புதிய பதிவுகள்2

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months ago
என/எங்கள் பார்வை பிழையாக வாய்ப்பு இருப்பதனால்தான் உங்கள் நேர்மையான பார்வையைக் கேட்கிறேன் / கேட்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. கேட்கபது எங்கள் உரிமை. (அடிச்சா மோட்டை , விட்டா குடும்பி என்கிற ரீதியில் போகிறது உங்கள் கருத்து. )

பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: எதற்காக? என்ன நடக்கிறது?

3 months ago
"Reko Diq is a small town in Chagai District, Balochistan, Pakistan. It is located in a desert area, 70 kilometres north-west of Naukundi, close to Pakistan's border with Iran and Afghanistan. The area is located in Tethyan belt that stretches all the way from Turkey and Iran into Pakistan https://en.wikipedia.org/wiki/Reko_Diq." இதுக்கும் ஆப்பா🤣

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம்!

3 months ago
துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1366265

ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!

3 months ago
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்! ”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில் ஈரான் அரசு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே பாகிஸ்தான் அரசு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஈரான் எமது மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இத் தாக்குதலினால் அப்பாவிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் ஈரான் அரசு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1366260

சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!

3 months ago
"நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் " 👍, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்

சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்!

3 months ago
சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்! சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்தது. இந்நிலையில் சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளனர் என தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் ஆரம்ப காலங்களில் மக்கள் தொகையைக் குறைக்க ‘ஒரு குழந்தை திட்டம்‘ நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் குறித்த திட்டத்தை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. மாறாக இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1366268

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months ago
மிகவும் தவறான கருத்து. இது பற்றி எழுத எதுவும் இல்லை. உங்கள் பிள்ளை உங்களுக்கு இதற்கான விளக்கத்தை அல்லது படிப்பினையை தரும். அது வரை நன்றி தம்பி.

சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!

3 months ago
பனங்கட்டி குருதியின் சீனி அளவைக் கூட்டுமா கூட்டாதா? (பனங்கட்டியை கனக்க சாப்பிடுரதெண்டில்லை சதாரணமாக தேநீர் அல்லது உளுத்தம்களியுடன்)

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months ago
இல்லை இதை தான் நான் இங்கே முதலிலேயே குறிப்பிட்டேன் சேர்ந்து நடக்காதவர்களது பார்வை இது தான். இனி சேரவும் மாட்டார்கள் தேவையும் இல்லை. எனவே இப்படியே மாறி மாறி கேள்விகளும் மீண்டும் கேள்விகளுமாக தொடர்ந்து செல்லும். நாம் சாதாரணமாக எமது வாழ்வில் வேலையில் நடாத்தும் ஒரு பேச்சு வார்த்தை மேசை எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்வாக விடயமே தெரியாதவர்களுக்கு என்னால் எழுத முடியாது. நன்றி.

தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்

3 months ago
யாழ்கள உறுப்பினர்கள் அடுத்த தலைவராக யாரை விரும்புகின்றார்கள் என்பதை திரியின் மேலே உள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கலாம்😁
Checked
Fri, 04/19/2024 - 08:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed