச்சவிக்கிகள் ஜெனிவா போய் கொக்கரித்து விட்டார்கள். இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்பது என் கருத்து.

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

1 month 2 weeks ago
என்னைப்பொறுத்த வரைக்கும் டொனால்ட் ரம்ப் அவர்களும் ஒரு வித இனவாதிதான். அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. அதிலும் அந்த இனவாதிகளுக்கும் அமோக ஆதரவு உண்டு. ஏன் எதற்கு என்பது பற்றியும் சிந்திக்க வேண்டிய விடயம்.

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

1 month 2 weeks ago
சீனாவை தவிர இந்தியாவை சுற்றியுள்ள எந்த நாடுகள் நிம்மதியாக இருக்கின்றன என நான் யோசிக்கின்றேன்.

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

1 month 2 weeks ago
எந்த சிங்கள இனவாத தலைவர்களை ஈழத்தமிழர்கள் கொண்டாடவில்லை? ஏதோ ஒரு நம்பிக்கை நப்பாசையில் எல்லோரையும் தலைமேல் வைத்து கொண்டாடி விட்டு இன்றும் இலவுகாத்த கிளி போல் காத்திருக்கின்றார்கள்.

டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்திற்காக வான் டெர் லேயனை கடுமையாக விமர்சிக்க நாடாளுமன்றத் தலைவர்கள் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

1 month 2 weeks ago
டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்திற்காக வான் டெர் லேயனை கடுமையாக விமர்சிக்க நாடாளுமன்றத் தலைவர்கள் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஐரோப்பிய ஆணையத் தலைவர் தனது டிரான்ஸ் அட்லாண்டிக் ஒப்பந்தத்தை ஆதரித்த பிறகு ஐரோப்பிய சட்டமியற்றுபவர்களிடமிருந்து கடுமையான சவாலைச் சந்திக்கிறார். பகிர் இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10, 2025 அன்று பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 'ஸ்டேட் ஆஃப் தி யூனியன்' விவாதத்தில் உர்சுலா வான் டெர் லேயன் உரையாற்றுகிறார். | ரொனால்ட் விட்டெக்/EPA செப்டம்பர் 10, 2025 12:34 pm CET அன்டோனியா ஜிம்மர்மேன் மற்றும் கோயன் வெர்ஹெல்ஸ்ட் மூலம் புதன்கிழமை தனது வருடாந்திர யூனியன் உரையில் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த பின்னர், ஐரோப்பிய சட்டமியற்றுபவர்கள், கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மோசமான, ஒருதலைப்பட்ச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக குற்றம் சாட்டினர். "நீங்கள் டிரம்புடன் நியாயமற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது ஐரோப்பா எங்கே இருந்தது?" என்று சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர் இராட்சே கார்சியா பெரெஸ் கேட்டார். வான் டெர் லெயனின் உரைக்கு பதிலளித்த அவர், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளில் 15 சதவீத வரியை ஏற்றுக்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவையும், அதே நேரத்தில் அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மீதான அதன் சொந்த வரிகளை ரத்து செய்வதையும் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அழைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாய சுயாட்சி, "ஒரு கோல்ஃப் மைதானத்தின் கீழ்" புதைக்கப்பட்டுள்ளது என்று கார்சியா பெரெஸ் கூறினார். ஜூலை மாதம் ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரி ரிசார்ட்டில் வான் டெர் லேயன் டிரம்புடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை அவர் குறிப்பிடுகிறார் . கடினமான சூழ்நிலைகளில் செய்யக்கூடிய சிறந்த ஒப்பந்தம் இது என்று வான் டெர் லேயனும் அவரது உதவியாளர்களும் பாதுகாத்துள்ளனர் . இருப்பினும், பல விமர்சகர்கள் இது கூட்டணியை பொருளாதார அடிமைத்தனத்தின் சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும் என்று அஞ்சுகின்றனர் . புதன்கிழமை உரைக்கு முன்னதாக, ஐரோப்பிய சோசலிஸ்டுகள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர் - மற்றவர்கள் ஒப்பந்தத்தை விமர்சிக்க அல்லது குறிப்பிட்ட கவலைகளை வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். பாராளுமன்றத்தின் இடது மற்றும் தீவிர வலது பக்கங்களில், டிரம்புடனான போர் நிறுத்தம் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இடதுசாரிகளுக்கான ஜெர்மன் தலைவர் மார்ட்டின் ஷிர்தேவன், "அதிக வர்த்தகத்துடன் அதிக திறனை எதிர்த்துப் போராடுவது ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியின் நெருப்பில் தீப்பொறிகளை வீசுவது போன்றது" என்று கூறினார். இடது-வலது பைல் ஆன் பசுமைக் கட்சியின் பாஸ் ஐக்ஹவுட் மற்றும் ஐரோப்பாவிற்கான வலதுசாரி பேட்ரியாட்ஸின் ஜோர்டான் பார்டெல்லா இருவரும், ஐரோப்பிய ஒன்றியம் 750 பில்லியன் யூரோக்களுக்கு அமெரிக்க எரிசக்தியை - பெரும்பாலும் புதைபடிவ அடிப்படையிலான - வாங்கும் என்ற வான் டெர் லேயனின் வாக்குறுதியை மிகவும் மாறுபட்ட காரணங்களுக்காக கடுமையாக சாடினர். காலநிலை மாற்றத்திற்கு மத்தியில், இந்தப் பணத்தை ஐரோப்பிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஐக்ஹவுட் வாதிட்டார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்தத் தொகையை இருமுவார்கள் என்று பர்டெல்லா பொய்யாகக் கூறினார். உண்மையில், இந்த எண்ணிக்கை முதலீடுகள் மற்றும் சந்தை முன்னேற்றங்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது, கடினமான ஒப்பந்தங்களை அல்ல. தாராளவாத ரினீவ் ஐரோப்பா குழுவின் தலைவரான வலேரி ஹேயர், தனது மதிப்பீட்டில் குறைவான கடுமையானவராக இருந்தாலும், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை அதிகாரம் மற்றும் சுயாட்சியில் "தொடர்ந்து உறுதியாக நிற்க" வான் டெர் லேயனை வலியுறுத்தினார். டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் விதிகளை மீண்டும் மீண்டும் தாக்கி, அது அமெரிக்க நிறுவனங்களை பாதகமாக ஆக்குகிறது என்று வாதிட்டார். ஐரோப்பிய மக்கள் கட்சித் தலைவர் மான்ஃப்ரெட் வெபர் - வான் டெர் லேயனின் அரசியல் கூட்டாளியும் சக ஜெர்மன் பழமைவாதியுமான - வர்த்தக ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதில் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது, "ஸ்காட்லாந்திற்கு மாற்று என்ன?" என்று கேட்டார். தனது உரையில், வான் டெர் லேயன், ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு சட்டமியற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்தார் . அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மீதான ஐரோப்பிய ஒன்றிய வரிகளை நீக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற அவர்களின் வாக்குகள் தேவைப்படும், இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐரோப்பிய கார்கள் மீதான வரிகளைக் குறைக்கும். "கோடை காலத்தில் நாங்கள் ஒப்புக்கொண்ட ஒப்பந்தம் பற்றி நான் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்," என்று அவர் தனது ஒரு மணி நேர உரையில் கூறினார். "ஆரம்ப எதிர்வினைகளை நான் புரிந்துகொள்கிறேன் ... ஆனால் நாங்கள் பெற்ற விதிவிலக்குகளையும் மற்றவர்கள் மேலே வைத்திருக்கும் கூடுதல் விகிதங்களையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால் - எங்களிடம் சிறந்த ஒப்பந்தம் உள்ளது. எந்த சந்தேகமும் இல்லை." "உலகளாவிய பாதுகாப்பின்மை கடுமையான காலகட்டத்தில் அமெரிக்காவுடனான நமது உறவுகளில் இந்த ஒப்பந்தம் முக்கியமான ஸ்திரத்தன்மையை வழங்குகிறது," என்று அவர் MEPக்களிடம் கூறினார். "அமெரிக்காவுடனான முழு அளவிலான வர்த்தகப் போரின் விளைவுகளைப் பற்றி சிந்தியுங்கள்" இருப்பினும், டிரம்ப் மேலும் கோரத் தயாராக உள்ளார், மேலும் செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவளிப்பதையும், உக்ரைனுக்கு எதிரான அவரது போரை கைவிடுவதற்கும் அழுத்தம் கொடுக்க சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் மீதும் 100 சதவீத வரிகளை விதிக்க வேண்டும் என்று கூறியதாக, பைனான்சியல் டைம்ஸ் மற்றும் பிற செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான் டெர் லேயன் தனது உரையில், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை, ஆனால் ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "எங்களுக்கு கூடுதல் தடைகள் தேவை," என்று அவர் கூறினார், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியை விரைவாக நிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் 19வது சுற்று நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறார். இந்த திட்டம் இந்த வாரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும். https://www.politico.eu/article/parliament-chief-savage-ursula-von-der-leyen-donald-trump-trade-deal/
Checked
Sun, 11/02/2025 - 02:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed