![]() |
|
எங்கோ தொலைந்து போகிறேன்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எங்கோ தொலைந்து போகிறேன்....! (/showthread.php?tid=4345) |
எங்கோ தொலைந்து போகிறேன்....! - tamilini - 05-05-2005 <img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'> <b>கண்ணீர் கண்களுடன் அதிகம் பேசுகிறது..?? காரணம் தெரியாது. வேற்று உலகம் வேறுபட்ட மனிதர்கள். பிடிக்காமல் போனபோது. தெரியாத மாற்றங்கள் இப்போது தெரிகிறது. பாரமான கல் ஒன்றை நெஞ்சம் சுமக்கிறது. புரிகிறது. கண்களை தண்டி கன்னம் கழுவிச்செல்லும் கண்ணீர் துளிகளில் சுகம் இருப்பது தெரிகிறது. இரத்த நாளங்களும் இதயத்துடிப்பும் இயங்குவது பெரிதாய் தெரிகிறது. இவைகள் எனக்கு பாரமாய் தெரிவதால் நின்றுவிட்டால் விடியல் வரும் என்ற எண்ணமும் இடைக்கிடை வந்து போகாமல் இல்லைத்தான். வாழ்க்கைக்கான தேடலுக்காய் இடைவெளியில்லாத ஓட்டம் ஓடி ஓடி களைத்து விட்ட உள்ளம் தான் சொல்கிறது. போதும் இனியென செல்லரித்துப்போனபின்னும் கல்வெட்டுக்களாய் மாறிவிட்ட நினைவுகள். சோகமான ராகம் மீட்டினாலும் எங்கோ சுகமாயும் தெரிகிறது. அந்த தழுவலில் தான். கண்ணீர் பேசுவதும் புரிகிறது. பல ஜென்ம பாவம். என்னைச்சுற்றி ஏனோ.. சிறந்த உள்ளங்கள். என்னால் முடிந்தது. துன்பங்கள் தான் அவர்களிற்கு. ஆறாய் அருவியாய் வத்தாது பெருக்கெடுத்து வரும் அன்பு வெள்ளத்தை நான் அறியாமல் இல்லை.. அதில் மூழ்கிடும் தகுதியும் எனக்கில்லை. ஒன்றாய் இரண்டாய் நினைவுகள் சுமந்த இதயம் புதிசாய் எதையும் ஏற்றிட துணியவில்லை மீண்டும் மீண்டும் துரோகங்கள் வேண்டாம் செதுக்காத கற்சிலையானாலும் ஈரம் என் நெஞ்சில் இருப்பதால் இன்றே தொலைந்து போகிறேன். நினைவுகள் மட்டும். என்னுடன் கூட வர... அதிசய இராகங்கள் மீட்டிடும் வீணையாய் அது மட்டும் போதும் என அதே இதயம் சொல்லிட எங்கோ தொலைந்து போகிறேன்.....!</b> யாவும் கற்பனை.. - Eswar - 05-05-2005 Quote:மீண்டும் மீண்டும் துரோகங்கள் Quote:எங்கோ தொலைந்து போகிறேன்.....!இதுதான் தேவதாசின் நிலையும். ஆனால் இது கோழைத்தனம். தோல்வியே வெற்றியின் அறிகுறி. - kavithan - 05-05-2005 வாழ்த்துக்கள் அக்கா.. கவிதை நன்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Malalai - 05-05-2005 அக்கா அழ வைக்கிறங்க...
- sOliyAn - 05-05-2005 ம்.. நல்ல கவிதை.. என்றாலும் சிலதை தெளிவா சொன்னாதானே எனக்கும் புரியும்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- eelapirean - 05-05-2005 நல்ல கவிதை நன்றி - hari - 05-05-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள் தங்கையே! - KULAKADDAN - 05-05-2005 கவிதை நன்று கற்பனை தொடரட்டும்...................... புலம்பல் வித்தியாசம் - shanmuhi - 05-05-2005 கண்ணீர்கண்களுடன் வடித்த கவிதை.. அருமை. வாழ்த்துக்கள். - tamilini - 05-05-2005 Quote:ம்.. நல்ல கவிதை.. என்றாலும் சிலதை தெளிவா சொன்னாதானே எனக்கும் புரியும்!சிலதை தெளிவாய்ச்சொன்னால்.. கல்லுடன் திரிவியள். அது தான். :wink: கருத்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-05-2005 Quote:இதுதான் தேவதாசின் நிலையும். ஆனால் இது கோழைத்தனம். தோல்வியே வெற்றியின் அறிகுறி.தோல்வி வந்தால் பிரச்சனையே இல்லையே.. :wink: - Eswar - 05-05-2005 தோல்வியும் இல்லை வெற்றியும் இல்லை எண்டா அது என்ன நிலை இடையால? முயற்சியே செய்ய இல்லையா? - shobana - 05-05-2005 இங்க கருத்து எழுதிய யாருக்கும் தெரியாது ஏன் என்ன காரணம் என்று தமிழுக்கு மட்டும் தான் தெரியும் ஏன் தொலைந்து போகிறா என்று.... தமிழ் தொலைந்துபோனாலும் பாதையை மறந்திடாதீங்கோ அப்பத்தான் திரும்ப மீண்டுவரலாம்.... நீங்க மீண்டுவருவீங்க... துரோகம் நிறைந்தது தான் இந்த உலகம்... அதை கண்டு துவளக்கூடாது.. தோல்வி துரோகம் கணடு துவளலாமா?? அது தமிழுக்கே அழகாகுமா??? take it easyyyyyyyy sister ..... - stalin - 05-05-2005 தொலைந்து போய் அப்புறம்---------------------------??? - tamilini - 05-05-2005 Quote:இங்க கருத்து எழுதிய யாருக்கும் தெரியாது ஏன் என்ன காரணம் என்று தமிழுக்கு மட்டும் தான் தெரியும் ஏன் தொலைந்து போகிறா என்று.... தமிழ் தொலைந்துபோனாலும் பாதையை மறந்திடாதீங்கோ அப்பத்தான் திரும்ப மீண்டுவரலாம்.... நீங்க மீண்டுவருவீங்க...ஆகா அந்த பெண்ணின் தனிமையையும்.. வெறுமையையும் பாத்து எழுதினன் சிஸ்.. வெறும் கற்பனை மாத்திரமே.. நீங்க எல்லாம் இருக்கையில.. நமக்கென்ன.. தொலைதல் என்ன நான் சொல்லுறது.. :wink: - tamilini - 05-05-2005 Quote:தொலைந்து போய் அப்புறம்---------------------------???அப்புறம்.. என்ன அப்புறம்.. தொலைந்து போறது தான். :mrgreen: :mrgreen: :mrgreen: - Mathuran - 05-05-2005 எங்கோ தொலைந்தொ போகின்றேன். எங்கோ என்பது எனக்கு நீங்கள் எவரிடத்திலோ இல்லை ஏதோ ஒன்றிடத்திலோ உங்களை தொலத்து விட்டதினை போன்று என்னை சிந்திக்கதூண்டியது. இருந்தும் கவிதையின் ஆழத்தை அறியச் சென்ற பொழுது மனமுடந்த வரிகளாய் புலம்பின. கவிதையும் உட்கருவும் மிக மிக நன்று. அக்காவுக்கு எனது பாராட்டுக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- stalin - 05-05-2005 Mathuran Wrote:எங்கோ தொலைந்தொ போகின்றேன். எங்கோ என்பது எனக்கு நீங்கள் எவரிடத்திலோ இல்லை ஏதோ ஒன்றிடத்திலோ உங்களை தொலத்து விட்டதினை போன்று என்னை சிந்திக்கதூண்டியது. இருந்தும் கவிதையின் ஆழத்தை அறியச் சென்ற பொழுது மனமுடந்த வரிகளாய் புலம்பின. கவிதையும் உட்கருவும் மிக மிக நன்று.உங்க அக்கா மட்டும் இல்லீங்க புலத்தில் ஒட்டாமல் வாழும் எல்லோரும் தொலைந்து போனவர்கள் தான் ---------------நல்லதொரு கவிதை-------------ஸ்ராலின் - tamilini - 05-05-2005 என்ன.. ஒட்டாமல்.. ஸ்ராலின்.?? நன்றி மதுரன் உங்கள் கருத்திற்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-05-2005 அக்கா போரடிக்குது...யாழ் களமே அமைதியைக் கடைப்பிடிச்சிட்டே இருக்கு......என்ன நடந்தது... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
|