புதிய பதிவுகள்2

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

3 months 1 week ago
நல்லூர் ஆலயத்திற்கு சென்ற நடிகை ரம்பா : நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள தென்னிந்திய நடிகை ரம்பா நேற்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். அதேவேளை நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 21ஆம் திகதி நடைபெறவிருந்த இசை நிகழ்வு யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் பெப்ரவரி 09ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363723

இமயமலைப் பிரகடனத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு!

3 months 1 week ago
இமயமலைப் பிரகடனத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு! திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும் யுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிப்பதாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த 69 சிவில் அமைப்புக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ வெளிப்படுத்தும் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு எனும் கூற்றுக்கள், மேற்குறிப்பிட்டவற்றை முற்றிலும் புறமொதுக்கி, இப் பிரச்சினையைப் புரிந்துணர்வின்மைப் பிரச்சனையாகவும் தனிமனித-குழு அடிப்படையிலான மனித உரிமைப் பிரச்சனையாகவும் கோட்பாட்டுச் சிதைப்பினை மேற்கொள்கின்றன. இப்பிரச்சனையை அற நீக்கமும், அரசியல் நீக்கமும் செய்ய விளைகின்றன. சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்தியலின் சகிப்பு எல்லைகளுக்குள் குறுக்க முயல்கின்றன. இப்பிரகடனத்தின் ஐந்தாவது கூற்று, சிங்கள-பௌத்த கருத்தியலின் நிறைவேற்று எந்திரமாகிய அரசையும் அதன் வன்முறைக் கருவிகளான முப்படைகளையும் பொறுப்புக்கூறலில் இருந்து விடுவித்து, அரச கட்டமைப்புக்கு வெளியில் உள்ள சில பௌத்த துறவிகள், அமைப்புகள் என்பவற்றை மட்டும் அதனுடன் பிணைக்கிறது. இது மிகவும் பாரதூரமான ஒரு அரசியல் சதியாகும். கூட்டாக கையெழுத்திடப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்குப் பின்னதாக வெளியிடப்பட்ட உலகத் தமிழர் பேரவை சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தினரின் கூட்டறிக்கை, உலகத் தமிழர் பேரவையின் குரலாக மட்டுமே வெளிப்படுகிறது. சிங்கள பௌத்த மேலாண்மைக் கருத்தியலாலும் அதன் அரசியல் திட்டங்களாலும் இதுவரை விளைந்த பேரழிவுகள் குறித்த ஏற்றுக் கொள்ளுகையோ, சிறுவருத்தமோ கூட்டு அறிக்கையில் சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தின் குரலாக வெளிப்படுத்தப்படவில்லை. தாயகத்தில் வாழும் மக்களின் சார்பில் பேசுவதற்கும் ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கும் தாயகத்தில் அவர்களால் அமைக்கப்படும் பரந்த ‘கூட்டு முன்னணி’ ஒன்றிற்கே தார்மீக உரிமை உள்ளது என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1363728

மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

3 months 1 week ago
மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன? christopherDec 20, 2023 00:11AM Stalin met Modi in person பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகனமழையால்‌ ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4வது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது மிக்ஜாம்‌ புயல்‌ மழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகள்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் முன்வைத்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதிப்புகள்! இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மிக்ஜாம்‌ புயல்‌ கனமழையால்‌ சென்னை, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ வெள்ளம்‌ சூழ்ந்து மக்களின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்டது குறித்தும்‌, புயல்‌ மழையால்‌ சாலைகள்‌, பாலங்கள்‌, பள்ளிக்‌ கட்டடங்கள்‌, அரசு மருத்துவமனைகள்‌ போன்ற பொதுக்‌ கட்டமைப்புகளும்‌, மின்சார உட்கட்டமைப்புகளும்‌, உள்ளாட்சி அமைப்புகளில்‌ குடிநீர்‌ கட்டமைப்புகள்‌, கிராம சாலைகள்‌ போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்‌ குறித்தும்‌, தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டதால்‌ பாதிப்பிற்குள்ளான பகுதிகளில்‌ மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும்‌ எடுத்துரைத்தார்‌. மேலும்‌, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர்‌ ராஜ்நாத்‌ சிங்‌ கடந்த டிசம்பர் 7ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்து, மிக்ஜாம்‌ புயல்‌ பெருமழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தது குறித்தும்‌, ஒன்றிய அரசின்‌ பல்துறை ஆய்வுக்‌ குழு, டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில்‌ மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அக்குழு தன்னுடன்‌ ஆலோசனை மேற்கொண்டது குறித்தும்‌, தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளை விரைந்து மேற்கொண்டதற்கு அக்குழு பாராட்டு தெரிவித்ததையும்‌ பிரதமரிடம் எடுத்துரைத்தார். விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டும்! தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத்‌ தொகையாக 7,033 கோடி ரூபாயும்‌, கூடுதலாக நிரந்தர நிவாரணத்‌ தொகையாக 12,659 கோடி ரூபாயும்‌ கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்‌ கொண்டார்‌. மேலும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்‌ கடந்த இரண்டு நாட்களாக (டிசம்பர்‌ 17 மற்றும்‌ 18) பெய்த கனமழை முதல்‌ அதிகனமழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகள்‌ குறித்து விளக்கி, அம்மாவட்டங்களில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகள்‌ குறித்தும்‌ எடுத்துரைத்தார்‌. தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்! மிக்ஜாம்‌ புயல்‌ கனமழையால்‌ சென்னை மற்றும்‌ சுற்றுப்புற மாவட்டங்களில்‌ கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால்‌ ஏற்பட்ட வெள்ளப்‌ பாதிப்பையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ தற்போது வரலாறு காணாத வகையில்‌ 100 ஆண்டுகள்‌ இல்லாத கனமழை பெய்ததால்‌ ஏற்பட்ட பாதிப்புகளையும்‌ கருத்தில்‌ கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்‌ என்று மாண்புமிகு இந்தியப்‌ பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்‌ கொண்டார்‌. அவசர நிதியாக ரூ.2000 கோடி! எனவே, பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களின்‌ தற்காலிக சீரமைப்புப்‌ பணிகளுக்காகவும்‌ வழங்கிட வேண்டும்‌ என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/political-news/stalin-met-modi-in-person-what-were-the-three-main-demands/

கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் - ஆவணம்

3 months 1 week ago
2006/06/17 சூன் 17, 2008 அன்று சிங்களக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டதென அவர்களால கூறப்படும் கரும்புலிப்படகு ஒன்று. அற்றை நாளில் மொத்தம் நான்கு புலிவீரர்கள் இருவேறு சமயங்களில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் இருவர் குப்பி கடித்த போதிலும் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மற்றையர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைக்க வைக்கப்பட்டதாகவும் சிங்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=18535

வடமாகாண மீனவர்களுக்கு பாதீட்டில் 500 மில்லியன் ஒதுக்கீடு! அரசதலைவர் ரணிலிற்கு நன்றி அமைச்சர் டக்ளஸ்!

3 months 1 week ago
வடமாகாண மீனவர்களுக்கு பாதீட்டில் 500 மில்லியன் ஒதுக்கீடு! அரசதலைவர் ரணிலிற்கு நன்றி அமைச்சர் டக்ளஸ்! வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதக்கீடு செய்யபட்டடுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய கடற்றொழில் தினத்தினை கடற்றொழில் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் கொண்டாடியுள்ளனர்.கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன் பாதீட்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு என ரூபாய் 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்காக நான் இந்த நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வடமாகாண கடற்றொழிலாளர் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார். https://newuthayan.com/article/வடமாகாண_மீனவர்களுக்கு_பாதீட்டில்_500_மில்லியன்_ஒதுக்கீடு!_அரசத்தலைவர்_ரணிலிற்கு__நன்றி_அமைச்சர்_டக்ளஸ்!

ஊழல் வழக்கால் எம்.எல்.ஏ., பதவியை இழக்கிறாரா அமைச்சர் பொன்முடி? - திமுக என்ன செய்யும்?

3 months 1 week ago
பட மூலாதாரம்,PONMUDI 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம். ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது? அவர் அமைச்சராக தொடர முடியுமா? வழக்கின் பின்னணி என்ன? கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று பொன்முறை மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கின் தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,விற்கான தகுதியை இழக்கிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். பட மூலாதாரம்,TNDIPR எம்.எல்.ஏ. தகுதியை இழந்தாரா பொன்முடி? “ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியை இழக்கிறார். தண்டனை அறிவிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், இது நாள் வரை, தீர்ப்பும் தண்டனையும் ஒரே நாளில் வெளிவந்ததால், இதுவரை அது பேசு பொருளாகவில்லை,” என்றார் தராசு ஷ்யாம். மேலும், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே எம்.எல்.ஏ.,வாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர முடியும் என்றும் கூறினார் ஷ்யாம். “நாளை வரவிருக்கும் தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம் செல்லலாம். ஆனால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடையாணை வாங்கினால் மட்டுமே அவரால் தொடர முடியும். மற்றவை, தண்டனை விபரங்களைப் பொறுத்தது,”என்றார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டிக்ப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். ஆனால், குற்றத்தின் தன்மை உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு, ஏழு ஆண்களுக்குள்ளும் நீதிபதிகள் தண்டனை வழங்குவார்கள். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(m)-யின் படி, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியிழக்கிறார். பட மூலாதாரம்,PTI சிறை செல்வாரா பொன்முடி? தண்டனை அறிவிக்கப்பட்ட பின் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் சங்கர் சுப்புவிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், சிறை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார். “எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் ஜாமின் கோரலாம். மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், உயர்நீதிமன்றத்திலேயே அவர் ஜாமின்கோரலாம். ஆனால், ஜாமின் வழங்க வேண்டுமா வேண்டாமா என்பது அந்த நீதிபதியின் தனிப்பட்ட முடிவு. ஒரு வேளை, மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடித்தான் ஜாமின் பெற வேண்டும்,” என்றார் சங்கர் சுப்பு. ஆனால், சங்கர் சுப்பு தகுதியிழப்பு குறித்து பேசும்போது, “இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கொடுத்தால் அவர் தகுதியிழக்கமாட்டார். ஆனால், குற்றவாளி என்ற தீர்ப்பிற்கு மட்டும் அவர் தடையாணை பெற வேண்டும்,” என்றார். பட மூலாதாரம்,PONMUDI மறு விசாரணையில் மூன்று அமைச்சர்கள் மீதான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மொத்தம் மூன்று அமைச்சர்களின் வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த 1996-2001ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அந்த ஆட்சிக்காலத்தில், வருமானத்திற்க அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்தனர். இருபது ஆண்டுகளாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, இந்த ஆண்டு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஜூன் 28 ஆம் தேதி அமைச்சர் மற்றும் அவரது மனைவியை விடுவித்து தீர்ப்பளித்தது. பட மூலாதாரம்,THANGAM THENNARASU/ FB அதேபோல, 2006-11 ஆம் ஆண்ட நடந்த திமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார் தங்கம் தென்னரசு. அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக 74.58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2012 ஆம் ஆண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்பளித்த கீழமை நீதிமன்றம், அவரையும், அவரது மனைவியையும் விடுவித்தது. தற்போது, தங்கம் தென்னரசு நிதித் துறை அமைச்சராக உள்ளார். இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது. அதேபோல, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் 2006-2011 ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ 44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக 2011 ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்புதிவு செய்திருந்தனர். இந்த வழக்கிலும், கடந்த ஆண்டு கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது. பட மூலாதாரம்,MK STALIN/FB அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும்போது, ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றால், அது ஆளும் கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார் தராசு ஷ்யாம். “அமைச்சராக இருக்கும் ஒருவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகிறார் என்பது நிச்சயம் திமுக.வுக்கு ஒரு அழுத்தமாகத்தான் இருக்கும். மேலும், தற்போது அமைச்சரவையில் இருக்கும் அடுத்தடுத்த அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் வரும்போது, அவை அனைத்தும் கூடுதல் அழுத்தங்களாக திமுக அரசிற்கு இருக்கும்,”என்கிறார் ஷ்யாம். சிக்கலில் இருக்கும் அமைச்சர்களுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கி, புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் மட்டுமே நெருக்கடிகள் குறையும் என்றார் ஷ்யாம். “அடுத்து மத்தியப்புலனாய்வு அமைப்பின் பார்வையில் இருக்கும் துரைமுருகன், ஏ.வ.வேலு போன்றோருக்கும் சிக்கல் வரலாம். இவை அனைத்தும் ஆளும் கட்சிக்கு கூடுதல் நெருக்கடியைத்தரும். அதற்கு அமைச்சர்களை மாற்றுவதுதான் ஒரே தீர்வு. ஆனால், அதனை திமுக செய்யுமா என்பது தான் சந்தேகம். ஒருவேளை அதிமுகவில் இது நடந்திருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், அவர் இதனை தான் செய்திருப்பார்,” என்றார் ஷ்யாம். https://www.bbc.com/tamil/articles/ckr89g9257do

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 1 week ago
ரச்சின் ரவீந்திரா, மிட்செலை சென்னை அணி வாங்கியது ஏன்? தோனிக்கு பிறகு கேப்டன் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 19 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம், கிரிக்கெட் மீதான காதல், அணியின் மீதான பற்று அவரை தொடர்ந்து இயங்க வைக்கிறது” சிஎஸ்கே அணி குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில். இதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் மகேந்திர சிங் தோனி இப்போதைக்கு ஓய்வு அறிவிக்க மாட்டார் என்பதையே அவர் சூசமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனக்கு ஈடான சிறந்த கேப்டனை கண்டுபிடிக்கும் வரை, உருவாக்கும் வரை தோனி கேப்டனாகத் தொடர்வார் என்று கூட வைத்துக்கொள்ளலாம் என்று பிளெம்மிங் பேச்சின் மூலம் தெரிகிறது. தோனியும் வியூகமும் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி களத்துக்கு வந்துவிட்டாலே, அவர் எவ்வாறு வீரர்களைக் கையாள்வார், எந்தெந்த வீரர்களுக்கு எப்போது பந்துவீச வாய்ப்பளிப்பார், பீல்டிங் வியூகம் என அனைத்துமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எதிர் அணியினரும் எதிர்பார்ப்புடன் பார்க்கக் காத்திருப்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் வேண்டாம் என நிராகரிக்கப்பட்ட பல வீரர்களை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கி அவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி அவர்களை வேறு கோணத்தில் காட்டியதுண்டு. உதாரணமாக ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி போன்றோர் நடுவரிசையில் நிதானமாக ஆடக்கூடிய பேட்டர்கள். ஆனால், சிஎஸ்கே அணிக்கு வந்தபின் அவர்களின் பேட்டிங் வியூகமும், ஸ்டைலும் மாறிவிட்டது. எந்த வீரர்களாக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிட்டாலே அவர்களை தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் திறமை தோனிக்கும், சிஎஸ்கே பயிற்சிக்கும் இருக்கிறது என்று அந்த அணியில் உள்ள பல வீரர்கள் பேட்டியிலேயே தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES விடுவிக்கப்பட்ட வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியிலிருந்து அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் ஏலத்திலும் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கு வலை சி.எஸ்.கே அணி ஏலத்துக்குள் நுழையும் போது அதன் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருந்தது. கிறது. இந்தத் தொகையை வைத்து, ஏலத்தைச் சந்தித்தது. முதலில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீது குறி வைத்தது. ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் என்று ஏற்கெனவே பிபிசி செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தநிலையில் அது உண்மையாகிது. உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று சிறப்பாகச் செயல்பட்ட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திராவுக்கு அடிப்படை விலை ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்து. ஆனால், கடும் போட்டிக்குப்பின் அவரை ரூ.1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ரச்சின் ரவீந்திரா அவசியம் ஏன்? சிஎஸ்கே அணிக்கு கெய்க்வாட்டுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்க சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவசியம் தேவை. அதனால்தான் தொடக்க ஆட்டகாரருக்காக இடதுகை பேட்டர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியுள்ளது சிஎஸ்கே. அது மட்டுமல்லாமல் ரவீந்திரா சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்பதால், நடுப்பகுதி ஓவர்களிலும் ரவீந்திராவை தோனியால் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். இதுபோன்ற இளம் வீரர்களை தோனி சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக்குவார் என்பதில் சந்தேகமில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ராயுடு இடத்தை நிரப்பும் மிட்செல் அடுத்ததாக நியூசிலந்து ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் கடந்த சீசனில் விலை போகவில்லை. ஆனால் இந்த முறை ஏலத்தில் அவரை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாயிலிருந்து ரூ.13 கோடி அதிகமாக ரூ.14 கோடிக்கு வாங்கியது. சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதனால்தான் ஆல்ரவுண்டர்கள் ஏலத்தில் வரும்போது அவர்களை தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்குவதை சிஎஸ்கே வியூகமாக வைத்துள்ளது. ஏற்கெனவே ரவீந்திராவை வாங்கியநிலையில் டேரல் மிட்செலை வாங்கியுள்ளது. டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்துள்ள மிட்செலின் ஸ்ட்ரைக் ரேட் 137க்கும் மேல் வைத்திருக்கிறார். ஒன்டவுன் மற்றும் நடுவரிசையில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக களமிறக்க மிட்ஷெலை விலைக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு தூண் போல் இருந்துவந்தார். ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’. களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சித்து டேரல் மிட்ஷெலை வாங்கியுள்ளது. ராயுடு இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், அவரின் இடத்துக்கு வலுவான ஒரு பேட்டர் தேவை என்பதால், டேரல் மிட்செல் வாங்கப்பட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியில் மீண்டும் ஷர்துல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர் நீண்டகாலமாக இருந்து வந்தார், கடந்த இரு சீசன்களுக்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டநிலையில் மீண்டும் வாங்கப்பட்டுள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூரை வைத்துக்கொண்டு பல போட்டிகளை தோனி வென்று காட்டியுள்ளார். தோனிக்கு ஏற்ற தளபதியாக இருவரும் பலநேரங்களில் பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அணியை வெல்ல வைத்துள்ளனர். ஆதலால், மீண்டும் ஷர்துலை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசிவரை பேட்ஸ்மேன் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தம் இன்றைய அணிகளுக்கு இருக்கிறது. ஷர்துல் தாக்கூர் நன்றாகவே பேட்டிங் செய்யக்கூடியவர், பிஞ்ச் ஹிட்டராக செயல்படக்கூடியவர் என்பதால், அவரை ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது. யார் இந்த சமீர் ரிஸ்வி? இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அன்கேப்டு வீரரும், 20 வயதான சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். உத்தரப்பிரேதசத்தைச் சேர்ந்த பேட்டர் சமீர் ரிஸ்வி. இவரின் அடிப்படை விலையே ரூ.20 லட்சம்தான். ஆனால், இவரை வாங்குவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், சிஎஸ்கேவும் கடும்போட்டியிட்டன, இடையே டெல்லி கேபிடல்ஸ் அணியும் சேர்ந்து போட்டியிட்டது. உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில் 9 இன்னிங்ஸில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் சேர்த்தால் சமீர் ரிஸ்வி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டார். 20வயதான ரிஸ்வி பிக்ஹிட்டர், பெரிய ஷாட்களை அடிக்கும் வல்லமை படைத்தவர். சமீபத்தில் நடந்த முஸ்தாக் அலி தொடரில் 18 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசியுள்ளார். தான் சந்தித்த ஒவ்வொரு 11 பந்துகளிலும் ஒரு சிக்ஸரை ரிஸ்வி பறக்கவிட்டதால் சிஎஸ்கே அவரை கொத்திக் கொண்டது. இதுவரை 11 டி20 போட்டிகளில் மட்டுமே ரிஸ்வி விளையாடி 295 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் சராசரி வைத்துள்ளார். வலதுகை பேட்டரான ரிஸ்வி ஆடவருக்கான மாநில அளவிலான 23வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் அடித்து இறுதிப்போட்டியில் 84 ரன்கள் சேர்த்து உத்தரப்பிரதேசம் வெல்ல காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் 37 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசி இருந்தார். இதனால், ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணியில் கிரேட் ஃபினிஷராக தோனி இருந்தாலும் அவரின் பணிச் சுமையைக் குறைக்க மற்றொரு வீரரை உருவாக்குவதும் அவசியம். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே நிர்வாகம் விலைக்கு வாங்கி உருவாக்க இருக்கிறது. மேட்ச் பினிஷிங்கில் சிறப்பாகச் செயல்படும் ரிஸ்வியின் ஸ்ட்ரைக் ரேட் 130 மேல் வைத்துள்ளார். மேலும், டெத் ஓவர்களை விளாசி, பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர் என்பதால், பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு இதுபோன்ற பேட்டர்கள் அவசியம் என்பதால் ரிஸ்வியை சிஎஸ்கே வாங்கியுள்ளது. முதல் வங்கதேச வீரர் சிஎஸ்கே அணியில் இடதுகை பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் பல நேரங்களில் துருப்புச் சீட்டாக இருந்துள்ளனர். ஆதலால்தான் கடந்த காலங்களில் இருந்தே இடதுகை பேட்டர்களுக்கும், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியம் அளிக்கப்படும். இந்தமுறை ஏலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இடம் பெறுவது இதுதான் முதல்முறையாகும். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய திறமை படைத்தவர். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாகவும் பந்துவீசும் திறமை கொண்டவர் என்பதால் முஸ்தபிசுர் ரஹ்மானை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், இவர் போன்ற வீரர் கிடைக்கும்போது, சரியான தருணத்தில் பயன்படுத்தி, வெற்றியும் பெறுவார், அந்த வீரரையும் உலகறியச் செய்வார். புதிய பந்தில் பந்துவீச தீபக் சஹர், பதீரணாவுடன் அல்லது மாற்றாக ஒரு பந்துவீச்சாளர் தேவை என்பதால், முஸ்தபிசுர் ரஹ்மான் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்கு வரும் சீசனில் தொடக்கப் பந்துவீச்சாளராகக் கூட முஸ்தபிசுர் மாறினாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை. பேட்டிங்கில் நடுவரிசையில் அம்பதி ராயுடு இடத்தை நிரப்ப டேரல் மிட்ஷெலும், கெய்க்வாட்டுடன் ஆட்டத்தைத் தொடங்க ரச்சின் ரவீந்திராவும் வாங்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் டேவன் கான்வே ஆட்டத்தைத் தொடங்கினாலும், இந்த சீசனில் ரவீந்திரா அல்லது கான்வே என மாற்றி மாற்றி பயன்படுத்தப்படக்கூடும். இதில் கூடுதலாக ரவீந்திரா ஆல்ர்வுண்டர் என்பதால் அதிகமான வாய்ப்புக் கிடைக்கலாம். தோனிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் யார்? தோனி இல்லாத சிஎஸ்கே அணி, சிஎஸ்கே அணியையும் தோனியையும் பிரிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற வார்த்தைகளை கால மாற்றத்தால் ஏற்கத்தான் வேண்டும். ஆனால், தோனிக்குப்பின் அடுத்த கேப்டன் யார் என்பதை ரசிகர்களும், பல முன்னாள் வீரர்களும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதற்குரிய சரியான பதில் சிஎஸ்கே நிர்வாகத்திடம் இல்லை. ஏற்கெனவே ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து கையைச் சுட்டுக்கொண்டதால், அடுத்த கேப்டனாக இளம் வீரரிடம்தான் பொறுப்பு வழங்கப்படும். அந்த இளம் வீரருக்கு தோனி குறைந்தபட்சம் சில சீசன்களுக்கு பயி்ற்சி அளிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வரலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவை வாங்கியபின், அவரின் பெயரும் கேப்டனுக்கு பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது. சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதி இளம் வீரர் ஒருவர் கேப்டனாக வரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி விவரம் மகேந்திர சிங் தோனி(கேப்டன்), மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, அஜெய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதீரணா, அஜின்கயே ரஹானே, ஷேக் ரஷீத், மிட்ஷெல் சான்ட்னர், மிட்ஷெல், சிமர்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஸனா, சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான். https://www.bbc.com/tamil/articles/cv2jx2g073ro

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை ; கொலராடோ உயர்நீதிமன்றம்

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 09:53 AM 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/172115

இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்

3 months 1 week ago
தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் ரன் எடுக்க இந்திய வீரர்கள் திணறியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நன்றே பர்கரின் துல்லியமான பந்துவீச்சு, டோனி ஜோர்ஜியின் முதல் சதம் ஆகியவற்றால் ஜீபெரா நகரில் நேற்று நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 212 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை துரத்திச் சென்ற தென் ஆப்பிரிக்க அணி, 45 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 4-வது ஒருநாள் வெற்றியை இந்திய அணி பதிவு செய்யவிடாமல் தென் ஆப்பிரிக்கா தடுத்துவிட்டது. அடுத்துவரும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியையும் தென் ஆப்பிரிக்கா வென்றால்தான் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி தனது பெயரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். ஏனென்றால், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சொந்த மண்ணில் நடந்த எந்த ஒருநாள் தொடரையும் தென் ஆப்பிரிக்க அணியால் கைப்பற்ற முடியவில்லை. ஒருவேளை இந்தியாவிடம் 3வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தால், தொடர்ந்து 4-வது ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்து தென் ஆப்பிரிக்கா அவப்பெயரைப் பெறும். இந்திய அணிக்கு எதிராக தனது 4-வது போட்டியிலேயே சதம் விளாசி வெற்றிக்குத் துணை புரிந்த டோனி ஜோர்ஜி (119) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்க வீரர் ஹென்ட்ரிக்ஸ் (52), டூசென் (36) ஆகியோர் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இதில் தொடக்க விக்கெட்டுக்கு ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் 130 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினர். ஆடுகளத்தின் தன்மை அறியவில்லையா? இந்தப் போட்டி நடந்த மைதானம், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் போல் அதிக ரன்களை அடிக்கும் விக்கெட் இல்லை. இந்த மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டி 4 ஆண்டுகளுக்குப்பின் நேற்றுதான் நடந்தது. கடந்த 12 ஆண்டுகளில் இங்கு 8 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஒரு போட்டியில்கூட எந்த அணியும் 300 ரன்களை எட்டியது இல்லை. இந்த ஆடுகளம் மெதுவான, பந்துகள் தாழ்வாக வரும் விக்கெட்டைக் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்களில் குறைந்த தரம் கொண்ட மைதானத்தில் முக்கியமானதாகும். இத்தகைய விவரங்களைத் தெரிந்திருந்தாலும் இந்திய அணியின் பேட்டர்கள் நேற்றைய ஆட்டத்தில் சிறிதுகூட பொறுமை காட்டவில்லை. இந்திய பேட்டர்கள் பேட் செய்யும் போது பந்து எந்த வேகத்தில் வருகிறது, நின்று வருகிறதா அல்லது ஸ்விங், சீமிங் இருக்கிறதா என்பதை பெரிதாக கவனித்தது போல் தெரியவில்லை. ஏனென்றால், கெய்க்வாட் ஆட்டமிழந்தவிதம், பந்தின் வேகத்தை சற்றுகூட கவனிக்காமல் கால்காப்பில் வாங்கி பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் லிசாட் வில்லியம்ஸ், பர்கர், ஹென்ட்ரிக்ஸ் ஆகிய மூவரும் தொடக்கத்திலிருந்து லைன் லென்த்தை நகற்றாமல் பந்துவீசி நெருக்கடியில் தள்ளினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது. தாக்குப்பிடிக்காத இந்திய பேட்டர்கள் தென் ஆப்பிரிக்காவின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான நார்ஜே, ரபாடா, யான்சென் ஆகியோர் இல்லாத நிலையில் 2-வது நிலை பந்துவீச்சாளர்களுக்கே இந்திய அணி பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த ஆடுகளத்தில் பெரிய ஸ்கோர் அடிப்பது கடினமானது. 250 ரன்கள் சேர்த்துவிட்டாலே சேஸிங் செய்வது கடினம் என்பது தெரியும். அதற்கு ஏற்றாற்போல் விக்கெட்டை நிலைப்படுத்தும் அளவுக்குகூட இந்திய பேட்டர்கள் விளையாடவில்லை. ஆனால், இந்திய பேட்டர்கள் புரிந்து கொண்டதைவிட, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டு பந்துவீசினர். தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த இந்த வெற்றி வேகப்பந்து வீச்சாளர்கள் பெற்றுக் கொடுத்த வெற்றியாகும். தொடக்கத்திலேயே இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்து, பெரிய ரன்ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து வீசிய ஓவரில் மட்டும் 118 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளன. அதாவது இவர்கள் வீசிய 28 ஓவர்களில் 20 ஓவர்கள் டாட் பந்துகளாகும். மீதமுள்ள 8ஓவர்களில்தான் இந்திய பேட்டர்கள் 113 ரன்களை அடித்துள்ளது என்பதாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர் கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்ய 8 பந்துவீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்களும் இந்த விக்கெட்டில் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் 3 பேரும் லைன் லென்த்தில் வீசி தொடக்கத்தில் நெருக்கடி அளித்தனர். இதனால் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ரன்ரேட் மெதுவாகவே உயர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் தவறான லென்த்தின் பந்துவீசிய போதெல்லாம் டோனி கோர்ஸி, ஹென்ட்ரிக்ஸ் இருவரும் சேர்ந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதில் டோனி கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்யவும், முதல் விக்கெட்டை எடுக்கவும் 8 பந்துவீச்சாளர்களை கேப்டன் ராகுல் பயன்படுத்தியும் நீண்ட முயற்சிக்குகப்பின்புதான் பலன் கிடைத்தது. பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டதா? ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது. இளம் வீரர்களுக்கு பேட்டிங் அனுபவம் இன்னும் தேவை என்பதை வெளிக்காட்டியுளளது. குறிப்பாக கெய்க்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்ஸன், ரிங்கு சிங் ஆகியோர் இந்தியாவில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான, அல்லது எந்த நாட்டிலும் இருக்கும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில்தான் விளையாடுவதற்கு தகுதியுள்ளவர்கள். இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய பொறுமையும் இல்லை, ஷாட்களை தேர்ந்தெடுத்தவிதமும், பந்துகளை கையாண்டவிதமும் மோசமாக இருந்தது. அதிலும் இந்திய அணிக்கு நடுவரிசை, ஒன்டவுன் வரிசைக்கு நல்ல பேட்டர் தேவை என்பதால், திலக் வர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இப்போதுவரை பெரிதாக எந்த ஸ்கோரும் அவர் செய்யவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார் ‘மாறாத’ சஞ்சு சாம்ஸன் நிலைத்தன்மை இல்லாத காரணத்தால்தான் இந்திய அணிக்குள் நிலையாக இடம் பெறமுடியாமல் சஞ்சு சாம்ஸன் தவித்து வந்தார். அதை மீண்டும் இந்த ஆட்டத்தில் நிரூபிதித்துவிட்டார். அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். சாம்ஸனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தேர்வாளர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினர், ஆனால், அதிலும் சாம்ஸன் சொதப்பிவிட்டார். இனிவரும் காலங்களில் சாம்ஸனுக்கான வாய்ப்பை மங்கச் செய்திருக்கிறது. ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ரிங்கு சிங் தொடர்ந்து 3வது ஆட்டமாக சொதப்பியுள்ளார். கடைசி டி20 போட்டி, முதல் ஒருநாள் ஆட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் மிகசொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி கடைசி 4 விக்கெட்டுகளை வெறும் 42 ரன்களுக்கு இழந்தது. நம்பிக்கை நாயகன் சுதர்ஷன் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை சாய் சுதர்ஷன். தொடர்ந்து 2வது அரைசதத்தை அடித்து இந்திய அணி ஸ்கோர் உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார். தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் வீசும் எந்த தவறான பந்தையும் தண்டிக்க சுதர்ஷன் தவறவில்லை. ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவத்தால் மிகவும் நிதானமான ஆட்டத்தை சுதர்ஷன் கையாண்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய சுதர்ஷன், நேற்று கேசவ் மகராஜ் ஓவரில் சிக்ஸர் அடித்து அசத்தினார். நிதானமாக ஆடிய சுதர்ஷன் 65 பந்துகளில் தனது 2-வது அரைசதத்தை நிறைவு செய்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல்-சுதர்ஷன் இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இதுதான் இந்திய அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அதன்பின் கேப்டன் ராகுலுக்கு ஒத்துழைத்து பார்ட்னர்ஷி அமைக்க எந்த வீரர்களும் தயாராக இல்லை என்பதால்தான் ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும். பெரிய ஸ்கோருக்கு ஏன் செல்லவில்லை? 136 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 75 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்ஸன் (12), ரிங்கு சிங் (17) அக்ஸர் படேல் (7) என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் சாம்ஸன், ரிங்குசிங், அக்ஸர், திலக் வர்மா, கெய்க்வாட் ஆகிய 4 பேட்டர்கள் சாராசரியாக 20 ரன்கள் சேர்த்திருந்தாலே, இந்திய அணியின் ஸ்கோர் 280 ரன்களைத் தொட்டிருக்கும். இந்திய அணியின் ஸ்கோரில் கேப்டன் ராகுல் சேர்த்த 56 ரன்கள், சுதர்ஷன் சேர்த்த 62 ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், 90 ரன்கள் கூட மற்ற 8 பேட்டர்களும் சேர்க்கவில்லை என்பது வருத்ததத்குரியது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர் தோல்விக்கு என்ன காரணம்? இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வலிமை என்ன என்பதை இந்த ஆட்டம் வெளிப்படுத்திவிட்டது. சுதர்ஷன், ராகுல் போன்ற நிதானமான ஆட்டத்தைக் கையாளக் கூடிய, பாரம்பரிய ஆட்டத்தை கையாள்பவர்கள்தான் இந்த ஆடுகளத்தில் நிலைக்க முடியும் என்பதை மற்ற பேட்டர்களுக்க உணர்த்திவிட்டனர். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் கடும் நெருக்கடி அளித்து, லைன் லென்த்தில் பந்துவீசியதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் மிகவும் பொறுமையாக ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடினர். இதனால், முதல் 35 பந்துகளில் ஹென்ட்ரிக்ஸ் 22 ரன்களும், ஜோர்ஜி முதல் 31 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர். ஆனால், தவறான லைன்லென்த்தில் பந்துவீசப்பட்டபோது ஜோர்ஜி, ஹென்ட்ரிக்ஸ் அதை பவுண்டரிக்கு அனுப்பி தண்டித்தனர். இதனால் அர்ஷ்தீப், முகேஷ் இருவரும் தங்களின் முதல் ஸ்பெல்லில் கட்டுப்பாக பந்துவீசி சராசரியாக 15 ரன்களுக்குள்ளாகவே கொடுத்தனர். ஆவேஷ்கான் பந்துவீச்சில் அதிகமான ஷார்ட் பந்துகள் வீசப்பட்டதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி பவுண்டரிகளாக விளாசி ரன்களைச் சேர்த்தனர். குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் பந்துவீச்சை குறிவைத்த இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களா விளாசி வெற்றியை எளிதாக்கினர். குல்தீப் யாதவும், ஆவேஷ்கானும் ஓவருக்கு 6 ரன்கள் வீதத்தில் விட்டுக்கொடுத்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களின் பணியை எளிதாக்கினர். இதுபோன்ற குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்யும்போது, பந்துவீச்சாளர்கள் எந்த அளவு சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, கட்டுக் கோப்பாக பந்துவீசுகிறார்களோ அந்த அளவுக்கு போட்டி கடும் இறுக்கமாகச் செல்லும். ஆனால், குல்தீப், ஆவேஷ் கான் பல தவறான பந்துகளை வீசி ரன்களை வாரி வழங்கினர். https://www.bbc.com/tamil/articles/c4nyxdrg177o

யாழ்.மாவட்டம் முழுவதும் பொலிஸார் விசேட நடவடிக்கை ; 70 பேர் கைது

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 09:54 AM யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தத்தம் பிரிவுக்கு உட்பட்ட சட்டவைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர். மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், தமது பொலிஸ் பிரிவுக்குரிய நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும், போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/172113

2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

3 months 1 week ago
Published By: NANTHINI 20 DEC, 2023 | 10:48 AM நாடளாவிய ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பரீட்சை தொடர்பான அட்டவணைகள், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் கிடைக்காவிட்டால், பாடசாலை அதிபர்கள், தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரவேசித்து குறித்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/172118

ஐஸ்லாந்தில் 14 மணித்தியாலத்தில் 800 முறை நிலநடுக்கம் !

3 months 1 week ago
ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 10:36 AM ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை திங்கட்கிழமை (18) இரவு முதல் வெடிக்க ஆரம்பித்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில்திங்கட்கிழமை வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் எரிமலை வெடிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/172116

தமிழீழக் காவல்துறை இன் படிமங்கள் | Tamil Eelam Police Images

3 months 1 week ago
மன்னார் அடம்பனில் தமிழீழக் காவல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது சூன் 10, 2004 காலை '2ம் லெப். மாலதியின் தந்தையார் நாடா வெட்டுகிறார்'

ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

3 months 1 week ago
ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் புதிய அடையாள அட்டைகளை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து படிப்படியாக அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அடையாள அட்டைக்கான டிஜிட்டல் புகைப்படத்தை பெறுவதற்கான கட்டணம் 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் மூலம் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 150 ரூபா முதல் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/285302

தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Land Tigers Images

3 months 1 week ago
இம்ரான் பாண்டியன் படையணி விக்டர் கவச எதிர்ப்புப் படையணி "மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி" '('தாரகம்' என்ற இணையத்தளம் ஏதோ தனக்கு சொந்தமான படிமம் என்ற நினைப்பில் தனது இணையத்தள பெயரினை இதில் இட்டு மலத்திலும் கீழ்த்தனமான செயலை செய்துள்ளது.. மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இதுபோன்று செய்யாதீர்.)'

இமாலயபிரகடனம் - தெளிவற்றதாக காணப்படுகின்றது - நாட்டின் சகவாழ்விற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது அவசியம்- மெதகம தம்மானந்த தேரர்

3 months 1 week ago
அஸ்கிரிய பீடத்தின் அறிக்கையில் Positive வான விடயம் இந்த இமாலயப் பிரகடனத்தை தூக்கி எறியாததுதான். எனவே இந்த அறிக்கையை எச்சரிக்கையுடன் வரவேற்கலாம்.

GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!

3 months 1 week ago
1) நம்பத் தகுந்தவையா என்பது அல்ல விடயம். அவை யாரின் வழிகாட்டலில், எவரது நலனைப்பிரதானமாக முன்னிறுத்தி இயங்குகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியவை. 2) 100% ✅ 3) வெளிநாட்டுத் தமிழ் அமைப்புக்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளைச் சரியாகக் கையாளவில்லை என்பதுதான் உண்மை நிலை. கந்தையர் முதலீட்டுக்கு உரிய இலாபத்தைப்பற்றிக் கதைக்கிறார். நான் இலங்கையில் எமது பிடியை எவ்வாறு பலமாக ஊன்றுவது என்று கதைக்கிறேன்.

GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!

3 months 1 week ago
Ekuruvi Tamil · கனடிய தமிழர் பேரவை முன்னாள் தலைவர் ஒருவர் கனடிய தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்துவதாக இலங்கை அரசை வந்து சந்தித்துள்ளார் . அவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர், அவரது தலைமையில் இயங்கிய கனடிய தமிழர் பேரவையின் அலுவலகர் ஒருவர் மீது பாலியல் குற்றசாற்றை பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து நேரடியாக அவரிடம் சமர்ப்பித்த போது அதை விசாரிக்காமல் தட்டிக் கழித்து விட்டார் . அன்றிலிருந்து அவரும் அந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு உடந்தையாக நான் கருதுகின்றேன் . தமிழ் சமூகத்துக்கான எந்தவித தகுதியும் அற்ற ஓருவர் எப்படி எங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் ? இதை வன்மையாக கண்டிக்கின்றேன் . மேலும் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பினை தடுப்பதற்கும் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் கனேடிய அரசாங்கத்தின் முதுகில் குத்தும் துரோகத்தனத்தை இவர்கள் செயல் ஏற்படுத்தியிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்கு பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் அயராத உழைப்பே காரணமாகும். கனேடிய அரசாங்கம் தடை செய்த இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அவரகளின் அன்யையும் ஆசியைப் பெற்றுக் கொண்டமை மூலம் இவர்கள் கனேடித் தமிழர்கள் முகங்களில் கரி அள்ளிப் பூசிவிட்டுள்ளார்கள். இனி கனேடிய அரசிடம் தமிழர்கள் எந்த உதவியையும் பெற முடியாத அவலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த செயல். எங்களை போன்ற தாயக கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் இவர்களின் பொருப்பற்ற கோமாளி செயல் இடையூறை ஏற்படுத்துகின்றது . நவஜீவன் அனந்தராஜ் @Kandiah57.....இப்பிடித்தான் ..கபிதான் ..இதைப்போல்தான் கொட்டுவார்....நானும் இதை மேய்ஞ்சுதான் பிடித்தனான்...ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் என்பது இதுதானோ..
Checked
Thu, 03/28/2024 - 16:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed