![]() |
|
TRT Tamil oli/TTN - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: TRT Tamil oli/TTN (/showthread.php?tid=8074) Pages:
1
2
|
- kuruvikal - 10-01-2003 சிம்பிளைச் சிக்கலாக்கினது ஆர்...உங்களைப் போல அதி திறமைசாலிகள் தான்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 10-01-2003 kuruvikal Wrote:சிம்பிளைச் சிக்கலாக்கினது ஆர்...உங்களைப் போல அதி திறமைசாலிகள் தான்...!சிக்கலாக்கியவர்களைக்கேளுங்கள். எந்தச் சந்தர்ப்பத்திலாவது திறமைசாலி என சொல்லியிருந்தாலாவது என்னைச் சாடலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanthy - 10-01-2003 அஜீவன் , நளாயினி , யாழ் , தாத்தா ஆகியோரது கருத்துக்களில் சொல்லப்பட்டவை சொல்லப்பட வேண்டியவர்களைச் சேர்ந்தால் நன்மையே. இல்லையேல் செவிடன் காதில் ஊதிய.....அதுவாய்த்தானிருக்கும். <span style='font-size:25pt;line-height:100%'>அஜீவன் ! 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளருமாம் \" ஊடகங்களும் அதைத்தான் பின்பற்றுகிறதோ என்னவோ.</span> முகம் தெரியாதவர்களுக்காக மாளிகைகளும் கட்டிக்கொடுப்போம் - ஆனால் முன்னிற்கும் எம் பிள்ளையின் முகத்தையே அறியோம். சின்னத்திரைகளின் தொடர்களை லட்சங்கள் கொடுத்தும் வாங்குவோம் இலட்சியங்களை நெஞ்சில் சுமந்தபடி சந்தர்ப்பம் கேட்டுவரும் சந்ததியை சந்திக்கவே மாட்டோம். ஏனெனில் நாங்கள் இலட்சியவாதிகள். அண்ணனின் தம்பியாய் , ஆசானின் மாணாக்கனாய் மாணாக்கனின் மாணவியாய் எங்காச்சும் ஒரு தொடர்பிருந்தால் நாங்களே ராசாக்கள். ஒளி , ஒலிவாங்கியெல்லாம் எம்வசமே போங்கள். உண்மையாய் எங்களை நேசித்தோரெல்லாம் து}சுதான் போங்கள் - அவர்கள் தெரிவதேயில்லை எமக்கெல்லாம். குழிகள் பறிக்கும் குறியுடனே திரிகின்ற மானிடர்கள் உள்ளவரை கிளிகளெல்லாம் கழுகுகளே....! நாங்களெல்லாம் சினிமாவும் பார்ப்பதில்லை சின்னத்திரைத் தொடர்களும் பார்ப்பதில்லை நன்றாகவே மற்றோரை நக்கல் பண்ணுவோம். அம்பிகை , அலைகள் இல்லாவிட்டால் 'அடச்சனியன்கள் ஏனாம் போடேல்ல" இப்படியும் திட்டுவோம். இதுதான் இன்றைய மீடியா வால்பிடித்து முகம்காட்டு இல்லையேல் வாயைஅடக்கி மௌனியாய் இரு. வால்பிடிக்கத் தெரியாத முட்டாள்கள் நாங்கள் அதுதான் வசமாக நிறைய இருந்தும் சாதிக்க முடியாமல் புதைகிறோம். - shanthy - 10-01-2003 'களங்கள் தாருங்கள் - நாம் வளமோடுள்ளோம்" தளங்களை வசமாக்கத் தலைகுனிந்து தன்மானமிழந்து களம்தேடக் கலையொன்றும் கத்தரிக்காய் வியாபாரமல்ல....! கலை ! உணர்வுகளின் பிழியலது , ஒரு காலத்தின் பிரசவமது, பல ஆன்மங்களின் அழுகையது, சில ஆணவங்களின் அக்கினியது, நில்லென நிறுத்திச் சொல்லெனச் சொல்லும் இயந்திரமல்ல அது. எண்ணியதை எழுதி - அதைநற் கலைப்படைப்பாக்கி கண்ணுளோர் முன் கொடுக்கும் கலசமது - அதுவே கலையின் கலைஞரின் கடமை. திறமைகளுக்கெங்கே இன்று சந்தர்ப்பம் ? தரமான கலைக்கெங்கே இன்று கௌரவம் ? காசிருந்தால் நீயும் கலைஞன் நானும் கலைஞன். இல்லது இன்னும் இலகுவான வழி குழிபறித்துக் குலப்பெருமை பேசிடின் கலையாய் , சிறந்த கலைஞராய் இந்நு}ற்றாண்டின் இலக்கிய ஆசானாய் எல்லோராலும் வணங்கப்படும் வாரிதிகளாகலாம்...... - veera - 10-01-2003 இதில் எது நியாயம் எது அநியாயம் என்று அவர்களுக்கு ஒரு போதும் புரியப்போவதில்லை. சூழ்நிலைதான் அப்படியவர்களை திசைமாற்றியிருந்தது என்றால் இப்போதும் மாறியதாக இல்லை. உதாரணத்திற்கு ஒரு உண்மைச் சம்பவம். எனது நண்பர் ஒருவர் லண்டனிலிருந்து இயங்கும் தொலைக்காட்சியொன்றில் பணி புரிகிறார்.இந்தத் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் 2000ம் ஆண்டு அதனுள்ளே மிகச்சில கலைஞர்களும் கலையென்றால் என்னவென்று அறியாத பலரும் இருந்தனர்.அப்போது அவரிடம் நான் கேட்டேன் "நீங்கள் தொலைக்காட்சி யொன்றை நடாத்துகிறீர்கள்..ஆளே இல்லாமல் எப்படி இது என்று" அதற்கு அவர் அன்று கூறிய பதில் : "சிரமப் படுவானேன் பேசாமல் downlink செய்து ஒளிபரப்பலாம் என்றார். இன்றைய நிலை தலைகீழாக மாறிப்போயிருக்கின்றது.இப்போது ஒரு தடவை இது பற்றிக் கேட்டதற்கு "இந்தப் பக்கம் இல்லையென்றால் இன்னுமொரு பக்கமிருக்கு. இதெல்லாம் பெரிய விசயமா" என்கின்றார். ஆக மொத்தத்தில் <b>கலையுணர்வற்ற நிர்வாகம் ஒரு ஊடகத்தை இயக்குமென்றால் அங்கு கலைஞர்களுக்கு இடமில்லை.</b> இன்றைய நிலையில் ஐரோப்பிய ஊடகங்கள் பலதின் நிர்வாகங்களுக்கும் இதே நிலைதான். - veera - 10-01-2003 Quote:திறமைகளுக்கெங்கே இன்று சந்தர்ப்பம் ? யதார்த்தத்தின் வடிவங்கள்! - AJeevan - 10-01-2003 உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமல்ல, அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் கூட நமக்கில்லை என்பதுதான் நெஞ்சை நெருடுகிறது. இவர்களோடு அதிகம் பேசினால் நாம் பைத்தியமாகி விடுவோம். எனவே இப் பகுதியில் இறுதியாக ஒன்று சொல்லி இப்பகுதியை விட்டு விடை பெறுகிறேன். <b>சகதிக்குள்.........</b> <img src='http://www.yarl.com/forum/files/s.jpeg' border='0' alt='user posted image'> பத்திரிகைகள் நடத்தப் பட்டன வானோலிகள் வந்த பிறகு - அவை கடைகளில் கட்டுக் கட்டாய் மிஞ்சிப் போயின - காரணம் செய்திதான் உடனுக்குடன் வானோலியில் கேட்கலாமே பத்திரிகைக்கு கதை-கட்டுரை-பிறந்தநாள்-மரண அறிவித்தல் ஆக்கங்கள் கொடுத்தவை மட்டும் 10-15 பத்திரிகைகள் வாங்கினர் -அது தனக்கும் - தன்னைத் தெரிந்தவர்களுக்கும் கொடுக்க - ஏனையவை கட்டக் கட்டாய் -கடைகளில் மிஞ்சிப் போயின வியாபாரிக்கு லாபம்தான் நோக்கம் - அவன் விற்காத பொருளை வீணாக ஏன் வாங்குவான் - இப்போது அவன் வாங்குவதேயில்லை - அவை கடைகளுக்கு வருவதே இல்லை -இன்று அங்கொன்றும் , இங்கொன்றும் - இந்திய தமிழ் சஞ்சிகைகள் மட்டும் -வருவதோ ஒன்று இரண்டு - நாமும் கவலைப் பட்டோம் ஆரம்பத்தில் அதுவும் நின்று போகும் கவலையில்லை இன்டர்நெட்டில் இப்போது எல்லாமே வருகிறதே................ தொலைக்காட்சி வந்தது வானோலிக்கு தொடங்கியது மந்த காலம் கானம் மட்டுமா? (வானேலி) காட்சியும் கானமுமா? (TV) - இல்லை காட்சியும் காணமும் தொலைக்காட்சியின் பலம் வானோலிகளுக்கு சங்கு -சிலர் தாங்கள் மட்டும் பேசிக் கொண்டடிருக்கிறார்கள் உலகமே கேட்கிறதென்று - ஆனால் அவர்கள் வீட்டிலும் TVதான் பார்க்கிறார்கள் இன்று சென்னை தொலைக் காட்சிகள் - நேரடியாக உலகத்தை வலம் வருகிறது - அங்கே வாங்கி ஒலிபரப்பிய கருவாட்டு(பழைய) நிகழ்சிகள் - இன்று துடிக்கும் மீனாக (உடனுக்குடன்) - நம் வீட்டு முற்றத்தில்........................... வந்திருக்கும் டிவீக்களின் - நிகழ்ச்சிகள் இப்போது வாங்குவதில்லை - அது இவர்களுக்கு கருவாடு - வராத டிவீக்களின் நிகழ்ச்சிகள் வாங்கப்படுகின்றன - அதுவும் நாளை நம் முற்றத்துக்கு வரும்[/color] - அப்போதும் செய்தியும் , தொலைபேசி அரட்டையுமா?செய்திக்கும் -அரட்டைக்கும் இன்டர்நெட் இருக்கிறது - அது இல்லாவிட்டால் இவர்களே சும்மாதானே? எல்லாம் சுட்ட செய்திதானே............[/color] நம் குழந்தைகளுக்கு - நம்ம பிரச்சனை புரியாது -அவை இந்த நாட்டு மொழியிலதான் - டிவீ பார்க்குதுகள் - நமக்குதான் அதுவும் புரியல்ல - இப்ப நம்ம நிகழ்ச்சிகளை பார்க்க நம்ம டிவீ வரவேற்பறையில - குழந்கைளுக்காக டிவீ அவரவர் அறைகளில -நாளைக்கு அவர்களது டிவீக்கள் வரவேற்பறையில -நாமும் நம்ம டீவியும் ஒதுக்கப்பட்ட அறைகளில............... நாம் வாழும் நாடுகளில் - என்ன நடக்கிறதென்றே - நமக்குத் தெரியாது - நமது பிரச்சனைகள் என்னவென்று - நமக்கு தெரியாது -இப்படி எத்தனை எத்தனை............. முயற்சியுங்கள்.............. புத்திசாலிகள் விருப்பத்தோடு - யாருக்கும் விலைப்படவில்லை - அவர்கள் அந்தந்த சமூங்களாலே அங்கிகரிக்கப்படாததாலே விலைப்பட்டார்கள் -அவர்கள் அங்கிகரிக்கப்பட்டிருந்தால் மேலை தேசங்களுக்கு - தம்மை அர்ப்பணித்திருக்க மாட்டார்கள் இப்போதே சிந்தித்தால் கொஞ்சமாவது தேறலாம். இல்லாவிடில் நாமம் நிச்சயம்.........கோவிந்தாதான்................ உண்மை வெல்லும் பேசுவதால் பிரயோசனமில்லை,பேசுவதை விட்டு விட்டு செயல் படும் வழியை பார்ப்போம்.............. தாழ்மையுடன் அஜீவன் - Mullai - 10-01-2003 [quote]AJeevan[/color] .............. இப்ப நம்ம நிகழ்ச்சிகளை பார்க்க நம்ம டிவீ வரவேற்பறையில - குழந்கைளுக்காக டிவீ அவரவர் அறைகளில -நாளைக்கு அவர்களது டிவீக்கள் வரவேற்பறையில -நாமும் நம்ம டீவியும் ஒதுக்கப்பட்ட அறைகளில............... - yarl - 10-02-2003 ஒரு பராசக்தி வந்திராவிட்டால் சிவாஜி என்ன காணாமலா போயிருப்பார்? - Mullai - 10-03-2003 [quote]யாழ்/yarl[/color] <img src='http://www.sivaji-prabhu.com/evr.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/naka.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/sivmgr.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/sivraja.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/cmanna.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/sivgro.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/nehru.gif' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'>உண்மைதான் யாழ், இதை அறிஞர் அண்ணாவும் ஒருதடவை சொல்லியிருந்தார். எவ்வளவோ திறமைகளிலிருந்தும் தங்களை வெளிக்கொணர சிவாஜியும் சரி எம்.ஜி.ஆரும் சரி தங்களது அதீத முயற்சிகளினால்தான் திரையுலகில் பிரகாசித்தார்கள். சிறீதர்கூட எத்தனை நிறுவனங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். பெருவெற்றி பெற்ற அவரது கல்லாணபரிசு படக்கதை ஆரம்பகாலங்களில் திரைப்படத் தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்படவில்லையா? தன்னிடம் வந்து சந்தர்ப்பம் கேட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை, கவிஞர் வாலியை தான் நிராகரித்ததை எம்.எஸ். விஸ்வநாதன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகி;றார். நிராகரிப்புகள் அந்தக் கலைஞர்களை முடக்கிப் போடவில்லையே. அவர்களது முயற்சிகள்தானே அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்தது. சி.என். அண்ணாதுரை, மு.க. கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, செல்வி ஜெயலலிதா இவர்கள் எல்லாருமே திரையுலகம் தந்த முதல்வர்கள்தானே? எவ்வளவோ தோல்விகளை எவ்வளவோ பழிவாங்கல்களை எவ்வளவோ அவமானங்களை இவர்கள் சந்தித்திருக்கிறார்கள். அரசியல் சாயம் பூசிக்கொண்டுதானே தமிழ்த்திரையுலகமே இன்றும் இயங்குகிறது. தென்னிந்தியத் தமிழ்த் திரையுலகில் குத்துவெட்டும், குழிபறிப்பும் நிறையவே இருக்கின்றன. மற்றவரை பின்தள்ளி தான் முன்னுக்குவர தாஜா பண்ணும் வேலைகளும் கூஜா து}க்கும் வேலைகளும் அங்கு தாராளம். ஆக இங்குள்ள ஊடகங்களுக்கு அரசியல் சாயங்களைப் பூசுவதால்; ஆகப் போவது ஒன்றுமில்லை. எங்களிடம் திறமையிருக்கிறது அவர்கள் தேடிவந்தால்............. எங்களுக்கான அங்கீகாரம் தந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்ற நிலைதானே இங்கேயிருக்கிறது?</span> - vaiyapuri - 10-04-2003 Quote:எங்களிடம் திறமையிருக்கிறது அவர்கள் தேடிவந்தால்............. எங்களுக்கான அங்கீகாரம் தந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்ற நிலைதானே இங்கேயிருக்கிறது? விரசமான கருத்துக்களுக்கு மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள்..ஆனால் முரண்பாடுகள் - Mathivathanan - 10-05-2003 <img src='http://www.galttech.com/spot/wallpaper.jpg' border='0' alt='user posted image'> பாருங்கள் தேடுவாரற்று தோட்டத்தில் கிடந்த பூஷணிக்காயை எடுத்துவந்து வீதியின் அருகில் அழகாக அடுக்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். தோட்டத்தையே எந்தவித தடயமுமில்லாமல் அகற்றியுள்ளார்கள். முழுப்பூஷணிக்காய் தேடுவாரற்றுக்கிடக்கு. யாராவது மறைச்சாவது வையுங்கோ.. அழுகி மணக்கும்வரை அல்லது கிடாரங்களும் அரிசியும் தயார்பண்ணுங்கோ.. கொஞ்சமெண்டாலும் மறைக்கலாம். இதனுடன் கூடிய படம் எங்கே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->ஓரு கருத்து எழுதப்பட்டபின் மாற்றம் செய்யப்பட்டால் எப்போது மாற்றம் செய்யப்பட்டதென்ற அறிவிப்பு இருக்கும்.. அதுதான் இல்லையே.. எங்கு போய் யாரிடம் கேட்பது..? :oops: :oops: :oops: - Mathivathanan - 10-05-2003 Mathivathanan Wrote:<img src='http://www.gogalt.com/wallpaper/small/pumpkins.jpg' border='0' alt='user posted image'>கருத்துடன் சேர்ந்த படம் தேடிப்பிடித்துபோட்டுள்ளேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->பி கு.. மேலே போட்டுள்ள வீதியின் அருகில் அழகாக அடுக்கி விற்பனைக்கு வைத்திருக்கும் படம் நாளை இல்லாமலப்போய் வேறொன்று வரலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 10-05-2003 தேடுவாரற்று கிடப்பதை ஏன் மறைப்பான்? மறைத்ததைத்தான் வெளியே கொண்டுவந்து போட்டுள்ளார்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mullai - 10-05-2003
- AJeevan - 10-05-2003 யாழ்/yarl Wrote:தேடுவாரற்று கிடப்பதை ஏன் மறைப்பான்? சிலருக்கு வித்தை காட்டுவதே வழக்கமாகிவிட்டது. வித்தைகளை விட்டு விதைகளை நடுங்கள் - ஏதாவது பலன் கிடைக்கும்............. - AJeevan - 10-06-2003 <img src='http://www.yarl.com/advert/img_banners/martu_ad.gif' border='0' alt='user posted image'> மாற்று திரைப்படம் லண்டனில் காண்பிக்கப் பட்டிருக்கிறது. பார்த்தவர்கள் விமர்சனம் வைத்தால் படைப்பாளிகளுக்கு உற்சாமாக இருக்கும். - AJeevan - 10-06-2003 <img src='http://www.yarl.com/advert/img_banners/oruparvai.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/oru_parvai.jpg' border='0' alt='user posted image'> பாரீஸின் TTN கலையகத்தில் <span style='font-size:25pt;line-height:100%'>ஒரு பார்வை </span>திரைப்படத்தின் இயக்குனர் திரு.பரா அவர்களையும் , ஏனைய கலையுலக உறவுகளையும் சந்தித்த வேளையில் அத் திரைப்படம் பற்றி சிறிது நேரம் அளவளாவினோம். அன்று முழுவதும் உங்களுடன் இருந்ததில் கிடைத்த மகிழ்ச்சி அளப்பரியது. முடிந்தால் அது பற்றிய விபரங்களை எழுத வேண்டுகிறேன். புலம் பெயர் படைப்புகள் வரும் போது அது பற்றிய விபரங்களை வெளியிட முடிந்த வரை முயலுவோம். அவை வெற்றி பெற வாழ்த்துவோம்.........[/size] [size=14]அனைத்து கலைஞர்களின் ஒத்துழைப்பில் கமராவுக்குள் கதையான ஒரு பார்வைக்கு யாழ் இணைய உறவுகளின் பார்வையுடன் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.......... <img src='http://www.yarl.com/forum/files/flowers.gif' border='0' alt='user posted image'> பணிவன்புடன் திரைப்பட மாணவன் அஜீவன் www.ajeevan.com [email protected] - Sarangan - 10-23-2003 சும்மா வள வளவென்று பேசிக்கொண்டு இருக்காமல் உடனேயே உங்கடை கருத்துக்களை நேரடியாக தெரிவியுங்கோ. அதை விட்டுட்டு சும்மா!!! ச்சா.... |