Aggregator

சிறைக் கைதிகளின் உழைப்பால் 253 மில்லியன் ரூபாய் வருமானம்

3 weeks 4 days ago
2023 ஆம் ஆண்டில் கைதிகள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியளித்ததன் மூலம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. கைதிகளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ததன் மூலம் 2023ஆம் ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகள் பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதுடன், சிறைக் கைதிகள் சிறைச்சாலைக்குள் சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகுவதற்கு உதவுவதாகவும், சிறைக் கைதிகள் தண்டனைக்காலத்தின் பின் சமூகத்துடன் இணைக்கப்படும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 7 கைதிகளில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது, எனவே கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடுத்துவதும் அவர்களது மனோநிலை மேம்பாட்டுக்கு உதவுகிறது. “கைதிகள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள், அவர்கள் தனியுரிமை உணர்வை இழக்கிறார்கள் மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகள் இல்லை, அத்துடன் அவர்கள் சிறையில் இருக்கும் போது சமூக தொடர்புகளை இழக்கிறார்கள். எனவே அவர்கள் விடுவிக்கப்படும் போது சமூகத்துடன் மீண்டும் அனுசரித்து செல்வது கடினமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க அவர்களை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம்” என்றார். https://thinakkural.lk/article/294121

சிறைக் கைதிகளின் உழைப்பால் 253 மில்லியன் ரூபாய் வருமானம்

3 weeks 4 days ago
IMG_9213-150x150-1.jpg IMG_0995-150x150-1.jpg IMG_0577-150x150-1.jpg 81-150x150-1.jpg

2023 ஆம் ஆண்டில் கைதிகள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியளித்ததன் மூலம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கைதிகளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ததன் மூலம் 2023ஆம் ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகள் பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதுடன், சிறைக் கைதிகள் சிறைச்சாலைக்குள் சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகுவதற்கு உதவுவதாகவும், சிறைக் கைதிகள் தண்டனைக்காலத்தின் பின் சமூகத்துடன் இணைக்கப்படும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 7 கைதிகளில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது, எனவே கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடுத்துவதும் அவர்களது மனோநிலை மேம்பாட்டுக்கு உதவுகிறது.

“கைதிகள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள், அவர்கள் தனியுரிமை உணர்வை இழக்கிறார்கள் மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகள் இல்லை, அத்துடன் அவர்கள் சிறையில் இருக்கும் போது சமூக தொடர்புகளை இழக்கிறார்கள். எனவே அவர்கள் விடுவிக்கப்படும் போது சமூகத்துடன் மீண்டும் அனுசரித்து செல்வது கடினமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க அவர்களை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம்” என்றார்.

https://thinakkural.lk/article/294121

2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையில் மாற்றம்!

3 weeks 4 days ago
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதல் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மே 03 ஆம் திகதிவரை நடத்தப்படும் மற்றும் மூன்றாம் கட்ட முதல் பள்ளி தவணை மே 20 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாவது பாடசாலை தவணை ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பள்ளித் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறும் மற்றும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு 2025 ஜனவரி 02 ஆம் திகதி தொடங்கப்படும். 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முடிவடைய உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/294116

2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையில் மாற்றம்!

3 weeks 4 days ago

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மே 03 ஆம் திகதிவரை நடத்தப்படும் மற்றும் மூன்றாம் கட்ட முதல் பள்ளி தவணை மே 20 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை நடைபெறும்.

இரண்டாவது பாடசாலை தவணை ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பள்ளித் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறும் மற்றும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு 2025 ஜனவரி 02 ஆம் திகதி தொடங்கப்படும்.

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முடிவடைய உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/294116

உலக காட்டுயிர் தினம்: மார்ச் 3

3 weeks 4 days ago
உலக காட்டுயிர் தினம்: இருவாச்சி பறவை தன் துணை இறந்துவிட்டால் செத்துவிடுமா? உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் முறை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் உயிர்நாடியான முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் முடிவடைகிறது. 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய வகை காட்டுயிர்கள், தாவரங்கள் மற்றும் பறவைகள் உள்ளன. இதில், சோலைக்காடுகளின் சின்னமாக, இயற்கைச்சூழல் ஆரோக்கியமாக உள்ளதை உணர்த்தும் அடையாளமாக விளங்குகிறது மலை இருவாச்சிப் பறவை. மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பொறுத்தவரையில், மலை இருவாச்சிகளும் (இந்தியன் கிரேட் ஹார்ன்பில்), பெரிய மலபார் சாம்பல் இருவாச்சி (மலபார் பைடு ஹார்ன்பில்), மலபார் சாம்பல் இருவாச்சி (மலபார் கிரே ஹார்ன்பில்), சாம்பல் இருவாச்சி (கிரே ஹார்ன்பில்) ஆகிய நான்கு வகைகள் உள்ளன. இதில், மலை இருவாச்சி தனக்கென பல தனித்துவமான சிறப்புகளைக் கொண்டிருப்பதுடன், இவற்றின் இனப்பெருக்க முறையும், வாழ்வியலும் கேட்போரை மலைக்க வைப்பதைப் போன்று உள்ளது. மலை இருவாச்சியின் வாழ்க்கையில் அப்படி என்ன சிறப்பு? ‘காட்டின் பாதுகாவலன் மலை இருவாச்சி’ பட மூலாதாரம்,GETTY IMAGES மலை இருவாச்சிகள் காட்டின் பாதுகாவலனாக உள்ளதுடன், ஒருவனுக்கு ஒருத்தி என்பது போன்ற வாழ்க்கைமுறையில் பேரன்போடு வாழ்வதாகத் தெரிவிக்கிறார், பறவை ஆய்வாளரும் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் தலைவருமான ரவீந்திரன் நடராஜன். மலை இருவாச்சி குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ரவீந்திரன் நடராஜன், ‘‘மலை இருவாச்சிகள் அதிகமாக சோலைக்காடுகள் போன்ற அடர் காட்டில்தான் வாழ்கின்றன. இவை பழங்கள் முதல் பாம்புகள் வரை சாப்பிடுவதுடன், தனது எச்சம் மூலம் காட்டில் மரங்களைப் பரப்பும் முக்கியப் பணியைச் செய்து வருகின்றன. ஓரிடத்தில் புலியைப் பார்த்தால் காடு எப்படி செழிப்பாக இருப்பதாக நாம் உணர்கிறோம். அதேபோலத்தான் சோலைக்காடுகளின் ஆரோக்கியச் சின்னமாக மலை இருவாச்சிகள் உள்ளன," என்றார். மேலும், ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல், ஒரே இணையுடன் இறுதி வரை வாழ்வதும், பெண் பறவை முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது வரையில் ஆண் பறவை பேரன்புடன் அதற்கு உதவுவதுதான் இதன் சிறப்பு என்றும் விளக்கினார் அவர். "ஆண் மலை இருவாச்சி முதலில் பெண் இருவாச்சிக்கு பழம், பூச்சிகள் போன்றவற்றை வழங்கும். பெண் இருவாச்சி அதில் ஈர்க்கப்பட்டால் மட்டுமே ஆண் பறவையைத் தனது இணையாகத் தேர்வு செய்யும். தேர்வு செய்தவுடன் பல ஆண்டுகள் அல்லது இறுதி வரையில் அந்த ஒரே துணையுடன் அவை அன்பாக வாழ்வது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது." பல ஆண்டுக்காலம் இணைந்து வாழ்ந்த ஆண் அல்லது பெண் பறவை இறந்துவிட்டால், அதன் துணையும் உணவு சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக்கொண்டு மரணிப்பதாக" அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்தப் பழக்கம் சில காலமே இணைந்து வாழ்ந்து பிரியும் சூழல் ஏற்படும்போது இருவாச்சிகளிடம் காணப்படவில்லை என்றும் கூறினார் அவர். இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட செயல்பாடு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டாலும் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறுகிறார் பறவை ஆராய்ச்சியாளர் முனைவர் வெ.கிருபாநந்தினி. அவரது கூற்றின்படி, தமது இனத்தைப் பெருக்குவதற்கான வழிகளையே பரிணாம வளர்ச்சி உயிரினங்களுக்கு அளிக்கிறது. அப்படியிருக்கும் சூழலில் ஒரு பறவை இணையை இழந்த பிறகு தன்னைத் தானே வருத்திக்கொள்ளுமா என்பது சந்தேகத்திற்கு உரியது என்கிறார் அவர். பிரமிக்க வைக்கும் ஆண் பறவையின் அன்பு பட மூலாதாரம்,GETTY IMAGES "பெண் இருவாச்சி தனது ஆண் துணையைத் தேர்வு செய்ததும் தங்கள் காதலை வெளிப்படுத்த, இரண்டும் உயரமாகப் பறந்து தங்கள் அலகுகளைக் கவ்விக்கொண்டு கீழ்நோக்கிப் பறந்து வரும். பிறகு பலமுறை இணைந்தே வானில் பறக்கும். அதன்பிறகுதான் இனப்பெருக்க செயல்முறையைத் தொடங்கும்," என்றும் ரவீந்திரன் விளக்கினார். "இனப்பெருக்கம் முடிந்ததும், மிகவும் உயரமான மரங்களின் பொந்துகளில் 2 – 3 முட்டையிட்டு 30 நாட்கள் வரையில் பெண் பறவை அடைகாக்கும். அந்தப் பொந்துகளில் மரப்பாம்புகள் வருவதைத் தடுக்க, தனது எச்சில் மற்றும் எச்சம், நச்சுத்தன்மையுள்ள காய்களைக் கொண்டு அந்தப் பொந்தை ஆண் பறவை அடைத்துவிடும். அதில் பெண் பறவை தனது அலகை வெளியிடும் அளவிற்கு மட்டுமே ஓட்டையிருக்கும். ‘உள்ளே இருக்கும் பெண் பறவை, முட்டைகளை அடைகாக்கத் தொடங்கியதும் தனது சக்தியைச் சேமிக்கத் தனது சிறகுகளைத் தானே உதிர்த்துவிடும். எங்கும் செல்லாமல் அந்தப் பொந்திலேயே அடைந்திருக்கும் பெண் இருவாச்சிக்கு ஆண் பறவைதான் உணவுகளைக் கொண்டு வந்து ஊட்டிவிடும். இந்தக் காலகட்டத்தில் ஆண் பறவையின் அன்பும், பெண் மற்றும் குஞ்சுகளைக் காப்பதில் அவை செய்யும் அளப்பரிய பணியும்,’’ பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் ரவீந்திரன். படக்குறிப்பு, பறவைகள் ஆய்வாளர் ரவீந்திரன் சோலைக்காடுகள் சுருங்கி வருவது, காட்டில் உயரமான மரங்கள் வெட்டப்படுவது, அடர்காட்டை ஊடுருவி சாலைகள் அமைக்கப்படுவது போன்ற பல்வேரு காரணங்களால் இருவாச்சிகளின் வாழ்விடம் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் தனது கவலையை வெளிப்படுத்தினார் பறவை ஆர்வலர் ரவீந்திரன். "மனிதர்கள் பயணிக்கும் காடுகளில் அயல் தாவரங்கள் உற்பத்தி, வாகன இரைச்சல், கரிம வெளியீடு போன்ற பிரச்னைகளால் அவை பாதிக்கின்றன. மற்றபடி அவற்றின் எண்ணிக்கை குறையாமல்தான் வாழ்ந்து வருகின்றன. "அரிதாகக் காணப்படும் இருவாச்சி, அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் பார்த்தால் அந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் எனவும் பழங்குடியின மக்கள் நம்புகின்றனர். அவற்றை மலைமுழுங்கி எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்,’’ என்றும் குறிப்பிட்டார் அவர். இந்தியாவில் இருவாச்சிகளின் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES உலக அளவில் இருவாச்சி பறவை இனங்கள் அழிந்து வரும் பறவைகளாக, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யு.சி.என்) அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அதிகம் வாழ்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, அருனாச்சல பிரதேசத்தில் இருவாச்சிகள் உள்ளன. கேரளா மற்றும் அருனாச்சல பிரதேசத்தின் மாநிலப் பறவையாக இருவாச்சி அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. இருவாச்சிகளை தங்கள் கலாசாரத்தில் முக்கிய பங்காகக் கருதும் நாகாலாந்து மாநில பழங்குடியின மக்கள், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இருவாச்சி திருவிழாவை நடத்துகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தவிர அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் இமயமலைத் தொடர்களிலும் இருவாச்சிகள் இருப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இயற்கையின் பாதுகாவலனாக, அன்பின் இலக்கணமாகத் திகழும் இருவாச்சிகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் சமீப காலமாக இந்தியா முழுவதிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இருவாச்சிகள் தொடர்பான தகவல்கள் பாடப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளதால், இனிவரும் தலைமுறையினரும் இருவாச்சிகளின் சிறப்பைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவாச்சி பறவைகளுக்கு உள்ள ஆபத்து என்ன? பிபிசி தமிழிடம் பேசிய சாலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய பணியாளரும் பறவைகள் ஆய்வாளருமான முனைவர் வெ.கிருபாநந்தினி, ‘‘மலை இருவாச்சிகள் இனப்பெருக்க நேரத்தில் ஒரே நாளில் பலமுறை பெண் பறவைக்கு உணவு கொடுக்க வேண்டியிருக்கும். இதற்காக கூடு அமைத்துள்ள பகுதிக்கு அருகில்தான் சுற்றித் திரிந்து ஆண் பறவை உணவு சேகரிக்கும். அப்போது, கூட்டுக்கு அருகே ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, அல்லது அப்பகுதியில் மனித தலையீட்டால் பிரச்னை இருந்தாலோ, அவை நீண்ட தொலைவுக்குப் பயணித்து உணவு தேடி வரும். அப்போது ஆண் பறவை வேட்டை மற்றும் இதர காரணங்களால் மரணித்து, பெண் பறவையும் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது,’’ என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘‘சுற்றுலாப் பயணிகளும், காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களும், இருவாச்சிகளின் கூடு இருக்கும் மரத்திற்கு அருகிலேயே செல்வதுடன், அங்கு உணவுப்பொட்டலம், பிளாஸ்டிக் கழிவுகளைப் போடுகின்றனர். அங்கேயே நீண்ட நேரம் அவர்கள் காத்திருப்பதால், இருவாச்சிகள் அச்சுறுத்தலைச் சந்தித்து கூட்டிற்கே வராமல்கூட இருப்பதை நாங்கள் ஆய்வுகள் மூலம் பதிவு செய்துள்ளோம். சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் இருவாச்சிகளின் கூடுகள் இருந்தோல் அந்தப் பகுதிகளிலாவது, வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொண்டு அச்சுறுத்தலைக் குறைக்க வேண்டும். அச்சுறுத்தலின்றி புகைப்படம் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், காட்டின் எல்லைப்பகுதி மற்றும் காட்டினுள் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் அதிக நச்சுத்தன்மையுள்ள, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் நீண்ட கால அடிப்படையில் இருவாச்சிகள் பாதிக்கப்படுகின்றன,’’ என்கிறார் முனைவர்.வெ.கிருபாநந்தினி. https://www.bbc.com/tamil/articles/cerwyzkwl4go

பாகிஸ்தான் சரக்குகளை இந்தியா கைப்பற்றியது ஏன்?

3 weeks 4 days ago
பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பிய சரக்குகளை இந்தியா தடுத்து நிறுத்தியது ஏன்? என்ன நடந்தது? பட மூலாதாரம்,PTI 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் உள்ள சுங்கத் துறையினர், பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்பப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைக் கைப்பற்றினர். அந்தப் பொருள் சீனாவில் இருந்து அனுப்பப்பட்டது. இத்தாலியின் ஜிகேடி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு நவீன கணினி எண் கட்டுப்பாடு (CNC) இயந்திரங்கள் அதில் அடங்கும். பாகிஸ்தான் தனது அணுசக்தித் திட்டத்தில் இந்த மீண்டும் பயன்படுத்தக்கூரிய பொருளைப் பயன்படுத்தலாம் என்று தி இந்து செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, அந்தப் பொருட்கள் தற்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முழு விஷயம் என்ன? தி இந்து நாளிதழ் ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, ஜனவரி 9ஆம் தேதி, சிஎம்ஏ ஜிஜிஏ அட்டிலா என்ற வணிகக் கப்பல் சீனாவில் உள்ள ஷேகு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாகக் கூறியுள்ளது. அந்தக் கப்பலில் மால்டா நாட்டின் கொடி இருந்தது. அது கராச்சி துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது, அங்கு இந்தப் பொருட்கள் காஸ்மோஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளன. அந்தச் செய்தியில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரத்தின்படி, "இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று, கப்பல் மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தை (ஜவஹர்லால் நேரு துறைமுகம்) அடைந்தது, அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அதைக் கைப்பற்றினர்." மற்றோர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, கப்பலில் உள்ள பொருட்கள் பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தி இந்து நாளிதழ் எழுதியுள்ளது, அதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (டிஆர்டிஓ) அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் குழு அதை ஆய்வு செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏவுகணைக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பில் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது என டிஆர்டிஓ அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் 2022இல், இத்தாலியிடம் இருந்து தெர்மோ-எலக்ட்ரிக் பொருட்களை வாங்க பாகிஸ்தான் முயன்று வருவதாகவும், காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. முன்னதாக பிப்ரவரி 2020இல், சீனா ஒரு ஆட்டோகிளேவ் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப முயன்றது, அதை 'தொழில்துறை உலர்த்தி' என்று அழைத்தது. ஹாங்காங் கொடியுடன் பறக்கும் சீனாவின் டாய் சூய் யுன் கப்பலில் இருந்து இது கைப்பற்றப்பட்டது. இந்தக் கப்பல் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஜியாங்யின் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் காசிம் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டது. இதற்குப் பிறகு, பாகிஸ்தான் தனது ஏவுகணைத் திட்டத்துக்கான பொருட்களை சட்டவிரோதமாக கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக கவலை எழுந்தது. சி.என்.சி இயந்திரங்கள் ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பான Wassenaar ஆட்சியின் கீழ் வருகின்றன. 1996இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், சிவிலியன் மற்றும் ராணுவ இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் பெருக்கத்தைத் தடுப்பதாகும். வட கொரியா தனது அணுசக்தி திட்டத்தில் சிஎன்சி இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/clwe39vppglo

கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

3 weeks 4 days ago
அதிக வெப்பம்; நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய அபாயம்! நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை பதிவாகக்கூடும். அதிக வெப்பம் காரணமாக நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்தும் தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/294098

அவசர சிகிச்சைப்பிரிவில் எம்.கே. சிவாஜிலிங்கம்!

3 weeks 4 days ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகை தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/294096

அவசர சிகிச்சைப்பிரிவில் எம்.கே. சிவாஜிலிங்கம்!

3 weeks 4 days ago

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகை தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/294096

லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு லீப் ஆண்டில் மகள் பிறந்தார்

3 weeks 4 days ago
லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. வட கரோலினா பகுதியில் வசிக்கும் பேராசிரியரான காய் சன் பெப்ரவரி 29 அன்று சோலி என்ற மகளை பெற்றெடுத்தார். வட கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் காலேஜ் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக பணிபுரியும் காய் சன், பெப்ரவரி 29 அன்று காலை 5:12 மணிக்குப் பெண் குழந்தையை பிரசவித்தார். https://thinakkural.lk/article/294139

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன்.

3 weeks 4 days ago
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன். தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார்.ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது. தமிழரசு கட்சிக்குள் நடந்த தலைவர் தெரிவில் மட்டும் சுமந்திரன் தோற்கவில்லை. அதன் பின் கட்சிக்குள் நடக்கும் எல்லா விடயங்களிலும் அவர் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை அவரைப் போற்றிப் புகழ்ந்தவர் கம்பவாருதி. வெளிநாடுகளோடு உறவாடவும் வெளிவகாரங்களைக் கையாள்வதற்கும் சுமந்திரனைப் போன்ற சட்டப் புலமையும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னரே அவர் எழுதியிருக்கிறார்.ஆனால் அதே கம்பவாருதி இப்பொழுது தமிழ் மக்கள் சுமந்திரனைப் போன்ற தந்திரசாலிகளை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பொருள்பட எழுதத் தொடங்கிவிட்டார்.அதாவது சுமந்திரனின் ஆதரவு அணிக்குள் இருந்து ஒரு முக்கியமான மதப் பிரமுகர் எதிரணியை நோக்கிப் போகிறார் என்று பொருள். கடந்த செவ்வாய்க்கிழமை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன், நல்லை ஆதீன முதல்வர் போன்ற சைவ சமயப் பெரியார்களும் யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து ஒரு சமாதான முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த செவ்வாய் இரவு 8 மணிக்கு நடக்கவிருந்த அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக் கொண்டிருந்தார்கள்.எனினும் துரதிஷ்டவசமாக சுமந்திரனின் தாயார் இறந்து போனதால்,அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு காட்சி ஊடகத்தின் அதிபர் என்ற கருத்து வெளியில் உண்டு. அவருடைய காட்சி ஊடகம் சிறீதரனுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்தது என்று சுமந்திரன் அணியினால் குற்றம் சாட்டப்படுகிறது. இவர்கள் அனைவரையும் இந்தியத் தூதரகம் இயக்குகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.மிகக்குறிப்பாக சிறீதரனுக்கு ஆதரவாக ஈழத்து சிவசேனைத் தலைவர் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் தமிழக பாரதிய ஜனதா ஆதரவாளர்களால் அல்லது சிவசேனை ஆதரவாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஓர் இளம் கவிஞரும் சிறீதரனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார். தென்மாராட்சியில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து சுமந்திரன் ஆதரவு அணி மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கின்றது. ஆயின்,தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதலில் இந்தியா சிறீதரனின் பக்கம் நிற்கிறது என்று அவர்கள் கூற வருகிறார்களா ?ஒரு பிராந்தியப் பேரரசு கையாளும் அளவுக்கு தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் ஆழமானதாக மாறி வருகிறதா? அப்படி என்றால் கட்சிக்குள் தோன்றியிருக்கும் இரண்டு அணிகளையும் இணைப்பது சாத்தியமில்லையா? கட்சி தொடர்ந்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை தொடருமாக இருந்தால், ஒரு தேர்தல் ஆண்டை-இந்த ஆண்டை -கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகின்றது? இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாகவே அமையலாம் என்று ஊகிக்கலாம். ஏனெனில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய தரப்பு பெரும்பாலும் அடுத்த ஆண்டு அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தும். தொடர்ந்து மாகாண சபை தேர்தலும் உள்ளூராட்சி சபை தேர்தலும் நடக்கக்கூடும். அதாவது இனிவரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன. இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்பது யாருக்கு லாபம்? ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகள் கையெழுத்து வைக்கப்பட்ட பெற்றுக் காசோலையாக ஏதோ ஒரு சிங்கள வாக்காளருக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த முறை அதைவிடக் கேவலமான ஒரு நிலை தோன்றலாம். தமிழ் வாக்குகள் வீதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலையாக மாறக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்ற கருத்தை இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் தலையிட முடியாத அளவுக்கு பலவீனமாக காணப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் இரண்டு தரப்புகளையும் மேசைக்கு கொண்டுவர முயற்சித்தது. அந்த சிவில் சமூகத்தின் தலைவர் முன்பு தமிழரசுக் கட்சியில் இருந்தவர். அவர் இப்பொழுது சுமந்திரனுக்கு சார்பாக இருப்பதாக கருதிய சிறிதரன் அணி அந்த சமரசம் முயற்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தொடர்பாக எழுதலாமா என்று இக்கட்டுரை ஆசிரியர் மேற்படி சிவில் சமூகத் தலைவரிடம் கேட்டபோது அவர் அது பகிரங்கமாக முன்னெடுக்கப்படாத ஒரு நகர்வு என்பதனால் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்பின் வழக்கிற்கு சில நாட்களுக்கு முன் திருமலை ஆயரின் தலைமையில் நடந்த சந்திப்பும் வெற்றி பெறவில்லை. நல்லை யாதீனத்தில் நடக்கவிருந்த சந்திப்பு சுமந்திரன் தாயாரின் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் திருக்கோணமலை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு விவகாரத்தை கட்சிக்குள் சுமூகமாகத் தீர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இத்தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு சிவில் சமூகங்கள் மீண்டும் ஒரு தடவை அவ்வாறான முயற்சியை முன்னெடுக்குமா? தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒப்பிட்டுளவில் பலமான சிவில் சமூகமாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது இந்த விடயத்தில் தலையிடுவதற்குத் தயங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் அந்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சட்டத்தரணிகள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகளுக்கும் சார்பாக நிற்கிறார்கள்.ஒருவர் சிறீதரனுக்கு எதிரான தரப்புக்காக யாழ்ப்பாணத்தில் வாதாடினார்.மற்றொருவர் திருக்கோணமலை வழக்கில் சிறீதரனுக்காக வாதிடுகிறார். ஒரே சிவில் சமூகத்தின் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கட்சிக்குள் மோதலில் ஈடுபடும் இரண்டு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவது எதைக் காட்டுகின்றது? உள்ளதில் பலமான கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. உள்ளதில் பலமான சிவில் சமூகம் சமரச முயற்சிகளில் ஈடுபாட முடியாத ஒரு நிலை.கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் அரசியல் சமூகமும் பலமாக இல்லை; சிவில் சமூகமும் பலமாக இல்லை. பொதுவாக ஒரு நாட்டில் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தில், அரசியல் சமூகம் பலவீனம் அடையும் பொழுது அல்லது தனக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தானே தீர்க்க முடியாத போது சிவில் சமூகங்கள் தலையிடுவதுண்டு. சிவில் சமூகங்கள் பொதுவாக அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்பதுதான் அவர்களுடைய மகத்துவம்.அவர்கள் சமூகத்துக்கு நீதியானது எதுவோ நன்மையானது எதுவோ அதற்காகப் பக்கச் சார்பின்றி,உள்நோக்கம் இன்றி உழைப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உள்ள மகத்துவம். அவ்வாறு நேர்மையாக, நீதியாக இயங்குகின்ற, பக்கம் சாராத சிவில் சமூகப் பிரதிநிதிகள் தலையிடும் பொழுது அதற்கு ஒரு மதிப்பு இருக்கும்.கனம் இருக்கும். அவ்வாறான சிவில் சமூகங்கள் அரசியல் சமூகத்தின் மீது தலையீடு செய்யும் பொழுது அது தாக்கமான விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. அதைத்தான் பேராசிரியர் உயாங்கொட “அரசியல் கட்சிகளின் மீதான சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு” என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு வர்ணித்தது 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் நின்ற சிங்களச் சிவில் சமூகங்களுக்குத் தலைமை தாங்கிய மறைந்த சோபித பேரர் அவர்களின் நினைவுப் பேருரையிலாகும். அவ்வாறு அரசியல் சமூகத்தின் மீது தார்மீகத் தலையீடு செய்யக்கூடிய பலத்தோடு தமிழில் இப்பொழுது சிவில் சமூகங்கள் இல்லை.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நீதிமன்றத்துக்குப் போகாமல் தீர்க்க முடியாது போனமை அதைத்தான் காட்டுகின்றது. சிவில் சமூகங்கள் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.இல்லை.அது தமிழ் மக்களுக்குப் பொருந்தாது. கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் சிவில் சமூகங்கள் ஈடுபடலாம் என்றால், ஏன் கட்சிகளுக்குள் ஏற்படும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையீடு செய்யக் கூடாது? தமிழரசுக் கட்சிதான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கும் பொறுப்பு. அதனால் அக்கட்சி அழிந்து போகட்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறலாமா? தமிழரசுக் கட்சி தான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு பொறுப்பு என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக ஒரு தேர்தல் ஆண்டில் அக்கட்சியை முற்றாகச் சிதைய விட்டால் என்ன நடக்கும்? ஒரு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தேவை என்று எல்லாரும் எழுதுகிறோம். ஆனால் நடைமுறையில் அரங்கில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள் தான். அவற்றின் பிரதான ஒழுக்கம் தேர்தல் அரசியல்தான். இந்நிலையில் பலமான ஒரு மக்கள் இயக்கம் இல்லாத வெற்றிடத்தில், இருக்கின்ற பெரிய கட்சியும் சிதைந்தால் என்ன நடக்கும்? எனவே இப்போது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வுடைய சிவில் சமூகங்கள் அவ்வாறு தலையீடு செய்யவில்லை என்றால், அந்த வெற்றிடத்தில் புதிது புதிதாக சிவில் சமூகங்கள் முளைக்கும். அதை ராணுவப் புலனாய்வுத் துறையும் உட்பட வெளிதரப்புகள் இயக்கும். அப்பொழுது என்ன நடக்கும்? https://athavannews.com/2024/1372014

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன்.

3 weeks 4 days ago
spacer.png தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன்.

தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார்.ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது.

தமிழரசு கட்சிக்குள் நடந்த தலைவர் தெரிவில் மட்டும் சுமந்திரன் தோற்கவில்லை. அதன் பின் கட்சிக்குள் நடக்கும் எல்லா விடயங்களிலும் அவர் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை அவரைப் போற்றிப் புகழ்ந்தவர் கம்பவாருதி. வெளிநாடுகளோடு உறவாடவும் வெளிவகாரங்களைக் கையாள்வதற்கும் சுமந்திரனைப் போன்ற சட்டப் புலமையும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னரே அவர் எழுதியிருக்கிறார்.ஆனால் அதே கம்பவாருதி இப்பொழுது தமிழ் மக்கள் சுமந்திரனைப் போன்ற தந்திரசாலிகளை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பொருள்பட எழுதத் தொடங்கிவிட்டார்.அதாவது சுமந்திரனின் ஆதரவு அணிக்குள் இருந்து ஒரு முக்கியமான மதப் பிரமுகர் எதிரணியை நோக்கிப் போகிறார் என்று பொருள்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன், நல்லை ஆதீன முதல்வர் போன்ற சைவ சமயப் பெரியார்களும் யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து ஒரு சமாதான முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த செவ்வாய் இரவு 8 மணிக்கு நடக்கவிருந்த அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக் கொண்டிருந்தார்கள்.எனினும் துரதிஷ்டவசமாக சுமந்திரனின் தாயார் இறந்து போனதால்,அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு காட்சி ஊடகத்தின் அதிபர் என்ற கருத்து வெளியில் உண்டு. அவருடைய காட்சி ஊடகம் சிறீதரனுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்தது என்று சுமந்திரன் அணியினால் குற்றம் சாட்டப்படுகிறது. இவர்கள் அனைவரையும் இந்தியத் தூதரகம் இயக்குகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.மிகக்குறிப்பாக சிறீதரனுக்கு ஆதரவாக ஈழத்து சிவசேனைத் தலைவர் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் தமிழக பாரதிய ஜனதா ஆதரவாளர்களால் அல்லது சிவசேனை ஆதரவாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஓர் இளம் கவிஞரும் சிறீதரனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார். தென்மாராட்சியில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து சுமந்திரன் ஆதரவு அணி மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கின்றது.

ஆயின்,தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதலில் இந்தியா சிறீதரனின் பக்கம் நிற்கிறது என்று அவர்கள் கூற வருகிறார்களா ?ஒரு பிராந்தியப் பேரரசு கையாளும் அளவுக்கு தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் ஆழமானதாக மாறி வருகிறதா? அப்படி என்றால் கட்சிக்குள் தோன்றியிருக்கும் இரண்டு அணிகளையும் இணைப்பது சாத்தியமில்லையா?

கட்சி தொடர்ந்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை தொடருமாக இருந்தால், ஒரு தேர்தல் ஆண்டை-இந்த ஆண்டை -கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகின்றது?

இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாகவே அமையலாம் என்று ஊகிக்கலாம். ஏனெனில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய தரப்பு பெரும்பாலும் அடுத்த ஆண்டு அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தும். தொடர்ந்து மாகாண சபை தேர்தலும் உள்ளூராட்சி சபை தேர்தலும் நடக்கக்கூடும். அதாவது இனிவரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்பது யாருக்கு லாபம்?

ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகள் கையெழுத்து வைக்கப்பட்ட பெற்றுக் காசோலையாக ஏதோ ஒரு சிங்கள வாக்காளருக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த முறை அதைவிடக் கேவலமான ஒரு நிலை தோன்றலாம். தமிழ் வாக்குகள் வீதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலையாக மாறக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்ற கருத்தை இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் தலையிட முடியாத அளவுக்கு பலவீனமாக காணப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் இரண்டு தரப்புகளையும் மேசைக்கு கொண்டுவர முயற்சித்தது. அந்த சிவில் சமூகத்தின் தலைவர் முன்பு தமிழரசுக் கட்சியில் இருந்தவர். அவர் இப்பொழுது சுமந்திரனுக்கு சார்பாக இருப்பதாக கருதிய சிறிதரன் அணி அந்த சமரசம் முயற்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தொடர்பாக எழுதலாமா என்று இக்கட்டுரை ஆசிரியர் மேற்படி சிவில் சமூகத் தலைவரிடம் கேட்டபோது அவர் அது பகிரங்கமாக முன்னெடுக்கப்படாத ஒரு நகர்வு என்பதனால் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்பின் வழக்கிற்கு சில நாட்களுக்கு முன் திருமலை ஆயரின் தலைமையில் நடந்த சந்திப்பும் வெற்றி பெறவில்லை. நல்லை யாதீனத்தில் நடக்கவிருந்த சந்திப்பு சுமந்திரன் தாயாரின் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் திருக்கோணமலை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு விவகாரத்தை கட்சிக்குள் சுமூகமாகத் தீர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

இத்தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு சிவில் சமூகங்கள் மீண்டும் ஒரு தடவை அவ்வாறான முயற்சியை முன்னெடுக்குமா?

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒப்பிட்டுளவில் பலமான சிவில் சமூகமாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது இந்த விடயத்தில் தலையிடுவதற்குத் தயங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் அந்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சட்டத்தரணிகள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகளுக்கும் சார்பாக நிற்கிறார்கள்.ஒருவர் சிறீதரனுக்கு எதிரான தரப்புக்காக யாழ்ப்பாணத்தில் வாதாடினார்.மற்றொருவர் திருக்கோணமலை வழக்கில் சிறீதரனுக்காக வாதிடுகிறார். ஒரே சிவில் சமூகத்தின் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கட்சிக்குள் மோதலில் ஈடுபடும் இரண்டு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவது எதைக் காட்டுகின்றது?

உள்ளதில் பலமான கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. உள்ளதில் பலமான சிவில் சமூகம் சமரச முயற்சிகளில் ஈடுபாட முடியாத ஒரு நிலை.கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் அரசியல் சமூகமும் பலமாக இல்லை; சிவில் சமூகமும் பலமாக இல்லை.

பொதுவாக ஒரு நாட்டில் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தில், அரசியல் சமூகம் பலவீனம் அடையும் பொழுது அல்லது தனக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தானே தீர்க்க முடியாத போது சிவில் சமூகங்கள் தலையிடுவதுண்டு. சிவில் சமூகங்கள் பொதுவாக அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்பதுதான் அவர்களுடைய மகத்துவம்.அவர்கள் சமூகத்துக்கு நீதியானது எதுவோ நன்மையானது எதுவோ அதற்காகப் பக்கச் சார்பின்றி,உள்நோக்கம் இன்றி உழைப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உள்ள மகத்துவம். அவ்வாறு நேர்மையாக, நீதியாக இயங்குகின்ற, பக்கம் சாராத சிவில் சமூகப் பிரதிநிதிகள் தலையிடும் பொழுது அதற்கு ஒரு மதிப்பு இருக்கும்.கனம் இருக்கும். அவ்வாறான சிவில் சமூகங்கள் அரசியல் சமூகத்தின் மீது தலையீடு செய்யும் பொழுது அது தாக்கமான விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. அதைத்தான் பேராசிரியர் உயாங்கொட “அரசியல் கட்சிகளின் மீதான சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு” என்று வர்ணித்தார்.

அவர் அவ்வாறு வர்ணித்தது 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் நின்ற சிங்களச் சிவில் சமூகங்களுக்குத் தலைமை தாங்கிய மறைந்த சோபித பேரர் அவர்களின் நினைவுப் பேருரையிலாகும். அவ்வாறு அரசியல் சமூகத்தின் மீது தார்மீகத் தலையீடு செய்யக்கூடிய பலத்தோடு தமிழில் இப்பொழுது சிவில் சமூகங்கள் இல்லை.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நீதிமன்றத்துக்குப் போகாமல் தீர்க்க முடியாது போனமை அதைத்தான் காட்டுகின்றது.

சிவில் சமூகங்கள் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.இல்லை.அது தமிழ் மக்களுக்குப் பொருந்தாது. கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் சிவில் சமூகங்கள் ஈடுபடலாம் என்றால், ஏன் கட்சிகளுக்குள் ஏற்படும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையீடு செய்யக் கூடாது?

தமிழரசுக் கட்சிதான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கும் பொறுப்பு. அதனால் அக்கட்சி அழிந்து போகட்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறலாமா? தமிழரசுக் கட்சி தான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு பொறுப்பு என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக ஒரு தேர்தல் ஆண்டில் அக்கட்சியை முற்றாகச் சிதைய விட்டால் என்ன நடக்கும்? ஒரு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தேவை என்று எல்லாரும் எழுதுகிறோம். ஆனால் நடைமுறையில் அரங்கில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள் தான். அவற்றின் பிரதான ஒழுக்கம் தேர்தல் அரசியல்தான். இந்நிலையில் பலமான ஒரு மக்கள் இயக்கம் இல்லாத வெற்றிடத்தில், இருக்கின்ற பெரிய கட்சியும் சிதைந்தால் என்ன நடக்கும்?

எனவே இப்போது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வுடைய சிவில் சமூகங்கள் அவ்வாறு தலையீடு செய்யவில்லை என்றால், அந்த வெற்றிடத்தில் புதிது புதிதாக சிவில் சமூகங்கள் முளைக்கும். அதை ராணுவப் புலனாய்வுத் துறையும் உட்பட வெளிதரப்புகள் இயக்கும். அப்பொழுது என்ன நடக்கும்?

https://athavannews.com/2024/1372014

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 weeks 4 days ago
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே ஆண் : உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் ஆண் : உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் ஆண் : வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் ஆண் : நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் ஆண் : நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது.........! --- உறவுகள் தொடர்கதை ---

களியாட்டத்தில் கலாட்டாவா

3 weeks 4 days ago
யாழில் நடந்த களியாட்டக் குழப்பங்களினால் புதிய டிக்டொக்டர்கள் உருவாகியது நல்லவிடயம்! நல்ல கிரியேட்டிவிட்டியுடன், யாழ்ப்பாண மண்ணில் இருந்தே பலர் வீடியோக்கள் போட்டிருந்தனர்!

மயிலம்மா.

3 weeks 4 days ago
விமர்சனங்கள் ஒரு போதும் குறை இல்லை......அவற்றை வரவேற்கிறேன்......இனி அவற்றை சரி செய்யப் பார்க்கிறேன்......நன்றி சகோதரி........! 😁

மயிலம்மா.

3 weeks 4 days ago
3ஆம் பகுதில் கொஞ்சம் இடை வெளிகள் தேவை என்று நினைக்கிறேன்..இது ஒரு குறை அல்ல.தவறாக நினைக்க வேணாம்.