3 months 1 week ago
தாய்வானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.
சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://thinakkural.lk/article/285102
3 months 1 week ago
18 DEC, 2023 | 05:32 PM
(நேர்கண்டவர் : ரொபட் அன்டனி)
இலங்கையில் அரசியல் தீர்வு எதுவாக இருந்தாலும், அது உண்மையில் எல்லாத் தரப்பினரதும் நல்லிணக்க முயற்சியாக அமைய வேண்டும். இது சாத்தியமானது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால், இதில் கடின உழைப்பு அவசியமாகிறது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
'வீரகேசரி' வார வெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக்கொண்டதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் புலம்பெயர் மக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கை வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
2022இல் நெருக்கடி காலத்தின்போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட போது, அதில் அமெரிக்கத் தூதுவர் தலையிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக கருத்து வெளியிட்ட தூதுவர் ஜூலி சங், அமெரிக்கா எப்போதும் எந்தவொரு தனிப்பட்ட அரசியல்வாதியையும் ஆதரிப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சர்வதேச தர நிலை மற்றும் நிதி முறைகளுக்கு உட்பட வேண்டுமென்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தை உருவாக்க கடந்த காலத்தை நிவர்த்தி செய்வது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று அடுத்த வருடம் அமெரிக்காவிலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், இலங்கையிலும் உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவது அவசியமென்றும் குறிப்பிட்டார்.
“அரசியலமைப்பின்படி சரியான நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது முக்கியமானதாக இருக்கும். ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களும் தாமதமாகியுள்ளன. ஆகவே மக்களுக்கு வாக்குப் பெட்டி ஊடாக குரல் கொடுக்க அனுமதிக்கும் வகையில் சரியான நேரத்தில் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பொருளாதார நெருக்கடி காலத்தின்போது ஏன் இலங்கைக்கு நேரடிக் கடன்களை வழங்கவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்கத் தூதுவர், அமெரிக்கா அரசாங்கம் – அரசாங்கம் என்ற அடிப்படையிலான கடன்களை வழங்கா மல் இருப்பது நாட்டின் இறைமை கடன் சுமை அதிகரிப்பதை தவிர்ப்பதற்காகும் என்றார்.
“இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கடன்களே உண்மையில் பங்களித்தன. அரசாங்கங்களுக்கிடையிலான கடன்களை நாம் தவிர்க்க விரும்பினோம். நாங்கள் தொடர்ந்து இலங்கைக்கு ஒரு நல்ல பங்காளியாக இருப்போம்” என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உடனான நேர்காணலின் முழுமையான விபரங்கள் வருமாறு:
கேள்வி : சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியுதவி கிடைத்துள்ளது. அது குறித்த உடன்பாட்டை நீங்கள் வரவேற்றிருந்தீர்கள். இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மீள்வருகை, நாணய நிதியத்தின் பங்களிப்பை அமெரிக்கா எப்படிப் பார்க்கிறது?
பதில் : கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இலங்கை எங்கே இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இலங்கை மிக நீண்ட தூரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் தொடர இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
இது கடந்த ஆண்டு நிலைமை மோசமாக இருந்தபோது, நாட்டை ஒரு நிலையான பாதையில் கொண்டு வருவதற்கு இது தேவையாக இருந்தது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுமை கண்டறியும் பரிந்துரைகளும் (IMF governance diagnostic) முக்கியமானது.
அரசாங்கம் பல நடவடிக்கைகளையும் சீர்திருத்தங்களையும் சரியான திசையில் செய்துள்ளது. இங்கு உடனடி நெருக்கடி நிர்வாகத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களும் முக்கியமானவை. மற்றும் நீண்ட காலத்துக்கு பொருளாதாரத்தை எவ்வாறு நிலையானதாக மாற்றுவது, நிலையான சீர்திருத்தங்களைச் செய்தல், நீடித்த சீர்திருத்தங்களை உருவாக்குதல், நீண்டகால மீட்பு மற்றும் செழிப்புக்கு முக்கியமானதாக இருக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியைக் கொண்டுவருதல் என்பன இலங்கைக்கு மிக முக்கியமானதாகும். நாங்கள் எப்போதும் இலங்கையை கடினமான காலங்களில் ஆதரிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து ஒரு நல்ல கூட்டாளராக இருப்போம்
கேள்வி : கடந்த வருட நெருக்கடி நேரத்தில் இந்தியா இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலரை கடனாக வழங்கியது. ஆனால், அமெரிக்கா அவ்வாறான நேரடிக் கடனை வழங்கவில்லையே, ஏன்?
பதில் : அந்த நேரத்தில் ஏராளமான மனிதாபிமான, அவசர உதவிகளை வழங்கினோம். மக்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் 270 மில்லியன் டொலர் வழங்கினோம். அதில் உரமும் அடங்கும். முழு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெல் விவசாயிகள் இதில் பயனடைந்தனர். பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை இரட்டிப்பாக்கினோம். அதனை 32 மில்லியனாக இரட்டிப்பாக்கினோம். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க இது உதவியது.
அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனமான டி.எப்.சி திட்டத்தின் கீழ் நெருக்கடி காரணமாக நிதி அணுகல் இல்லாத சிறிய நடுத்தர வர்த்தகர்களுக்கான நிதியுதவிக்கு 170 மில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டது.
ஆனால், இறையாண்மை கடன் இலங்கைக்கு அதிகரிப்பதை நாங்கள் தவிர்க்க விரும்பினோம். அரசாங்கங்களுக்கிடையிலான கடன்களை நாம் தவிர்க்க விரும்புகிறோம். ஏனென்றால், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கடன்களே உண்மையில் பங்களித்தன. அமெரிக்கா செய்ய விரும்புவது தனியார்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும்.
சிறிய, நடுத்தர வர்த்தகங்களே பொருளாதாரத்தின் முதுகெலும்பு. நான் பல சிறிய, நடுத்தர உரிமையாளர்களை, குறிப்பாக பெண் வணிகர்களைச் சந்தித்தேன். எங்கள் டி.எப்.சி கடன்கள் அதிகளவில் பெண்களுக்குச் சொந்தமான வணிகங்களுக்கும், பசுமை எரிசக்தி திட்டங்களை ஆதரிப்பதற்கும் செல்கின்றன.
கேள்வி : முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜினாமா செய்தபோது இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் விடயத்தில் அமெரிக்கா என்ன செய்தது? ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை அமெரிக்கா விரும்பியதா? விரும்பவில்லையா? என்ன நடந்தது?
பதில் : உண்மை என்னவென்றால், எந்தவொரு தனிப்பட்ட அரசியல்வாதியையோ அல்லது அரசியல் கட்சியையோ அமெரிக்கா ஆதரிக்கவில்லை. ஒரு தலைவரை மக்கள் தெரிவு செய்வதும் அல்லது பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்வதும் அரசியல் முடிவுகள். நாங்கள் அரசாங்கத்தின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம், அது ஜனாதிபதி ரணிலாகவும் அவரது அமைச்சரவையாகவும் இருக்கலாம்.
அரசாங்கம் மாறினால் நாங்கள் அந்த அரசாங்கத்துடனும் பணியாற்றுவோம். அரசாங்கத்தில் இருப்பவர், எதிர்க்கட்சிகளில் இருப்பவர், வணிகர்கள், சிவில் சமூகத்தினர் என அனைவருடனும் ஒன்றாக இணைந்து பணியாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். இதனால் இலங்கை மக்களை எங்களால் ஆதரிக்க முடியும்.
கேள்வி : நீங்கள் அண்மையில் ஜே.வி.பி. தலைவரை சந்தித்தீர்கள். வழமையாக அவ்வாறு நடக்காது. சந்திப்பின் நோக்கம் என்ன?
பதில் : ஆம், நான் அனைத்து தரப்பு தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்கிறேன். நான் உள்ளூர் சமூகத் தலைவர்களையும் சந்திக்கிறேன். நான் சந்திக்கும் அரசியல் தலைவர்களில் அனுர குமாரவும் ஒருவர்.
இரண்டாவது முறையாக அவரைச் சந்தித்தேன். எதிர்காலத்திற்கான கரிசனைகள் அல்லது தீர்வுகளாக அவரது கட்சி என்ன முன்மொழிகிறது என்பது குறித்த அவரது கருத்துகளைக் கேட்க விரும்பினேன். நான் இதை அனைத்து அரசியல் தலைவர்களுடனும் முன்னெடுக்கிறேன்.
கேள்வி : அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அது தொடர்பில்?
பதில் : எந்தவொரு ஜனநாயகத்தின் முதுகெலும்பாகவும் தேர்தல்கள் உள்ளன என்று நம்புகிறோம். தேர்தல்கள் இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது. அமெரிக்காவிலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே உங்கள் அரசியலமைப்பின்படி, சரியான நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது முக்கியமானதாக இருக்கும். ஆனால், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களும் தாமதமாகியுள்ளன.
ஆகவே மக்களுக்கு வாக்குப்பெட்டி ஊடாக குரல் கொடுக்க அனுமதிக்கும் வகையில் சரியான நேரத்தில் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இது இலங்கையில் ஜனநாயகம் தொடர்ந்து செழிப்பதை உறுதி செய்யும்.
கேள்வி : பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் குறித்துப் பேசுகின்றீர்கள். இலங்கை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளது. இது தொடர்பில்?
பதில் : நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இவ்வளவு நீண்ட காலமாக இடம்பெறுகின்றன. நாடு முழுவதுமுள்ள பலருடனான எனது பயணங்களிலிருந்து, மக்கள் பதில்களுக்காகக் காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக காணாமல் போனவர்களின் தாய்மார்கள் அல்லது சகோதரர்கள் அல்லது சகோதரிகளைக் குறிப்பிடலாம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பதில்களுக்காக இன்னும் பலர் காத்திருப்பதைப் பற்றி கேட்பது சிரமமாக இருக்கிறது. காணாமல் போனவர்களின் அலுவலக செயற்பாட்டில் சில வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தினால் மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தை உருவாக்க கடந்த காலத்தை நிவர்த்தி செய்வது முக்கியமாகும். இந்தத் தேவைகள் மற்றும் குடிமக்கள் அனைவரின் இந்தக் கவலைகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவது முக்கியம்.
ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க வழிமுறை, முன்மொழிவு பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இது குறித்து சிவில் சமூகத்திலிருந்து சில கரிசனைகளையும் கருத்துகளையும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். வெறுமனே மற்றுமொரு ஆணைக்குழுவை மக்கள் விரும்பவில்லையென்று நான் நினைக்கிறேன். உண்மையான, உறுதியான முடிவுகள் மற்றும் முயற்சிகள் இருக்கும் என்பதைக் காண்பிப்பதே மக்களுக்கு அவசியமாகும். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இந்த முயற்சிகளைத் தொடரும்போது, மனித உரிமைகள் குறித்து நில உரிமைகள் தொடர்பான சில நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் அவசியமாகும்.
எனவே இந்த விடயத்தில் அனைத்து பங்குதாரர்களும் ஆலோசிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகங்களுடனும் ஆலோசிக்கப்பட வேண்டும். இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக்கொண்டதாக இருக்க வேண்டும் என்பதனை எப்போதும் வலியுறுத்தியுள்ளோம்.
கேள்வி : உலகளாவிய தமிழர் மன்றம் இலங்கைக்கு தற்போது வந்து சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள இலங்கை புலம்பெயர் மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?
பதில் : பல இலங்கை அமெரிக்க வணிக மக்கள் இலங்கைக்கு திரும்பி வந்து முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இருப்பினும், அவர்களின் பணம், அவர்களின் முதலீடு, பணம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது அவசியமாகும். ஊழல்கள் இடம்பெறக்கூடாது.
அவர்கள் தேடுவது அவர்களின் முதலீட்டுக்கும் நல்லாட்சிக்குமான உத்தரவாதங்களாகும். அதனால்தான், புலம்பெயர் மக்களுக்கு நம்பிக்கையை வழங்க அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம். இதன்மூலம் அமெரிக்காவிலுள்ள அதிக இலங்கையர்களை திரும்பி வர ஊக்குவிக்க முடியும்.
அநேக புலம்பெயர் சமூகங்கள் திரும்பி வந்து இணைப்புகளையும் பாலங்களையும் உருவாக்க விரும்புகின்றன என்று நான் நினைக்கிறேன். எனவே வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கான புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அமெரிக்காவில் மட்டுமல்ல கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வேறு இடங்களிலுள்ள இலங்கையர்கள் இலங்கையுடன் மீண்டும் இணைவதற்கு உதவுவதாக அமையும்.
கேள்வி : இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் நீண்டகாலமாக அரசியல் தீர்வை கோரி வருகின்றனர். நீங்கள் அடிக்கடி தமிழ் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்துகிறீர்கள். தீர்வுத்திட்டம் குறித்து அவர்கள் என்ன கூறுகின்றனர்? அரசியல் தீர்வு குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : இந்த விடயத்தில் அனைத்து இலங்கையர்களின் குரல்களையும் நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் நாம் கேட்பது மிகவும் முக்கியம்.
அதனால்தான் வெவ்வேறு மாகாணங்களுக்குச் சென்று மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். ஆகவே அவர்களின் கருத்துக்களைக் கேட்கும்போது இவை அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல, மக்களுக்கு மிகவும் மாறுபட்ட பார்வைகள் உள்ளனவா?, இல்லையா? என்பதை புரிந்துகொள்ள முடியும்.
எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து மக்கள் வெவ்வேறு தீர்வுகள் மற்றும் வெவ் வேறு யோசனைகளைக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் குரலைக் கேட்க வேண் டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் குடிமக்களின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். மற்றும் இந்த நாட்டின் எதிர்காலத்தை முடிவெடுக்கும் செயல்முறையில் பங்கெடுக்க விரும்புகிறார்கள்.
அவர்கள் எண்ணிக்கையில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அவர்களின் உரிமைகள் கேட்கப்படுவதையும் உரிமைகள் செயற்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். இந்த விவாதங்கள் மற்றும் கரிசனைகள் ஆகியவற்றிலிருந்து வருகின்ற அரசியல் தீர்வு எதுவாக இருந்தாலும், அது உண்மையில் எல்லாத் தரப்பினரதும் ஓர் உண்மையான நல்லிணக்க முயற்சியாக இருக்க வேண்டும். அதனால்தான் நான் பயணம் செய்யும் போது பல்வேறு தமிழ் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களைச் சந்திக்கும்போது இது பற்றிப் பேசுகிறேன். எதுவும் சாத்தியம் என்று நினைக்கிறேன். நான் ஒருபோதும் அவநம்பிக்கையானவர் அல்ல. இதில் கடின உழைப்பு தேவையென்று நான் நம்புகிறேன்.
கேள்வி : அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய சக்திகளுக்கு இடையில் இலங்கை சிக்கியிருப்பதாக கூறப்படுகிறதே?
பதில் : இலங்கையின் கைகளில் அதன் சொந்த விதி உள்ளது. இது எந்த நாட்டுக்கும் இடையில் சிக்கவில்லை. இலங்கை மிகவும் பெருமைகொண்ட ஓர் இறையாண்மை கொண்ட நாடு. திறமைகளைக் கொண்டது.
இலங்கை பல நாடுகளையும், சென்றடைகிறது, மேலும் அது அதன் சொந்த தலைவிதியையும் அதன் சொந்த விதியையும் வளர்க்க முடியும். இங்குதான் நாம் அதை மதிக்கிறோம். இலங்கையின் ஒரு நண்பராகவும் கூட்டாளியாகவும் இருக்க அமெரிக்கா விரும்புகிறது.
கேள்வி : இலங்கை சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளதாக அடிக்கடி அமெரிக்க அறிக்கைகள் கூறுகின்றனவே?
பதில் : இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் கடந்த வருடம் என்ன நடந்தது என்பதை பார்க்கும்போது இலங்கை பல வருடங்களாக கடன் நெருக்கடியில் உள்ளது தெரிகின்றது. சீனா மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக இருக்கின்றது. தனியார் பிணைமுறி பத்திரதாரர்களும் இதில் அடங்குகின்றனர்.
எனவே பாரிய பொருளாதாரக் கொள்கைகள் பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டன. அது உண்மையில் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. எனவே இப்போது முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கை தனது பொருளாதாரத்தை நன்கு நிர்வகிக்க, அனைத்து திட்டங்களையும், உள்கட்டமைப்பு திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் நல்லாட்சியுடன் முன்னெடுப்பது முக்கியமாகும்.
வெளிப்படைத்தன்மை, சிறந்த கொள்முதல் செயல்முறைகள் முக்கியமாகும். அது எந்த நாட்டிலிருந்து முதலீடுகளை எடுத்தாலும் அல்லது கடன் பெற்றாலும் பின்பற்றப்பட வேண்டும். பெறப்பட்ட கடன்கள் அல்லது வரவிருக்கும் திட்டங்கள் அனைத்தும் முழு வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த நல்ல வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.
கேள்வி : பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அண்மையில் பேசியிருந்தீர்களே?
பதில் : அமெரிக்கா, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பங்குதாரர்கள் பல ஆண்டுகளாக காலாவதியாகிவிட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் வேறு, இலங்கைச் சூழல் வேறு என்று இருந்த காலத்தில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எந்த ஒரு நாட்டுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக சட்டம் இயற்ற உரிமை உண்டு. ஆனால் அதேநேரத்தில் அது சர்வதேச தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உள்ளாகுவதை உறுதி செய்தல் அவசியம்.
பல அம்சங்களில் அது கருத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது. மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட திருத்தத்தை ஊக்குவிக்குமாறும், எமது கரிசனைகளை வெளிப்படுத்துமாறும், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தில் உள்ள பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அந்த திருத்தங்கள் ஊடாக பயங்கரவாதத்தை தடுக்க முடியுமாகவேண்டும் என்ற அதேவேளை மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கேள்வி : இலங்கையில் உங்களுக்குப் பிடித்த உணவு எது?
பதில் : எனக்கு இலங்கை உணவுகள் பிடிக்கும். குறிப்பாக காரமான உணவை விரும்புகிறேன். ஏனென்றால் நான் கொரியாவில் பிறந்தேன், காரமான உணவுடன் வளர்ந்தேன். குறிப்பாக யாழ்ப்பாணம் செல்லும்போது, யாழ்ப்பாண நண்டுக் கறி மற்றும் யாழ்ப்பாண மிளகாய் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் யாழ்ப்பாணக் கூழ் எனக்குப் பிடிக்கும். ஒருமுறை யாழில் நான் கூழ் குடித்துக்கொண்டிருந்தபோது, உணவகத்தில் இருந்த பெண்மணி, இது காரமாக இருக்குமே என்று கூறினார். ஆனால் நான் அதை மிகவும் விரும்பி அருந்தி னேன்.
எனக்கு மோதகமும் பிடிக்கும். அது வடக்கில் நான் சாப்பிட்ட மற்றொரு பிடித்த உணவு. அது ஒரு கொரிய உணவைப் போலவே இருக்கும். அத்துடன் இடியப்பமும் எனக்குப் பிடிக்கும். இலங்கை தேநீரை விரும்பி அருந்துவேன். சில தேயிலைத் தோட்டங்களையும் பார்வையிட்டேன். சுவையான தேநீரை நான் மிகவும் ரசிக்கிறேன். அது இலங்கையின் பெருமை.
கேள்வி : இலங்கையில் பிடித்த இடங்கள்?
பதில் : மிகக் கடினமான கேள்வி. ஏனென்றால் நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் இயற்கையில் இருப்பதை விரும்புகி றேன். அதனால் நான் மலையில் ஏறுவது, நடைப்பயணம் செய்வது என்று ஒவ்வொரு முறையும் செல்வேன். ஆனால் மலையேறுவது எனக்குப் பிடிக்கும். உதாரணமாக பிதுரங்கலாவைப் பிடிக்கும். அங்கிருந்து நீங்கள் சீகிரியாவின் அழகிய காட்சியைக் காணலாம். அதனால் உயரமான இடங்களுக்கு ஏறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜகலவிற்கும் சென்றேன், அதுவும் சற்று கடினமான உயரம்தான். இலங்கையின் வெளிப்புற அழகின் தூய்மையின் தன்மையை நான் விரும்புகிறேன்.
கேள்வி : இலங்கை மக்களின் மீண்டுவரும் தன்மை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
பதில் : மீண்டு வருதல் மட்டுமல்ல, அனைத்து சிரமங்களையும், சவாலான காலங்களையும் கடந்து இலங்கை மக்களின் நகைச்சுவை உணர்வை நான் ரசிக்கிறேன். இலங்கையர் களின் மீண்டு வருதல் மற்றும் நகைச்சுவையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டேன். விடயங்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், மக்கள் மீண்டு வருகின்றனர். அனைத்தும் தொடர்கின்றன. இலங்கையின் நண்பனாக அமெரிக்கா தொடர்ந்தும் இருக்கும்.
கேள்வி : இலங்கையில் மறக்க முடியாத நிகழ்வு ஏதாவது?
பதில் : எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உள்ளன. ஆனால் அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் இலங்கை, அமெரிக்க இராஜதந்திர உறவின் 75ஆவது ஆண்டு நிறைவின் போது இலங்கைக்கு விஜயம் செய்தார். என்னைப் பொறுத்தவரை அது மிகவும் மறக்க முடியாத நிகழ்வு. காரணம் அவரது தந்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அமெரிக்கத் தூதுவராக இருந்தார்.
தூதுவரின் மகன் தான் சிறு வயதில் வாழ்ந்த தூதுவரின் வசிப்பிடத்துக்குத் திரும்பி வந்தமை, மீண்டும் தனது பழைய வீட்டைப் பார்த்தமை, 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு குழந்தையாக இருந்ததைப் பற்றிப் பேசியமை மறக்க முடியாதது. நாங்கள் கண்டிக்கும் சென்றோம். நான் இதுவரை மறக்க முடியாத தருணங்களில் அதுவும் ஒன்றாகும்.
https://www.virakesari.lk/article/171958
3 months 1 week ago
ஐ.பி.எல் ஏலம் நாளை
2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது.
குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தை தொகுத்து வழங்கியிருந்தார்.
இம்முறை ஐ.பி.எல் ஏலத்திற்காக 333 வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 77 வீரர்கள் மாத்திரமே ஐ.பி.எல் அணிகளுக்காக ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர்.
https://thinakkural.lk/article/285105
3 months 1 week ago
நெதன் லயன் 500 டெஸ்ட் விக்கெட்கள்; பாகிஸ்தானை 360 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா
18 DEC, 2023 | 01:12 PM
(நெவில் அன்தனி)
பேர்த் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நான்கு நாட்களில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 360 ஓட்டங்களால் அமோக வெற்றியிட்டியது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடராகவும் அமையும் இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிக்கொண்டது.
முதலாவது இன்னிங்ஸில் டேவிட் வோர்னர் குவித்த சதம், மிச்செல் மார்ஷ் 2 இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச் சதங்கள், 2ஆவது இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா பெற்ற அரைச் சதம், அவுஸ்திரேலியர்களின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்த வெற்றியில் பெரும் பங்காற்றின.
37 வயதான டேவிட் வோர்னர் தனது 110ஆவது டெஸ்ட் போட்டியில் 26ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதனிடையே 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் வீரர் பாஹிம் அஷ்ரபின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் நெதன் லயன் 500 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்தி செய்தார்.
இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நெதன் லயன் 501 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட்களைப் பூர்த்தி செய்த 8ஆவது வீரர் நெதன் லயன் ஆவார்.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்றது.
முதலாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், புதிய அணித் தலைவர் ஷான் மசூத் ஆகிய மூவரே 30 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
எண்ணிக்கை சுருக்கம்
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 487 (டேவிட் வோர்னர் 164, மிச்செல் மார்ஷ் 90, உஸ்மான் கவாஜா 41, ட்ரவிஸ் ஹெட் 40, அலெக்ஸ் கேரி 34, ஆமிர் ஜமால் 111 - 6 விக்., குரம் ஷாஸாத் 83 - 2 விக்.)
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 271 (இமாம் உல் ஹக் 62, அப்துல்லா ஷபிக் 42, ஷான் மசூத் 30, நெதன் லயன் 66 - 3 விக்., பெட் கமின்ஸ் 35 - 2 விக்., மிச்செல் ஸ்டார்க் 68 - 2 விக்.)
அவுஸ்திரேலியா 2ஆவது 233 - 5 விக். டிக்லயார்ட் (உஸ்மான் கவாஜா 90, மிச்செல் மார்ஷ் 63 ஆ.இ., ஸ்டீவன் ஸ்மித் 45, குரம் ஷாஸாட் 45 - 3 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 450 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 86 (சௌத் ஷக்கீல் 24, உதிரிகள் 20, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 13 - 3 விக், மிச்செல் ஸ்டார்க் 31 - 3 விக்., நெதன் லயன் 14 - 2 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் மார்ஷ்.
https://www.virakesari.lk/article/171937
3 months 1 week ago
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏராளன்.
3 months 1 week ago
அந்த இடம் முள்ளிக்குளம் என நினைக்கிறேன்.
அவர் திருமணம் செய்யவில்லை.
3 months 1 week ago
வெளிநாடுகள் சேர்ந்து புலிகளை அழித்தது போல
தன்னார்வ நிறுவனங்கள் எனும் பேரில் தமிழர்களையே அழிக்கப் போகிறதா?
நல்லதொரு கட்டுரை இணைப்புக்கு நன்றி கிருபன்.
3 months 1 week ago
ஓகே... ஓகே
இந்த முறை புலம்பல் அதிகமா இருக்கே எண்டு உன்னிப்பா அவதானித்த பின்னர் தெரீது:
சீனக்கப்பல், தை மாசம் பொங்கலோட வந்து, ஆற அமர இருந்து வைகாசி விசாகம், வெசாக் முடியத்தான் கெளம்புமாம். 🥺
அப்ப புலம்பாம என்ன செய்யிறதாம்!
3 months 1 week ago
நோ நோ நோ நெவர்.
எண்ணெய்ச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் எண்ணெய் மேலே வந்து செமிபாட்டில் குளறுபடி செய்யும் என்பார்கள்.
3 months 1 week ago
உங்களுக்கான பதில் இந்த காணொளியில் கிடைக்கலாம் @goshan_che
3 months 1 week ago
வாழ்த்துக்கள் புசாந்தன்.
3 months 1 week ago
ரொம்பவும் உயரமாக போகிறதே?
இங்கு பனி பொழிவதில்லையோ?
3 months 1 week ago
ஒன்றும் மாற்றீடாக பெறா விட்டால் தான் உதவி.
3 months 1 week ago
இருக்கிற பெண்ணின் தலை சரி போல இருக்கே.
3 months 1 week ago
சிங்கள சனம் அதிசய பிறவிகள். கோத்தாவிற்கே துண்டை காணோம் துணியை காணோம் என ஒட வைத்த சனம்.😁
3 months 1 week ago
ஆமா ஆமா
படைத்தல்,காத்தல் , அழித்தல் என்று எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
3 months 1 week ago
தகவலுக்கு நன்றி கிருபன்.
பின்னால் வாசிக்கும் போது நானும் அப்படித் தான் நினைத்தேன்.
சரி யாராவது தெளிவுபடுத்துவார்களே என்றிருந்தேன்.
3 months 1 week ago
காசா மீது பயங்கர தாக்குதல்: ஆயிரம் பேரை பிடித்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அத்தோடு இஸ்ரேல் இராணுவம் 1000 பேரை பிடித்து வைத்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம். நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
எராஸ் எல்லைப் பகுதியில் இந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்துள்ளது. சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் மிகப்பெரியதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
https://thinakkural.lk/article/285060
3 months 1 week ago
நடக்கும் என்பார் நடக்காது,
நடாக்காதென்பார் நடந்துவிடும்,..😀
3 months 1 week ago
தாவூத் இப்ராஹிமை விஷம் வைத்துக் கொன்ற மர்ம நபர்கள் - Exclusive தகவல்கள் - Major Madhan Kumar | Tamil
Checked
Thu, 03/28/2024 - 07:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed