நலமோடு நாம் வாழ

புற்றுநோய் 10 அறிகுறிகள்: இதை சீக்கிரம் கவனிச்சிட்டா சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்

3 months ago

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

உடல்நலம்: உங்கள் மலம் நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா?

3 months ago
மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரிச்சர்ட் கிரே
  • பதவி, பிபிசி ஃபியூச்சர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சில நேரங்களில் நாம் கழிக்கும் மலம் கழிவறை நீரில் மூழ்காமல் நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும். அப்படி நடந்தால், அது உங்கள் செரிமான அமைப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பதைக் குறிப்பதாகும் என்ற அறிவியல் உண்மை சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு முன், நாகராஜ கண்ணன் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.

"உங்களது கழிவு மிதக்கிறதா அல்லது கழிவறை நீரில் மூழ்குகிறதா?"

மின்னஞ்சல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் ஒருவரிடம் இவ்வாறு கேட்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால், மினசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கின் ஸ்டெம் செல் மற்றும் புற்றுநோய் உயிரியல் ஆய்வகத்தின் இயக்குநருக்கு இந்தச் சிந்தனையே ஒரு லட்சியத் திட்டத்திற்கு வழிவகுத்தது.

 
மனித மலம் குறித்த ஆய்வு
மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கண்ணனின் நாளின் பெரும்பகுதி மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு வழிமுறைகளைப் படிப்பதில் செலவிடப்படுகிறது.

ஆனால் அரிதாக, வேலை இல்லாமல் இருக்கும் தருணங்களில், கண்ணன் இன்னொரு புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்க முயன்றார். அந்தப் புதிர், சில நேரங்களில் மலம் ஏன் மிதக்கிறது?

நம்மில் பெரும்பாலோர் இதை எதிர்கொண்டிருக்கலாம். சில நேரங்களில் மனிதக் கழிவு கழிவறையில் முழுதாக ஃபிளஷ் ஆகாமல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். ஆனால், மற்ற நேரங்களில் முழுதாக ஃபிளஷ் ஆகிவிடும். இது ஒரு வகையான மர்மம்தான்.

இந்தப் புதிருக்கான பதில்தான் நம் உடலுக்குள் என்ன நடக்கிறது, அங்கு வாழும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியம் ஆகியவை பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை வழங்குகிறது என கண்ணன் நம்புகிறார்.

மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிக கொழுப்பு காரணமா?

எப்போதாவது கழிவு மிதப்பதற்கு, அதிலிருக்கும் கொழுப்பு அளவுகள் காரணம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் 1970களின் முற்பகுதியில் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் இரண்டு இரைப்பைக் குடலியல் நிபுணர்கள் அதிக நேரம் செலவிட்டு, தொடர்ச்சியான சோதனைகள் மூலம் இதைக் கண்டறிய முடிவு செய்தனர்.

இந்தச் சோதனைகளில் 39 தன்னார்வலர்களின் மலத்தை மற்றும் நிபுணர்களின் சொந்தக் கழிவுகளில் சிலவற்றையும் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு, அவர்கள் சொன்ன பதில், அது கொழுப்பு அல்ல, வாயு என்பதுதான்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால், மலத்தில் காணப்படும் வாயுவின் அளவுகளைப் பொறுத்து, கழிவு மேற்பரப்பில் மிதக்கும் அல்லது சில நேரங்களில் மூழ்கவும் கூடும். மிதக்கும் கழிவுகளில் உள்ள வாயுவை வெளியேற்றினால், அவை மூழ்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வித்தியாசத்திற்கான காரணம், அதிகப்படியான மீத்தேன் உற்பத்தி தான் என்று அவர்கள் முடிவு செய்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிகப்படியான வாய்வு.

மேலும் இங்குதான் கண்ணன் விறுவிறுப்பான ஒரு தலைப்பிற்குள் நுழைகிறார். இடைப்பட்ட ஆண்டுகளில், உடல் பருமன் முதல் இதய நோய் வரை, நமது ஆரோக்கியத்தின் பல அம்சங்களில் நமது மைக்ரோபயோட்டா வகிக்கும் மகத்தான பங்கை மருத்துவ அறிவியல் வெளிப்படுத்தியுள்ளது.

நம் குடல்களில் இருக்கும் 100 டிரில்லியன் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் தான் நமது கழிவு மிதக்குமா அல்லது மூழ்குமா என்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்ணன் சந்தேகித்தார்.

"பெரும்பாலான மலப் பொருட்களில் உருமாறிய உணவுத் துகள்கள் இருக்கின்றன. அவை ஒரு பாக்டீரியா கூட்டத்தை உருவாக்குகின்றன," என்று அவர் கூறுகிறார்.

 
எலிகள் மூலம் சோதனை
மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கோட்பாட்டை சோதனைக்கு உட்படுத்த, அவரும் மயோ கிளினிக்கில் உள்ள அவரது சகாக்களும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட எலிகளின் கழிவுகளை ஆய்வு செய்தனர். கிருமிகள் அற்ற இந்த கொறித்துண்ணிகளின் குடலில் நுண்ணுயிரிகள் இல்லை.

குழுவால் உருவாக்கப்பட்ட மல மிதவை சோதனைகளில், இந்த எலிகளின் மலம் உடனடியாக நீரில் மூழ்கியது. அதே நேரத்தில் குடலில் நுண்ணுயிரிகள் இருந்த எலிகளின் கழிவுகளில் சுமார் 50% மிதந்து, இறுதியில் கீழே நகர்ந்தது. அவர்கள் கூர்ந்து கவனித்தபோது, அதற்கான காரணம் தெரிந்தது.

"கிருமி இல்லாத மலம், சிறிய செரிக்கப்படாத உணவுத் துகள்களால் நிரம்பியுள்ளது மற்றும் நுண்ணுயிர்கள் நிரம்பிய மலத்தைவிட அதிக அடர்த்தி கொண்டதாக உள்ளது" என்கிறார் கண்ணன். பின்னர், சில கிருமி இல்லாத எலிகளுக்கு மலம் குழு மாற்று சிகிச்சையைச் செய்தது. அதாவது அவற்றின் குடலில் பாக்டீரியாவை செலுத்தினார்கள். இப்போது அந்த எலிகளும் மிதக்கும் கழிவுகளை உற்பத்தி செய்யத் தொடங்கின.

மனித தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட பாக்டீரியா எலிகளுக்கு கொடுக்கப்பட்டபோதும், அப்போது வெளியான கழிவும் மிதந்தது.

"அந்த நுண்ணுயிரிகள் குடலில் குடியேறியவுடன், யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், எலிகளின் கழிவுகள் உடனடியாக மேற்பரப்பிற்குச் சென்று விடுகின்றன," என்கிறார் கண்ணன்.

அவரும் அவரது சகாக்களும் எலிகளில் இருந்து பெறப்பட்ட மிதக்கும் மலத்தில் உள்ள பாக்டீரியா இனங்கள் குறித்துப் பெரிய அளவிலான மரபணு பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர். மேலும் அவற்றில் வாயுவை உற்பத்தி செய்யும் 10 பாக்டீரியா இனங்கள் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

அவற்றில் ஆதிக்கம் செலுத்துவது 'பாக்டீராய்டுகள் ஓவாட்டஸ்' ஆகும், இவை கார்போஹைட்ரேட்டுகளின் நொதித்தல் செயல்முறை மூலம் வாயுவை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. மனிதர்களின் அதிகப்படியான வாயுவுடனும் இதற்குத் தொடர்புள்ளது.

 
முகம் சுழிக்காமல் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்
மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

எலிகள் மூலம் கிடைக்கும் சோதனை முடிவுகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும், அவை மனிதக் கழிவுகள் மிதப்பது மற்றும் மூழ்குவதுடன் தொடர்புடையவைதான் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நமது கழிவுகள் மிதப்பது என்பது நமது செரிமான அமைப்பில் பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் மாற்றங்களின் அறிகுறியாக இருக்கலாம் என கண்ணன் நம்புகிறார்.

"நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ளும்போது, வழக்கமாக மிதக்கும் மலம் மூழ்கலாம் என்று நினைக்கிறேன்," என்று கண்ணன் கூறுகிறார். ஆனால் யாரும் இதைப் பற்றி ஆய்வு செய்வதைக் காண முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

"துரதிர்ஷ்டவசமாக, மலம் மிதப்பது குறித்த ஆய்வுக்கு நிதியைப் பெறுவது எளிதாக நடக்காது," என்கிறார்.

நமது உணவு, புகைப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் நாம் உட்கொள்ளும் பலவிதமான மருந்துகள் உட்படப் பல காரணிகள் நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் அமைப்பை மாற்றும். கண்ணன் இப்போது வாயுவை உருவாக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளர எது வழிவகுக்கிறது என்பதை ஆராய்வதில் ஆர்வமாக உள்ளார்.

"நீங்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அல்லது ஒரு விண்வெளிப் பயணத்தில் இருந்தாலும், இந்த வாயு நுண்ணுயிர்கள் நிறைந்த குடலை உடைய ஒருவர் அருகில் அல்லது அடிக்கடி வாயுவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவர் அருகில் அமர நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா," என்று கேட்கிறார் கண்ணன்.

இது சற்று சங்கடத்தை ஏற்படுத்தும் வேலைதான், ஆனால் யாராவது ஒருவர் செய்துதானே ஆக வேண்டும்!

https://www.bbc.com/tamil/articles/cxe43y71e8go

சிப்பிக்குள் முத்து (பித்தத்தில் கல்லு!)

3 months ago

சிப்பிக்குள் முத்து (பித்தத்தில் கல்லு!)

கூர்ப்பு ஒரு கோட்பாடு என்பதை விட ஆதாரங்கள் நிறைந்த ஒரு உண்மை எனலாம். கூர்ப்பு நிகழ்ந்தமைக்கான பல ஆதாரங்களில்  ஒன்று எங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள். சில உறுப்புகள், அவசியமின்மை காரணமாக, குறுகிப் போகின்றன (குடல் வால் -appendix ஒரு உதாரணம்). சில உறுப்புகள், பெரும்பகுதி அவசியமில்லாமல் போனாலும் சில உடற்றொழில்களுக்கு அவசியமாக இருப்பதால், தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன: இதற்கு உதாரணம் எங்கள் பித்தப் பை. எங்கள் மூதாதையர் வேட்டையாடி, பெருமளவு இறைச்சி, கொழுப்பு என்பவற்றை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் வயிறு புடைக்க உண்ண வேண்டிய ஒரு காலம் இருந்தது. அந்த மூதாதையரில் கொழுப்பை இலகுவாகச் சமிக்கச் செய்ய பித்தப் பை உதவியது. மூன்று வேளையும் அதிக கொழுப்பு அல்லது கொழுப்பை உருவாக்கும் மாப்பொருள் என்பவற்றை உண்ணும் நவீன மனிதனில், பித்தப் பை ஒரு பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. இந்தப்  பிரச்சினையின் பிரதான வடிவம், பித்தக் கல் (Gallstones).  

பித்தப் பையின் தொழில் என்ன?

கொழுப்புணவு சமிக்க உதவும் பித்தம் (gall) என்ற சுரப்பை தயாராகச் சேமித்து வைத்துக் கொள்வது தான் பித்தப் பையின் பிரதான தொழில். பித்தம் ஈரலினால் சுரக்கப் படுகிறது. நீர், பித்த உப்புகள், கனியுப்புக்கள், சிறிது கொலஸ்திரோல் வகைக் கொழுப்பு என்பன தான் ஈரல் சுரக்கும் பித்தத்தின் கூறுகள். ஈரலில் இருந்து வரும் இந்த பித்தத்தை பித்தப் பை வாங்கித் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் போது, அதில் இருக்கும் நீரை உறிஞ்சிக் கொள்வதால் 3 - 4 மடங்குகள் செறிவான பித்தம் உருவாகிறது.

large.Gallbladder.jpg.3b3cae6edbb590b9b362386a902f4872.jpg

பித்தப் பை (பச்சை நிறம்), ஈரல், முன் சிறு குடல், கணையம் ஆகியவற்றின் அமைவிடத்தைக் காட்டும் படம். ஈரலினுள் இருந்து வரும் பித்தம், ஈரல் கான் ஊடாக பித்தப் பையினுள் சேர்கிறது. உணவு உண்டு ஒரு மணி நேரத்தில், முன் சிறு குடலினுள் பித்தப் பையில் இருக்கும் பித்தம், கணையத்தின் சுரப்புகளையும் சேர்த்துக் கொண்டு நுழையும். பித்தம் கொழுப்பைச் சிறுகோளங்களாக மாற்றுவதால் கொழுப்பு சமிபாடடைய உதவும். பித்தப் பையில் சேரும் பித்தத்தில் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் பல காரணிகளால் அதிகரிக்கும். பெரும்பாலானவை கொலஸ்திரோல் கற்களாக இருக்கும்.  பட உதவி நன்றியுடன்: NIH, USA.

 சாதாரணமாக 30 முதல் 50 மில்லிலீற்றர்கள் வரையான செறிவான பித்தம் இப்படி பித்தப் பையில் சேமிக்கப் பட்டிருக்கும். உணவை எங்கள் உணவுக் கால்வாய் உணரும் வரை பித்தம் சேமிப்பில் இருக்கும். உணவு உள்ளே வருவதை எங்கள் சிறு குடல் உணரும் போது அது வெளிவிடும் ஓமோன் சுரப்புகளால் தூண்டப் பட்டு, பித்தப் பை சுருங்க ஆரம்பிக்கும். முன் சிறுகுடலினுள் திறக்கும் பித்தக் கால்வாய் திறந்து கொள்ளும். பித்தம் சிறு குடலினுள் நுழைந்து, கொழுப்பை சிறு சிறு கொழுப்புக் கோளங்களாக (micelles) உருமாற்றம் செய்யும். இப்படி உருமாற்றம் செய்யப் பட்ட கொழுப்பை, கொழுப்புடைக்கும் நொதியங்கள் இலகுவாக உடைத்து, குடல் உறிஞ்சிக் கொள்ள இலகுவாக இருக்கும். பித்தம் கொழுப்பு சமி பாட்டை இப்படி இலகுவாக்கா விட்டால், பெரும் பகுதி கொழுப்பு உறிஞ்சப் படாமல் கழிவுடன் வெளியேறும்.

கொழுப்பை சரியாக உடல் அகத்துறிஞ்சினால் தான் கொழுப்பின் பலன்களான கொழுப்பமிலங்களும், கொழுப்பில் மட்டும் கரையக் கூடிய விற்றமின் ஏ, டி போன்ற போசணைகளும் எங்கள் உடலுக்குக் கிடைக்கும்.

எனவே, பித்தப் பையும், பித்தமும் நவீன மனிதனுக்கு ஓரளவுக்கு அவசியமான எஞ்சியிருக்கும் உறுப்புகள் தான். ஆனால், நவீன மனிதனுக்கு நோய் தரும் பித்தக் கல் எப்படி ஒரு கூடவே வரும் சூனியமாக வருகிறது?

பித்தக் கல் என்பது என்ன?

பித்தப் பையில் உருவாகும் திண்மையான படிவுகளே பித்தக் கற்கள். இந்தக் கற்களில் 90% ஆனவை கொலஸ்திரோல் கற்கள். மிகக் குறைந்த வீதமானோரில் பித்தக் கற்கள் பித்தத்தின் நிறமிகளான பிலிருபின் போன்றவற்றால் உருவாக்கப் படுகின்றன. இந்த இரண்டாவது வகைக் கற்கள் உருவாவதற்கு சில நோய்கள் ஏற்கனவே இருப்பது காரணமாக இருக்கலாம் - அதிக குருதிக் கல அழிவுகளை ஏற்படுத்தும் தலசீமியா போன்ற நோய்கள் சிறந்த உதாரணங்கள். ஆனால், பெரும்பான்மையானோரில் உருவாகும் கொலஸ்திரோல் கற்கள் பரம்பரை காரணிகள், வாழ்க்கை முறை என்பவற்றால் உருவாகின்றன.

கொழுப்பான கொலஸ்திரோல் எப்படிக் கல்லாகிறது?

பித்தத்தில் ஏனைய பொருட்களோடு, ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலும் கலந்திருக்கிறது எனப் பார்த்தோம். சாதாரணமாக பித்தத்தில் 4% ஆக இருக்கும் கொலஸ்திரோலின் அளவு 8 முதல் 10% ஆக அதிகரிக்கும் தருணங்களில், பித்தத்தில் இருக்கும் கொலஸ்திரோல் பளிங்காகப் படிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனாலும், அதிகரித்த கொலஸ்திரோல் தான் பெரும்பாலான பித்தக் கற்களுக்குக் காரணம் என்று சொல்லி விட முடியாது - பித்தக் கல் உருவாகும் பொறிமுறை அதை விடச் சிக்கலானது.

அதிகரித்த கொலஸ்திரோலோடு, வேறு சில காரணிகள் சேரும் போது, கொலஸ்திரோல் பித்தக் கற்களை உருவாக்கும். இந்தக் காரணிகளில் சில மாற்ற இயலாதவை, சில மாற்றக் கூடியவை.

மாற்ற இயலாத காரணிகள்: பரம்பரை/ஜீன் வழி மாற்றம்  இந்த மாற்ற இயலாத காரணிகளில் முதன்மையானது. சிலரில், பித்தத்தின் கொலஸ்திரோல், ஏனையோரை விட மிக விரைவாகப் பளிங்காகப் படிவடைகின்றன. இதற்கு கொலஸ்திரோல் அளவு மட்டுமன்றி, வேறு சில "கருவாக்கும்" (nucleation) காரணிகளும் பங்களிப்புச் செய்கின்றன. இந்தக் கருவாக்கும் காரணிகள் எல்லாம் அடையாளம் காணப் படவில்லை. எனவே,எங்கள் நெருக்கமான இரத்த உறவுகளில் பித்தக் கல் இருந்திருந்தால், எங்களில் அது ஏற்படும் வாய்ப்பும் சிறிது அதிகரிக்கிறது.

இரண்டாவது: பித்தக் கல் ஏற்படும் வாய்ப்புகள் ஆண்களை விடப் பெண்களில் அதிகம். பெண்களின் மாத விடாய் சக்கரம், கர்ப்பமுறும் இயலுமை காரணமாக உருவாகும் ஓமோன் மாற்றங்கள் பித்தப் பையில் இருந்து பித்தம் வெளியேறுவதைப் பாதிக்கின்றன - இதனால் இந்த அதிகரித்த ஆபத்து பெண்களில்.  

மாற்றக் கூடிய காரணிகள்: எங்கள் உணவு, உடலுழைப்பு உட்பட்ட வாழ்க்கை முறை தான் மாற்றக் கூடிய காரணி.

எங்கள் வாழ்க்கை முறை காரணமாக கொலஸ்திரோல் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என பல ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன. அதிகரித்த கொலஸ்திரோலை ஈரல் பித்தத்தின் வழியாக சுரப்பதற்கு, அதிக கொழுப்பு, அல்லது அதிக மாப்பொருள் என்பன கொண்ட உணவு முறை ஒரு காரணம். இதனால் உடற்பருமன் அதிகரித்தோர், நீரிழிவு நோய் ஏற்கனவே இருப்போர் ஆகியோரில் கொலஸ்திரோலினால் ஏற்படும் பித்தக் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கும் ஒரு விடயம்: கொலஸ்திரோலை மட்டும் குறி வைத்து மருந்து எடுத்துக் கொள்வதால்  பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைப்பது சாத்தியமில்லை. உதாரணமாக, கொலஸ்திரோலைக் குறைக்கும் மருந்துகள் பித்தக் கற்கள் உருவாவதைக் குறைக்கின்றனவா என்று தேடிய ஆய்வுகளில் உறுதியான முடிவுகள் கிடைக்கவில்லை.

ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலோடு, வேறு அடையாளம் காணப் படாத காரணிகளும் பித்தக் கற்கள் உருவாவதைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கலாம், அந்தக் காரணிகள் எங்கள் வாழ்க்கை முறையோடு தொடர்புற்றிருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக, உடலின் அனுசேபத் தொழிற்பாட்டைச் சீராக வைத்திருக்கும் உணவு முறை, நீரிழிவுக் கட்டுப் பாடு, உடல் பருமன் கட்டுப் பாடு என்பன பித்தக் கல் உருவாகும் ஆபத்தைக் குறைக்கின்றன என்பது தெளிவாகியிருக்கிறது.  

சில மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வோரிலும் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நெஞ்செரிவு (heartburn) என (தவறாக) அழைக்கப் படும் இரைப்பை அமில எரிவு (acid reflux) நிலைக்கு நிவாரணியாகப் பாவிக்கப் படும் H2R blocker மருந்துகள் (cimetidine, ranitdine), பித்தக் கற்கள் உருவாக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன.

பித்தக் கற்களால் தோன்றும் வலியை எப்படிக் கண்டறிவது?

எங்கள் வயிற்றை, வெளி மேற்பரப்பில் நான்கு கால் பங்குகளாகப் (quadrants)  பிரித்து, அந்தக் கால்பங்குகளில் எந்தப் பங்கில் வலி மையங் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து எந்த உறுப்புப் பாதிக்கப் பட்டிருக்கிறது எனக் குத்து மதிப்பாகச் சொல்ல முடியும். வயிற்றின் வலது மேல் காற் பங்கில் (upper right quadrant) மையங் கொண்ட தீவிர வலி, பெரும்பாலும் ஈரல், பித்தப் பை ஆகியவற்றின் பாதிப்பினால் உருவாகிறது எனலாம். ஆனாலும், பித்தப் பையின் அமைவிடம் ஆளுக்காள் சிறிது வேறுபடுகிறது. இதனால், பித்தக் கற்களால் ஏற்படும் வலி, மேல் இடது, வலது காற்பங்குகளில் சம அளவில் உணரப் படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, தீவிர வயிற்று வலி தொடர்ந்து அல்லது விட்டு விட்டுப் பல தடவைகள் உருவானால், உடனே மருத்துவ உதவி நாட வேண்டும். மருத்துவ மனையில், மீயொலித் தெறிப்புக் (ultra-sound) கருவி மூலம், பெரும்பாலான பித்தக் கற்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவ்வாறு அடையாளம் காண இயலாத கற்களை CT ஸ்கான் மூலம் அடையாளம் காண்பர்.

சுருக்கமாக, பித்தக் கற்கள் பெரும்பாலும் கொலஸ்திரோல் கற்கள். பெண்களில் தான் அதிகம் உருவாகக் கூடியவையானாலும், இரு பாலாரும் பாதிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. தவிர்க்க இயலாத பரம்பரைக் காரணியை விட்டு விட்டாலும், தவிர்க்கக் கூடிய  உடல் அனுசேபத்தோடு தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதால் பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைக்கலாம்.

தொகுப்பு: ஜஸ்ரின்

தகவல் மூலங்கள், மேலதிக தகவல்கள்:

https://www.niddk.nih.gov/health-information/digestive-diseases/gallstones/definition-facts

https://pharmacy.uconn.edu/wp-content/uploads/sites/2740/2023/06/Gallbladder-Disease-YAFI-JUN2023-FINAL.pdf

மூட்டழற்சி நோய்-ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ்-(osteoarthritis )

3 months ago

 

Osteoarthritis.jpgஇன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் 65 வயதிற்கும் குறைவானவர்கள்.இந்த நோய் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மட்டுமல்ல அபிவிருத்தியடைந்த நாடுகளான அமெரிக்கா யூரோப் நாடுகளையே படுத்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.அமெரிக்கா மட்டுமே வருடாவருடம் இந்த நோய்க்காக 6400 கோடி அமேரிக்கன் டாலர்களை செலவழிக்கின்றது.
 



மூட்டழற்சி நோய் இன்று நேற்று தோன்றிய நோய் அல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதனை தொல்லைபடுத்திவந்துள்ளது.எகிப்திய மம்மிக்கள் சிலவற்றில் கூட இவ் வீங்கியமூட்டுக்களை கண்டுபிடித்திருக்கின்றார்கள்.அதோடு உலகப்பிரபலமான ஆய்வுப்பயணியாக கிரிஸ்டோபர் கொலம்பஸும் இன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான்.
வீங்கிய மூட்டு என்றபதம் கிரேக்க வார்த்தையில் இருந்துதான் தோற்றம்பெற்றுள்ளது.

மூட்டு என்றால் என்ன?

sd.JPGமூட்டின் உடற்கூற்றியலைப்பார்த்தோமேயானால் இது இரு எலும்புகள் சந்திக்குமிடமாகும்.மூட்டு ஒரு நாருறையினால் மூடப்பட்டிருக்கும்,இவ் உறை அம்மூட்டினை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.இத் தொகுதியை எலும்பிடைச்சவ்வு மூடியிருக்கும்.
 
 
 
 
இச்சவ்வு எண்ணைத்தன்மையான ஒரு பதார்த்தத்தை சுரக்கும்,இந்த பதார்த்தம் உராய்வில் இருந்து அதாவது மூட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று தேயாமல் பாதுகாக்க உதவுகின்றது.அதோடு என்பு முடியும் முனையை குருத்தெலும்பு என்று அழைப்பார்கள் இது சற்று பஞ்சுத்தன்மையுடையதாக காணப்படும்.இது நீங்கள் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ வாகனங்களில் உள்ள Shock absorber  போன்று தொழிற்பட்டு மூட்டைப்பாதுகாக்கும்.

இவ் மூட்டழற்சியை ஒத்த வேறு ஒரு நோய் காணப்படுகின்றது.இதை முடக்குவாதம் (Rheumatoid arthritis) என்று அழைப்பார்கள்.இது மூட்டழற்சியைப்போல் அல்லாது சரமாரியாக உடலின் அத்தனை மூட்டுக்களையும் ஒரே நேரத்தில் தாக்கும் வல்லமைவாய்ந்தது.ஒரு மூட்டில் இருந்து வேறு ஒரு மூட்டிற்கு இன் நோய் பரவும்.ஆனால் மூட்டழற்சி (osteoarthritis) நோய் ஒரு மூட்டில் இருந்து வேறு ஒன்றிற்கு பரவுவதில்லை.


 
 எலும்பின் அடிப்படைக்கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது
 
9312400-bone-structure.jpg
 
 
 
எலும்பின் பகுதிகளான மூட்டுக்குருத்தெலும்பு(articular cartilage)மற்றும் அடிக்குருத்தெலும்பு (subchondral bone) என்பன சிதைவடைதலே இன் நோயின் முக்கிய குணங்களாகும்.
23.JPG
 
சாதாரணமாக எமது உடலின் பாரத்தைத்தாங்கும் மூட்டுக்களான இடுப்பு என்பு மூட்டு மற்றும் முழங்கால் என்பவையோடு முதுகெலும்பு, கைகள் ,கைவிரல்கள் என்பனவும் இன் நோயால் பாதிப்படையும்.இந்நோயால் ஆண், பெண் இருபாலரும் பாதிப்படைந்தாலும் ஆண்களை விட பெண்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகின்றார்கள்.அதிலும் முக்கியமாக மாதவிடாய் நிறுத்தமடையும் காலப்பகுதியை கடக்கும் பெண்கள் இந்நோயால் பாதிப்படைதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
 
X- Ray மூலம் மூட்டுக்களை அவதானிக்குபோது இவற்றை இலகுவாக கண்டறியலாம்.
OA-knees.jpg

 

 
 
நோய்க்காரணிகள்
 
நோயாளி உடற்பருமனுடன் கூடிய மூட்டழற்சி நோயாளியாக இருத்தல்
மூட்டில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருத்தல்
 விவசாயியாக இருத்தல்
பரம்பரை பரம்பரையாக் இன் நோய் குடும்பத்தில் இருத்தல்
முதுமையடைதல்
மூட்டு பிரழ்தலுக்கு சரியான சிகிச்சை எடுக்காமை
 
 
 
இன் நோயை 3 வகையாகப்பிரிக்கலாம்
 
1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய்.(Nodal Generalised OA )
2) என்பு மூட்டுகளுக்கிடையில் கல்சியம் குறைவு ஏற்படுவதனால் இது ஏற்படும்.(Crystal Associated OA)
3)இளவயதினரிடம் ஏற்படும் மூட்டழற்சி நோய்.(OA of Premature Onset )
 
1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய்
 
இன் நோயின்போது கைவிரல்,கால்களின் மூட்டுக்கள் சடுதியாக வீக்கமடைந்து வலி ஏற்படும் இது 2,3  வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.இது பார்ப்பதற்கு முடிச்சுக்கள் போன்றிருப்பதால் Nodal Generalised என்று அழைக்கப்படுகின்றது.
Heberdens-nodes-Osteoarthritis-600x600.jpg
 
இதில் 2 வகையான முடிச்சுக்கள் இருக்கின்றன
Heberden’s nodes
Bouchard’s nodes
 
image3.jpeg
Heberden-Arthrose.jpg

 

 

 

 
முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோயின் ஏனைய வகைகள்
 
CMC of thumb
 
 
 
பெருவிரலும் மணிக்கட்டும் இணையும் பகுதியில் ஏற்படும் பாதிப்பால் இது ஏற்படுகின்றது.இன் நோய்நிலையின்போது பெருவிரலைப்பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும்.பெருவிரலைப்பயன்படுத்தும்போது அதிகவலி ஏற்படும்.
 
 
CMC-Joint-1-_100_large.jpg
 
Hallux
 
கால்பெருவிரலில் வீக்கம் ஏற்படுவதோடு பெருவிரலை அசைக்கமுடியாத நிலை ஏற்படும்.
 
download%2B%25287%2529.jpg
Valgus/rigidus
 
நின்ற நிலையில் கால்களைச்சேர்த்துவைத்திருக்கும்போது முழங்கால்மூட்டுக்கள் அருகருகாமையில் ஒன்றாகவும் பாதமூட்டுக்கள் தூரமாகவும் இருக்கும்.
 
download%2B%25289%2529.jpg
 
Capture32.jpg
 
 
 
Knees & hips
arth7_hipreplace-8col.jpg
இடுப்பு எலும்பில் ஏற்படும்பாதிப்பால் இன் நிலை ஏற்படுகின்றது.தொடர்ச்சியான இடுப்புவலியாக இல்லாமல் இடையிடையே இடுப்புவலி வந்து செல்லும்.ஆண்களில் விதையில் வலி ஏற்படும்.முக்கியமாக காலைவேளைகளில் மூட்டுக்களை அசைப்பது இருத்தல் எழும்புதல் கடினமாக இருக்கும்.
 
Apophyseal joints
image012.jpg
 
முதுகெலும்பின் என்புகள் இணையும் பகுதியைத்தான் என்று கூறுவார்கள்.இதில் கல்சியம் படிவடைந்து இவ் இடைவெளி நிரப்பப்பட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்ததும் ankylosing spondylitis என்ற நோய் நிலை ஏற்படும்.இதன்போது முதுகில் கூன் ஏற்படும்.
 
ankylosing-spondylitis-illustration-73a904.gif

 
 
மூட்டழற்சி நோய் நோயியல் 
 
Finger-Osteoarthritis1.jpg
 
 
நோய் அறிகுறிகள்:-
 
ஆரம்பத்தில் தொடர்ச்சியானவலியாக இருக்காமல் இடையிடையே ஏற்படும் வலியாக இருந்து நாளடைவில் தீவிர நிலைக்கு வலி மாற்றமடையும்.
முக்கியமாக மூட்டில் அழுத்தம் அதிகரிக்கும்போது அதாவது எழுந்து நிற்கும்போது வலி அதிகமாக இருக்கும்.
ஓய்வெடுக்கும்போது வலி குறைவாக இருந்தாலும் இடையிடையே ஏற்படும் வலியினால் நித்திரைகுழப்பமடையும்.
சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் கால் கைகள் இறுக்கமடையும் அதோடு கை கால்களை அசைக்கும்போது எலும்புகள் தேய்வடையும் சத்தத்தை நோயாளியினால் உணரமுடியும்.
 
 மூட்டு நீர்க்கட்டு (joint effusion)
hkj.JPG
 
MUS_arthrocentesis_knee.gif
 
 
 
கை கால் மெலிவடைதல்,மூட்டுக்களை அசைக்கும்போது சத்தம் ஏற்படுதல்
 
நோயை கண்டறியும் சோதனைகள்
 
இரத்தப்பரிசோதனைகள் மூலம்  இந்நோயை உறுதிப்படுத்தமுடியாது.
X Ray, MRI மூலமே இன் நோயை உறுதிப்படுத்தலாம்.
 
presentation1pptx-radiological-imaging-of-osteoarthritis-17-638.jpg
 
slide_50.jpg
 
 
சிகிச்சைமுறைகள் உடற்பயிற்சியும் வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுமே இன்
physioandpatient_3.jpg
நோய்க்கான முக்கிய சிகிச்சை முறைகளாகும்.இயன் மருத்துவர்/உடற்பயிற்சி மருத்துவரின் உதவியே இன் நோய்ச்சிகிச்சையில் பெரிதும் உதவுகின்றது.இவரின் உதவியுடன் isometric exercise, aerobic  exercise, isotonic exercise உடற்பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும்.உடற்பயிற்சியின் மூலமாக மூட்டுவலி,மூட்டுவீக்கம்,களைப்பு,உடற்சோர்வு,மனச்சோர்வு போன்றவற்றைக்குறைக்கமுடியும்.வெப்ப,குளிர் சிகிச்சைகள் ஸ்ரெச்சிங்க் உடற்பயிற்சிகளால் மூட்டழற்சிக்கு பெரிதும் நிவாரணம் கிடைக்கும்.
 
 
எடைகுறைப்பு இன் நோய்க்கான முக்கிய அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.உடற்பாரத்தின் அழுத்தம் மூட்டுக்களில்
download%2B%25282%2529.jpg
தாக்கப்படுவதனாலேயே மூட்டுக்களில் மிகுந்தவலி ஏற்படுகின்றது,எனவே உணவுக்கட்டுப்பாட்டின் மூலமும் உடற்பாரத்தைக்குறைப்பதன்மூலமும் இவற்றைக்கட்டுப்படுத்தலாம்.கால்சியம் அதிகம் உள்ள உணவுவகைகள்,காய்கறிகள் யோகட்,பால்,சீஸ்,கடலுணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகள்,ஜங்க் பூட்ஸ்,கொத்து,பிறைட் ரைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 
மூட்டழற்சியால்பாதிக்கப்பட்டவர்கள்  ரீதியான ஆதரவு மிகவும் அவசியம்.உளவியல் ரீதியாக இவர்கள் மிகவும்
patient-education-counseling-and-psychological-support-to-the-patient-and-relatives.jpg
பாதிப்படைந்துவிடுவார்கள்.அன்றாட அடிப்படைவேலைகளைக்கூட இவர்களால் தனியே செய்யமுடியாதுபோகும்.ஒரு கைபேசியையோ,டிவி ரிமோட்டைகூட தூக்கும்போது கைவலி ஏற்படலாம்.நடக்கமுடியாமல் தள்ளுவண்டியை பயன்படுத்துபவராக மாற நேரிடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குடும்பத்தவரின் ஒத்துளைப்பு நோயாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
 
அக நோக்கு சிகிச்சையின் மூலம்(endoscopy)மூட்டழற்சியின் பாதிப்புக்களில் இருந்துவிடுபடமுடியும்.இதன் மூலம் மருத்துவர் மூட்டிற்குள்ளே கருவிகளை செலுத்தி தீங்குவிளைவிக்கும் பாதிப்படைந்த இழையத்தை அகற்றுவார்.
1.jpg
 
 
 ஜாயின்ட் ரீபிளேஸ்மன்ற் surgery (joint replacement surgery)-இதன்மூலம் பாதிக்கப்பட்ட மூட்டு முழுவதுமாக அகற்றப்பட்டு செயற்கைமூட்டு பொருத்தப்படும் இதன்மூலம் அடுத்த 10-15 வருடங்களுக்கு எந்த வலியும் இல்லாமல் வாழமுடியும்.
 
 
home1.jpg
 
andover_happy_patient.jpg
ஹாயோலூரோனிக் அசிட்டை நேரடியாக மூட்டுக்குள் செலுத்துவதன் மூலமாக வீக்கம் மற்றும் வலியை குறைந்தது 6 மாதத்திற்காவது தள்ளிவைக்கமுடியும்.மூட்டழற்சி நோயை பூரணமாக குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் வலி நிவாரணிகளை பயன்படுத்துவதன்மூலமும் சரியான உடற்பயிற்சி மற்றும் உடல் எடைகுறைத்தல் வழக்காமான வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதம் மூலமும் வலியையும் பாதிப்புக்களையும் வெகுவாக குறைக்கமுடியும்.
 
 
வலி நிவாரணி மருந்துகள் மற்றும் பயன்படுத்தப்படும் ஏனைய மருந்துகள்
Analgesics, Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs), Corticosteroids
 
 
 
 
 
 

ஈ, சிலந்தியை தவறுதலாக விழுங்கிவிட்டால் உடலுக்குள் என்ன நடக்கும்? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன?

3 months ago
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆடம் டேய்லர்
  • பதவி, தி கான்வர்சேஷன்
  • 25 டிசம்பர் 2023, 02:24 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில், அமெரிக்காவின் மிசோரியில் உள்ள மருத்துவர்கள் ஆச்சரியமான ஒன்றை கண்டுபிடித்தனர். வழக்கமான பரிசோதனைக்காகச் சென்ற 63 வயதுடைய நோயாளி ஒருவரின் பெருங்குடலின் உள்ளே ஒரு ’ஈ’  இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

நோயாளியின் செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் உள்ள அமிலம் எல்லாவற்றையும் கடந்து இந்த ’ஈ’ அதன் உருவ அமைப்பில் மாறுபடாமல் அப்படியே எவ்வாறு தப்பித்தது என்பது மருத்துவர்களுக்குத் தெரியவில்லை.

உடற்கூறியல் பேராசிரியராக, மனிதர்களின் உடலுக்குள் புகும் விசித்திரமான விஷயங்கள் பலவற்றை நான் அறிந்திருக்கிறேன். அப்படியான சில கதைகளை இங்கே தொகுத்துள்ளேன். தைவானை சேர்ந்த பெண் ஒருவரின் காதுக்குள் சிலந்தி மற்றும் அதன் வெளிப்புற எலும்புக்கூடு இருந்தது சமீபத்தில் செய்திகளில் இடம்பிடித்தது.

பிரிட்டனை சேர்ந்த ஒருவர் தன்னை கடித்த சிலந்தியை விழுங்கியதால், அவருக்கு தொண்டையில் வீக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சிலந்தி தன் உடலுக்குள் செல்வதற்கு அவர் சிறிய பங்கு வகித்துள்ளார். ஆனால், பெரும்பாலானோரின் உடல்களில் சிலந்தி, ஈ போன்றவை தற்செயலாக சென்றுவிடுகிறது. குறிப்பாக, திட உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு இது அதிகம் நேர்கிறது.

 
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துரதிருஷ்டவசமாக, இவை சுவாசக் குழாய்க்குள் செல்வதால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இது உள்ளது.

குழந்தைகள் தங்கள் வாய், மூக்கு மற்றும் காதுகளுக்குள்ளே இத்தகையவற்றை தவறுதலாக செலுத்திவிடுகின்றனர். வாய் மற்றும் மூக்குக்குள் செலுத்தப்படும் பொருட்கள் பொதுவாக சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் சென்று, மலம் வாயிலாக வெளியேறுகின்றது.

குழந்தைகள் பொதுவாக பொம்மைகள், மணிகள், காந்தங்கள் முதல் எதிர்பாராத வகையில் அட்டைப்பூச்சிகள் மற்றும் ஊசிகள் வரை உட்கொள்கின்றனர். 

உணவுகள் சிக்கிக்கொள்ளுதல்

மேற்கத்திய நாடுகளில், வேர்க்கடலைகளை அதிகமாக குழந்தைகள் விழுங்கிவிடுகின்றனர். மேலும், ஹாட் டாக் (Hot Dog) போன்ற உணவுப்பொருட்கள், சாசேஜ்கள் (Sausages) போன்றவைதான் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகின்றன.

தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவில் இறைச்சிகளின் எலும்புகள் மற்றும் விதைகள் போன்றவை இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் விதைகளை விழுங்குவதால் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

 
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண்களை விட ஆண்கள் பொருட்களை விழுங்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன .தற்செயலாக பொருட்களை விழுங்குவதற்கான ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும்.

சில நேரங்களில், குழந்தைகள் உட்கொள்ளும் பொருள்கள் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் போகலாம். பிரிட்டனி பிரெஸ்டனைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர், சிறுவயதில் பிளேமொபில் (Playmobil) எனும் விளையாட்டுப் பொருளின் துண்டுகளை விழுங்கியுள்ளார். அது அவருடைய 47-வது வயதில், நீடித்த இருமல் பிரச்னைக்காக ஸ்கேன் செய்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது .

அறுவை சிகிச்சை வரை செல்லலாம்

நாணயங்கள் மற்றும் சிறிய பொம்மைகள் போன்ற பொருட்களை குழந்தைகள் விழுங்குவதால் அவை அறுவை சிகிச்சை வரை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை செரிமான அமைப்பு வழியாக செல்கின்றன.20% பேருக்கு வாய் அல்லது ஆசனவாய் வழியாக ஒரு குழாய் செருகப்பட்டு எண்டோஸ்கோப் மூலம் அப்பொருட்கள் அகற்றப்படுகின்றன. ஒரு சதவீதத்தினருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை உட்கொள்ளும் போது காந்தங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை குடல் சுவர்களின் சுழல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, குடல் சிதைவை ஏற்படுத்துகின்றன.

அறிகுறிகளை ஏற்படுத்தாமல் சிக்கிக்கொள்ளும் உலோகப் பொருட்களை உட்கொள்ளும் போது, அவை காந்தமாக மாறும் இரும்பு உலோகங்களைக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அபாயங்கள் ஏற்படலாம். குறிப்பிட்ட நபர் எம்.ஆர்.ஐ சோதனை மேற்கொள்ளும் போது அந்த உலோகங்கள் அதிக வெப்பத்திற்கு உட்பட்டு சேதமடையும்.

 
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருத்தடை சாதனங்களால் அபாயம்

மருத்துவ காரணங்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ பிறப்புறுப்புக்குள் சில சாதனங்கள் செலுத்தப்படுகின்றன.

அதாவது, கருப்பையினை நிலைகுலையாமல் தாங்க செய்யும் பெசரிகள் (Pessaries) அல்லது கருத்தடை சாதனங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். அவை தம் உடலில் செலுத்தப்பட்டிருப்பதை நோயாளி மறந்துவிட்டிருக்கலாம் அல்லது அவை உடலுக்குள்ளேயே சேதமடைவதை உணராமல் இருக்கலாம்.

இவை நோய்த்தொற்றுகள், ஃபிஸ்துலாக்கள் (உடலில் இரண்டு உறுப்புகள் அல்லது துவாரங்களை இணைக்கும் அசாதாரண பகுதி) மற்றும் கல் உருவாக்கம் போன்ற நீண்ட கால அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

ஆசனவாய் மற்றும் மலக்குடலின் உள்ளேயும் இத்தகைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளுடன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் 66% முதல் 85% பேர் ஆண்கள்.

குடல் சிதைவு அபாயம்

ஆசனவாய் அல்லது மலக்குடலில் உள்ள பொருட்களால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, குடல் இயக்கங்களின் இயல்பான இயக்கத்தைத் தடுக்கும் வகையில், அவை சிக்கிக்கொள்ளலாம். காலப்போக்கில், இது ஒரு துளையிடல் அல்லது குடல் சிதைவு அபாயத்துடன் பாதையின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை ஏற்படுத்தும்.

பாலியல் உறவின் போதோ அல்லது மலச்சிக்கல் சிகிச்சைகளுக்காகவோ சில பொருட்கள் ஆசனவாயில் செலுத்தப்படுகின்றன.

 
உடல்நலம்

காரணங்கள் வேறுபட்டாலும், அந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான பொருள்கள் மிகவும் பெரியவை. சுய இன்பத்திற்காக பலரும் ஆப்பிள்கள், கத்தரிக்காய்கள், தூரிகைகள், பேனாக்கள், கேரட், கண்ணாடிகள், சோடா பாட்டில்கள், பேஸ்பால் மற்றும் முழு தேங்காய் உள்ளிட்ட பொருட்களும் இவற்றில் அடங்கும். இப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டியுள்ளது.

விபத்தினாலோ அல்லது வேண்டுமென்றோ, உடலில் நுழையும் இத்தகைய பொருட்கள் ரத்தப்போக்கை அதிகரித்து மரண அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

ஆடம் டேய்லர் லேன்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராக உள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cz9q19vky66o

உடல்நலம்: இளம் வயதில் உடல் உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து - கண்டறிய வழி கூறும் விஞ்ஞானிகள்

3 months ago
உங்களை விட உங்கள் உடல் உறுப்புகளுக்கு அதிக வயதாகின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மிஷல் ராபர்ட்ஸ்
  • பதவி, டிஜிட்டல் ஹெல்த் எடிட்டர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்களுக்கு 45 வயது இருக்கலாம். அப்போது, உங்கள் உடலில் உள்ள இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றுக்கும் 45 வயது தானே ஆக வேண்டும்.

ஆனால் சிலருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது, இளம் வயதில் சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்புகூட ஏற்படுகிறது. அதாவது உங்களுக்கு 45 வயதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகத்தின் வயது 60 ஆக இருக்கலாம், இருதயத்தின் வயது 65 ஆக இருக்கலாம்.

உங்கள் உண்மையான வயதைவிட உங்கள் உறுப்புகள் பல்வேறு காரணங்களால் வேகமாக முதிர்வடைந்து வருகின்றன. இது எப்படி நமக்குத் தெரிய வரும்?

பொதுவாக உடலில் நோய் அல்லது அதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்படும்போதுதான் நமக்குத் தெரியும். ஆனால் தற்போது நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத போதே, முன்கூட்டியே என்ன உடல்நலக் கோளாறு ஏற்படக்கூடும் என்று கணிக்க முடியும். எந்தெந்த உறுப்புகளுக்கு என்ன வயதாகிறது என்பதைக் கண்டறிவதன் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

 
உறுப்புகளின் வயதை எப்படி தெரிந்து கொள்வது?
வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரத்த பரிசோதனை உங்கள் உள்ளுறுப்புகள் எவ்வளவு வேகமாக முதிர்வடைகின்றன என்பதையும், எந்த உறுப்புகள் விரைவில் செயலிழக்கக்கூடும் என்பதையும் கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு ஒன்று, இதயம், மூளை மற்றும் நுரையீரல் உட்பட 11 முக்கிய உடல் பாகங்களைக் கண்காணிக்க முடியும் எனக் கூறுகிறது.

ஆயிரக்கணக்கான நடுத்தர வயதினரிடம் இந்தப் பரிசோதனைகள் ஆய்வின் ஒரு பகுதியாகச் செய்யப்பட்டுள்ளன. ஆரோக்கியமான 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பு விரைவாக முதிர்வடைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருக்குப் பல உறுப்புகள் தங்கள் வயதைவிட முதிர்ந்தவையாக இருக்கின்றன.

பரிசோதனை செய்து தெரிந்துகொள்வது பயமுறுத்துவதாக இருந்தாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்தப் பரிசோதனை ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எந்த உறுப்புகள் வேகமாக முதிர்ச்சி அடைகின்றன என்பதை அறிவது, எதிர்காலத்தில் எந்த உடல்நல பிரச்னைகள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க உதவும் என்று நேச்சர் ஆய்விதழில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 
உடல் உறுப்புகள் - வயது இடைவெளி எவ்வளவு ஆபத்தானது?
வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவரின் வயதைவிட முதிர்ந்த இதயம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் விரைவாக முதிர்வடையும் மூளை, டிமென்ஷியாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் விரைவாக முதிர்வடைவது அடுத்த 15 ஆண்டுகளில் சில நோய்கள் மற்றும் இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என ஆய்வு கூறுகிறது.

ஆய்வில் சோதிக்கப்பட்ட உடல் உறுப்புகள்

  • மூளை
  • இதயம்
  • கல்லீரல்
  • நுரையீரல்
  • குடல்
  • சிறுநீரகம்
  • கொழுப்பு
  • ரத்த நாளங்கள் (நாடி)
  • நோய் எதிர்ப்பு திசு
  • தசை
  • கணையம்
 
இந்த பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?
வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்த உறுப்புகள் எவ்வளவு வேகமாக முதிர்வடைகின்றன என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிய, ஆயிரக்கணக்கான புரதங்களின் அளவுகளை ரத்த பரிசோதனை கணக்கிடும். ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்துவமான புரத அமைப்புகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏராளமான ரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் நோயாளி தரவுகளைப் பயன்படுத்தி கணிப்புகளைச் செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் டோனி வைஸ்-கோரே, "ஒவ்வொரு நபருக்கும் இந்த உறுப்புகளின் ஒவ்வோர் உயிரியல் வயதையும், தீவிர நோய்கள் இல்லாத பெரிய குழுவினருடன் ஒப்பிடும்போது, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 18.4% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பு சராசரியைக் காட்டிலும் மிக வேகமாக முதிர்வடைந்து வருவதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்றார்.

மேலும், “அடுத்த 15 ஆண்டுகளில் குறிப்பிட்ட உறுப்பில் நோய்க்கான அதிக அபாயத்தில் இந்த நபர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று விளக்கினார். பல்கலைக்கழகம் இப்போது சோதனைக்கான காப்புரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. அது எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்டு விற்கப்படலாம்.

உண்மையிலேயே இது எவ்வளவு நன்றாகக் கணிக்கிறது என்பதைச் சரிபார்க்க மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

உயிரியல் முதிர்வு என்பது மெதுவாக காலப்போக்கில் நடைபெறுவது அல்ல, திடீரென குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறக் கூடியது என டாக்டர் வைஸ்-கோரேயின் முந்தைய சில ஆய்வுகள் கூறுகின்றன. உறுப்பு முதிர்வுகள் 30 வயதில், 60களின் ஆரம்பத்தில் மற்றும் 70களின் பிற்பகுதியில் விரைவான ஏற்படுகிறது என்று அவரது ஆய்வு கூறுகிறது.

 
பயோ மார்க்கர்களின் முக்கியத்துவம் என்ன?
வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் வயது தொடர்பான ஆரோக்கியம் மற்றும் நோய்கள் பற்றிய நிபுணரான பேராசிரியர் ஜேம்ஸ் டிம்மோன்ஸ் ரத்தத்தில் உயிரியல் வயதுக்கான குறிகளை (பயோ மார்கர்) ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வு மரபணு மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது.

டாக்டர் வைஸ்-கோரேயின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், மேலும் பல மக்களிடம், குறிப்பாக பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளம் வயதினரிடம் ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கூறினார்.

டாக்டர் வைஸ்-கோரே, "50,000 அல்லது 1,00,000 ஆரோக்கியமான நபர்களிடம் இந்த ஆய்வை செய்ய முடிந்தால், அவர்களின் தனிப்பட்ட உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, மக்களின் உடலில் விரைவாக முதிர்ச்சி அடையும் உறுப்புகளைக் கண்டுபிடிக்க முடியும். மேலும் அவர்களது நோய் தீவிரமடைவதற்கு முன்பே, அவர்களைக் காப்பாற்ற முடியும்,” என்கிறார்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முதுமை உயிரியல் நிபுணரான பேராசிரியர் பால் ஷீல்ஸ், ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள, தனிப்பட்ட உறுப்புகளை மட்டுமல்ல, முழு உடலையும் பார்ப்பது முக்கியமானது என்று கூறினார்.

நோய்களை முன்கூட்டியே கண்டறிவது உதவிகரமானது என்றாலும், இதனால் ஏற்படும் மன உளைச்சலும் சேர்த்தே கவனிக்கப்பட வேண்டும் என்கிறார் ஏஜ் யுகே என்ற அமைப்பைச் சேர்ந்த கரோலின் ஆப்ரஹாம்ஸ்.

“தனக்கு ஒரு நோய் ஏற்படப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் நபர், அந்த உண்மையுடன் எப்படி வாழப் போகிறார் என்பதையும் சேர்த்தே கையாள வேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் உணர்வுரீதியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்,” என்கிறார் அவர்.

 
வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பயோ மார்கர்கள் குறித்து குவஹாத்தி மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் பல்லவி கோஷ், பிபிசியின் அஞ்சலி தாஸிடம் கூறியபோது, “பயோ மார்கர்கள் உடலின் செல்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியும். ஒருவரின் உடல்நலப் பிரச்னைகள் குறித்து சீக்கிரமே எச்சரிக்கை மணி எழுப்பும்,” என்றார்.

மருத்துவத்தில் ஒரு நோயை முன்கூட்டியே கண்டறியவும் நோயைக் கண்காணிக்கவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும் என அனைத்து கட்டங்களிலும் பயோ மார்க்கர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்கிறார் அவர்.

“இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் ஒரே நோய்க்கு இருவேறு நபர்களிடம் வெவ்வேறு அறிகுறிகள் இருக்கலாம். பயோ மார்க்கர் அந்த நோயை குறிப்பாகக் கண்டறிந்து அதன் தீவிரத் தன்மையை அறிய உதவுகிறது,” என்றார்.

ஆயிரக்கணக்கான பயோமார்க்கர்கள் இருப்பதாகவும் அவை 600க்கும் மேற்பட்ட உடல்நல சிக்கல்களைக் கண்டறியக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். பயோ மார்க்கர்கள் குறித்த ஆய்வு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது என்றாலும் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்று பேராசிரியர் பல்லவி கூறுகிறார்.

அதோடு, இதயம், மூளை, சிறுநீரகம், நுரையீரல், எலும்பு ஆகியவற்றின் வயது முதிரும் தன்மை குறித்து மேலும் தெளிவான புரிதல் நமக்குத் தேவை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cg3x2djz53qo

அவுஸ்திரேலியாவில் கருப்பைமாற்று சத்திரகிசிச்சையை செய்து கொண்ட பெண் குழந்தையை பெற்றெடுத்தார் - பெரும் மகிழ்ச்சியில்மருத்துவ உலகம்

3 months 1 week ago

Published By: RAJEEBAN    19 DEC, 2023 | 01:11 PM

image
 

கருப்பை மாற்று சத்திரகிசிச்சை  மூலம் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

utreus_mother.jpg

கடந்த ஜனவரி மாதம் தனது தாயரின் கருப்பையை பெற்றுக்கொண்ட கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண்மணியே கருப்பை மாற்று சத்திரசிகிச்சையி;ன் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற 16 மணிநேர கருப்பை மாற்று சத்திரகிசிச்சை உலகினதும் மருத்துவ உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

கருப்பை மாற்று சத்திரகிசிச்சை நிகழ்ந்து மூன்று மாதத்தின் பின்னர்  கேர்ஸ்டி பிரையன்ட் கருத்தரித்தார்,

பிரையன்ட்டின் ஆண் குழந்தைக்கு ஹென்றி என பெயர் சூட்டியுள்ளனர்.

ஆரோக்கியமான அழுகையுடன் புதிய வரலாற்றை படைக்கின்றேன் என்ற உணர்வுடன் ஹென்றி பிறந்தான் என மருத்துவர் ரெபேக்கா டீன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது 25 வருட கூட்டு ஆராய்ச்சியின் பலாபலன் என தெரிவித்துள்ள  மருத்துவர் சர்வதேச அளவில் விடாமுயற்சியின் உச்சக்கட்டம் இதன் காரணமாகவே அவுஸ்திரேலியாவில் இவ்வாறான முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/172052

தும்மலை அடக்கினால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

3 months 1 week ago
உடல்நலம்

பட மூலாதாரம்,MAYANK MAKHIJA/NURPHOTO VIA GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிட்டனில் ஒருவர் தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்கியதால், அவருடைய தொண்டையில் உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தும்மலை அடக்குவது இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டனில் உள்ள டண்டீ நகரில் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு நைன்வெல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனக்கு தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்குவதற்காக, மூக்கையும் வாயையும் தன் கைகளால் மூடியுள்ளார்.

அவ்வாறு தும்மலை அடக்கியதால் அவரது மூச்சுக்குழாயில் 2 மி.மீ. வரை காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.

ஒருவர் தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடினால் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் அழுத்தம் 20 மடங்கு அதிகரிக்கும் என, டண்டீ பல்கலைக்கழக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ரத்தக்குழாயில் வீக்கம்

இதன் காரணமாக ஒரு நபரின் செவிப்பறை கிழியும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், ரத்தக்குழாயில் எதிர்பாராத வீக்கமும் ஏற்படலாம். இது, அனீரிசம் (aneurysm) என்று அழைக்கப்படுகிறது. மார்பு எலும்புகள் உடையலாம் அல்லது வேறு சில கடுமையான காயங்கள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதிக்கையில், அவருடைய தொண்டையிலிருந்து ‘கரகர’வென சத்தம் வருவதையும் அதனை அந்நபரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தும்மல் வந்த நேரத்தில், அந்நபர் சீட் பெல்ட் அணிந்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார். மருத்துவர்களின் கூற்றுப்படி, அந்நபர் ஏற்கனவே ஒவ்வாமை மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

 
உடல்நலம்

பட மூலாதாரம்,BMJ

'தும்மல் உடலைக் காக்கும்'

அந்நபருக்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை எனவும் மருத்துவமனையில் சிறிது நேரம் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சில வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவர் போதிய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு அதிக வேலைகளை செய்ய வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

ஐந்து வாரங்களுக்குப் பிறகு, மற்றொரு ஸ்கேன் பரிசோதனையில் அவரது கழுத்தில் இருந்த காயம் முற்றிலும் குணமானது தெரியவந்தபோது மருத்துவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதுதொடர்பாக பி.எம்.ஜே. எனப்படும் மருத்துவ ஆய்விதழில் அறிக்கை வெளியானது. அதன் ஆசிரியர் டாக்டர். ராஸ்டெஸ் மிசிரோவ்ஸ் பிபிசியிடம் கூறுகையில், “தும்மல் மனித உடலின் ஒரு 'பாதுகாப்பு செயல்முறை' என்று கூறினார். அதாவது, தும்மல் இயற்கையான பாதுகாப்பு செயல்முறை.

 
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தும்மல் நல்லது - ஏன்?

இதன் மூலம் எரிச்சலூட்டும் எதுவும் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைவதை தும்மல் தடுக்கிறது எனவும் இதனால், தும்முவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என்றும் அவர் விளக்குகிறார்.

"தும்மலின் போது, எச்சில் மற்றும் சளியுடன் சேர்ந்து வைரஸ்கள் போன்ற எரிச்சலூட்டும் தொற்றுகள் மூக்கிலிருந்து வெளியேறும். இந்த வைரஸ்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரவுவதைத் தடுக்க நம் கைகளால் அல்லது முழங்கையின் உள் பகுதியைக் கொண்டு மூக்கை மூட வேண்டும்” என்கிறார் அவர்.

சில சமயங்களில் மூக்கையோ அல்லது வாயையோ மூடிக்கொண்டு தங்கள் தும்மலைத் தடுக்க மாட்டார்கள் என்றும் வேறு வழிகளில் தும்முவதை தடுப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

"நான் தும்முவதை நிறுத்த மூக்கை மூடுவதில்லை. நான் வேறு முறையைப் கையாளுகிறேன். நான் என் கட்டை விரலை என் மூக்கின் கீழ் மேல் உதட்டில் வைத்து அந்த இடத்தை சில நொடிகள் அழுத்துகிறேன். இந்த முறை எனக்கு வேலை செய்கிறது." என்கிறார் அவர்.

தும்மலை நிறுத்துவது திடீரென மூச்சுக்குழாயில் கடுமையான காயத்தை ஏற்படுத்தும், இது மருத்துவ ரீதியாக "தன்னிச்சையான மூச்சுக்குழாய் துளையிடல்" ( "spontaneous tracheal perforation" ) என கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே காணப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறினாலும், சில சமயங்களில் அது ஆபத்தானது.

 
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொண்டையில் காயம்

இத்தகைய சம்பவம் 2018 ஆம் ஆண்டில் பிரிட்டனில் நடந்தது. லெய்செஸ்டரில் ஒரு நபர் தும்முவதை அடக்கியதால் அவரது தொண்டையில் காயம் ஏற்பட்டது.

தும்மலை அடக்கியதால், திடீரென தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், பேசுவதற்கும் உணவுப்பொருட்களை விழுங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஏழு நாட்களுக்குக் குழாய் மூலம் அவருக்கு மருத்துவர்கள் உணவளித்தனர்.

தும்மல் வருவது ஏன்?

கிருமிகள், வைரஸ்கள் அல்லது மகரந்தத் துகள்களால் மட்டும் தும்மல் ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில நேரங்களில் சூரியனின் வலுவான கதிர்கள் கூட தும்மலை ஏற்படுத்தலாம்.

1,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், வலுவான கதிர்கள் அல்லது வலுவான சூரிய ஒளி காரணமாக அவர்கள் தும்முகிறார்கள் என்று ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சில நிபுணர்கள் இதற்குக் காரணம் மரபாகவும் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். சிலர் அதிகமாக உணவு உண்ட பிறகு தும்மல் வருவதாகச் சொல்கிறார்கள்.

ஒரு நபரின் தும்மல் எட்டு மீட்டர் அதாவது 26 அடி வரை எட்டும்.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் லிடியா போரோய்பா நடத்திய ஆய்வில், தும்மும்போது மூக்கிலிருந்து வெளியேறும் துகள்கள் பல நிமிடங்களுக்கு காற்றில் மிதக்கும் என்று தெரியவந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cyr3d4l1xggo

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் அதிகம் ஏற்படுவதன் அறிவியல் காரணம்

3 months 2 weeks ago
பெண்களுக்கு ஏன் கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சார்லி ஜோன்ஸ், லாரா ஃபாஸ்டர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயாகும்.

புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இந்த நோய்க்குக் காரணம், சிசுக்களில் உள்ள GDF15 என்ற ஹார்மோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது கர்ப்பிணிப் பெண்களுடைய மூளையின் அடிப் பாகத்தில் உள்ள மிகச்சிறிய பகுதியில் செயல்படும் ஹார்மோன் ஆகும். இது குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தி, வாந்தியை உண்டாக்குகிறது. ஜிடிஎஃப்15 ஹார்மோனால் சில கர்ப்பிணிப் பெண்கள் நாளொன்றுக்கு 50 முறைகூட வாந்தி எடுக்க நேரிடுகிறது.

 

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் ஓராஹில்லி, "ஒரு தாய் இந்த ஹார்மோனால் எவ்வளவு எளிதாகத் தூண்டப்படுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் சிரமப்படுவார்,” என்று கூறினார்.

"இதை அறிந்து கொள்வதன் மூலம் இதை எவ்வாறு தடுக்க முடியும் என்பதற்கான வழி கிடைக்கிறது," என்று அவர் கூறினார்.

நூறு கர்ப்பிணிப் பெண்களில் 1 முதல் 3 பேர் ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது கருவின் உயிரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பாதிக்கப்படும் பல பெண்களுக்கு நீரிழப்பைத் தடுக்க ஊசி மூலம் திரவச்சத்து செலுத்தப்பட வேண்டும்.

 
வாழ முடியாது என்ற மனநிலை
பெண்களுக்கு ஏன் கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுகிறது?
படக்குறிப்பு,

சூசி வெரில் தான் கர்ப்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டதாக கூறுகிறார்

தனது HG அனுபவம் மோசமாக இருந்ததால், கருக்கலைப்பு செய்யலாமா என்று யோசித்ததாக 35 வயதான சூசி வெரில் கூறுகிறார்.

வெரில் மூன்று குழந்தைகளின் தாய். அவர் தனது மூன்று கர்ப்பங்களில் இரண்டின்போது இந்த நோயை அனுபவித்தார். அவர் தனது நிலையை பொதுவில் பகிர்ந்துகொண்டதால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தினமும் அவரைத் தொடர்பு கொள்கின்றனர்.

"இனிமேல் வாழ முடியாது என்ற மனநிலை எனக்கு இருந்தது, என் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை," என்று அவர் விளக்கினார். "நான் என் கர்ப்பத்தைத் தொடர வேண்டாம் என்று கருதினேன், ஏனென்றால் அது மோசமாக இருந்தது, HG இருக்கும்போது இது மிகவும் பொதுவானது,” என்றார்.

"நான் மூச்சுவிட்டால்கூட குமட்டல் ஏற்படும். இரண்டு கர்ப்ப காலத்தின்போதும் எனது அறையில் ஐந்து மாதங்களுக்கு பூட்டப்பட்டிருந்தேன். உயிர்வாழ என் உலகத்தை மிகச் சிறியதாக மாற்றிக் கொண்டேன், என் கணவர் தான் என்னை கவனித்துக் கொண்டார்," என்று வெரில் கூறுகிறார்.

"அது எல்லாவற்றையும் பாதிக்கிறது, குழந்தை பிறக்கும் முன் ஒவ்வொரு நாளையும் எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்றுதான் கடந்து வந்தேன்,” என்றார்.

 
ஹார்மோனை தடுக்க என்ன வழி?
பெண்களுக்கு ஏன் கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுகிறது?
படக்குறிப்பு,

தனது கணவர்தான் தன்னை கவனித்துக் கொண்டார் என்று சூசி கூறுகிறார்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள் GDF15 ஹார்மோனுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என்று முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டினாலும், புதிய ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் "இதுவரை, இந்த ஹார்மோனால் ஏன் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்ற புரிதல் இல்லை,” என்று கூறினார்.

கேம்பிரிட்ஜ் மற்றும் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்கள், அமெரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, நேச்சர் (Nature) இதழில் வெளியிட்ட ஆய்வில், நோயின் தீவிரம் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனின் அளவைப் பொருத்தது என்றும், அதற்கு முன்பு அந்த ஹார்மோன் உடல் எவ்வளவு இருந்தது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கண்டறிந்தனர்.

இந்த ஆய்வில், கேம்பிரிட்ஜில் உள்ள ரோஸி மகப்பேறு மருத்துவமனையில் பெண்களை ஆய்வு செய்தனர். ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) அபாயத்தை அதிகரிக்கும் ஒரு மரபணு மாற்றம் கொண்ட பெண்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தனர்.

மேலும், கர்ப்பத்திற்கு முன்பே மிக அதிக அளவு GDF15ஐ உண்டாக்கும் ரத்த நோயான பீட்டா தலசீமியா பாதித்த பெண்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

"இந்த ஹார்மோன் தாயின் மூளையில் பொருந்துவதைத் தடுப்பதே, இந்த நோயைக் குணப்படுத்தும் பாதுகாப்பான, பயனுள்ள வழியாகும்,” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வளர்சிதை மாறுபாட்டு நோய்கள் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ஓராஹில்லி விளக்கினார்.

 
பெண்களுக்கு ஏன் கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுகிறது?
படக்குறிப்பு,

விவியென் குமார் பேறு காலத்தில் மிகவும் தனிமையாக உணர்ந்ததாகக் கூறினார்.

விவியென் குமார் இரண்டு குழந்தைகளின் தாய், கர்ப்ப காலத்தில் மணிக்கு 10 முறை குமட்டல் ஏற்பட்டது. உறங்கும்போது மட்டுமே வாந்தி எடுக்கவில்லை.

"இது வெறும் காலை நேரத்தில் ஏற்படும் வாந்தி அல்ல, அது சகிக்க முடியாதது," என்று அவர் கூறினார். "ஒருமுறை அனுபவித்தால், மீண்டும் மீண்டும் நினைவில் இருக்கும், எப்போதும் உங்களுடன் இருக்கும்,” என்றார்.

"உலகத்திலிருந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு, நான் மட்டும் தனியாக ஒரு உலகத்தில் இருப்பது போலவும் உணர்ந்தேன். இதற்கான முடிவு இருப்பதாகவே அப்போது தோன்றவில்லை. வீட்டைவிட்டு வெளியேறுவதே மிகவும் கடினம்,” என்றார்.

"ஆனால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் கணவர் மற்றும் தாயாரின் முழு ஆதரவு கிடைத்தது. அவர்கள் இல்லாமல், என்னால் குழந்தை பெற்றிருக்க முடியாது," என்றார். மூன்றாவது முறையாக கர்ப்பமானபோது, அவர் எட்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துவிட்டது.

"நான் பலவிதமான மருந்துகளை எடுத்தேன். எனக்கு , ஸ்டிராய்டுகளை வழங்கினார்கள். அது வேலை செய்யவில்லை. துரதிருஷ்டவசமாக குழந்தை உயிர் பிழைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் கர்ப்பகால ஆதரவு அமைப்பின் தலைமை நிர்வாகி ஷார்லோட் ஹோவ்டன், இது நீண்டுகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ பிரச்னை என்றார்.

"ஆராய்ச்சியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது," என்று ஹோவ்டன் கூறினார். "ஏனென்றால் பலர் இது ஆராய்ச்சி செய்வதற்கான விஷயம் என்றே கருதவில்லை. . அது வெறும் காலையில் ஏற்படும் லேசான வாந்திதானே. நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று நினைக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3gyldz959jo

வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆய்வுகள் கூறும் புதிய தகவல்

3 months 2 weeks ago
வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லாரா ப்லிட்
  • பதவி, பிபிசி உலகம்
  • 14 டிசம்பர் 2023

ஒருவருக்கு வயதானாலே முகங்களில் சுருக்கம் ஏற்படுவதும் வெள்ளை முடி எட்டிப் பார்ப்பதும் சாதாரண வீட்டு வேலைகளில் ஈடுபட்டால் கூட முதுகு வலி மூட்டு வலி வருவதும் இயல்புதான்.

ஆனால், இப்போது நாம் அதைப்பற்றிப் பேசப்போவதில்லை. நாம் பேசப்போவது முதுமைக்குள் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி.

வயதாக ஆக உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால், ஆம், ஆரோக்கியம் மேம்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நமது சமூகத்தில் இளமையைதான் அனைவரும் விரும்புகிறார்கள். 35 அல்லது 40 வயதை ஒருவர் கடந்துவிட்டாலே அது ஏதோ பெரிய குற்றத்தைப் போல பார்க்கப்படுகிறது.

"முதுமை என்றாலே உடல் சீரழிவை நோக்கிதான் செல்லும் எனும் கருத்துதான் நம்மிடையே அதிகமாக உள்ளது. இந்த கருத்தின் அடிப்படையில்தான் ஏஜிசம் (Ageism) எனப்படும் ஒருவரின் வயதின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் செயல் கடைபிடிக்கப்படுகிறது,” என இங்கிலாந்தைச் சேர்ந்த ஏஜிங் பெட்டர் எனும் அரசு சாரா அமைப்பின் துணை இயக்குநர் ஜெம்மா மௌலாண்ட் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “வயதாவது என்பது செறிவை நோக்கிய ஒரு பயணமாகவும் பல புதிய வாய்ப்புகளுக்கான நேரமாகவும் பார்க்கப்பட வேண்டும். வயதான காலத்தில் ஒருவர் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். சமூக சேவையில் கூட ஈடுபடலாம்,” என்கிறார்.

இது அனைவருக்கும் பொருந்தாதுதான். ஏனென்றால் ஒருவர் முதுமையில் என்னென்ன விஷயங்களில் ஈடுபடலாம் என்று பார்க்கும்போது அதற்கு நிறைய காரணிகளை நாம் கணக்கில் கொள்ள வேண்டிய சூழலும் உள்ளது. அவர்களது பொருளாதார நிலைமை, அவர்களின் உடலில் இருக்கும் நோய்கள் போல பல காரணிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 
முதுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வயதானால் தன்னம்பிக்கை அதிகரிக்குமா?

வயதானவர்களிடம் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். வயதானவர்கள் தாங்கள் உடுத்தும் உடை குறித்தும் தங்களது உடல் வடிவம் குறித்தும் பெரிதும் கவலைப்பட மாட்டார்கள். இதற்கு காரணம் வயதானால் ஒருவருக்கு தன்னம்பிக்கை அதிகமாகும் என்பதே.

இது மட்டுமல்ல. இது போன்று வயதாவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மாரத்தான் ஓடுவதற்கு எல்லாரும் இளம் வயதுதான் சரியானது என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், 2020-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் மாரத்தான் ஓடுவதற்கு ஆண்களுக்கு 45 முதல் 49 வயதும் பெண்களுக்கு 40 முதல் 44 வயதும்தான் சிறப்பான காலம் என தெரிய வந்துள்ளது.

இது போல வயோதிகம் பற்றி வெளியே தெரியாத பல நன்மைகள் உள்ளன.

 
வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதுமையில் நமது மூளை சிறப்பாக செயல்படுமா?

இதுவரை, மனித மூளையின் செயல்பாடுகள் 20 வயதில் உச்சத்தை அடைந்து, நடுத்தர வயதை அடைந்ததும் நிலைபெற்று, பின்னர் வயதாகும்போது படிப்படியாக குறையத் தொடங்கும் என்று கருதப்பட்டது.

இது முழுதும் உண்மை கிடையாது. நியாபக சக்தி மற்றும் தற்காலிகமாக மூளையில் தகவல்களை சேமித்துக்கொள்ளும் திறன் ஆகியவை வயதாகும்போது குறையலாம். ஆனால், மேம்படக்கூடிய சில செயல்பாடுகளும் உள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வயது குறித்து வெளியிட்ட ஆய்வில், வயதாகும்போது இரண்டு தகவல்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை புரிந்துகொள்ளும் மூளையின் திறன் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு நிகழ்வு நடக்கும்பொழுது அது குறித்த பரந்து பட்ட பார்வையை பெறுவது மற்றும் ஒரு நிகழ்வு எவ்வாறெல்லாம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் போன்றவற்றை அறியும் மூளையின் திறன் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுளது. இதுதான் வயதானவர்களிடையே அனுபவம் மூலமாக வெளிப்படும் ஞானத்தின் அடிப்படை.

 
வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறையின் பேராசிரியர் மைக்கல் டி உல்மன் மற்றும் போர்ச்சுகலின் லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஜோவா வெரிசுமோ ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின்படி வயதானவுடன் இரண்டு முக்கிய மூளை செயல்பாடுகள் மேம்படும்.

அவர்கள் கூறுகையில், “ஒன்று, ஓரியண்டிங் (Orienting) எனப்படும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன். மற்றொன்று எக்ஸிகியூட்டிவ் இன்ஹிபிஷன் (Executive Inhibition) எனப்படும் கவனத்தை சிதறடிக்கும் அல்லது முரண்படும் எண்ணங்களை தடுக்கும் திறன். உதாரணமாக ஒருத்தர் நம்மிடம் பேசும்பொழுது அருகே கேட்கும் வேறு சத்தங்களில் கவனம் சிதறாமல் வைத்துக்கொள்வது.

"இந்த இரண்டு திறன்களும் வயதாகும்போது மோசமாகும் என இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில் மாறாக அவை மேம்படுகின்றன என தற்போது தெரியவந்துள்ளது,” என தெரிவித்தனர்.

மேலும், ஒரு வார்த்தைக்கு இருக்கக்கூடிய வேறு பெயர்களை (Vocabulary) நினைவு படுத்தும் ஆற்றல் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மேம்படும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக இரண்டு பேராசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

61 வயதான உல்மன், தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் கூறுகையில், "நான் செய்யும் கடினமான விஷயங்களான அறிவியல் கட்டுரைகள் எழுதுவது மற்றும் ஆராய்ச்சி செய்வது போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுகிறேன். இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் நான் இன்னும் சிறப்பாக செயல்படுவேன்," எனத் தெரிவித்தார்.

வயதானால் நோய் எதிர்ப்பு சக்தி உயருமா?

வயதுக்கு ஏற்ப நமது உடலில் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு மண்டலங்கள் பலவீனமடையும்.

காரணம், நாம் குறைவான வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறோம், அவை குறைவாக செயல்படுகின்றன. நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மற்றொரு பகுதி உள்ளது. இது பல ஆண்டுகளாக பல்வேறு நோய்க்கிருமிகளை எதிர்கொண்டதால் அவை குறித்து நோய் எதிர்ப்பு நினைவாற்றல் மண்டலம் நியாபகம் வைத்திருக்கும். இதனால், நோய் எதிர்ப்பு வயதானவர்கள் இடையே வலுவாக இருக்கும்.

நமது மூளையின் நினைவாற்றலைப் போலவே இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நினைவாற்றல் உள்ளது. அந்த நோய் எதிர்ப்பு நினைவாற்றல் வயதானவர்கள் இடையே வலுவாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

 
வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"முதன்முறையாக நம் உடல் ஒரு குறிப்பிட்ட வகை தொற்றுநோயை சந்திக்கும் போது, அது மிகவும் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது முறையாக நீங்கள் அதைச் சந்திக்கும் போது, நாம் இனி நோய்வாய்ப்பட மாட்டோம் என்ற அளவிற்கு, நோய்க்கிருமிகளை உடல் திறமையாக கையாளும்,” என ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவத்தின் பேராசிரியர் ஜான் உப்ஹாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்த நினைவாற்றல் இளம் வயதில் சிறப்பாக இருக்காது. மேலும் இது உங்கள் 60களின் பிற்பகுதியில் இருந்து 70களின் முற்பகுதி வரை சிறப்பாகச் செயல்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

மற்றொரு கூடுதல் நன்மை ஒவ்வாமையின் (Allergy) தீவிரத்தை குறைப்பதாகும்.

"60 அல்லது 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் குழந்தைகள் அல்லது பெரியவர்களை விட ஒப்பீட்டளவில் குறைவான ஒவ்வாமைகள் எனப்படக்கூடிய அலெர்ஜிகளை கொண்டுள்ளனர்," என்று உப்ஹாம் கூறுகிறார். வயதானவர்களுக்கு புதிய அலெர்ஜிகள் ஏற்படுவதில்லை. இது வயதானவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிக வலுவாக செயல்படாததன் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

வயது அதிகமானால் மகிழ்ச்சியும் அதிகரிக்குமா?

நாம் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது நமது சமூகப் பொருளாதார நிலைமை, ஆரோக்கியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் ஒரு மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சி என்பது U வடிவத்திலானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, மக்கள் இளமைப் பருவத்தில் ஒப்பீட்டளவில் மகிழ்ச்சியாக நுழைகிறார்கள். ஆனால் 30 வயதிற்கு மேல் மகிழ்ச்சி குறைகிறது. வழக்கமான உதாரணம், 40 முதல் 60 வயது வரை ஏற்படும் நடுவயது நெருக்கடி (Midlife crisis). பின்னர் மீண்டும் 70 வயதை தொடும்பொழுது மகிழ்ச்சியான எண்ணங்கள் அதிகமாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான லாரா கார்ல்ஸ்டன் கூறுகையில், “வயதானவர்கள் தங்கள் மரணத்தை நெருங்கிவிட்டதை அறிந்திருப்பதால், அவர்கள் நிகழ்காலத்தில் சிறப்பாக வாழக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இன்று என்ன முக்கியமோ அதில் கவனம் செலுத்தி நீண்ட கால இலக்குகளில் குறைந்த கவனம் செலுத்துகிறார்கள்,” எனத் தெரிவித்தார்.

 
வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வயதானால் உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பலர் நினைப்பதற்கு மாறாக, வயதானவர்கள் அதிக அளவு பாலியல் திருப்தியைக் கொண்டிருப்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் செயல்பாடு மற்றும் வயதான பெண்களின் பாலியல் திருப்தி குறித்த ஆய்வில், 80 வயதிற்குட்பட்ட பெண்களில் பாதி பேர் எப்போதும் அல்லது பெரும்பாலான நேரங்களில் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்.

இது எப்படி சாத்தியம்?

“வயதாக ஆக, நாம் விரும்புவதை மீண்டும் மீண்டும் முயன்று மகிழ்வடைவதற்கான உணர்வு முதிர்ச்சியைப் பெறுகிறோம். அந்த இடத்திலிருந்துதான் நமது பாலியல் அனுபவம் விரிவடைகிறது,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், கேடலினா லாசின் தெரிவித்தார்.

வயதானவர்களிடையே வெளிப்படும் தன்னம்பிக்கையும் தங்களது உடலை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் உடலுறவின் போது அவர்களுக்கு அதிக மகிச்சியை கொடுக்கிறது.

மேலும், வயதான காலத்தில், உடலுறவுக்கு இடமளிப்பதற்கு, வயதானவர்களின் அன்றாட வாழ்வில் அதிக ஓய்வு நேரமும், குறைவான மன அழுத்தமும் இருக்கும் என்ற எளிய உண்மையும் இதற்கு காரணம் என்கிறார் வயதானவர்களிடம் ஏற்படக்கூடிய பாலியல் பிரச்னைகளுக்கு ஆலோசனை அளிக்கும் சமூக சேவையாளர் நடாலி வில்டன்.

"முழுநேர வேலை, குழந்தைகள் மற்றும் பிறரைக் கவனித்துக்கொள்வது என நடுத்தர வயதினருக்கு நெருக்கடியான வாழ்க்கை உள்ளது. இவை அனைத்தும் வயதானவர்களின் வாழ்க்கையில் குறைவாகவே உள்ளது. எனவே வயதுக்கு ஏற்ப உடலுறவு மேம்படுகிறது,” என்கிறார் வில்டன்.

 
வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலியல் குறைபாடுகளைச் சரி செய்ய முடியுமா?

இவை தவிர்த்து, உடல் உழைப்பு தொடர்பான சிக்கல்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களில் பிறப்புறுப்புச் சிதைவு அல்லது ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை அடைவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளும் முதுமையில் ஏற்படும் என்பது உண்மைதான் என்றாலும் இவை சரி செய்துகொள்ளக் கூடியவைதான் என்று வில்டன் மற்றும் லாசின் ஒப்புக்கொள்கிறார்கள்.

எனவே, உங்கள் தலையில் ஏற்கனவே வெள்ளை முடிகள் தோன்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பிறந்த நாள் ஏற்கனவே உங்கள் நினைவிலிருந்து அழிக்கப்பட்டிருந்தால், விரக்தியடைய வேண்டாம். இதர மேம்பட்ட திறன்கள் மற்றும் பல புதிய நல்ல அனுபவங்கள் முதுமைக்குள் மறைந்துள்ளன. அவற்றை அனுபவித்து வாழுங்கள். ஏனென்றால், வாழ்க்கை வாழ்வதற்கே.

https://www.bbc.com/tamil/articles/cyr27lxgkdpo

நச்சுக்கொடி என்றால் என்ன? ஏன் அதை ஒதுக்குப்புறத்தில் ஆலமரத்தில் கட்டுகின்றார்கள்?

3 months 2 weeks ago
நச்சுக்கொடி அல்லது நஞ்சுக்கொடி தொடர்பாக அண்மையில் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது அதில் ஒருவர் இப்படி கூறுகின்றார். நஞ்சுக்கொடியை நம் முன்னோர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஆலமரம் அல்லது அரசமரத்தின் கிளைகளில் கட்டிவிடுவார்கள் இதற்கான காரணம் மண்ணில் புதைத்ததால் அதன் நஞ்சு மண்ணில் பரவி எந்த செடி கொடிகளும் அங்கே முளைக்காது ஆனால் ஆலமரத்தில் கட்டிவிடடால் ஆலமரம் அதில் இருக்கும் விஷத்தை உறிஞ்சிவிடும். சரி வாருங்கள் இவர் கூறுவது உண்மைதானா? உண்மையில் நஞ்சுக்கொடி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். தாயின் வயிற்றினுள் இருக்கும் கர்ப்பப்பையை  குழந்தையுடன் சேர்த்து இணைக்கும் பகுதிகளை நச்சுக்கொடி என்று சாதாரண மக்கள் அழைக்கின்றார்கள் 
 
Placental-waste-tied-hanged-on-big-banyan-trees.png

 

 

 

உண்மையில் நச்சுக்கொடியின் தொழில்தான் என்ன என்று பார்த்துவிடுவோம் 

 

about-the-placenta-a10795.jpg
மேலே உள்ள படத்தைப்பாருங்கள் குழந்தை, பிளசண்டா, தொப்புள் கொடி அனைத்தையும் கொண்ட மிக மிக அடிப்படையான கட்டமைப்பு காட்டப்பட்டுள்ளது.

 

 

குழந்தை வயிற்றுக்குள் உருவாகும்போது குழந்தையுடன் சேர்ந்து உருவாகும் தற்காலிக கட்டமைப்புத்தான் பிளசண்டா மற்றும் அம்பிலிக்கல் கோர்ட் என அழைக்கப்படும் தொப்புள்கொடி

பிளசண்டா- இந்த அமைப்பு குழந்தையையும் தாயையும் இணைக்கும் பாலமாக தொழிற்படுகின்றது ஆனால் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்தப்பகுதியினூடாக குழந்தையின் குருதியும் தாயின் குருதியும் கலப்பதில்லை.

இந்தப்பகுதி ஹோர்மோன்களைச்சுரக்கின்றது

ஒரு பெண் கர்ப்பமடைந்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்வதற்காக HCG எனப்படும் ஹோர்மோன் சலத்தில் இருக்கின்றதா என பரிசோதனை செய்துபார்ப்பார்கள் Pregnancy strip test சலத்தினுள்ளே ஒரு குச்சிபோன்றிருக்கும் ஸ்ரிப்பை வைட்து சோதனை செய்யலாம் ஆனால் இப்போது அட்வான்சாக டிஜிடலில் கூட பரிசோதனைசெய்யமுடியும், இவ்வாறு பரிசோதனைசெய்யும்போது இந்த HCG  சலத்தில் இருந்தால் மட்டுமே ரிசல்ட் போசிட்டிவ் என்று வரும் அதாவது அந்தப்பெண் தாயாகிவிட்டார்.

 

குழந்தைக்குத்தேவையான குளுக்கோஸ் மற்றும் நியூற்றிசன்கள் சத்துக்கள் அனைத்தையும் தாயிடமிருந்து பிளசண்டா எனப்படும் இந்தப்பகுதியே குழந்தைக்கு வழங்குகின்றது, அதோடு குழந்தையிடமிருந்து கழிவுகளை, ஒக்சிசன் அற்ற குருதியை தாய்க்கு கடத்துவதும் இந்த அமைப்புத்தான். சாதாரணமாக உடலின் அங்கங்களுக்கு தேவையான அடிப்படை இரத்தப்பரிமாற்றத்திற்காக ஒரு நாடி மற்றும் ஒரு நாளங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும் ஆனால் ஆச்சரியப்படும்படியாக தொப்புள்கொடியில் மாத்திரம் இரண்டு நாடிகளும் ஒரு நாளமும் காணப்படுகின்றது.

anatomy-of-the-umbilical-cord-cross-sectional-vector-44477718.jpg

 

 

வயிற்றினுள்ளே பனிக்குடத்தினுள்ளே இருக்கும் குழந்தை எப்படி சுவாசிக்கின்றது? பனிக்குடத்தினுள்ளே இருக்கும் பாயம் அல்லது நீருக்குள்ளே இருந்து எப்படி குழந்தை சுவாசிக்கும்? மூழ்கி இறந்துவிடுமே?

Placenta-1024x576.jpg

 

 

வழமையாக நாடி ஒரு அங்கத்திற்கு ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியைக்கொண்டுசெல்லும் ஆனால் இங்கே 2 நாடிகளும் குழந்தையிடமிருந்து ஒட்சிசன் இல்லாத காபனீர் ஒட்சைட் இருக்கும் கழிவு இரத்தத்தையே தாய்க்கு வழங்குகின்றது. சுருக்கமாக கூறினால் குழந்தை வயிற்றினுள்ளே இருக்கும்போது குழந்தை சுவாசிப்பதே இதனூடாகத்தான் அதாவது குழந்தையின் நுரையீரலே இதுதான் ( பிளசண்டா).

பிளசண்டா என்ற இந்த அமைப்பை கர்ப்பப்பையில் எந்த இடத்திலும் உருவாகலாம் ஆனாலும் பொதுவாக கர்ப்பப்பையின் வாசலில் இது உருவாவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

 

Placenta_accreta.png

 

 

 

கருப்பைவாசலை பிளசண்டா மூடியிருந்தால் அதை placenta previa என்று கூறுவார்கள். இதிலும் மூடப்பட்டிருக்கும் அளவிற்கு ஏற்ப வேறுவேறுபெயர்கள் காணப்படுகின்றது.

placenta-previa-diagram.jpeg
 
இவ்வாறான பிளசண்டாவுடன் ஒரு பெண் கர்ப்பமடைந்திருந்தால் அதிகக்குருதிப்பெருக்கால் தாய் மற்றும் குழந்தை இருவரும் மரணிப்பதற்கான ஆபத்து சற்று அதிகமாக இருக்கும் ஆனாலும் வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சையின்மூலம் இருவரையும் காப்பாற்றமுடியும்.
 
இந்த பிளசண்டா என்ற பகுதி குழந்தைபிறப்பதற்குமுன்பே கர்ப்பப்பையில் இருந்து கழருமானால் குழந்தையால் சுவாசிக்கமுடியாது குழந்தை இறந்துவிடும். இதன்போது அதிக இரத்தப்போக்கும் ஏற்படும். இதை placental abruption என்று கூறுவார்கள்.
PLACENTA-ABRUPTION-FINAL-with-text-updated_wide.jpg

 

சாதாரணமாக இவ்வாறு பிளசண்டா கர்ப்பபையைவிட்டு கழருமானால் கழரும்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கையும் அல்ரா சவுண்ட் ஸ்கானையும் வைத்து இதை உடனடியாக கண்டறியமுடியும் ஆனாலும் மேலே இரண்டாவதாக காட்டப்பட்டிருப்பதைப்போன்று வெறியே இரத்தம் கசியாமல் உள்ளேயே இரத்தம் தேங்கும்வகையில் பிளசண்டா கழருமானால் கண்டுபிடிப்பது கடினம் ஆனால் இப்படியான நேரத்தில் குழந்தையின் அசைவு குறைந்துகொண்டுசெல்வதை தாயாலுணரமுடியும் உடனே வைத்தியசாலைக்குச்சென்று ஸ்கான் செய்வதன்மூலம் ஆபத்தைக்கண்டறியமுடியும்.
 
இரட்டையர்களாக இருந்தால் பிளசண்டா எப்படி இருக்கும்?
dichorionic_monochorionic1.png
இதிலும் பலவகைகள் இருக்கின்றன. ஒரு பிளசண்டாவை இருவரும் பகிர்ந்துகொள்ளும்வகை, தனித்தனி பிளசண்டாவை தமக்காக குழந்தைகள் வைத்திருப்பார்கள். கீழே உள்ளபடம் மேலதிக விபரங்களுக்கு.

 

 

image02062.jpeg

 

தொப்புள் கொடியிலும் சில அசாதாரண நிலைகள் காணப்படுகின்றன.
 
 
umbilical-cord-complications.jpg

 

 
தொப்புள்கொடி கர்ப்பப்பையினூடாகவெளியேவரலாம், தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தை சுற்றியிருக்கலாம், தொப்புள்கொடியில் முடிச்சுக்கள் இருக்கலாம், இவற்றினாலும் ஆபத்துக்கள் ஏற்படலாம். இவற்றினால் தொப்புள்கொடி நசிவடைவதால் குழந்தைக்குதேவையான ஒக்சிசனை குழந்தையால் பெற்றுக்கொள்ளமுடியாது இதனால் குழந்தை இறந்துவிடும். இதை அறிந்துகொள்ள குழந்தையின் இதயத்துடிப்பு பதிவுசெய்யப்படுகின்றது.
Compressed-Umbilical-Cord-Illustration.2104191710513.png

 

 
 
41597_2020_538_Fig2_HTML.png

 

இதை வாசிக்கும் நீங்கள் ஒரு கர்ப்பவதியாக இருந்தால் இதைவாசித்துவிட்டு பயப்படவேண்டாம், மேலே கூறியவை மிக அரிதாக சிலருக்கு நடக்கவாய்ப்புகள் இருக்கின்றன, சரியான நேரத்தில் வைத்தியஉதவியை நாடுவதன்மூலம் உங்களையும் குழந்தையையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
 
சரி நான் தொடங்கியவிடயத்திற்கு வருகின்றேன், எதற்காக நச்சுக்கொடி என்று பெயர்வைத்தார்கள் என்று எனக்குத்தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கொமண்டுங்கள் ஆனால் நச்சுக்கொடியென இவர்கள் எதைக்கூறியிருந்தாலும் அது நஞ்சல்ல அது நஞ்சாக இருக்குமானால் அது உருவாகும்போதே தாய்,சேய் இருவரும் இறந்துவிடுவார்கள்.
 

ஈறுகளை பராமரிக்காவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்கள் கூட ஏற்படலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

3 months 2 weeks ago
உடல்நலன் - வாய் பராமரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

38 நிமிடங்களுக்கு முன்னர்

நீங்கள் பல் மருத்துவரிடம் செல்லும்போது, பொதுவாக உங்கள் பற்களை கவனித்துக்கொள்வது பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள். ஆனால், பற்கள் தவிர்த்து வாயின் மற்ற பகுதிகளை கவனிக்க மறந்துவிடுகிறீர்கள்.

உங்கள் வாயின் ஆரோக்கியம் உடலின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதற்கான அறிகுறிகளை காட்டலாம். அதனால் வாய் ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியமாகும்.

“கண்களில் ரத்தம் வந்தால் நீங்கள் புறக்கணிப்பீர்களா? இல்லைதானே. அப்படியிருக்கையில் வாயின் ஈறுகளில் ரத்தம் வந்தால் மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?” என லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ ஆராய்ச்சி துறையின் இயக்குநர் பேராசிரியர் நிகோஸ் டோனோஸ் பிபிசியின் ‘தி எவிடென்ஸ்’ நிகழ்ச்சியில் கேட்டார்.

"ஈறுகளில் ஏற்படும் கடுமையான நோய்களுடன் வாழ்க்கையை கடப்பவர்கள் இருக்கிறார்கள். அது சாதாரணமானது தான் என்றும் அவர்கள் நம்புகின்றனர்,” என்கிறார் அவர்.

பீரியடோன்டிடிஸ் (periodontitis) எனப்படும் ஈறுகளில் ஏற்படும் நோய், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும், இந்த நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தும் பல ஆய்வுகள் உள்ளன.

"மனிதர்களுக்கு அதிகமாக ஏற்படும் நாள்பட்ட நோய்களில் ஈறுகளில் ஏற்படும் இந்த நோய் ஆறாவது இடத்தை வகிக்கிறது. உலகளவில் 110 கோடி மக்களிடையே இந்நோய் உள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இது 11.2 % அகும்.” என்றார் டோனோஸ்.

 
உடல்நலன் - வாய் பராமரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈறு நோயின் அறிகுறிகள் என்ன?

ஈறு நோய் அல்லது பீரியடோன்டிடிஸ் என்பது, "பற்களைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களை பாதிக்கும் தீவிர தொற்று. உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால், உங்கள் பற்களை தாங்கும் எலும்புகளை அழித்துவிடும். இதனால் பற்கள் தளர்ந்துவிடும் அல்லது விழுந்துவிடும்” என்கிறார் அவர்.

ஈறுகளில் ரத்தப்போக்கு, சிவத்தல், வலி அல்லது தொடர்ச்சியான துர்நாற்றம் ஆகியவை இந்நோயின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.

இந்நோயால் வாய் மட்டும் பாதிக்கப்படாது. அதையும் தாண்டி, இது டைப்-2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

"இந்நோய் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதேசமயம், நீரிழிவு நோயாளிகளிக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்” என டோனோஸ் கூறுகிறார்.

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பது ஈறு நோயை கட்டுப்படுத்தவும், தீவிர பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவும் என ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன.

"சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்த ஒரு ஆய்வில், ஈறு நோய்க்கு வழக்கமாக சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், அறுவை சிகிச்சை இல்லாமலேயே, சிறந்த வளர்சிதை மாற்றக் கட்டுப்பாடு ஏற்பட்டு, கிட்டத்தட்ட 12 மாதங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது" என்று டோனோஸ் கூறினார்.

பிரிட்டனில் உள்ள சலிஸ்பரி மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சை மருத்துவரும் பிபிசியின் ‘தி எவிடென்ஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்றவருமான கிரஹாம் லாய்ட் ஜோன்ஸ் கூறுகையில், வாய் சுகாதாரத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் இடையேயான உள்ள உறவு "உண்மையாமானது" என தெரிவித்தார்.

"நாம் வாயை ஒரு நோயெதிர்ப்பு உறுப்பாகப் பார்க்க வேண்டும். நம் வாயில் பொதுவாக நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. வாயின் சுகாதாரத்தில் சமரசம் செய்துகொண்டால் அந்த கிருமிகள் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும். அவை இந்நோய்கள் வளர்வதற்கும் மோசமடைவதற்கும் காரணமாகிவிடும்,” என மருத்துவர் கிரஹாம் லாய்ட் தெரிவித்தார்.

 
வாய் பரமரிப்பு - உடல்நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாயிலிருந்து இதயம் வரை

டைப் 2 நீரிழிவு நோய் மட்டுமே ஈறு நோயுடன் தொடர்பான ஒரே நோய் அல்ல: கட்டுப்பாடற்ற பீரியடோன்டிடிஸ் பாக்டீரியாக்கள் ரத்தத்தின் வாயிலாக உடலில் பயணிப்பதால், அவை இதயத்தை பாதிக்கலாம்.

"பீரியடோன்டிடிஸ் காரணமாக உடலில் இருக்கும் இந்த அழற்சி கூறுகள் ரத்த ஓட்டத்தை அடைகின்றன," என்று டோனோஸ் கூறினார். "இஸ்கிமிக் எனப்படும் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் பிரச்னை முதல் மாரடைப்பு வரை நோயாளிகளுக்கு இது விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்," என்கிறார் அவர்.

நோயெதிர்ப்பு குறைபாடு அல்லது போதைப்பொருள் பயன்பாடு காரணமாக வாய் ஆரோக்கியம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் போது ஏற்படும் நோய்த்தொற்று எண்டோகார்டிடிஸ் (endocarditis) எனப்படுகிறது. இது மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

"அதிர்ஷ்டவசமாக இது ஒரு அரிதான நோயாகும். ஆனால் இது ஒரு தொற்று நோய். இதில் வாயில் உள்ள சில கிருமி தொற்றுகள் கட்டுப்பாட்டை இழந்து இதயத்தின் உள் திசுக்களைப் பாதிக்கின்றன," என்று டாக்டர் லாயிட்-ஜோன்ஸ் விளக்குகிறார்.

"காலப்போக்கில், அதிகப்படியான பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டம் மூலமாக உடலின் மற்ற பகுதிகளை அடைகின்றன. இது நோய்களுக்கு வழிவகுக்கும் அல்லது ஏற்கனவே உள்ள நோய்களை மோசமாக்கும்,” என்கிறார் அவர்.

 
உடல் நலன் - வாய் பராமரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அறிவாற்றலுடன் தொடர்பு

முந்தைய நிகழ்வுகளைப் போல ஆதாரங்கள் உறுதியானதாக இல்லாவிட்டாலும், சில ஆராய்ச்சியாளர்கள் இந்த பாக்டீரியாக்களுக்கும் முதுமையில் அறிவாற்றல் குறைபாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அவர்களில் ஒருவரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விவான் ஷா, தனது ஆய்வில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட பற்களுடன் முதுமை அடையும் நபர்களுக்கு, அதைவிட குறைவான பற்களை உடையவர்களைவிட, குறைந்தளவிலேயே அறிவாற்றல் குறைபாடு இருப்பதாக உறுதியாக தெரிவித்தார்.

"சான்றுகள் ஒப்பீட்டளவில் சமீபத்தியவை என்றாலும், உங்களுக்கு சில வகையான அறிவாற்றல் குறைபாடு இருந்தால் நீங்கள் பல் துலக்குவது அல்லது பற்களின் இடுக்குகளுக்கிடையே சுத்தம் செய்யும் திறன் பாதிக்கப்படலாம்," என்று ஷா கூறுகிறார்.

"இது ஒரு ஊட்டச்சத்து பிரச்னையுடன் தொடர்புடையது. உங்களுக்குக் குறைவான பற்கள் இருந்தால், நிச்சயமாக ஊட்டச்சத்துக் குறைபாடும் இருக்கும். இது அறிவாற்றல் சரிவுக்கு வழிவகுக்கிறது," என்றார்.

"ஈறு நோயின் வளர்ச்சி மற்றும் அது மோசமடைவதில் தொடர்புடைய குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் உள்ளன." என்கிறார் லாய்ட்-ஜோன்ஸ்.

"ஜிங்கிவாலிஸ் (gingivalis) என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா மிகவும் சுவாரஸ்யமானது. இது நரம்பு செல்களைக் கொல்லும் நியூரோடாக்சின்களால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த பாக்டீரியா வாயில் மட்டும் தங்காது, அது வீக்கமடைந்த ஈறுகளை விட்டு வெளியேறி உடலுக்குள் செல்கிறது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவம் இரண்டிலும் இந்த பாக்டீரியா காணப்படுகிறது." என்றார்.

பேராசிரியர் டோனோஸைப் பொறுத்தவரை, வாய் மற்றும் உடலின் வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையிலான இந்த உறவுகள், பீரியடோன்டிடிஸ் நோயை முதலில் தடுப்பதன் முக்கியத்துவத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.

  • உடல்நலன் - வாய் பராமரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாய் பராமரிப்பின் அவசியம்

"புற்றுநோய் தவிர அனைத்து வாய்வழி நோய்களும் தடுக்கக்கூடியவை மற்றும் ஓரளவுக்கு சிகிச்சையளிக்கக்கூடியவை," என டோனோஸ் கூறினார்.

வாய் சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் உரிய நேரத்தில் பல் மருத்துவரை அணுகுதல் இந்நோய்களை தடுக்க உதவும் என்கிறார் அவர்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வலிமை பெற்று தாய் மற்றும் குழந்தை இருவரையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று டாக்டர் ஷா கூறினார்.

"பேறு காலத்திற்கு முன்பே குழந்தைகள் பிறப்பது, குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பிறக்கும் அபாயத்தை இது அதிகரிக்கிறது, அதனால்தான் தாய்மார்களுக்கு போதுமான கவனிப்பை வழங்குவது மிகவும் முக்கியம்," என்கிறார் ஷா.

https://www.bbc.com/tamil/articles/c72qpv61ppzo

Checked
Fri, 03/29/2024 - 13:27
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed