Aggregator
அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!
தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன.
இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 ஆவது தேசிய மகாநாடு புதிய நிர்வாக தெரிவுகளில் போட்டி பொறாமை சண்டை எதிர்ப்பு விட்டுக்கொடுப்பின்மை என பல தடைகளை்தாண்டி புதிய 9 ஆவது தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முதல்தடவையாக ஒரு தேர்தல் வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார்.
கட்சித் தலைவர்கள்
இதுவரை கட்சித் தலைவர்களாக,
1. சாமுவேல் ஜேம்ஷ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) யாழ்ப்பாணம்
2. குமாரசாமி வன்னியசிங்கம், யாழ்ப்பாணம்.
3. அராலிங்கம் இராஜவோதயம்,-திருகோணமலை.
4. சின்னமுத்து மூத்ததம்பி இராசமாணிக்கம், மட்டக்களப்பு.
5. டாக்டர் இலங்கை முருகேசு விஜயரெத்தினம் நாகநாதன்,யாழ்ப்பாணம்.
6. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்.,
7. இராஜவரோதயம் சம்பந்தன். திருகோணமலை.
8. மாவை சோமசுந்தரம் சேனாதிராசா. யாழ்ப்பாணம் ஆகியோர் இருந்தனர், தற்போது 9.சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் தெரிவாகினார்.
சரித்திரத்தில் கடந்த 74 வருடமும் இடம்பெறாத நிலையில் தலைவர் தெரிவுக்காக பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் வேட்பு மனுக்களை கோரியதன் நிமிர்த்தம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் பொதுச்சபையின் ஆறு இயங்கு நிலை உறுப்பினர்களின் முன்மொழிவுடன் விண்ணப்பங்களை பதில் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டு அவர்களை வடகிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் சென்று பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தார்.
ஏறக்குறைய 375, பொதுச்சபை உறுப்பினர்கள் மட்டும் தலைவரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் ஏன் மாவட்டங்களில் எல்லாம் சென்று பிரசாரம் செய்யவேண்டும் என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்தது.
ஜனநாயகமுறையில் வாக்கெடுப்புஅதற்கு ஜனநாயகம் உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வது ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியான செயல்பாடு என வியாக்கியானம் தலைவர் தெரிவில் போட்டியிட்ட வேட்பாளர்களால் கூறப்பட்டன.
அதேவேளை இவ்வாறான போட்டித்தன்மை பின்னர் பொறாமையாக மாறி இரண்டு அணிகளாக கட்சிக்குள் குழப்பங்களை தோற்றுவிக்கலாம் என்ற கருத்துகளை பல ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சந்தேகங்களுக்கெல்லாம் வேட்பாளராக போட்டியிட்ட சுமந்திரன் அப்படி எதுவும் இடம்பெறாது தேர்தல் முடிவுற்றதும் இருவரும் சேர்ந்து பயனிப்போம் என்பதை வெளிப்படையாக கூறினார். ஆனால் அவரே பின்னர் பொதுச்செயலாளர் பதவி தமக்கு தரப்படவேண்டும் இல்லையேல் தமது அணிக்கு தரவேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு அணிகளாக தமிழ்சுக்கட்சி உள்ளதை நிருபித்தார்.
ஏற்கனவே வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தமது பிரசாரத்தை ஆரம்பித்தவர் சுமந்திரன், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாகவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முழுமையாக செயல்பட்டார் அவரின் பிரசாரம் ஆரம்பித்து ஒரு வாரங்களுக்கு பின்னரே இரண்டாவதாக சிறிதரன் மூன்றாவதாக யோகேஷ்வரன் சிறிதரனுடன் இணைந்து பிரசாரத்தை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர்.
சிறிதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், யோகேஷ்வரன். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன் முழுமையாக பிரசாரங்களை மேற்கொண்டனர்.
யோகேஷ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோதும் கடந்த ஜனவரி 21இல் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வாக்குச்சீட்டில் யோகேஷ்வரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது இதில் ஆச்சரியம் என்னவெனில் யோகேஷ்வனுக்கு எவருமே வாக்களிக்கவில்லை தப்பித்தவறி்யாராவது ஒவருவர் யோகேஷ்வரனன் பெயருக்கு நேரே புள்ளடி இட்டு இருந்தால் அவர் மீது வீண் சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் தாம் சிறிதரனை ஆதரிப்பதாக கூறிவிட்டு தானே தமது வாக்கை அவருக்கே போட்டிருப்பதாக அவர் மீது யாரும் குற்றம் கூறியிருப்பார்கள் நல்லவேளை்அப்படி நடக்கவவில்லை. இதில் இருந்து யோகேஷ்வரன் சிறிதரனை தாம் ஆதரிப்பதாக கூறிய கருத்து முழுமை பெற்றிருந்தது என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.
வாக்கெடுப்பில் பொதுச்சபையில் கலந்துகொண்ட 321, உறுப்பினர்களில் சிறிதரன் 184, வாக்குகளையும், சுமந்திரன் 137, வாக்குகளையும் பெற்று சுமந்திரனை விட 47, மேலதிக வாக்குகளால் சிறிதரன் தெரிவானார். சிறிதரன் தமது பிரசாரங்களில் தாம் கூறிய தமிழ்த்தேசிய வாதி என்பதை நிருபித்தார் பொதுச்சபை உறுப்பினர்களில் 184, பேர் தமிழ்தேசிய கொள்கையை ஆதரித்தனர் எனபதும் 137 பேர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் இந்த வாக்கெடுப்பு தெரிவு மூலம் நிருபணமானது.
ஒருகட்சி தலைவர் தெரிவை மாவட்டங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்யாமல் தலைவர் தெரிவு இடம்பெற்ற ஜனவரி 21இல் குறிப்பிட்ட மூவரையும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கருத்துக்களை கூறவிட்டு பின்னர் வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இரண்டு அணிகள் என்ற கருத்துக்கே இடம்வந்திராது என்பது எனது கருத்து இதை நான் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருந்தேன்.
தலைவர் தெரிவுஅதைவிட தலைவர் தெரிவு இடம்பெற்ற அன்றே பொதுச்செயலாளர் தெரிவும் இடம்பெற்றிருந்தால் இரண்டு அணிகள் என்ற கதையே எழுந்திராது.
வழமையாக கடந்த 16 ஆம் திகதி , தேசிய மகாநாடுகளிலும் தெரிவு ஒருநாளில் தான் இடம்பெற்றது வழமை ஆனால் இந்த முறை ஜனவரி 21 இல் தலைவர் தெரிவும் சரியாக ஒருவாரம் கழித்து ஜனவரி 27இல் பொதுச்செயலாளர் ஏனைய தெரிவுகளுக்கு பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் திகதி ஒதுக்கியதும் ஒரு தவறான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.
இதுவும் சுமந்திரன் பதில் பொதுச்செயலாளரிடமும், நிர்வாகச்செயலாளரிடமும் கூறியதால் அப்படி செய்ததாக பலரின் மத்தியில் கருத்தும் உண்டு ஒரே நாளில் இடம்பெறாமல் ஒருவாரம் பிற்போடப்பட்டு பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெற்றதும் குழப்பநிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. அந்த குழப்பம் போட்டி குரோதம் இன்று வெட்கம் இல்லாமல் நீதிமன்றத்தடைக்கு சென்றுள்ளது.
மத்தியகுழு கூட்டம்கடந்த ஜனவரி 27இல் பொதுச்சபை கூடுவதற்கு முன்னர் மத்தியகுழு கூட்டப்பட்டது மத்திய குழுக்கூட்டம் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தால் அறிவிப்பு(கூட்ட அழைப்பு) விடுக்கப்படவில்லை மகாநாட்டு விழாக்குழு தலைவர் குகதாசனே மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.
உண்மையில் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் சுகவீன காரணமாக அவர் தலைவர் தெரிவிலும் அதன்பின்னர் நடந்த மத்தியகுழு பொதுச்சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை இதுவும் சில முரண்பாடுகளுகளை தோற்றுவித்தது மகாநாடு நடத்தி முடியும்வரை அதற்கான முழும்பொறும் பொதுச்செயலாளரே கையாளவேண்டும் ஆனால் இது யார் கூட்டத்தை நடத்தினார் என்பதே புரியாத புதிராகவே இருந்தது.
இறுதியாக கடந்த ஜனவரி 27 இல் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்திம் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றபோது அவர் மத்தியகுழுவில் பொதுச்செயலாளர் தொடர்பான ஆலோசனைகளை கூறலாம் என கேட்டதற்கு இணங்க நான்(பா.அரியநேத்திரன்) மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்திருந்தேன்.
அதன்பின்னர் ஏற்கனவே நிருவாக செயலாளராக இருந்த குலநாயகம் தான் 1965, தொடக்கம் தமிழரசுகட்சியில் முக்கிய உறுப்பினராக இருப்பதாகவும் கடந்த 2019, மகாநாட்டிலும் தாம் பொதுச்செயலாளர் பதவி கேட்டு தரப்படவில்லை இந்தமுறை தமக்கு தரவேண்டும் என குறிப்பிட்டார்.
அதன்பின்னர் சுமந்திரன் தம்மை தலைவர் சிறிதரன் சிரேஷ்ட தலைவராக செயல்படுமாறு கேட்டதாகவும் தாம் அந்த பதவியை ஏற்கவில்லை ஆனால் தற்போது இரண்டு அணிகள் உள்ளன சிறிதரன் அணி , சுமந்திரன் அணி என உள்ளது தலைவராக சிறிதரன் உள்ளதால் அவருக்கு எதிராக போட்டியிட்ட தமக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கினால் இரண்டு அணிகளையும் சமாளித்து ஒற்றுமையாக கட்சியை முன்னகர்த்தலாம் என்ற கருத்தை தெரிவித்தார்.
அடுத்ததாக கொழும்பு கிளை உறுப்பினர் இரத்தினவேல் தமது கருத்தில் வடக்கை சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்தால் கிழக்கை சேர்ந்தவர் பொதுச்செயலாளராக இருப்பது நல்லது அதனால் குலநாயகமும், சுமந்திரனும் வடக்கை சேர்ந்தவர்கள் விட்டுக்கொடுத்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பொதுச்செயலாளராக தெரிவது நல்லது என்ற கருத்தை கூறினார்.
இதன் பின்னர் மீண்டும் சுமந்திரன் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளன அதில் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன். அல்லது மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், அல்லது அம்பாறை மாவட்ட தலைவர் கலையரசன் இந்த மூவரில் ஒருவரை நியமித்தால் இரண்டு அணிகள் என்ற பிரச்சனை எழாது என்ற கருத்தை கூறினார்.
இதன்பின்னரே புதியதலைவர் சிறிதரன் ஶ்ரீநேசனிடம் அவருடைய இருக்கைக்கு சென்று குகதாசனுக்கு ஒருவருடம் விட்டுக்கொடுக்குமாறு கேட்டார் அதை பெரும் தன்மையாக ஶ்ரீநேசனும் சம்மதித்தார் ஆனால் ஒருவருடம் வரையறை செய்த விடயத்தை பொதுச்சபையில் சிறிதரன் கூறவில்லை.
பொதுச்சபையில் பெரும்பாலானவர்கள் குகதாசனை பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை இதனால் சண்டை தகராறு குழு குழப்பம் அடைந்து பின்னர் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கேட்டபோது ஒரு கட்டத்தில் பழைய தலைவர் மாவை சேனாதிராசா வாக்கெடுப்பு மறுநாள் 28ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்தார். அதனால் சில பொதுச்சபை உறுப்பினர்கள் வெளியேறினர் எஞ்சிய பல உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அடம்பிடித்தனர்.
இதனை ஏற்ற தலைவர் மாவை சேனாதிராசா இப்போது பொதுச்செயலாளருக்கான இரகசிய வாக்கெடுப்பை பதில் செயலாளர் இல்லாத காரணத்தால் உப செயலாளரான சுமந்திரன் நடத்துவார் என கூறினார்.
சுமந்திரன் பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பை தவிர்த்து மத்தியகுழுவில் எடுத்த தீர்மானத்தை ஏற்பவர், எதிர்பவர்கள் என கூறி கையை உயர்த்தும் வாக்கைடுப்பை நடத்தி மேடையில் நின்று அவரே கணக்கெடுத்தார் அந்த எண்ணிக்கை 112, பேர் ஏற்பதாகவும்,104, பேர் எதிர்கதாகவும் முடிவை அறிவித்துவிட்டு சென்றார் அதன் பின்னர் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட தலைவர் மாவைசேனாதிராசா மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார்.
இந்த சிக்கல் நிலை கடந்த ஜனவரி 27 தொடக்கம் கடந்த பெப்ரவரி 11, வரை தொடர்தன மீண்டும் பொதுச்செயலளர் பதவி இரகசிய வாக்கெடுப்பில் நடத்தவேண்டும் என சிறிதரன் அணியை சேர்ந்தவர்களும், நடத்த கூடாது என சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களும் வாதப்பிரதிவாதங்களும் சமூகவலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகளும் தொடர்ந்தன.
புதியதலைவராக தெரிவான சிறிதரன் தமது தலைவர் பதவியை முறைப்படி மகாநாட்டில் பதவி ஏற்று கட்சியை இயங்கு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதாலும் பழைமையான தமிழரசுக்கட்சியை தொடர்ந்தும் ஒற்றுமையாக முன்கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் கடந்த 11ஆம் திகதி வவுனியாவில் பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த சத்தியலிங்த்தின் வீட்டில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன், திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன், மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாளஷ் நிர்மலநாதன், வவுனியா மாவட்ட தலைரும் பதில் பொதுச்செயலாளருமான சத்தியலிங்கம், புதிய தலைவர் சி.சிறிதரன் ஆகிய ஏழுபேரும் பல மணிநேரம் கலந்துரையாடி வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஒரு இணக்கபபாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டு அடிப்படையிலேயே 19ஆம் திகதி மாநாடு நடைபெற இருந்தது.
அந்த இணக்கப்பாடானது முதல் ஒருவருடம் திருகோணமலை ச.குகதாசனும், மறு வருடம் மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனும் பொதுச்செயலாளராக பணிபுரியவது என இணக்கம் காணப்பட்டது.
இந்த இணக்கத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜனவரி 27ஆம் திகதிஒத்திவைக்கப்பட்ட 17ஆவது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு 19 ஆம் திகதி மீண்டும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறிதரனுக்கு எதிரான அணியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றமை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் அதற்கு துணைபோனவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறுவதை காணலாம்.
தந்தை செல்வா 1949 இல் தமிழரசுகட்சியை ஆரம்பித்து அவருடைய வழியை தொடர்ந்து பின்னர் தலைவராக செய்பட்ட ஏனைய தலைவர்களான கு.வன்னியசிங்கம், அ.இராஜவோதயம் சி.மூ.இராசமாணிக்கம், இ. வ நாகநாதன், அ.அமிர்தலிங்கம். இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா. ஆகியோரும் கட்சி உபவிதிகளுக்கு அப்பால் சில விடயங்களை கட்சி நலன் கருதி சம்பிரதாயம், விட்டுக்கொடுப்பு, சமூகநலன், பிரதேசநலன் என்பவற்றை அனுசரித்து தமிழரசுக்கட்சியை பாகுபாடின்றி ஒற்றுமையாக கடந்த 74, வருடங்கள் ஒரு தமிழ்தேசிய விடுதலை அரசியல் கட்சியாக தமிழ் மக்கள்மத்தியில் பிழவு படாமல் கட்டிக்காத்தனர். அவர்கள் தலைவர்களாக இருந்த வேளையில் நீதிமன்றம் தடை சட்டம் என எவருமே கட்சியை மீறி செல்லவில்லை.
தமிழர் விடுதலைக்கூட்டணிஆனால் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பு மூலமாக புதிதாக தற்போது தெரிவான தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவாகி அடுத்த கட்ட நடவடிக்கையை ஒற்றுமையாக முன்எடுக்கும் ஆயத்தங்களை இணக்கப்பாடுடன் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சக்திகள் பொறாமையினால் தடை உத்தரவை பெற்றனர்.
தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனமானது கடந்த 1976, மே,14 இல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும்போது அவர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை கலைத்துவிட்டு அல்லது செயல் இழக்க வைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பிக்கவில்லை தமிழரசுக்கட்சியை அப்படியே வைத்துவிட்டே தனியாக அடுத்த கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை உதயசூரியன் சின்னத்துடன் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 1977, பொதுத்தேர்தலை சந்தித்து பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை அந்த கட்சி தனித்துவமாக்செயல்பட்டது மட்டுமின்றி பல தேர்தலகளை சந்தித்தது.
அதனால் தான் 2001இல் தமிழ்ததேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது தமிழர் விடுதலை கூட்டணிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இருந்தது.2001 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டது.
ஆனால் அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் துரோகத்தால் 2004 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டணியில் தேர்தல் கேட்க முடியாமல் ஆனந்த சங்கரியார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றதனால் 2004, பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் தேர்தலை சந்திக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைவர் கட்டளை இட்டு இன்று வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழினத்தின் தாய்க்கட்சியாக செயல்படுகிறது.
2004 இல் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தை இப்போது 2024 இல் தமிழரசுக்கட்சியில் உள்ள கறுப்பாடு ஒன்றின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ளது. அந்த கறுப்பாடு யார் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் அதை நான் குறிப்பிடவில்லை தயாரிப்பு, இயக்கம், நெறியாழ்கை, கதாநாயன், வில்லன் என ஒரங்க நாடகமாக இது தயாரிக்கப்பட்டு அரங்கேறியுள்ளது.
பவள விழாதந்தை செல்வா 1976 இல் எடுத்த தீர்க்கதரிசன்முடிவு தமிழர் விடுதலை கூட்டணி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியபோது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இருந்ததமையால்த்தான் 2004ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி கைகொடுத்தது.
கடந்த 1949, டிசம்பர்,18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எதிர்வரும் 2024, டிசம்பர்,18இல் 75 ஆவது பவள விழா நாளாகும். இந்த பவளவிழா ஆண்டில் 17ஆவது தேசிய மகாநாட்டில் ஒன்பதாவது புதிய தலைவராக பதவி ஏற்று தலைமை பேருரையாற்றும் 55, வயதுடைய சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது அது இப்போது தடை பட்டாலும் விரைவில் தர்மம் வெல்லும்.
https://tamilwin.com/article/ilangai-tamil-arasu-party-article-1708512862
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!
பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்
பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சிஇது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும்.
சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது.
இந்தத் தொகையில் உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு முதலீட்டாளர் கேட்டிருந்தார். அரச தலைமை மதிப்பீட்டாளரிடம் கோரிக்கை மனு அளித்து, பின்னர் அவர்கள் மீண்டும் அரசின் மதிப்பீட்டு தொகையை உறுதி செய்துள்ளனர். அதன்படி செயல்படுமாறு முதலீட்டாளருக்கு தெரிவித்துள்ளோம்.
பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அந்நிய கையிருப்பு பற்றாக்குறைதான் நம் நாட்டின் முக்கிய பிரச்சினை.
கோவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்தினர். போராட்டத்தால், முதலீடு வராமல் நின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம். ஆனால் தற்போது இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருகிறார்கள். அவர்கள் விரும்பும் செயல்முறையை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
https://tamilwin.com/article/sri-lanka-government-income-1708783865
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்
சீனா தயாரிக்கும் கிரேன்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுவது ஏன்?
சீனா தயாரிக்கும் கிரேன்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுவது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார்.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவின் பைடன் அரசாங்கம், உள்நாட்டிலேயே கிரேன்களை தயாரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய்) செலவிடவுள்ளதாக கூறியது.
மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் தொடர்பான சைபர் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க கடலோர காவல்படை புதிய அறிவுறுத்தல்களை வெளியிடும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்தது.
கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், துறைமுகங்களில் கொள்கலன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வது, கப்பல்களில் அவற்றை ஏற்றி இறக்குவது போன்ற பணிகளுக்கு கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 'டவர் கிரேன்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
சர்வதேச வர்த்தகத்தில் பணிகளை விரைவுபடுத்த இத்தகைய ராட்சத கிரேன்களுக்கான இடம் இன்றியமையாதது. சமீப காலங்களில், தானியங்கி கிரேன்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை தங்களின் வேலையை விரைவாக செய்து முடிக்கின்றன.
ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலக சந்தையில் கிரேன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருந்தது. ஜெர்மனி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் இருந்தன.
பட மூலாதாரம்,WWW.FMPRC.GOV.CN
மாவோ நிங்
பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் சீனாவில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தேச பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார்.
"தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்துவதையும், சீன தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்றார்.
"பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்னைகளை ஆயுதமாக பயன்படுத்துவது என்பது சர்வதேச அளவில் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆபத்தானது என்பதோடு பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று கூறிய அவர், சந்தை பொருளாதாரத்தின் கோட்பாடுகளையும் நியாயமான போட்டிகளையும் அமெரிக்கா மதிக்க வேண்டும். சீன நிறுவனங்கள் செயல்பட நியாயமான, பாரபட்சமற்ற சூழலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சீன நிறுவனங்களின் நலன்களுக்காகவும் அவற்றின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் சீன தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மாவோ நிங் கூறியுள்ளார்.
ராட்சத கிரேன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருந்தாலும், சீன கிரேன்களின் பயன்பாட்டை நிறுத்துவது உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
பட மூலாதாரம்,CAROLINE BREHMAN/EPA-EFE/REX/SHUTTERSTOCK
சமீபத்தில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தி ஒன்றில், பைடன் நிர்வாகம் உள்நாட்டிலேயே கிரேன்கள் தயாரிக்கப் பல பில்லியன் டாலர்களை (பல நூறு கோடி ரூபாய்கள்) முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று கூறியிருந்தது.
இதற்கிடையே, அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பைடன் நிர்வாகம் அறிவித்தது. இந்த வாரம், பிப்ரவரி 21 அன்று, பைடென் நிர்வாகம் அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தை அறிவித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் 20 பில்லியன் டாலர்களை (1.65 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சீன கிரேன்கள் தொடர்பான சைபர் பாதுகாப்பு குறித்த கடல் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை அமெரிக்க கடலோர காவல்படை வெளியிடும் என்றும் வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தகைய கிரேன்களின் உரிமையாளர்களும் அதனை இயக்குபவர்களும் புதிதாக வெளியிடப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதற்கேற்ப கிரேன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்களில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நவீன மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அமெரிக்கா அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேன்களைப் பயன்படுத்த விரும்புவதாக சீனாவின் அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டது.
கடந்த ஜனவரி மாதம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, 'சீனாவால் அச்சுறுத்தல் என்று சில அரசியல்வாதிகள் பூதாகரமாக கூறி வருகிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் தேச பாதுகாப்பு என்ற பெயரில் சீனாவில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே' என்று கூறியதாகவும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
இசட்.பி.எம்.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிரேன்களை ட்ரோஜன் ஹார்ஸ் உடன் ஒப்பிட்டு அவற்றில் கொள்கலன்களின் சேருமிடத்தை பதிவு செய்து கண்காணிக்கும் அதிநவீன சென்சார்கள் உள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் பெண்டகன் அதிகாரிகள் சிலர் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டதாகவும் தனது செய்தியில் குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது.
ஷாங்காய் ஜினஹாவ் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (ZPMC) என்பது துறைமுகங்களுக்கான கிரேன்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கிரேன் உற்பத்தி நிறுவனமாகும். இந்த சீன நிறுவனம் சுவிஸ் நிறுவனமான எபிபி உடன் நெருக்கமாக செயல்படுகிறது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிரேன்களில் எபிபி நிறுவனத்தின் கருவுகளை பொருத்தி அனுப்புகிறது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை இந்த இரண்டு நிறுவனங்களின் பணியின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருகின்றன.
சீ ட்ரேட் மேரிடைம் நியூஸ் (Seatrade Maritime News) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 'நாங்கள் பல நாடுகளுக்கு கிரேன்களுக்கான மென்பொருளை வழங்குகிறோம், சீனா உட்பட உலகின் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிரேன்களில் அவற்றை நிறுவுகின்றன. அனைவருக்கும் ஒரேமாதிரிதான் வேலை செய்கிறோம்' என எபிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜப்பானின் மிகப்பெரிய துறைமுகமான நகோயாவில் பணம் பறிக்கும் நோக்குடன் ஒரு இணைய தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக துறைமுகத்தின் பணிகள் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கன்டெய்னர்கள் இந்த துறைமுகம் வழியாக செல்கின்றன.
இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் கடல்சார் தொழில் குறித்து கவலை தெரிவித்ததோடு, சைபர் தாக்குதலை எதிர்கொள்ள இந்தத் தொழில் முழுமையாக தயாராக இல்லை என்று கூறினர்.
வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட 200 கிரேன்கள் அமெரிக்காவில் உள்ளதாகவும் இது அமெரிக்காவில் உள்ள மொத்த கிரேன்களின் எண்ணிக்கையில் 80% என்றும் என்.பி.ஆர் ஊடகம் கூறுகிறது.
கடலோர காவல்படை சைபர் செக்யூரிட்டி கமாண்டின் தலைவரான அட்மிரல் ஜே வான் கருத்துப்படி, தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும் என்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. கடலோர காவல்படை அவற்றின் பாதுகாப்பை சரிபார்த்து வருகிறது, மேலும் அவை தொடர்பாக சில விதிகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
சி.என்.என் வெளியிட்ட செய்தி ஒன்றில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழுவிடம், 'சீன ஹேக்கர்கள் அமெரிக்க உள்கட்டமைப்பில் வலுவான பிடிப்பை கொண்டிருக்கிறார்கள், எனவே, அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்க குடிமக்களுக்கு அழிவையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்' என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, விநியோகச் சங்கிலி சீரானது, கட்டுமானத் துறையில் ஏற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பு போன்றவை காரணமாக கிரேன்களின் தேவை அதிகரித்தது. ஜப்பான், சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவை உலகின் மிகப்பெரிய கிரேன் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. 2022-இன் தரவுகளின்படி, கிரேன்கள் இறக்குமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. சுரங்கத் தொழில் மற்றும் நகரமயமாக்கல் அதிகரிப்பு போன்றவை காரணமாக அந்நாட்டில் கிரேன்களுக்கான தேவை அதிகரித்தது. 2022-இல் அமெரிக்கா $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள கிரேன்களை வாங்கியது.
அதே காலகட்டத்தில் இந்தியா 700 மில்லியன் டாலர் (சுமார் 5,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள கிரேன்களையும், ஜெர்மனி 600 மில்லியன் டாலர் ( சுமார் 4,900 கோடி ரூபாய் ) மதிப்பிலான கிரேன்களையும் வாங்கியது.
எனினும் 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கிரேன் இறக்குமதியில் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.
ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்?
240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு கண்டுபிடிப்பு!
240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு கண்டுபிடிப்பு!
சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் .
ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப் பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது .
இந்த விலங்கு அறிவியல் ரீதியாக "டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்" என்று அழைக்கப்படுகிறது.