Aggregator
அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!
ஒரே தேர்தலில் களமிறங்க முயலும் அண்ணனும் தம்பியும்…!
ஒரே தேர்தலில் களமிறங்க முயலும் அண்ணனும் தம்பியும்…!
ஒரே தேர்தலில் களமிறங்க முயலும் அண்ணனும் தம்பியும்…!
குடும்பமாக அரசியலில் ஈடுபடுவது என்பது அரசியலுக்கும் புதிதல்ல, நம் நாட்டுக்கும் புதிதல்ல. இப்போது நாட்டில் நடப்பதுகூட ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிதான். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இதுதான் நடந்தது.
ஆனால், தமிழில் குடும்ப அரசியல் என்பது சற்றுக் குறைவுதான். அப்படியே நடந்தாலும் தந்தைக்குப் பின் தனயன் என்ற நிலைதான் நீடித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அவரின் மகன் கலையமுதனும் இப்போது ஒரே நேரத்தில் அரசியலில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் பதவிகள் வேறுவேறுதான்.
தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகின்றது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி. பேரம் பேசி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 3 ஆசனங்களை வாங்கி விட்டது. (சிலவேளைகளில் இது 2 ஆகக் குறையவும் வாய்ப்பு உள்ளது.)
நடைபெறவுள்ள தேர்தலில் அவர் களமிறங்குவது உறுதியானது என்றாலும் மீதமிருக்கும் ஆசனத்தில் யாரை களமிறக்குவது என்பதுதானாம். அதற்குக் காரணம் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடந்த கசப்பான அனுபவங்கள்தானாம்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்தபோது, ஸ்ரீதரன், சிவமோகன், ரவிகரன், ஐங்கரநேசன் ஆகியோருக்குப் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பங்களை வழங்கியது. இவர்களின் கோட்டாவில் அரசியல் களத்துக்கு வந்தவர்கள் வெற்றி பெற்றதும் தமிழரசுக் கட்சியின் பக்கம் தாவி விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பட இதுவும் ஒரு காரணமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு இருந்தது.
இந்நிலையில், தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடும் நிலையில் வேறு எவரையேனும் தேர்தலில் போட்டியிட வைத்து அவர்கள் கட்சி மாறிவிட்டால், நிலைமை என்ன என்பதே அவரின் யோசனையாம். இந்நிலையில், அவருக்கு வேண்டியவர்கள் சிலர் அவரது தம்பியாரான சர்வேஸ்வரனைக் களமிறக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார்களாம். இதற்கு அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காதபோதும், ஆதரவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறாராம்.
சர்வேஸ்வரன் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் நன்மதிப்பையும் பெற்றவர். இது தவிர, தமிழ் மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைப்பதில் – கொள்கைகளை வகுப்பதில் மும்முரமாக நின்று பணியாற்றுபவர். கடந்த காலங்களை விட – அதாவது கூட்டமைப்பில் இருந்த காலத்தை விட அவரின் இப்போதைய அரசியல் செயற்பாடுகள் பல மடங்கு வேகம் பெற்றிருக்கின்றன. அவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதாகத் தகவல்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கினால், வேறு கட்சிக்குத் தாவ மாட்டார் என்பது ஆலோசனை வழங்கியவர்களின் கருத்தாம். ஆனால், இதற்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. ஒரு தேர்தலில் அண்ணனும் தம்பியும் போட்டியிடுவதால் அது வெற்றிக்குப் பதிலாக வீழ்ச்சியை தரும் என்பதும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராகக் கடும் பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அது வாய்ப்பாகிவிடும் என்பதும் ஒரு சாராரின் கருத்தாக உள்ளதாம்.
இன்னொரு சாராரோ, குடும்ப அங்கத்தவர்கள் போட்டியிட்டால் தமக்கு ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சத்தில் உள்ளனராம். அவர்களின் அச்சமும் ஒரு வகையில் நியாமானதுதான்…?
ஆனால், இந்த விடயத்தில் சுரேஷ் பிறேமச்சந்திரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்…!
கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி - மாவை
கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி - மாவை
புதுவருட நம்பிக்கைகள்
புதுவருட நம்பிக்கைகள்
பனிச்சறுக்கலுக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்
பனிச்சறுக்கலுக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)
தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!
தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!
அதிமுக-திமுக: சரிசமமான இடங்களில் வெற்றிபெற்றதா?
அதிமுக-திமுக: சரிசமமான இடங்களில் வெற்றிபெற்றதா?
அதிமுகவை விட திமுகதான் அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை திமுக உருவாக்கி உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இந்த நிலையில் கணினி பயிற்சி மையம் திறக்கும் நிகழ்வு சைதாப்பேட்டை பஜார் சாலையில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. அதேபோல சென்னை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு கணினி பயிற்சி மையம், கலைஞர் சிலை ஆகியவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “1967ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் வெற்றிபெற்றபோது திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார், கலைஞர் பொதுப் பணித் துறை அமைச்சரானார். 1971ஆம் ஆண்டு மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்று முதல்வரானார். ஆகவே, சைதாப்பேட்டை கலைஞருடைய பேட்டை. இங்கு சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசிய ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலில் வழக்கமாக ஆளுங்கட்சிதான் அதிக இடங்களில் வெற்றிபெறும். ஆளுங்கட்சியினருக்கு ஓட்டுப்போட்டால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணிகள் நடைபெறும் என்கிற மக்களின் எண்ணம் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் ஊரகப் பகுதிகளில் அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெற்றாலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்களைக் கைப்பற்றியது திமுகதான். அதுவும் தற்போது மாற்றப்பட்டு ஊரகப் பகுதிகளிலும் திமுக கொடிகட்டி பறக்கக் கூடிய நிலை வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
அதிமுகவும் திமுகவும் சரிசமமாக வெற்றிபெற்றுள்ளார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “முந்திரிக்கொட்டை அமைச்சர் ஒருவர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு இது வளர்பிறை காலம். திமுகவுக்கு இது தேய்பிறை காலம் என அப்பட்டமாக பொய் சொல்கிறார். ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 2100 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 1781 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எப்படி ஜெயித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். தோல்வியடைந்தவர்களை எல்லாம் வெற்றிபெற வைத்தனர். இதுபோலதான் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் நடந்துள்ளது” என்று விளக்கினார்.
https://minnambalam.com/politics/2020/01/05/30/Stalin-open-karunanidhi-statue-in-chennai-saidapet
அதிமுக-திமுக: சரிசமமான இடங்களில் வெற்றிபெற்றதா?
உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.!
உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்
சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.
கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.
யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.
சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.
இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.
உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.
2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.
தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.
சாள்ஸ் எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.
இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.
இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.
கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று கேணல் சூசை ஆற்றிய உரையில் இருந்து …!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
https://www.thaarakam.com/news/107102
கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன் ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!