புதிய பதிவுகள்2

பேக்கும் பிசாசுக்குமான போட்டி.

3 months ago
ஊரில் இருந்து போடும் காணொளிகளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் கொஞ்சப் பேர் பார்த்தாலும் சதக் கணக்கில் அவர்களுக்கு வருவாய் தானே. பாஸ்கரன் அடுத்தடுத்த தேர்தல்களில் களமிறங்கவே நூல்விட்டு பார்க்கிறார் போல.

பேக்கும் பிசாசுக்குமான போட்டி.

3 months ago
போறவர், வாறவர், தடுக்கி விழுந்தவர் என்று எல்லாரும் மணித்தியாலக் கணக்காகக் கதைக்கிறார்கள், வீடியோக்களுக்குப் பஞ்சமில்லை, ஆனால் கேட்கவும் பார்க்கவும் ஆட்கள் இல்லை!😂

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months ago
இதெல்லாம் ஒரு கேள்வியா விசுகர்? அமெரிக்கா தான் ஈரானையும் வளர்த்தது. அல் சபாப், தலிபான், ஐ.எஸ்.எஸ், ஐ.ஆர்.ஏ.....இப்படி உலகின் எல்லா ஆயுத தாரிகளையும் அமெரிக்கா தான் இரகசியமாக உருவாக்கியது என்பது உங்களுக்குத் தெரியாதா😂?

பேக்கும் பிசாசுக்குமான போட்டி.

3 months ago
தமிழ் அரசியலை கட்டமைக்கக் கூடிய சக்தி யாரிடம்? தமிழ் அரசியல்வாதிகளை தோய்த்து தொங்க போடும் கந்தையா பாஸ்கரன். இதன் தலைப்பை எனது விருப்பத்துக்கு மாற்றியுள்ளேன்.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months ago
அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது. https://noolaham.net/project/720/71906/71906.pdf "ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

3 months ago
சிங்களப் பெண்ணை அவர் காதலித்தால் அவர் "சுத்தமில்லை" என்கிறீர்கள்😂! மற்ற படி சும்மா அலட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு பா.உ வின் கருத்துக்கு தன் நேரத்தைச் செலவழித்து சாணக்கியன் பதில் சொல்லாமை உங்களுக்கு ஆதாரமாகத் தெரிகிறது. எனக்குத் தெரியவில்லை! கீழே இருக்கும் பந்தி எனக்கில்லையானாலும் இதைச் சொல்ல வேண்டும்: பின்லாந்து பின்லாந்தியருக்கு, பிரிட்டன் பிரிட்டிஷ் காரருக்கு, சிறி லங்கா சிங்களவருக்கு என்று ஏற்றுக் கொண்டு விட்டு பிறகேன் சிங்களவன் அதிகாரத்தைப் பகிரவில்லையென நீங்கள் முறைப்பாடு செய்கிறீர்களென விளங்கவில்லை.

தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

3 months ago
இந்த வார விவாத தலைப்பு தயார்.. இருவரும் முன் கூட்டியே கதைத்துவிட்டு செய்கினமா தெரியல.. டிஸ்கி : பொங்கலை முன்னிட்டு மக்கள் படும் சிரமங்களுக்காக அரசு வாகன ஒட்டுனர்கள் பணி புறக்கணிப்பை தற்காலிகமா கைவிட்டு இருக்கினம் .. பொங்கல் முடிந்ததும் ..? ( தலைப்பு தயார் )

பிக்குகள் மாத்திரம் காவி உடையணியும் சட்டம் வேண்டும்: ஒரு சில தேரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது! - உதய கம்மன்பில

3 months ago
சுரேன் உடனே பேச்சுவார்த்தை வைத்து இரண்டு வசனத்தை எழுதி விட்டு தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று இமயமலை அளவில் பொய்யை குறுகிய நேரத்தில் சொல்லி சும்மா இருந்த பலரையும் குழப்பத்தில் ஆழ்த்திய பிக்குமாரின் மொட்டைகளின். காவி பறிபோகின்றது பறிக்கப்படபோகிறது 😂🤣

யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.

3 months ago
மற்றவர்கள் குழப்பத்திலிருப்பது சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் அறிவு குறைந்த புரிந்து உணர்வு அற்ற விடயம் எவரையும் சாராது உதவி தேவையானவர்களுக்கு உதவுவதை பாராட்டுதல் வரவேற்றால். ஒரு சாதாரண மனிதனின் பணியாகும் இலங்கையில் தமிழருக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்கு எவருமே இல்லாத போது சும்மா தெருக்களில் போறவன் வாருவன் எல்லோருடனும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழரின் உரிமையை விலை பேசி கொண்டு சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் கையேந்தி திரிபவர்களை வரவேற்க முடியாது இது ஒரு முட்டாள்தனமான ஒப்பிடுதலாகும். இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு” அங்கே அவர் உதவி செய்கிறார் வரவேற்கிறேன் இவர் சுரேன் உரிமையை பெற்றுத் தரட்டும் வரவேற்கிறேன் குறிப்பு,... எனக்கும் உங்களுக்கும். விவாதங்களில் ஒத்துவராது என்று ஒதுங்கிருந்தேன். பிறகு ஏன் மீண்டும் மீண்டும் புகுந்து சீண்டியபடியிருக்கிறீர்கள்??

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months ago
ஈராக்கில் மொசாட்டின் தலைமையகம் மீது தாக்குதல் - உரிமை கோரியது ஈரான் இராணுவம் Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 03:24 PM ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஈராக்கின் அரைசுயாட்சி குர்திஸ் பிரதேசத்தின் தலைநகரான எர்பிலில் பல வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன, நால்வர் கொல்லப்பட்டுள்ளனர், ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புலனாய்வு நிலையங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஈரான் எதிர்ப்பாளர்கள் கூடும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது என அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சியோனிஸ்ட் அரசாங்கத்தின் சமீபத்தைய அநீதிகளுக்கு பதிலடியாக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள மொசாட்டின் புலனாய்வு அலுவலகம் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் இராணுவம் தியாகிகளின் இரத்தத்தின் கடைசி துளிகளிற்கு பதில் வாங்கும் வரை தாக்குதல் தொடரும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது பயங்கரவாத தாக்குதல் என எர்பில் ஆளுநர் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒரு ஏவுகணைவீடொன்றிற்குள் விழுந்து வெடித்ததில் குர்திஸ்தானை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா கண்டனம் ஈரானின் இந்த தாக்குதலை அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கை என வர்ணித்துள்ளது. https://www.virakesari.lk/article/174063

தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்

3 months ago
பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றது யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலேயே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. இதில் அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான செவ்வாய்க் கிழமையன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசலில் மாவட்ட நிர்வாகமும் பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த காளைகளும் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுகளும் மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி 3,500-க்கும் மேற்பட்ட காளைகளும் 1,400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்தனர். அதில் 1,000 மாடுகளும் 600 மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். போட்டி துவங்குவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதற்குப் பிறகு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி போட்டிகளைத் துவக்கிவைத்தார். வெற்றியாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? மொத்தம் பத்து சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 60 வீரர்கள் களமிறங்கினர். ஒரு சுற்றில் அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கு அடுத்த சில சுற்றுகளில் வாய்ப்பளிக்கப்பட்டது. எல்லாக் காளைகளுமே கால்நடைத் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு போட்டிகளுக்கு அனுமதிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை, மாடு அவிழ்த்துவிடப்பட்ட பிறகு, வீரர்கள் அதன் திமிலைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாடு மூன்று சுற்று சுற்றும்வரை பிடித்திருந்தாலோ, 100 மீட்டர் தூரத்திற்கு திமிலைப் பிடித்தபடி சென்றாலோ வீரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இல்லாவிட்டால் மாடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். அதேபோல, இரண்டு பேர் சேர்ந்து ஒரு மாட்டை அடக்க முன்றாலோ, கொம்பைப் பிடித்தாலோ மாடு வெற்றிபெற்றதாகவே அறிவிக்கப்படும். போட்டி ஆரம்பித்து சில சுற்றுகள் வரை, அதிகமாக மாடுகள் பிடிபடவில்லை. இதனால், காளையின் உரிமையாளர்களை அதிகம் பரிசுகளை வென்றுவந்தனர். 2-3 சுற்றுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது. நான்காவது முறை வெற்றி பெற்ற வீரர் எல்லா ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் போலவே இந்தப் போட்டிகளிலும் சில பெண்களும் தங்கள் மாடுகளை அழைத்துவந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். போட்டியின் பத்தாவது மற்றும் இறுதிச் சுற்று மாலை நான்கு மணியளவில் துவங்கியது. சுமார் நாலே முக்கால் மணியளவில் அந்தச் சுற்று நிறைவுக்குவந்தது. அதற்குப் பிறகு இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கார் பரிசளிக்கப்பட்டது. அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவர் 11 காளைகளை அடக்கியிருந்தார். அவருக்கு ஒரு மோட்டர் பைக் பரிசளிக்கப்பட்டது. பிரபாகரன் இதற்கு முன்பும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கான பரிசை வென்றிருக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "2020, 21, 22 ஆகிய வருடங்களிலும் நான்தான் அதிக மாடுகளைப் பிடித்தேன். போன ஆண்டு என்னால் 15 மாடுகளைத்தான் பிடிக்க முடிந்தது. இந்த முறை மீண்டும் பரிசை வென்றிருக்கிறேன். ஆன்லைன் பதிவில் நன்றாக மாடு பிடிக்கும் வீரர்கள் சில சமயங்களில் தேர்வாவதில்லை. அதற்கு மாற்றுவழி ஏதாவது செய்ய வேண்டும்," என்றார். சிறந்த காளை பரிசு யாருக்கு? சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரது காளையான சின்னக்கருப்பு என்ற காலை தேர்வுசெய்யப்பட்டது. "மாட்டை வளர்ப்பதில் பெரும் செலவு இருந்தாலும், பெயர்தான் முக்கியம் என்பதால் காளையை வளர்க்கிறேன். கடந்த ஆண்டு எங்களுடைய இன்னொரு மாடு வெற்றிபெற்றது. வீட்டில் திட்டத்தான் செய்வார்கள். ஆனால், பல நேரங்களில் அவர்கள்தான் மாட்டைப் பார்த்துக்கொள்வார்கள்" என்று தெரிவித்தார் மருது பாண்டி. இந்தக் காளையின் உரிமையாளருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவரின் காளை இரண்டாவது சிறந்த காளையாக தேர்வுசெய்யப்பட்டது. இவருக்கு ஒரு மாடும் கன்றும் பரிசளிக்கப்பட்டது. எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது? சிறந்த காளைகளைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் களத்தில் இருப்பதோடு, சுற்றிச்சுற்றிவந்து எந்த வீரரையும் நெருங்கவிடாமல் செய்யவேண்டும். அப்படியாகத்தான் இந்த இரு காளைகளும் தேர்வுசெய்யப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே, இந்த ஜல்லிக்கட்டிலும் ஒரு நாய் குறுக்கிட்டது. ஆனால், நீண்ட நேரம் களத்தில் நிற்கவிடாமல் விரட்டப்பட்டது. ஒரு காளைக்கு காயம் ஏற்பட்டது. இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 485 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் மட்டுமே மாடுபிடி வீரர்கள். 15 பேர் மாட்டின் உரிமையாளர்கள். இவர்கள் தவிர, காவலர்கள், பார்வையாளர்கள் ஆகியோரும் காயமடைந்தனர். இவர்களுக்கு பாலமேட்டில் இருந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 பேர் மட்டும் கூடுதல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுகளை துன்புறுத்தாமல் இருக்க விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. மாடுகளின் கொம்புகளைப் பிடிக்கக் கூடாது எனவும், அவற்றின் கால்களைப் பின்னுவது கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வீரர், காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடு பிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயல்வது கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பார்வையாளர்களுக்கான வசதிகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். குறைந்தபட்சம் எட்டு சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவர். போட்டியை பார்வையிட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. இந்தப் போட்டியை பாலமேட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்த்து ரசிக்க ஆங்காங்கே எல் இ டி திரைகளை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. போட்டியின் போது பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வசதிகள் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் காயம் ஏற்படும் வீரர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்திய செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்திலும் (கலெக்சன் பாயிண்ட்) பாதுகாப்புக்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தப் போட்டியின் போது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த காளையின் உரிமையாளர் மாரியப்பனுக்கு கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. வேடிக்கை பார்க்க வந்த மேலூர் பகுதியை சேர்ந்த மனிஸ் வலிப்பு நோய் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் ஒருவருக்கும், மாடுபிடி வீரர் ஒருவருக்கும் பேரிக்காடு கம்பி குத்தி படு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு காலிலும்., ஒருவருக்கு தொடையிலும், ஒருவருக்கு காதிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cv2ljd3nxm0o Avaniyapuram Jallikattu 2024 Highlights: ஆட்டம் காட்டிய காளைகள்; அசத்தியது யார்?

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months ago
போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஒட்டுசுட்டான் பொலீஸ் முகாம் மீதான தாக்குதலில் பரமதேவா முக்கியமான பாத்திரத்தினை வகித்திருந்தார். ஆகவே, அவரை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை முடுக்கிவிட பிரபாகரன் அனுப்பிவைத்தார். அடுத்துவந்த இரு மாதங்களுக்கு கிழக்கில் இராணுவத்தினருக்குத் தலையிடியைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் பரமதேவா ஈடுபட்டார். களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சியொன்றில் அவர் மரணமடைந்தார். அவரது இழப்பு புலிகளை பெரிய அளவில் பாதித்திருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஐந்தாவது இரவாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. கடைகளை உடைத்துத் திறந்த இராணுவத்தினர் அவற்றைக் கொள்ளையிட்டதுடன், தீவைத்து எரித்தனர். வீதிகளிலும், வீடுகளிலும் இருந்த பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் மீதும், பொலீஸார் மீதும் யாழ்ப்பாணத்து வீதிகளில் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இவ்வாறான தாக்குதல்களில் இராணுவத்தினரிடமிருந்து ஆயுதங்களும் வெடிபொருடகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டன. இடைக்கிடையே வாகனங்களும், பணமும் அவர்களால் கொள்ளையிடப்பட்டன. இதே காலப்பகுதியில் சமூகவிரோதிகளுக்கும், இராணுவத்தினருக்காக உளவுபார்த்தவர்களுக்கும் ஆங்காங்கே மின்கம்ப மரணதண்டனைகளும் வழங்கப்பட்டு வந்தன. காங்கேசந்துறைச் சீமேந்துத் தொலிற்சாலையிலிருந்து நான்கு துப்பாக்கிகள், குண்டுவெடிக்கவைக்கும் கருவிகள், ஜீப் வண்டி ஆகியவை போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சுண்ணாம்புக் கற்களை அகழ்ந்து எடுக்கும் சுரங்கப்பகுதியில் பாறைகளை வெடிக்கவைத்து விட்டு , நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் பாதுகாப்பு வழங்க, பொறியியலாளர் ஏ. ஜேசுதாசன் மீதி வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஜீப் வண்டியில் வந்துகொண்டிருந்தார். திடீரென்று வாகனத்திற்கு முன்னால் வீதியில் குதித்த ஐந்து ஆயுதம் தரித்த இளைஞர்கள் ஜீப் வண்டியை மறித்தனர். பின்னர், ஜீப் வண்டியையும், காவலர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், ரவைகள், வெடிபொருட்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றனர். அவ்வாறே, வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றிலிருந்தும் போராளிகளால் ஆயுதங்களும், ரவைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்திற்கு வந்த நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள், கட்டடத்தின் கதவுகளை உடைத்துத் திறந்து அங்கிருந்த பணத்தையும், துப்பாக்கி ஒன்றையும் எடுத்துச் சென்றனர். இன்னொரு குழு பண்டைத்தரிப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அரச திணைக்களம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழு ஒன்று காவலாளியை மிரட்டி அங்கிருந்த தட்டச்சுச் செய்யும் இயந்திரத்தையும், ரோனியோ இயந்திரத்தையும், காவலாளியின் துப்பாக்கியையும் எடுத்துச் சென்றது. ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் குடாநாடுமே கலவர பூமியாகக் காட்சியளித்தது. பொதுமக்களும் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். தம்மால் எடுத்துவரக்கூடிய மரக்குற்றிகள், சீமேந்துத் தூண்கள், கற்கள் ஆகியவற்றை வீதிகளுக்குக் குறுக்கே இட்டு தடைகளை ஏற்படுத்தினர். சிலவிடங்களில் டயர்களும் வீதிக்குக் குறுக்கே போடப்பட்டு எரிக்கப்பட்டன. இராணுவ முகாம்களையும் , பொலீஸ் நிலையங்களையும் சூழவுள்ள வீதிகளில் இத்தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை முடக்குவதே பொதுமக்களின் நோக்கமாக இருந்தது. பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளுக்கு அருகே போராளிகள் கண்ணிவெடிகளைப் புதைக்கத் தொடங்கினர். இவ்வாறான பதட்டமான சூழ்நிலையில் அரசுக்குச் சொந்தமான வங்கியொன்று இரு போராளிக் குழுக்களால் கொள்ளையிடப்பட்டது. ஸ்டான்லி வீதியில் அமைந்திருந்த இலங்கை வங்கியினைக் கொள்ளையிடும் நோக்கத்தில் பலநாட்களாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டும் தகவல்களைச் சேகரித்தும் வந்திருந்தது. இன்னொரு சிறிய போராளி அமைப்பான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பும் இதே வங்கியைக் கொள்ளையிட நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பொதுமக்களின் எழுச்சியைப் பாவித்து அன்றிரவு ஸ்டான்லி வீதி வங்கியைக் கொள்ளையிடுவதே அந்த அமைப்பின் நோக்கம். அதற்காக இரு பாரவூர்திகளையும் ஒரு வான் ரக வாகனத்தையும் தமிழ் ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடத்திச் சென்றது. அந்த வாகனங்களில் அவ்வமைப்பின் போராளிகள் ஏறிக்கொண்டார்கள். வங்கிக்கொள்ளை விசாரணைகளின்போது சாட்சியங்கள் கூறுகையில் குறைந்தது 50 போராளிகளாவது அந்த வாகனங்களில் இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் (எஸ் எம் ஜி) சில கிர்னேட்டுக்களும், சில சுழழ்த் துப்பாக்கிகளும் இருந்தன. வங்கியின் முன்னால் அமைந்திருந்த கதவினை உடைத்துத் திறந்த அவர்கள், உள்ளே நுழைந்து குண்டுகளை வெடிக்க வைத்தனர். வங்கியின் உட்பகுதியில் இருந்த பலமான கதவு குண்டுவெடிப்பினால் உடைந்து வீழ்ந்தது. பணமும், நகைகளும் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அத்துடன் உள்ளேயிருந்த ரைபிள்களையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால், ஏனைய நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான அறையினை அவர்களால் உடைக்கமுடியவில்லை. ஆகவே, நேரத்தை விரயமாக்காது தாம் வந்த வாகனங்களிலேயே தப்பிச் சென்றார்கள். இந்த வங்கிக்கொள்ளை பற்றி ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அறிந்துகொண்டது. உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வங்கியை நோக்கிச் சென்றது அவ்வமைப்பின் குழு ஒன்று. வங்கிக்கொள்ளையினை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களின் உதவியுடன், மீதமாகவிருந்த நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" ஆவணி 6 ஆம் திகதி, அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டத்தினப் பாவித்து இராணுவம் தொடர்ச்சியாக அட்டூழியங்களில் ஈடுப‌ட்டு வந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காக பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை அது நடத்தி வந்தது. ஆனால், போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தியே வந்தனர். அரசின் ஒடுக்குமுறையினால் ஏலவே பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களைப் பொறுத்தவரை தம்மைக் காக்கவேண்டிய இராணுவமும், பொலீஸும், கடற்படையும் தம்மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றும், சொத்துக்களைச் சூறையாடியும் வந்தமை கடுமையான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இயல்பாகவே அவர்கள் போராளிகளின் பக்கம் சாயவேண்டிய நிலை ஏற்பட்டது. போராளிகளுக்கு, தாமாகவே முன்வந்து, விருப்புடன் தமிழர்கள் உதவும் சூழ்நிலை அங்கு உருவானது. போராளிகளுக்கான மக்களின் ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது. "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" எனும் மனோநிலை அனைவர் மனதிலும் ஆழமாக வேரூன்றிக்கொண்டது. அரச படைகளை, "சிங்கள இராணுவம், சிங்களப் பொலீஸ், அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்" என்று தமிழர்கள் அழைக்கும் நிலை உருவானது. ஆவணி 6 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளை தனது நாளாந்த அலுவல்களை ஆரம்பித்த வேளை மக்களோடு மக்களாக பத்து இளைஞர்கள் சுழழ்த் துப்பாக்கிகளுடன் உள்நுழைந்தனர். சிறிது நேரத்தின் பின்னர், 'நாங்கள் இங்கே குண்டுகளை வைத்திருக்கிறோம், அனைவரும் ஓடித் தப்புங்கள்" என்று அவர்கள் கூச்சலிட்டார்கள். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்கள், முகாமையாளர் என்று அனைவருமே வங்கியை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். இந்தக் கலவரத்தில் அங்கிருந்த மூன்று காவலாளிகளிடமிருந்த துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அந்த இளைஞர்கள் பறித்துச் சென்றார்கள். வவுனியாவில் இடம்பெற்ற பழிவாங்கல்ப் படுகொலைகளும், கூட்டுப் பாலியல் வன்புணர்வும் வவுனியா நகரிலும் அன்று போராளிகளால் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பொலீஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத் வழமைபோல தனது காரியாலயத்திற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவரது மேசைக்குக் கீழே பொறுத்தப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டு செயற்பட வைக்கப்பட, பொலீஸ் அத்தியட்சகர் உடல்சிதறி மரணமானார். புளொட் அமைப்பே இந்தக் குண்டினை வைத்திருந்தது. காந்தியம் அமைப்பில் அக்காலத்தில் செயற்பாடு வந்த சந்ததியாரே இக்குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்பட்டது. காந்தியம் தலைவர்கள் மீது பொலீஸார் நடத்திய அடாவ‌டித்தனம், இந்திய வம்சாவளித் தமிழர்களை காந்தியத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றியமை ஆகிய காரணங்களுக்காக பொலீஸார் மீது இத்தாக்குதலை புளொட் நடத்தியிருந்தது. ஹேரத் மரணிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் மாங்குளம் வாடி வீட்டில் அவரைச் சந்தித்தேன். லலித் அதுலத் முதலியின் விஜயத்தை செய்தியாக்குவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். ஹேரத்தின் மரணத்திற்குப் பழிதீர்க்க இராணுவமும் பொலீஸாரும் செயலில் இறங்கினார்கள். வவுனியா நகரப்பகுதிக்கு வாகனங்களில் வந்திறங்கிய 25 பொலீஸார், அங்கிருந்த தமிழருக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். நகரில் இயங்கிவந்த "வேல் கபே" எனும் உணவு விடுதிக்குள் நுழைந்த பொலீஸார் அதன் உரிமையாளரையும், உணவருந்திக்கொண்டிருந்த ஆறு பொதுமக்களையும் சுட்டுக் கொன்றனர். அன்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பேரூந்தொன்றில் பயணம் செய்த நான்கு தமிழ்ப் பெண்களை, பேரூந்தினை மறித்த விமானப்படடையினர் தம்முடன் இழுத்துச் சென்றனர். கூட்டாகப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட அந்த நான்கு பெண்களும் பின்னர் விமானப்படையினரால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர். மறுநாளான ஆவணி 7 ஆம் திகதி, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் வழியில், நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் கொல்லப்பட்ட மேலும் 10 தமிழர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், வழமைபோல பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட லியனகே, இத்தமிழர்கள் அனைவரும் போராளிக் குழுக்களுக்கிடையிலான மோதலில் அகப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறினார். மேலும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்குப் பழிவாங்கிய பொலீஸார் சரித்திர முக்கியத்துவம் பெற்ற தம்பலகாமம் சிவன் கோயிலை இடித்து நொறுக்கியதுடன், பூசகரையும் அடித்து இழுத்துச் சென்றனர். சுண்ணாகம் பொலீஸ் நிலையப் படுகொலை ஆவணி 9 ஆம் திகதி, மொத்தத் தமிழினத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையொன்று நடந்தேறியது. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திற்கு அடுத்ததாக, சுண்ணாகத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையமே வடபகுதியில் இருந்த பொலீஸ் நிலையங்களுக்குள் பெரியதாக இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக கைதுசெய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் சுண்ணாகம் பொலீஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட இப்பொலீஸ் நிலையம் மீது புதன்கிழமை டெலோ அமைப்பினர் நடத்திய தாக்குதல் முயற்சி பொலீஸாரினால் முறியடிக்கப்பட்டிருந்தது . ஆனால், புதன் இரவும் இன்னொரு தாக்குதல் முயற்சியில் டெலோ அமைப்பினர் இறங்கப்போகிறார்கள் என்கிற செய்தி பொலீஸாருக்குக் கிடைத்தது. பின்னாட்களில் நடந்த விசாரணைகளின்போது, அன்றிரவே சுண்ணாகம் பொலீஸார் யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு யாழ்ப்பாணத்திற்குப் போகும் முன்னர், தாம் அடைத்துவைத்திருந்த இளைஞர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் அடைத்துப் பொலீஸார் பூட்டினர். அந்த இளைஞர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டும், கண்கள் மறைக்கப்பட்டும், அவர்கள் கூச்சலிடாதபடி வாய்களுக்குள் துணிகள் பொதிந்தும் அடைக்கப்பட்டார்கள். பின்னர், அவ்வறையின் கதவினை எவராவதுதிறக்க‌ எத்தனித்தால், அவ்வறையினை முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கக் கூடியவகையில் பாரிய குண்டொன்றைப் பொலீஸார் பொறுத்திவிட்டுச் சென்றார்கள். அன்று உயிர்தப்பிய சிலர் விசாரணைகளின்போது பேசுகையில், தம்மில் சிலர் ஒருவாறு கைக்கட்டுக்களையும், வாயில் அடைக்கப்பட்ட துணிகளையும் அகற்றிவிட்டு உதவி கோரிக் கூச்சலிட்டிருக்கிறார்கள். பொலீஸார் வெளியேறியபின்னர் அப்பகுதியில் குழுமிய பொதுமக்கள் உள்ளிருந்து வரும் கூச்சல்களைச் செவிமடுத்தவுடன், கதவினை உடைத்துத் திறக்க எத்தனித்திருக்கிறார்கள். இதன்போது கதவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்பில் உள்ளே அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களும், உதவிக்கு வந்த பொதுமக்களுமாக குறைந்தது 20 பேர் அவ்விடத்திலேயே உடல்சிதறிக் கொல்லப்பட்டார்கள். பொலீஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் மரணங்களை கொழும்பு ஊடகங்கள் பின்வருமாறு தலைப்பிட்டு மகிழ்ந்தன, "பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டனர்". இப்படுகொலை பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை அவை முடுக்கிவிட்டிருந்தன. சண்டே ஒப்சேர்வர் தனது செய்தியில் பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டதாகவும், மேலதிக ஆளணி உதவி பொலீஸாரால் விடுக்கப்பட்டதாகவும் எழுதியது. மேலும், சுண்ணாகம் பொலீஸாரின் உதவி கோரலினையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த ஏனைய பொலீஸ் நிலையங்களில் இருந்து பொலீஸார் விரைந்து சென்று சண்டையில் ஈடுபட்டதாகவும், கடுமையான சண்டையில் இருபதிற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி கூறியது. நாவற்குழி படுகொலை மறுநாள், ஆவணி 10 ஆம் திகதி இரவு, குருதியை உரையவைக்கும் இன்னொரு கொடூரமான படுகொலை ஒன்று இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்டது. 10 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் வாகனமொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களுள் ஆறு பேர் குழந்தைகள். நாவற்குழி இராணுவத் தடைமுகாமின் அரணில் நின்ற‌ இராணுவத்தினர் அவ்வண்டியை மறித்தனர். முகாமின் அருகிலிருந்த ஆள் ஆரவாரம் அற்ற இடமொன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைகளும் பெற்றோரும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலையினை அரச வானொலி பிரச்சாரப்படுத்திய விதம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரம்கொள்ள வைத்தது. "கைதடிப்பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் " என்று பொதுமக்களின்படுகொலை பிரச்சாரப்படுத்தப்பட்டது.

பிக்குகள் மாத்திரம் காவி உடையணியும் சட்டம் வேண்டும்: ஒரு சில தேரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது! - உதய கம்மன்பில

3 months ago
சைவ மதத் துறவிகளுக்கு ஆப்பு வைக்கப் போகினம் போல கிடக்கு,🤨
Checked
Fri, 04/19/2024 - 11:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed