வண்ணத் திரை

Society of the snow - சிறு குறிப்பு

3 months 1 week ago

 

image.png

Society of the snow

(Netflix release)

மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு.

இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். 

அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால், அது தன்னை தக்க வைக்க, உயிர்வாழ எந்த எல்லைக்கும் போகும் திறன் வாய்ந்தது என்பதுவும், இயற்கைக்கு சவால் விடுவதன் மூலமே தன்னை தக்கவைக்க முடிகின்றது எனவும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த அடிப்படை உண்மையை 1972 இல் அந்தீஸ் மலைத் தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் தப்பி மனித இனம் வாழவே முடியாத கடும் குளிர் நிறைந்த பனி சிகரத்துக்குள் 70 நாட்களுக்கும் மேல் வாழ்ந்து உயிர் பிழைத்தவர்களின் வாழ்வு எமக்கு சொல்கின்றது.

உண்பதுக்கு எதுவும் இன்றி, தம்முடன் பயணித்த சக நண்பர்களின் மற்றும் பயணிகளின் இறந்த உடல்களை வெட்டி உண்ணும் நிலை வரை அவர்கள் சென்று தம் உயிரை காப்பாற்றிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் 4 தினங்களுக்கு மேல் பனிக்குவியலால் பல அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்டு மீள்கின்றனர். அருகில் இருக்கும் சக நண்பர்களின் மரணங்களை நேரடியாகவே காண்கின்றனர். 

எந்த ஒரு உரினமும் வாழ முடியாத சூழலை தாக்குப் பிடித்து 16 பேர் தப்புகின்றனர். 

அவர்களை காப்பாற்றியது மனித இனத்துக்கு என்று இருக்கும் அந்த உயிர்பிழைத்தலுக்காக எந்த சவாலையும் எதிர் கொள்ளும் பண்புதான் (Survival).

இவர்களின் உண்மைக் கதையை ஒட்டி Netflix இனால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Society of the snow.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கே சென்று, அந்த கடும் குளிர் பிரதேசத்திலேயே செட் வைத்து, உண்மைக்கு மிக நெருக்கமாக சென்று இப்படத்தை எடுத்துள்ளனர்.

படம் ஆரம்பித்து, விமான விபத்து நிகழ்ந்த அந்த நிமிடத்தில் இருந்து முடிவு வரைக்கும் பார்ப்பவர்களை 
 'சில்லிட' வைக்கும் சினிமா இது.

நேற்று இரவு இப் படத்தை பார்த்தேன். என் பிள்ளைகள் இருவருக்கும் 'கண்டிப்பாக பார்க்கவும்' என கேட்டுக் கொண்டுள்ளேன்.

முடிந்தால் நீங்களும் பாருங்கள்.

 

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

3 months 1 week ago
Play video, "அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?", கால அளவு 2,40
02:40p0h4ncm9.jpg
காணொளிக் குறிப்பு,

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது.

வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது.

படத்தின் முதல் பாதியில், ஏலியனின் பார்வையில் உலகைக் காட்டும் காட்சிகள் சிரிப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கருணாகரன், யோகி பாபு ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர். இரண்டாவது பாதியில் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளன.

ஏலியன் படங்கள் புதிதல்ல என்றாலும் அவை பெரும்பாலும், ஹாலிவுட் படங்களிலேயே பயன்படுத்தப்பட்டது. தமிழ் ரசிகர்கள் அதை மொழிபெயர்ப்புப் படமாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கதை ஒன்றில் ஏலியனை பொருத்திப் பார்த்து ரசிக்கும் வாய்பை இயக்குநர் ரவிக்குமார் உருவாக்கி தந்திருக்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, உருவாகி வரும் அயலான், கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தாமதமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இனி பார்க்கலாம்.

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

 
அயலான்: தமிழ் பேசும் ஏலியன்
Ayalaan movie review

பட மூலாதாரம்,THEAYALAAN/@X

முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பியே படக்குழு இதில் இறங்கியிருப்பதைக் காண முடிவதாக தினமணி தன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “அதற்கேற்ற தகுந்த உழைப்பை கிராபிக்ஸ் குழு சரியாகக் கொடுத்திருக்கிறது. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது படக்குழு.

ஏலியனை முகபாவனைகளுடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருந்தனர்,” என்று தினமணி விமர்சனம் செய்துள்ளது.

மேலும், “நாம் யூகிக்கக்கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் அடங்கியிருக்கிறது இயக்குநரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும், அதன் பின் மெதுவாக மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம், ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்பு சாயல் படத்தில் தெரிகிறது.

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய பாணியிலான நடிப்பை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது,” என்றும் அயலான் திரைப்படத்தைப் பற்றி தினமணி கூறுகிறது.

 
ரசிக்க வைக்கும் ஏலியன்
Ayalaan movie review

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

ஹாலிவுட் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலப்பயணம் என்ற கருவை இயக்குநர் ரவிக்குமார், 'இன்று நேற்று நாளை' என்ற படத்தில் எளிய தமிழ் கதை மூலம் அனைவருக்கும் புரியும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவருடைய இரண்டாவது படத்திலும் சையன்ஸ் ஃபிக்ஷன் கருப்பொருளைக் கொண்டுள்ளார்.

அதுகுறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், "ஹீரோ அறிமுக பாடல், காதல், இரண்டு நகைச்சுவை நடிகர்கள், ஒரு கார்ப்பரேட் வில்லன், கொஞ்சம் அம்மா சென்டிமென்ட், இயற்கை முறை விவசாயம் குறித்த சில அறிவுரைகள் என தமிழ் படத்துக்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன," என்று விமர்சித்துள்ளது.

எனினும், சூப்பர் பவர், பறக்கும் தட்டு, ரோபோக்கள் என ஹாலிவுட் படங்களில் பார்த்த விஷயங்களுக்கு நிகராக இயக்குநர் ரவிக்குமார் கதையில் நிறைய டிவிஸ்டுகள் வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

இந்தப் படம் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளதற்கு இதுவே காரணம் எனப் பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், "படத்தின் முதல் பாதியில் டாட்டூ என்ற ஏலியனை ரசிக்கும்படியான கார்ட்டூன் கதாபாத்திரம் போல் பயன்படுத்தி நகைச்சுவையைத் தூண்டியிருக்கிறார் இயக்குநர்.

விசுவல் எஃபெக்ட்ஸ் திரையில் காண்பதற்குத் தங்கு தடையின்றி இருப்பது, படத்தில் கூடுதல் மேஜிக் செய்கிறது,” என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

 
அயலான் காட்டும் புதிய உலகம்
Ayalaan movie review

பட மூலாதாரம்,THEAYALAAN/@X

இந்து தமிழ் திசை நாளிதழ் தனது விமர்சனத்தில், “தமிழில் இதுவரை பார்த்திராத அளவு கிராபிக்ஸ் காட்சிகளில் அத்தனை நேர்த்தி. குறிப்பாக, ஏலியனின் உடல் பாகங்கள் தொடங்கி அதன் அசைவுகள், உடல்மொழி வரை துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன," எனப் பாராட்டியுள்ளது.

"தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். வழக்கமாக இந்திய சினிமாக்களில் கிராபிக்ஸ் சொதப்ப காரணம், அதன் லைட்டிங்கில் கவனம் செலுத்தாததுதான் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் இதில் படம் முழுக்க அப்படியான குறை எதுவும் இல்லாமல் துல்லியமான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. ஏலியனும் கியூட்டாக வடிவமைப்பட்டுள்ளதால் குழந்தைகளைக் கவர வாய்ப்புள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.

 
ஏ.ஆர்.ரஹ்மான் நடனம்
Ayalaan movie review

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், “அசர வைக்கும் காட்சிகள் மூலம், இந்த திரைப்படம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். திகைப்பூட்டும் காட்சிகள் வேறொரு உலகத்துக்கு உங்களை எடுத்துச் செல்லும்,” என்று கூறுகிறது.

“படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள். அதை ஓரிடத்தில்கூட பிசிறு தட்டாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது கிராஃபிக்ஸ் குழு. ஏலியனுக்கு பின்னணிக் குரலாக வந்திருக்கும் சித்தார்த்தின் குரல் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர் ரஹ்மான், ஒரு பாடலில் சிவக்கார்த்திகேயனுடன் சேர்ந்து நடனமாடியும் உள்ளார். மேடைகளில் அதிக சத்தம் போட்டுக்கூட பேசாத ரஹ்மானை பார்த்த ரசிகர்களுக்கு, அவர் நடனமாடியிருப்பது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. இயக்குநர் ரவிக்குமாரும் அதே பாடலில் நடனமாடியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cmmddq9jne4o

கேப்டன் மில்லர் Review:

3 months 1 week ago
கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி?  

1182656.jpg  

 

வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன்.

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிறார். ஆனால், அங்கு தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி ஊர் திரும்ப, கொலைகாரன் என கூறி துரத்தியடிக்கப்படுகிறார். பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையிலிருந்து மக்களை மீட்டது எப்படி என்பதே திரைக்கதை.

ஆங்கிலேயே ஆதிக்கத்தையும், அரசனின் சாதிய ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் இணைத்து, அதனைச் சுற்றி ‘மாஸ்’ தருணங்களை கட்டமைத்து அழுத்தமான கதையாடலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். சுதந்திர போராட்டக் கதையை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளிருந்து சொல்ல முயன்றது சிறப்பு. “முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம். கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?’ என தனுஷ் பேசும் வசனம், “கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்” என்ற அதிதி பாலன் வசனம் வழியே ஒடுக்குமுறையின் அனைத்து கதவுகளையும் பதம் பார்த்தற்கு பாராட்டுகள்!

தனுஷின் இன்ட்ரோவும், அவருக்கான மாஸ் காட்சிகள் எழுதப்பட்ட விதம், ரசிகர்களுக்கான பிரத்யேக விருந்து. குறிப்பாக பரபர சேஸிங்கில், புகுந்து விளையாடும் கேமராவும், இமைக்கும் நொடியில் வரும் இன்டர்கட் ஷாட்ஸுடன் படமாக்கப்பட்ட இடைவேளைக் காட்சி அட்டகாசமான திரையனுபவம். 6 அத்தியாயங்களாக பிரித்து சொல்லப்படும் இக்கதையில் அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் வன்முறைக் காட்சிகளும், தெறிக்கும் தோட்டாக்களும், ரத்தமும் சதையுமான திரைக்கதைக்கு தேவையாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் உணர்வைத் தருகிறது.

தனுஷுக்கும் சிவராஜ்குமாருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப்போகிறது. சிவராஜ்குமாரும், தனுஷும், சந்திப் கிஷனும் இணையும் இறுதிக் காட்சி ‘சூப்பர் ஹீரோ’ படத்துக்கு நிகரான சினிமாட்டிக் அனுபவம்.

எனர்ஜியூட்டும் ‘கில்லர் கில்லர்’ பாடல் படமாக்கப்பட்ட விதம், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஆகியவை ஓடிடி காலத்திலும் திரையரங்கில் படம் பார்ப்பதற்கான நியாயத்தை உறுதி செய்கிறது. “கோயில் கருவறைக்குள்ள நம்ம போகலாமா?” என கேட்கும்போது, “போக கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லலயே”, ‘நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ போன்ற வசனங்கள் அப்லாஸ் அள்ளுகின்றன. தனுஷ் பாத்திரம் ஒன்றை கழுவிக்கொண்டிருக்க, நிவேதிதா சதீஷ் துப்பாக்கியை துடைக்கும் காட்சி அட்டகாசம்.

மூன்று வெவ்வேறு தோற்றங்கள், அதற்கேற்ற உடல்மொழி, தன் மக்களை கொல்லும் இடத்தில் அஞ்சி நடுங்குவது, குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகுவது, ஆக்ரோஷமாக திருப்பி அடிக்கும் இடங்களில் ‘அசுர’த்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

சிவராஜ்குமாரின் சர்ப்ரைஸ் இன்ட்ரோவில் ‘ஜெயிலர்’ பட நடையாக இருந்தாலும் அவரது ஸ்கிரின் ப்ரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. சந்தீப் கிஷன் கேமியோவில் கவனம் பெறுகிறார். ஆக்‌ஷனில் களமிறங்கும் நிவேதிதா சதீஷ், ஓரிடத்தில் ஆக்ரோஷம் கொ(ல்)ள்ளும் பிரியங்கா மோகன் கதாபாத்திரங்களும் ரொமான்ஸுக்காக பயன்படுத்தபடுத்தாமல் கதைக்களத்துடன் ஒன்றியே பயணிக்க வைப்பதன் வழியே இயக்குநர் அருண் தனித்து தெரிகிறார். இருவரும் நடிப்பில் குறையில்லாமல் கொடுத்ததை செய்துள்ளனர்.

துணைக் கதாபாத்திரங்களான இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஜெயப்பிரகாஷ், நன்றாகவே எழுதப்பட்டுள்ளன. அடுத்த பாகத்துக்காக அதிதி பாலன். இந்தப் படத்தில் பெரிய அளவில் வேலையில்லை.

உடுக்கை சத்தம் ஒலித்தபடி கொடுக்கப்படும் தனுஷின் இன்ட்ரோ தொடங்கி காட்சிகளுக்கான மாஸை மெருகேற்றி சின்ன சின்ன சீன்களை செதுக்கியது வரை ஜி.வி.பிரகாஷ் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், ‘உன் ஒளியிலே’ பாடலை ஷான் ரோல்டனின் வெர்ஷனை படத்தில் வைத்திருக்கலாம். சித்தார்த் நுனியின் கேமராவும், நாகூரான் ராமசந்திரனின் கட்ஸும் இன்டர்வல் ப்ளாக்கையும், க்ளைமாக்ஸையும் ரசிக்க வைக்கின்றன.

பொறுமையாக நகரும் காட்சிகளும் அதீத வன்முறையும் சிலருக்கு அயற்சியை கொடுக்கலாம். தாய் இறந்துவிட்டதாக ஓரிடத்தில் வசனத்தில் சொல்லப்படும். அந்த வசனத்தையே இரண்டாம் பாதியில் மீண்டும் காட்சியாக்கியிருப்பது ஏன் என தெரியவில்லை. அதேபோல, பிரிட்டிஷ் ராணுவப் படையில் இணைந்தால், தன் மக்களை கொல்ல வேண்டியிருக்கும் என்பது கூடவா தனுஷுக்கு தெரிந்திருக்காது என்பன போன்ற லாஜிக் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன.

இறுதியில் வரும் சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான நோக்கமும் தேவையும் பெரிய அளவில் கதையில் இருப்பதாக தெரியவில்லை. அதன்பின் வரும் காட்சிகளும் சற்று இழுவை.

நாட்டார் தெய்வ வழிபாடு, கம்யூனிசத்தின் தூவல், ஆதிக்குடியினரின் நிலப்பறிப்பு, சாதிய பாகுபாடு, பிரிட்டிஷ் ஆதிக்கம் என பல சப்ஜெக்ட்டுகளை தொட்டிருக்கிறது படம். ஆனால், இதில் காட்டப்படும் பல விஷயங்கள் சுதந்திரத்துக்கு முன் நிகழ்வதாக சொன்னாலும் இன்றும் பொருத்திப் பார்க்க முடிவது படத்தின் பலம். மொத்தத்தில் திரையனுபவத்துக்கு ஏற்ற வன்முறை கலந்த வெகுஜன சினிமா எல்லோருக்குமானதாக இருக்குமா என்பதும் அவரவர் விருப்பம் சார்ந்ததே!கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி? | Dhanush starrer captain miller movie review - hindutamil.in

நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ்

3 months 1 week ago
நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ் 1176842.jpg  
 

சென்னை: நானி நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ படம் ஜனவரி 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் அவர் நடித்துள்ள 30-வது படமான ‘ஹாய் நான்னா’ கடந்த டிச.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/ott-platform/ott-news/1176842-actor-nani-starrer-hi-nanna-movie-will-stream-ott-on-jan-4.html

 

 

 

ஆஸ்கர் விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானை தமிழில் பேச தூண்டிய நிகழ்வு எது தெரியுமா?

3 months 1 week ago
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 ஜனவரி 2024, 07:21 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

"என் வாழ்வில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று வெறுப்பு மற்றொன்று அன்பு. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன்," என்று தனது இசைப் பயணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வார்த்தைகள் இவை.

கடந்த 1992ஆம் ஆண்டு, தனது முதல் திரைப்படமான 'ரோஜா' மூலம் இந்திய சினிமாவின் இசைத் துறையையே புரட்டிப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் எனச் சொன்னால் அது மிகையாகாது.

இன்றுவரை தான் இசையமைக்கும் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு வகையான புதுமையைச் செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 56ஆவது பிறந்த நாள்.

இரவு நேரங்களில் இசையமைக்கும் வழக்கம்
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரவு நேரங்களில் மட்டுமே திரைப்படங்களுக்கு இசையமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது நெருங்கிய குடும்ப நண்பரும், மூத்த செய்தியாளருமான அனுபமா சுப்ரமணியன் இதுகுறித்து பிபிசியிடம் பேசினார்.

"ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு இரவு நேரத்தில் சென்றால் அங்கே பல பிரபலாமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அவருக்காகக் காத்திருப்பதைக் காணலாம் அல்லது அவர்கள் தங்களது திரைப்படப் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுடன் ஆலோசித்து கொண்டிருப்பார்கள்.

நாம் கேட்டு ரசித்த பல பாடல்கள் மற்றும் ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்கான பிண்ணனி இசையும் பாடல்களும் இரவு நேரத்தில் உருவாக்கப்பட்டவையே. இப்போது அந்த வழக்கத்தைக் கொஞ்சம் மாற்றியுள்ளார், பகலிலும் இசைப் பணிகளைக் கவனித்து வருகிறார்," என்கிறார் அனுபமா.

"அவரை 1990களில் பேட்டி எடுக்கச் செல்லும்போது, பாலிவுட்டை சேர்ந்த பலரை அவரது ஸ்டுடியோவில் பார்க்க முடிந்தது. ஒரு தமிழரின் இசைக்காக இந்தி திரையுலகமே சென்னை வந்து காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது," எனக் கூறுகிறார் அனுபமா.

 
மிகச் சிறந்த மனிதர், ஆன்மீகவாதி
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்
படக்குறிப்பு,

ஏ.ஆர்.ரஹ்மானுடன் அனுபமா சுப்ரமணியன்

தொடர்ந்து பேசிய அனுபமா, "எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் ஐந்து வேளை தொழுவதற்கு மறக்கமாட்டார். ரம்ஜான் மாதத்தின்போது 30 நோன்புகளையும் தவறாமல் கடைபிடிப்பார். ஒவ்வொரு நோன்பு நாள் அன்றும் மாலையில், அவரது வீட்டிற்கு எதிரே உள்ள அரசுப் பள்ளியில் ஏழைகளுக்கான 'ஜக்காத்' எனும் உதவியை வழங்குவார்."

"செய்திகள் சேகரிப்பதற்காக அவரைப் பல முறை சந்தித்துள்ளேன். ஏதாவது கிசுகிசு கிடைக்குமா என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பேன். ஆனால் யாரைக் குறித்தும் ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசியது கிடையாது. அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தருவார்.

ஒரு பிரபலமான நபர் ஒருமுறை அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். அது பற்றிக் கேட்டபோதும்கூட, அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை என சிரித்துக்கொண்டே சொன்னார்," என்கிறார் அனுபமா.

மேலும், "எப்படி இவரால் இவ்வளவு பாஸிட்டிவான நபராக இருக்க முடிகிறது என நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இப்படி ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும் நல்ல மனிதராகவும் இருப்பதால்தான் கடவுள் அவரை இவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார் போல," என்று கூறினார் அனுபமா.

ஆஸ்கர் விழா மேடையில் தமிழில் பேசத் தூண்டிய நிகழ்வு
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காகச் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையைப் பெற்றார்.

விருது பெற்ற அனுபவம் குறித்துக் கேட்டபோது, "பின்னணி இசை விருதுக்காக என் பெயர் அறிவிக்கப்பட்டபோது இது கனவா அல்லது நிஜமா என நினைத்தேன். மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது. நான் ஒரு கிளேடியேட்டரை போல் உணர்ந்தேன். மேடையில் பேசுவதற்குக் கூட ஏதும் தயாரித்து வைக்கவில்லை. இயல்பாக என்ன தோன்றுகிறதோ அதையே பேச நினைத்தேன்."

"நான் கீழே அமர்ந்திருந்த போது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ... இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். அதனால்தான் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன்.

நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். கடவுள் அருள் புரியட்டும் என்று சொன்னேன். சிலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டனர். மதத்தை ஒப்பிட்டு பேசினர்," என்று கூறினார்.

 
விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பு
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்கரை வென்று நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் தனக்குக் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவத்தைக் குறித்து பேசும்போது, "ஆஸ்கர் விருதுகளை என் கைப்பையில் வைத்திருந்தேன். விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் என் பையை பரிசோதித்தபோது, சுமார் 100 அதிகாரிகள் வரை திரண்டிருந்தனர்.

ஒரு அதிகாரி தனது கையில் 2 ஆஸ்கரை தூக்கிக் காட்டி நான் என்ன வைத்திருக்கிறேன் பாருங்கள் என்றார். உடனே அங்கு சிரிப்பலை எழுந்தது," என அவர் நினைவுகூர்ந்ததாக அனுபமா கூறினார்.

திலீப்குமார் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன் தான் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான். சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

அம்மா, அக்கா, தங்கைகள் எனப் பெண்கள் சூழ்ந்த உலகம் ஏ.ஆர்.ரஹ்மானுடையது. தன்னுடைய தந்தையின் இறப்பால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமாக இசை உலகிற்குள் நுழைந்திருக்கிறார். திலீப் குமார் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் ரஹ்மானாக மாறினார்.

தன்னுடைய இயற்பெயரான திலீப் குமாரை வெறுத்திருக்கிறார். புதியதொரு மனிதனாக உருமாற விரும்பியுள்ளார். அதன் காரணமாக இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார்.

எண்ணற்ற விருதுகள்
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம்.

ஏ.ஆர்.ரஹ்மான் 1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது மட்டுமில்லாமல் கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வென்றிருக்கிறார். 2010ஆம் ஆண்டில் ரஹ்மானுக்கு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது.

தமிழ் மீதான பற்று
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏ.ஆர்.ரஹ்மான் 'தமிழ் பற்றாளர்' என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆஸ்கார் மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று அவர் தமிழில் பேசிய காட்சி, அவரது தாய்மொழிப் பற்று மற்றும் அதன் பெருமையை உலக அரங்கில் பதிவு செய்த செயலுக்கு மிகுதியான வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

ககாந்த 2019ஆம் ஆண்டு வெளியான '99' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தின் கதாநாயகனும் மேடையில் இருக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் இந்தியில் பேசினார். அப்போது, "இந்தியா?" எனக் கேட்டுவிட்டு, மேடையை விட்டு இறங்கினார் ரஹ்மான்.

கடந்த 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சு வெளிவந்த மறுநாளே அதுகுறித்து திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி எழுப்ப, 'தமிழ்தான் இணைப்பு மொழி' என அவர் கருத்து கூறினார்.

அதற்கு சில நாட்கள் முன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழுக்கும் அமுதென்றுபேர்!' என்ற பாரதிதாசனின் கவிதையில் வரும் 'தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!' என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் பதிவிட்டிருந்தார்.

 
நேர்மறையான எண்ணங்கள்
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எப்பொழுதும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே சிந்திப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். தனக்கு கிடைத்த தோல்விகள், ஏமாற்றங்களால் அந்த பக்குவம் வந்ததாக கூறுவார்.

"Notes of a Dream: The Authorized Biography of AR Rahman" என்ற தனது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவின்போது, திரைத்துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்காத வரையில் தோல்வியைச் சந்தித்ததாகவும், அப்போதெல்லாம் தனக்குள் தற்கொலை எண்ணம் உருவானதாகவும் பகிர்ந்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4nyln5jkeno

கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!

3 months 2 weeks ago

கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!

 

screenshot28842-down-1704391958.jpg

 

சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. 
அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இளையராஜா பேசுகையில், "எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. புத்தக வெளியிடுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான். 
நான் முதன் முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்தப் படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுகிறது...
 கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு நான் இசை அமைத்தேன். அதனால் முதல் படத்திலே ஆண்டாள் 
எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதெல்லாம் மாதத்தில் 30 நாட்களிலும் எனக்கு வேலை இருக்கும். அப்போது 7 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் 1 கால்ஷீட். இப்போது கால்ஷீட் எல்லாம் கிடையாது. 
இரவு பகலாக வேலை செய்கிறார்கள். 1 பாட்டு மியூசிக் பண்ணுவதற்கு ஆறு மாதம் ஆகிறது. 1 வருஷம் எடுத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள்
 எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு மியூசிக் வரவில்லை...

நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் எல்லாம் இல்லை. நான் இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அது கேள்விக்குறிதான். 
ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு என் நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. 
அதையெல்லாம் சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன்.

நான் சிறுவனாக இருக்கும்போது கச்சேரி நடக்கும்போது, ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டுவார்கள். 
அதைக் கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகிட்டே போனது. 
எனக்கு கிடைக்கும் கைதட்டல் ஜாஸ்தி ஆக, ஜாஸ்தி ஆக... கர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது.

ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்காகவா, இசைக்காகவா இல்லை நான் வாசிக்கிற திறமைக்காகவா என மனசுக்குள் ஒரு கேள்வி. 
அப்புறம் பாட்டுக்கு தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகிறது. அதற்குப் பிறகு என் தலையில் 
இருந்த பாரமெல்லாம் இறங்கிப் போய் விட்டது. நமக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டும் என்னை அதைப் பற்றியே சிந்திக்க வைக்காது. 
தீபாவளி நேரத்தில், மூன்று நாட்களில் 3 படங்களுக்கு நான் பிண்ணனி இசையை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. 
இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. படக்குழுவின் நெருக்கடி அப்படி இருந்தது" எனப் பேசினார்..

https://tamil.oneindia.com/news/chennai/ilayaraja-says-that-i-got-rid-of-head-weight-many-years-ago-571859.html

Checked
Fri, 04/19/2024 - 20:40
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed