Aggregator

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை விரைவில் திறப்பு

1 month 3 weeks ago
ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறப்பு Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 04:45 PM எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கையில் முதல் முறையாக தீர்வையற்ற கடை கொழும்பு துறைமுக நகரத்தில் (Colombo Port City) திறக்கப்பட உள்ளது. இதனை, இலங்கையின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் அமைப்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அதில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறக்கப்படும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176778

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை விரைவில் திறப்பு

1 month 3 weeks ago
ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறப்பு

Published By: DIGITAL DESK 3   19 FEB, 2024 | 04:45 PM

image
 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கையில் முதல் முறையாக தீர்வையற்ற கடை  கொழும்பு துறைமுக நகரத்தில்  (Colombo Port City) திறக்கப்பட உள்ளது.

இதனை, இலங்கையின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் அமைப்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

அதில், எதிர்வரும் ஏப்ரல் மாதம்  கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை  திறக்கப்படும் குறிப்பிட்டுள்ளது.Capture.JPG

https://www.virakesari.lk/article/176778

தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

1 month 3 weeks ago
மன்னாரில் 10 வயது சிறுமி கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 03:49 PM மன்னார், தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தினர். இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (19) பொலிஸாரினால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் இதன்போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர். விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/176772

மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - லங்காலோகய தீர்மானம்

1 month 3 weeks ago
மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேண்டுகோள் விடுக்க லங்காலோகய தீர்மானம் Published By: RAJEEBAN 19 FEB, 2024 | 03:40 PM மாகாணசபைமுறையை நீக்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் முன்வைக்கவுள்ளதாக லங்காலோகய என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தென்மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவின் மகன் பசன்ட யாப்பா அபயவர்த்தன தலைமையிலான அமைப்பொன்றே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. லங்காலோகய என்ற அமைப்பு மாகாண சபை முறையை நீக்கிவிட்டு மாவட்ட சபைகளை ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளது. பிரதேச சபைகளை வலுப்படுத்தும் யோசனையையும் இந்த அமைப்பு முன்வைத்துள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளோம் என தெரிவித்துள்ள பசன்ட யாப்பா அபயவர்த்தன மாவட்ட சபைகளை உருவாக்குங்கள் பிரதேசசபைகளை வலுப்படுத்துங்கள் என கோரிக்கை விடுக்க இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட அமைச்சர்களை நியமிக்கவேண்டும் இதன் காரணமாக மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகள் வெள்ளை யானைகள் அவற்றினால் 1988 முதல் 7000பில்லியனை வீணடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளை தொடரவேண்டிய தேவையில்லை அவசியமில்லை வடக்கில் எவரும் மாகாணசபைகளுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தலை நடத்துமாறு இந்தியா கூட அழுத்தம் கொடுக்கவில்லை இவ்வாறான சூழ்நிலையில் மாகாணசபைகளை தொடரவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176771

மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - லங்காலோகய தீர்மானம்

1 month 3 weeks ago
மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேண்டுகோள் விடுக்க லங்காலோகய தீர்மானம்

Published By: RAJEEBAN   19 FEB, 2024 | 03:40 PM

image

மாகாணசபைமுறையை நீக்கவேண்டும் என்ற யோசனையை  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் முன்வைக்கவுள்ளதாக லங்காலோகய என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவின் மகன் பசன்ட  யாப்பா அபயவர்த்தன தலைமையிலான அமைப்பொன்றே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

லங்காலோகய என்ற அமைப்பு மாகாண சபை முறையை நீக்கிவிட்டு மாவட்ட சபைகளை ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளது.

பிரதேச சபைகளை வலுப்படுத்தும் யோசனையையும் இந்த அமைப்பு முன்வைத்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் மாகாண சபை முறையை நீக்கவேண்டும்  என்ற யோசனையை முன்வைக்கவுள்ளோம் என தெரிவித்துள்ள  பசன்ட  யாப்பா அபயவர்த்தன மாவட்ட சபைகளை உருவாக்குங்கள் பிரதேசசபைகளை வலுப்படுத்துங்கள் என கோரிக்கை விடுக்க இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அமைச்சர்களை நியமிக்கவேண்டும் இதன் காரணமாக மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் வெள்ளை யானைகள் அவற்றினால் 1988 முதல் 7000பில்லியனை வீணடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளை தொடரவேண்டிய தேவையில்லை அவசியமில்லை வடக்கில் எவரும் மாகாணசபைகளுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு இந்தியா கூட அழுத்தம் கொடுக்கவில்லை இவ்வாறான சூழ்நிலையில் மாகாணசபைகளை தொடரவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176771

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

1 month 3 weeks ago
இப்படியொரு லூப் ஹோல் 193௦களில் இருந்தே இருக்கிறது இதில் அதிக லாபம் பார்த்தவர்கள் காங்கிரஸ் கூட்டம் ஏன் தீம்கா கூட கடந்த தேர்தலுக்கு 6௦௦கோடிக்கு மேல் கடன் பத்திரங்களை பெற்றுள்ளது எல்லா கட்சியும் இப்படித்தான் தேர்தல் நிதியை சட்ட ரீதியாக சேர்த்து தேர்தலுக்கு சிலவளிப்பது உண்டு இதில் கட்சிக்கு எவ்வளவு சேந்து அந்த காசை எவ்வளவு சிலவளித்தார்கள் என்ற விபரம் தேர்தல் ஆணையகத்துக்கு முழுமையாக காட்ட தேவையில்லை ஏன் நீதி மன்றத்துக்கு கூட உரிமையில்லை என்கிறார்கள் .இதை சீமான் போன்றவர்கள் சுட்டிக்காட்ட அல்ல உபயோக தொடங்க தேசிய மாநில டைனசோர்கள் விழித்து கொண்டு அலறுகின்றனர் விடயம் அவ்வளவுதான் .

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா குழு : மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன் ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன் குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா.......! --- மானூத்து மந்தையில --- (எனது அறிவு குறைந்ததற்கு நான் சின்னனில நிறைய ஆட்டுப்பால் குடிச்சதும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று இப்ப தெரியுது).

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

1 month 3 weeks ago
ஐ.பி.எல். கனவு அணிக்கு டோனி கெப்டன் - முன்னாள் வீரர்கள் தேர்வு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு டோனி கெப்டனாக தேர்வாகி இருக்கிறார். அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வருமாறு:- டோனி (கெப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா. https://thinakkural.lk/article/292421

போட்டி நிறுவனத்தில் சேருவதை தடுக்க ஊழியருக்கு “இன்ப அதிர்ச்சி” தந்த கூகுள்

1 month 3 weeks ago
இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் “கூகுள் தேடல் இயந்திரம். கடந்த 2022 இறுதியில் தோன்றிய “ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்” (Artificial Intelligence) எனும் “செயற்கை நுண்ணறிவு” தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022இல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், “பெர்ப்லெக்சிடி ஏஐ” (Perplexity AI). பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன “தேடல்” (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது இராஜினாமாவை சமர்ப்பித்தார். ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது. ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது. இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. பணிநீக்கங்களை பொறுத்த வரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது. இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார். கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர். https://thinakkural.lk/article/292417

அரச மருத்துவமனைகளில் மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு - தொழிற்சங்கம்

1 month 3 weeks ago
Published By: RAJEEBAN 19 FEB, 2024 | 01:12 PM அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சை உபகரணங்கள் உட்பட மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களிற்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. உணவுக்குழாய் ஸ்டென்ட் போன்றவற்றிற்கும் பற்றாக்குறை நிலவுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளிற்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மிகவும் அவசியமான சத்திரகிசிச்சை உபகரணங்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது 3800 முதல் 5800 வரையிலான உபகரணங்கள் முற்றாக முடிவடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவசர சேவைகளிற்கு தேவையான மருத்துவஉபகரணங்களும் பற்றாக்குறையாக உள்ளன என மேலும் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக கடும் கரிசனை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அதிகாரியொருவர் உபகரணங்கள் இன்மையால்சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டதாக உத்தியோகபூர்வமான தகவல்கள்எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176749

அரச மருத்துவமனைகளில் மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு - தொழிற்சங்கம்

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN   19 FEB, 2024 | 01:12 PM

image

அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சை உபகரணங்கள் உட்பட மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களிற்கு பெரும் பற்றாக்குறை  நிலவுவதாக சுகாதார தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உணவுக்குழாய் ஸ்டென்ட் போன்றவற்றிற்கும் பற்றாக்குறை நிலவுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளிற்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மிகவும் அவசியமான சத்திரகிசிச்சை உபகரணங்களிற்கு பற்றாக்குறை  காணப்படுகின்றது 3800 முதல் 5800 வரையிலான உபகரணங்கள்  முற்றாக முடிவடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசர சேவைகளிற்கு தேவையான மருத்துவஉபகரணங்களும் பற்றாக்குறையாக உள்ளன என மேலும் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக கடும் கரிசனை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அதிகாரியொருவர் உபகரணங்கள் இன்மையால்சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டதாக உத்தியோகபூர்வமான தகவல்கள்எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176749

இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்புக்கு விசேட விமானம்!

1 month 3 weeks ago
இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விசேட விமானமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்து – பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இதனை அறிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் கரையோரக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்த வருடம் அமெரிக்க அரசாங்கம் பீச்கிராப்ட் கிங் ஏர் விமானத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவுவது அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்குத் தேவையாகவுள்ளதாகவும் டொனால்ட் லூ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரம் இலங்கையானது ஒரு வரலாற்று பொருளாதார மீட்சியை பெற்றுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சிறிய உதவியால் இலங்கையினால் இந்த தடையை தாண்டுவதற்கு முடிந்ததாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/292334

இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்புக்கு விசேட விமானம்!

1 month 3 weeks ago

இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விசேட விமானமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்து – பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இதனை அறிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் கரையோரக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்த வருடம் அமெரிக்க அரசாங்கம் பீச்கிராப்ட் கிங் ஏர் விமானத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவுவது அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்குத் தேவையாகவுள்ளதாகவும் டொனால்ட் லூ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரம் இலங்கையானது ஒரு வரலாற்று பொருளாதார மீட்சியை பெற்றுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சிறிய உதவியால் இலங்கையினால் இந்த தடையை தாண்டுவதற்கு முடிந்ததாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/292334

திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சிபிஆர் சிகிச்சை கொடுப்பது எப்படி?

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிபிஆர் முதலுதவி சிகிச்சை கட்டுரை தகவல் எழுதியவர், பைசல் டிட்டுமீர் பதவி, பிபிசி நியூஸ், பங்களா, டாக்கா 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீப காலமாகவே சிறு வயதுக்காரர்கள் கூட மாரடைப்பால் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அடிக்கடி கேட்கிறோம். பலரும் இதய நோயால் பாதிக்க பட்டவர்களாக இருப்பதை கூட நம்மால் பார்க்க முடிகிறது. இது போன்ற சூழலில் பல நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு முதலுதவி கிடைக்காமல் போவதும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. உலக அளவில் சிபிஆர் என்று அழைக்கப்படும் முதலுதவி சிகிச்சை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் உயிர் பிழைத்தவர்கள் பலர் என்றும் நிரூபணமாகியுள்ளது. அப்படி ஆபத்து நேரத்தில் உயிர்காக்கும் இந்த சிபிஆர் என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை கொடுக்கலாம்? அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக சிபிஆர் சிகிச்சை வழங்கப்படுகிறது சிபிஆர் என்றால் என்ன? சிபிஆர் என்பது விரிவாக கார்டியோபல்மனரி ரீசசிடேஷன் (Cardiopulmonary Resuscitation) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக இது வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையை ஒரு நபர் மயக்கமடையும்போது அல்லது மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சு நின்று போகும் போது கொடுக்கலாம். ஒருவருக்கு இந்த சிகிச்சையை கொடுப்பதன் மூலம் அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும். அந்த ஆக்சிஜன் ரத்தம் மூலம் ஒட்டுமொத்த உடலுக்கும் பயணிக்கும். இது தற்காலிகமாக அந்த நபருக்கு சுவாசிப்பதற்கு உதவலாம். உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும் எப்போது இந்த சிகிச்சை வழங்க வேண்டும்? பெரும்பாலும் சினிமாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாரடைப்பு ஏற்பட்ட நபரின் மார்பில் ஒருவர் கை வைத்து அழுத்துவதையும், வாயோடு வாய் வைத்து மூச்சு வழங்குவதையும் பார்த்திருப்போம். இதன் மூலம் குறிப்பிட்ட நபர் சுயநினைவுக்கு வருவது போல் அதில் காட்டியிருப்பார்கள். திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் இந்த சிகிச்சை பலரது உயிர்காப்பானாக பயன்படுகிறது. ஆனால், முறையான பயிற்சியோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லாமல் இதை செய்யக்கூடாது. பிரிட்டிஷ் இதய அமைப்பின் இணையதளத்தின்படி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, ஒரு நபர் மயக்கமடைந்து அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்கு செல்லும் போது, உடனடியாக அவசர ஊர்திக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சிபிஆர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்கிறது. இதற்கான பயிற்சியை செஞ்சிலுவைச் சங்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் சுகாதார துறையை சேர்ந்த அனைவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. மாரடைப்பு ஏற்படும் போது என்ன ஆகிறது? மாரடைப்பு ஏற்பட்டு இதயம் வேலை செய்வதை நிறுத்தும் போது அல்லது இதயத் துடிப்பு சீரற்றதாக ஆகும் போது, மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் இயல்பாக பாய்வதில்லை. இதனால் மூளை செயல்பாடு பாதிக்கிறது. இது சில நேரங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால், சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. வங்கதேசத்தின் தேசிய இருதய நிறுவனத்தின் நிபுணரான மருத்துவர். அஷ்ரஃப் உர் ரஹ்மான் தமால் இதுகுறித்து கூறுகையில், "இதய நோயாளிகள் மட்டுமின்றி இதய நோய் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படலாம். ஒருவர் பலத்த காயம் அடைந்து அவருக்கு இதயம் நின்று போனால், அப்போது அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுப்பதன் மூலம், அவர் பிழைப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்தலாம்” என்கிறார். மேலும், இதயம் நின்று போகும் போது நமக்கு குறுகிய நேரமே இருக்கும். அதாவது 5 முதல் 7 நிமிடங்களே இருக்கும். எனவே உடனே சிபிஆர் சிகிச்சையை தொடங்குவது அவசியம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட நபருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும் சிபிஆர் கொடுப்பதற்கான 7 படிநிலைகள் செஞ்சிலுவை சங்கம் சிபிஆர் சிகிச்சையை ஏழு படிநிலைகளாக வடிவமைத்துள்ளது. முதலில் நீங்கள் இருக்கும் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சில சமயம் வெள்ளம் அல்லது நெருப்பு சூழ்ந்த பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதியில் இருந்து சம்மந்தப்பட்ட நபரை வெளியே கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் பிபிஇ கிட் (PPE kit) அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இரண்டாவது கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை தொடுதல் அல்லது பேரை சொல்லி அழைத்தல் மூலம் அவரது நிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அவருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது கட்டத்தில், அந்த நபர் சுயநினைவற்று பதில் ஏதும் இல்லாமல் இருந்தால் அல்லது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனடியாக அவசர ஊர்திக்கு அழைக்கவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும். நான்காவது கட்டத்தில் , அந்த நபரை கைகள் தோள்பட்டைக்கு முன்னுள்ளவாறு தரை அல்லது படுக்கையில் கிடத்தி, அவருக்கு அருகில் அமர வேண்டும். ஐந்தாவது கட்டத்தில், சிபிஆர் சிகிச்சையை தொடங்க வேண்டும். அதற்கு முதலில் உங்களது இரண்டு கைகளையும் அவரது மார்பில் வைக்க வேண்டும். ஒரு கையை மற்றொரு கையின் மீது வைத்து விரல்கள் உள்ளங்கையை அழுத்தியவாறு வைத்திருக்க வேண்டும். அழுத்தம் குறைந்தது 2 அங்குலமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கையை முழுவதுமாக மேலே உயர்த்தி அழுத்த வேண்டும். அந்த சமயத்தில் மார்பு இயல்பு நிலைக்கு திரும்பும். நிமிடத்திற்கு 100 அல்லது 120 அழுத்தம் என்ற வேகத்தில் அழுத்த வேண்டும். ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும். ஆறாவதுக கட்டத்தில், அவரது வாயோடு வாய்வைத்து சுவாசத்தை உள்ளே செலுத்த வேண்டும். இதற்கு, அந்த நபரின் தலையை நேராக வைக்கவும். அவரது மூக்கை பிடித்து கொண்டு உங்களது மூச்சை நன்றாக உள்ளிழுத்து அவரது வாய்வழியாக உள்ளே முழுமையாக செலுத்த வேண்டும். இது ஒரு வினாடிக்கு நடக்கும். பின் மார்பு விரிகிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்து சுவாசத்தை உள்ளிழுப்பதற்கு முன்பு, நன்கு வெளியே விட்டுக்கொள்ளவும். அதே சமயம் முதல் முறையிலேயே மார்பு விரியவில்லை அல்லது மேலே எழும்பவில்லை என்றால், அவரது கண்கள் மற்றும் வாயை திறந்து பார்த்து ஏதாவது அடைப்பு உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும். ஏழாவது கட்டத்தில், மார்பில் ஒரு சுற்றில் 30 முறை அழுத்தம் , இரண்டு முறை சுவாசம் கொடுத்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். ஆனால் மார்பை ஒவ்வொருமுறை அழுத்தும்போதும் அது 10 நொடிகளுக்கு மேல் தொடராமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அவசர ஊர்தியோ அல்லது உதவியோ வரும்வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கப்படும். குழந்தைகளுக்கான சிபிஆர் சிகிச்சை சில நேரங்களில் குழந்தைகளுக்கும் சிபிஆர் சிகிச்சை தேவைப்படும். இது இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும். குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கும்போது சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது. முதலில் ஒரு கையை குழந்தையின் தலையில் வைத்து பின்னாலிருந்து உயர்த்தவும். வாய் மற்றும் மூக்கிற்குள் ஏதாவது சிக்கிக்கொண்டிருந்தால் வெளியே எடுக்க வேண்டும். அதன் பிறகு குழந்தையின் மூக்கை பிடித்துக் கொண்டு அதன் வாய் வழியாக சுவாசம் கொடுக்க வேண்டும். அதே சமயம் மார்பு மேல் எழும்புகிறதா இல்லையா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு உள்ளங்கையை குழந்தையின் மார்பில் வைத்து இரண்டு அங்குல அளவில் அழுத்தம் தரவேண்டும். உங்களால் ஒரு கையால் செய்யமுடியவில்லை என்றால், இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவே குழந்தை ஒரு வயதுக்கும் குறைவாக இருந்தால் இரண்டு கைகளுக்கு பதில், இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் ஒன்றரை அங்குலம் என்ற அளவில் மட்டுமே அழுத்தம் தரப்பட வேண்டும். மேலும், 30-30 சுவாசம் என்ற கணக்கில் இருமுறை வாய்வழியாக ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 வாசம் என்ற அளவில் சிகிச்சை கொடுக்கலாம். அவசர ஊர்தி வரும் வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cgl4p8epx8mo

திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சிபிஆர் சிகிச்சை கொடுப்பது எப்படி?

1 month 3 weeks ago
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிபிஆர் முதலுதவி சிகிச்சை

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பைசல் டிட்டுமீர்
  • பதவி, பிபிசி நியூஸ், பங்களா, டாக்கா
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீப காலமாகவே சிறு வயதுக்காரர்கள் கூட மாரடைப்பால் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அடிக்கடி கேட்கிறோம். பலரும் இதய நோயால் பாதிக்க பட்டவர்களாக இருப்பதை கூட நம்மால் பார்க்க முடிகிறது.

இது போன்ற சூழலில் பல நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு முதலுதவி கிடைக்காமல் போவதும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. உலக அளவில் சிபிஆர் என்று அழைக்கப்படும் முதலுதவி சிகிச்சை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் உயிர் பிழைத்தவர்கள் பலர் என்றும் நிரூபணமாகியுள்ளது. அப்படி ஆபத்து நேரத்தில் உயிர்காக்கும் இந்த சிபிஆர் என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை கொடுக்கலாம்? அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக சிபிஆர் சிகிச்சை வழங்கப்படுகிறது

சிபிஆர் என்றால் என்ன?

சிபிஆர் என்பது விரிவாக கார்டியோபல்மனரி ரீசசிடேஷன் (Cardiopulmonary Resuscitation) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக இது வழங்கப்படுகிறது.

இந்த சிகிச்சையை ஒரு நபர் மயக்கமடையும்போது அல்லது மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சு நின்று போகும் போது கொடுக்கலாம்.

ஒருவருக்கு இந்த சிகிச்சையை கொடுப்பதன் மூலம் அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும். அந்த ஆக்சிஜன் ரத்தம் மூலம் ஒட்டுமொத்த உடலுக்கும் பயணிக்கும்.

இது தற்காலிகமாக அந்த நபருக்கு சுவாசிப்பதற்கு உதவலாம். உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாரடைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும்

எப்போது இந்த சிகிச்சை வழங்க வேண்டும்?

பெரும்பாலும் சினிமாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாரடைப்பு ஏற்பட்ட நபரின் மார்பில் ஒருவர் கை வைத்து அழுத்துவதையும், வாயோடு வாய் வைத்து மூச்சு வழங்குவதையும் பார்த்திருப்போம். இதன் மூலம் குறிப்பிட்ட நபர் சுயநினைவுக்கு வருவது போல் அதில் காட்டியிருப்பார்கள்.

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் இந்த சிகிச்சை பலரது உயிர்காப்பானாக பயன்படுகிறது. ஆனால், முறையான பயிற்சியோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லாமல் இதை செய்யக்கூடாது.

பிரிட்டிஷ் இதய அமைப்பின் இணையதளத்தின்படி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, ஒரு நபர் மயக்கமடைந்து அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்கு செல்லும் போது, உடனடியாக அவசர ஊர்திக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சிபிஆர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்கிறது.

இதற்கான பயிற்சியை செஞ்சிலுவைச் சங்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் சுகாதார துறையை சேர்ந்த அனைவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

மாரடைப்பு ஏற்படும் போது என்ன ஆகிறது?

மாரடைப்பு ஏற்பட்டு இதயம் வேலை செய்வதை நிறுத்தும் போது அல்லது இதயத் துடிப்பு சீரற்றதாக ஆகும் போது, மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் இயல்பாக பாய்வதில்லை. இதனால் மூளை செயல்பாடு பாதிக்கிறது.

இது சில நேரங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால், சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

வங்கதேசத்தின் தேசிய இருதய நிறுவனத்தின் நிபுணரான மருத்துவர். அஷ்ரஃப் உர் ரஹ்மான் தமால் இதுகுறித்து கூறுகையில், "இதய நோயாளிகள் மட்டுமின்றி இதய நோய் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படலாம். ஒருவர் பலத்த காயம் அடைந்து அவருக்கு இதயம் நின்று போனால், அப்போது அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுப்பதன் மூலம், அவர் பிழைப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்தலாம்” என்கிறார்.

மேலும், இதயம் நின்று போகும் போது நமக்கு குறுகிய நேரமே இருக்கும். அதாவது 5 முதல் 7 நிமிடங்களே இருக்கும். எனவே உடனே சிபிஆர் சிகிச்சையை தொடங்குவது அவசியம் என்கிறார் அவர்.

சிபிஆர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாதிக்கப்பட்ட நபருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்

சிபிஆர் கொடுப்பதற்கான 7 படிநிலைகள்

செஞ்சிலுவை சங்கம் சிபிஆர் சிகிச்சையை ஏழு படிநிலைகளாக வடிவமைத்துள்ளது.

முதலில் நீங்கள் இருக்கும் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சில சமயம் வெள்ளம் அல்லது நெருப்பு சூழ்ந்த பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதியில் இருந்து சம்மந்தப்பட்ட நபரை வெளியே கொண்டு வர வேண்டும்.

தேவைப்பட்டால் பிபிஇ கிட் (PPE kit) அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை தொடுதல் அல்லது பேரை சொல்லி அழைத்தல் மூலம் அவரது நிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அவருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது கட்டத்தில், அந்த நபர் சுயநினைவற்று பதில் ஏதும் இல்லாமல் இருந்தால் அல்லது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனடியாக அவசர ஊர்திக்கு அழைக்கவும்.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும்.

நான்காவது கட்டத்தில் , அந்த நபரை கைகள் தோள்பட்டைக்கு முன்னுள்ளவாறு தரை அல்லது படுக்கையில் கிடத்தி, அவருக்கு அருகில் அமர வேண்டும்.

ஐந்தாவது கட்டத்தில், சிபிஆர் சிகிச்சையை தொடங்க வேண்டும். அதற்கு முதலில் உங்களது இரண்டு கைகளையும் அவரது மார்பில் வைக்க வேண்டும். ஒரு கையை மற்றொரு கையின் மீது வைத்து விரல்கள் உள்ளங்கையை அழுத்தியவாறு வைத்திருக்க வேண்டும். அழுத்தம் குறைந்தது 2 அங்குலமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் கையை முழுவதுமாக மேலே உயர்த்தி அழுத்த வேண்டும். அந்த சமயத்தில் மார்பு இயல்பு நிலைக்கு திரும்பும். நிமிடத்திற்கு 100 அல்லது 120 அழுத்தம் என்ற வேகத்தில் அழுத்த வேண்டும். ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும்.

ஆறாவதுக கட்டத்தில், அவரது வாயோடு வாய்வைத்து சுவாசத்தை உள்ளே செலுத்த வேண்டும். இதற்கு, அந்த நபரின் தலையை நேராக வைக்கவும். அவரது மூக்கை பிடித்து கொண்டு உங்களது மூச்சை நன்றாக உள்ளிழுத்து அவரது வாய்வழியாக உள்ளே முழுமையாக செலுத்த வேண்டும்.

இது ஒரு வினாடிக்கு நடக்கும். பின் மார்பு விரிகிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்து சுவாசத்தை உள்ளிழுப்பதற்கு முன்பு, நன்கு வெளியே விட்டுக்கொள்ளவும்.

அதே சமயம் முதல் முறையிலேயே மார்பு விரியவில்லை அல்லது மேலே எழும்பவில்லை என்றால், அவரது கண்கள் மற்றும் வாயை திறந்து பார்த்து ஏதாவது அடைப்பு உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும்.

ஏழாவது கட்டத்தில், மார்பில் ஒரு சுற்றில் 30 முறை அழுத்தம் , இரண்டு முறை சுவாசம் கொடுத்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். ஆனால் மார்பை ஒவ்வொருமுறை அழுத்தும்போதும் அது 10 நொடிகளுக்கு மேல் தொடராமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அவசர ஊர்தியோ அல்லது உதவியோ வரும்வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும்.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான சிபிஆர் சிகிச்சை

சில நேரங்களில் குழந்தைகளுக்கும் சிபிஆர் சிகிச்சை தேவைப்படும். இது இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கும்போது சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

முதலில் ஒரு கையை குழந்தையின் தலையில் வைத்து பின்னாலிருந்து உயர்த்தவும். வாய் மற்றும் மூக்கிற்குள் ஏதாவது சிக்கிக்கொண்டிருந்தால் வெளியே எடுக்க வேண்டும்.

அதன் பிறகு குழந்தையின் மூக்கை பிடித்துக் கொண்டு அதன் வாய் வழியாக சுவாசம் கொடுக்க வேண்டும். அதே சமயம் மார்பு மேல் எழும்புகிறதா இல்லையா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு உள்ளங்கையை குழந்தையின் மார்பில் வைத்து இரண்டு அங்குல அளவில் அழுத்தம் தரவேண்டும். உங்களால் ஒரு கையால் செய்யமுடியவில்லை என்றால், இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுவே குழந்தை ஒரு வயதுக்கும் குறைவாக இருந்தால் இரண்டு கைகளுக்கு பதில், இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் ஒன்றரை அங்குலம் என்ற அளவில் மட்டுமே அழுத்தம் தரப்பட வேண்டும்.

மேலும், 30-30 சுவாசம் என்ற கணக்கில் இருமுறை வாய்வழியாக ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 வாசம் என்ற அளவில் சிகிச்சை கொடுக்கலாம். அவசர ஊர்தி வரும் வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cgl4p8epx8mo