புதிய பதிவுகள்2

“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 09

3 months 2 weeks ago
“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 09 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 09 / 'தம்பபாணி எங்கே ?, விஜயன் எப்போது இலங்கையில் இறங்கினான்? குவேனி யார்?' இலங்கையில் வரலாற்றில், தம்பபாணி என்று அழைக்கப்படும் கடற்கரை நகரம் ஒன்றும் இல்லை. இருப்பினும் இந்தியாவில், தமிழ் நாட்டில், எதிர் கடற்கரையில், தாமரபரணி என்ற நதி இருந்து உள்ளது. தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டின்படி புத்தர் இறந்த நாளில் விஜயனும் அவரது தோழர்களும் இலங்கையில் தரையிறங்கினர். இருப்பினும், இராசாவலியத்தின்படி, புத்தர் இறந்த ஏழாவது நாளில் அவர்கள் இலக்கில்லாமல் அல்லது தெளிவான திசையின்றி நகரத் தொடங்கி, ஒரு வியாழன் அன்று, புத்தர் இறந்த சிறிது சிறிது காலம் கழித்து, இலங்கையில் தரையிறங்கினார்கள். இராசாவலியவில் கொடுக்கப்பட்டுள்ள விவரம், வான சாஸ்திரம் [வானியல்] ரீதியாக விஜயன் தரையிறங்கும் நாளை ஒருவேளை கணிக்க உதவலாம். அப்படி இல்லை என்றால், விஜயன் என்றுமே தரையிறங்கவில்லை. முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேனியும் [குவேணியும் / குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் இராசாவலியின்படி, குவேனிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தனவென்றும், அவள் விஜயனைப் பார்த்த நொடியில் ஒன்று மறைந்து, சாதாரண பெண் போல் இரு மார்பகங்களுடன் தோன்றினால் என்கிறது. இன்னும் ஒரு அமானுஷ்ய நிகழ்வைக் [இயல்பான வாழ்வில் காணாத விடயங்கள்] இங்கு காண்கிறோம். இது திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் மீனாட்சி தேவியிலிருந்து நகலெடுக்கப்பட்டதாக இருக்கலாம்? மீனாட்சி பிறப்பில் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும்; தன்னை மணம் முடிப்பவரை பார்த்தவுடன் நடுவில் இருக்கும் மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் என்ற நிலையில், கயிலை மலையில் சிவன் மீனாட்சியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்தது என இந்து புராணம் கூறுகிறது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க சந்தர்ப்பம் இருக்கிறது என்று தோன்றுகிறது? மேலும் துரத்தப்பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப்பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளப் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது குழந்தை பிறந்து இருந்தால், அந்த வாரிசுகளை, கண்டுபிடித்து கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது? குரூரமான தர்க்கம் என்னவென்றால், துறவி ஆசிரியர்கள் தங்கள் பரம்பரையில், பூர்வீக இரத்தத்தை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை என்பதே, அதனாலதான், குவேனியின் இரண்டு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமல், முற்றாக மறைந்து போகிறார்கள். Part: 09 / where is Tambapanni ?, When Vijaya landed ? Who is Kuveni? It is strange to note that there is no coastal town called Tambapanni in Lanka, however there is a river called Tamaraparani on the opposite coast in the Tamil country in India. Vijaya and his companions landed in Lanka on the day the Buddha died as per both the Dipavamsa and the Mahavamsa. As per the Rajavaliya, however, they were set to drift on the seventh day after the death of the Buddha, and they landed on a Thursday, must be after quite some time of the Buddha’s death. The detail given in the Rajavaliya may help to pin point the arrival of Vijaya to Lanka astronomically, if at all he ever landed! Vijaya did not marry as per the Dipavamsa, but he married twice as per the Mahavamsa and the Rajavaliya. He sent away the first wife, Kuvanna (Kuveni in the Rajavaliya), and the kids from her to marry a royal princess from the Pandya kingdom. Vijaya and Kuvanna must be of human species to have offspring. If two belong to different species then there will not be any offspring from their union. Incidentally, Kuveni had three breasts and one disappeared the moment she saw Vijaya as per the Rajavaliya, another supernormal happening. Incidentally, Vijaya and his companions must have married before their deportation too, as kids were put on one ship and the wives were put on another ship and landed at Naggadipa and Mahilaratrha (Mahiladipaka as per the Mahavamsa) respectively. Vijaya must in fact, may have married thrice, once in his native place and twice in Lanka. They were all forgotten thereafter, a usual practice in the chronicles. Kuveni left with her two kids when Vijaya asked her to leave so that he could marry the Tamil princess from the Pandya kingdom, and her relatives promptly murdered her. Her two kids, the son and the daughter escaped to the hill country, married each other; another incestuous marriage typical of the Lanka chronicles. The two Lanka born kids of Vijaya have simply disappeared into oblivion. The cruel logic is that the monkish authors did not want to acknowledge the native blood in their lineage and simply made them disappear in their story, rather in the chronicles. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 10 தொடரும் / Will Follow

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

3 months 2 weeks ago
இன்று அருண் சித்தாத்தின் அறைகூவல் ஒன்று பாத்து வயிறு கிழிய சிரித்தேன். டக்லஸின் அறைகூவல் மறைய இவர் ஆரம்பித்திருக்கிறார். ஒரு விஷச்செடியிலிருந்து இன்னொரு விஷம் உருவாகும். மூன்றரை லட்ஷம் தமிழரில் இருபத்தைந்து வீதம் புலிகளாம் ஆகவே புலிகள்தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்று சொல்ல முடியாதாம். அப்போ சிங்களம் கொன்ற தமிழர் எத்தனை லட்ஷம்? ஏன் அவர்களை சிங்களம் கொன்றது? புலிகளை அழித்து விட்டோம் என்று கர்சித்துக்கொண்டு இன்னும் ஏன் தமிழர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள்? முஸ்லிம்களின் படுகொலைக்கு நீதிவேண்டி புலம்பெயர் தமிழரை தண்டிக்கப்போகிறாராம். அவர்களின் கொலைக்கு எல்லா ஆதாரங்களுமுண்டாம். சரி, ஆதாரமிருந்தால் ஏன் இதுவரை தோண்டவில்லை? சரியான நிலம் அடையாளம் காணப்படவில்லையாம். நாங்கள் எல்லா ஆதாரம், சாட்சி, பொறுப்பு எல்லாவற்றுடனுமே தோண்ட தொடங்கினோம். அதை நிறுத்தியது யார்? ஏன் அரசோடு ஓத்துஇயங்கிய இவர்களால் அதை செய்ய முடியவில்லை? கோவில் பாடசாலைகளில் கொலை செய்தார்களாம் புலிகள். அப்போ இலங்கை அரசு செய்யவில்லையா? புலிகள் இருக்கும்போது ஏன் இவர் அதை கேட்கவில்லை? அப்போ இவர் எங்கே ஒளிந்திருந்தார்? இப்போ, இவருக்கு வயிறு வளக்க ஒரு தொழில் வேண்டும், அதற்கு ஒரு இயக்கம் வேண்டும், அதற்காக ஒட்டுக்குழுக்கள், கொலைகளை சந்தித்தவர்களை தன்னோடு இணையட்டாம். தான் நீதி வாங்கித்தருவாராம். மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல விளக்கு மாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். இப்போ அனுரா தனக்கு அழைப்பு விடுப்பார் என்று குரல் கிழிய கத்துது. துணுக்காயில் நான்காயிரம் பேரை புலிகள் கொன்றார்களாம், அதற்கான லிஸ்ற் இல்லை இந்த முகவரிடம். முஸ்லிம்கள் எழுபத்திரண்டு பேர் என லிஸ்ற் காட்டுது. வெகுவிரைவில் தன வாயாலேயே கெடப்போகுது. மக்கள் ஒருபோதும் புலிகள் பக்கம் இல்லையாம். மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் எவ்வாறு முப்பது ஆண்டுகள் நீடித்தது? என்ன அறிவாளி? வயிறு வளப்பதற்கு இப்போ ஒரு இயக்கம் தேவைப்படுகிறது இவருக்கு. மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்க வந்து செருப்பால அடி வாங்கியும் புத்தி வரல இதுக்கு. பாப்போம் அனுராவின் பதில் எப்படியிருக்குமென்று. கத்தி கத்தியே மாரித்ததவளை தனக்கு ஆபத்தை வருவிக்குமாம். நீதிக்காக கதைக்கிறானா, இனத்துக்காக கதைக்கிறானா, வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கிறானா? வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளியெல்லாம் கதிகலங்குது. இது கண்டும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முழைத்த காளான் துள்ளிகுதிக்குது. இதுக்கு தமிழரசுக்கட்சியில இடம் கிடைத்திருந்தால்; இதன் நிலையை நினைத்துப்பாருங்கள்! கடவுளாய்ப் பார்த்துத்தான் குதிரைக்கு கொம்பு கொடுக்கவில்லை.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
அவர்கள் செம்மணி புதைகுழியின் குற்றவாளிகளை மறைக்க, காக்க இதை இப்போ கையிலெடுக்கிறார்கள். அவர்கள் யாரையோ குறிவைத்தே, இதை செய்து தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் யார் இதன் சூத்திரதாரிகள் என்பது. எல்லா புதைகுழிகளின் பின்னாலும் ஒரே நிறுவனம். நீங்களே தெரிவிப்பது இவர்களை கொன்றது யாரென்பதை. இலங்கை அரசும் அதனோடு ஒட்டியிருந்த பல உண்ணிகூட்டங்களில் ஒன்றும். எதற்கு அப்போது தமிழ் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர் காய வேண்டியிருந்ததோ அதுவே காரணம்.
Checked
Sat, 11/01/2025 - 23:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed