Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்?
#1
ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்?
-சங்கரன்-


1980இல் வீறுகொண்டெழுந்த தமிழ் இழைஞர்களின் உணர்ச்சிகளின் பிரவாகம் தமிழ் ஈழத்தை எட்டியது. தமிழீழம் தனியரசு ஒன்றே இலக்கு என்று தமிழ் இளைஞர்கள் பொங்கியதால் தமிழர் போராட்டம் விடுதலையின் சிகரத்தை எட்டியது. ஆனால் பின்னர் பலர் தமது கொள்கையில் தடம் புரண்டு தமிழர் விடுதலைக்கு தடைக்கற்களாகினர். இம் மாற்றுக் குழுக்களின் செயற்பாட்டினால் தமிழரின் விடுதலையும் சுதந்திரமும் காலம் கடந்து நீண்டு செல்கின்றது.

தமிழ் இளைஞர்களின் தலைமையில் ஏற்பட்ட தலைமைத்துவ ஒழுக்கவியல் முரண்பாட்டால் தமிழரின் உரிமைப் போராட்டத்தையும் விடுதலையையும் அதால பாதாளத்துக்குள் தள்ளியது. 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பது போல் தமிழ் இளைஞர்கள் ஐக்கியப்பட்டிருந்தால் தமிழீழம் என்ற தனிநாடு அன்றே உருவாகியிருக்கும்.

சிங்கள் தேசம் தமிழர் உரிமைகளை வழங்க மறுக்கின்றது அதற்கு தமிழரின் பிளவினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதனை ஊதிப்பற்ற வைக்க முனைந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசியவாதம் தமிழர்களின் உரிமைகளை வழங்க விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ பரவாயில்லை தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு பொது எதிரியான சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக போராடியிருந்தால் என்றோ சுதந்திரம் கிடைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள் அனைவரும் தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே போராடப் புறப்பட்டார்கள். கொள்கை வீரன் பிரபாகரன் தலைமையிலான கூட்டம் மட்டும் சுய கௌரவத்துடன் எவர் காலிலும் மண்டியிடாமல் தனித்துவத்துடன் போராடுகிறது. ஆனால் பல கூட்டங்கள் சிங்கள அரசின் இராணுவ அரசியல் வலையில் சிக்குண்டன.

மாற்றுக்குழுக்கள் பொது எதிரியின் காலில் மண்டியிட்டு தமிழரின் தனித்துவமும் தர்மமும் உடைய போராட்டத்தைச் சங்காரம் செய்ய முனைந்தமை தமிழின் வீர மரபுக்கு ஏற்பட்ட களங்கம்.

தேசத்துரோகிகளின் காட்டிக்கொடுப்புக்களினால் தமிழரின் உரிமைப்போராட்டமும் விடுதலையும் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. தேசநலன்ää பொதுநோக்குää மக்கள் நலன் எதுவும் இன்று சுயநலனையும் சுயலாபங்களையும் கருத்தில் கொண்டு பணத்திற்கும் பட்டத்திற்கும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையானவர்களாலேயே தமிழர் விடுதலையின் வேகம் நெருக்கடிகளை சந்தித்து தாமதமாகின்றது.

தமிழின ஒழிப்பையே இலட்சியமாகக் கொண்டு செயற்படும் ஈவிரக்கமற்ற எதிரியுடன் கொஞ்சிக்குலாவி சலுகைகளை கேட்டு அர்த்தமற்ற ஒப்ந்தங்கள் செய்வது தமிழினத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும். சிங்களப் பேரினவாத அரசின் ஆட்சியின் கீழ் தமிழர்கள் நிம்மதியாகவும் சுதந்திரப் பிரஜைகளாகவும் வாழ முடியும் என நினைப்பது முட்டாள் தனமானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்.

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழினத்தை பூண்டோடு அழிப்பதனை நோக்காக கொண்டிருக்கின்றது என்பதனை கடந்த கால கசப்பான அனுபவங்கள் மூலம் உணரலாம். இச்சிங்கள பேரினவாதத்தின் கைப்பொம்மையாக செயல்படும் மாற்றுக் குழுக்கள் தனிமனித வாழ்வுக்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கின்றன. இவர்களின் ஆபத்தானதும் பிற்போக்குத் தனமானதுமான தமிழின விரோதச் செயற்பாட்டில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழினத்துக்காக சுதந்திரம் வேண்டி வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் சொத்தாக தமிழர் சேனை அடக்குமுறையாளருக்கு எதிராக சமர் செய்ய தமிழின விரோதிகள் அடக்குமுறையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவது தமிழனுக்கு ஏற்பட்ட சாபக்கேடாகும்.

உமாமகேஸ்வரன்ää ராகவன்ää மாத்தையாää கருணா என ஒரு கூட்டம் அதிலிருந்து வரதராஜப் பெருமாள் குழுää டக்ளஸ் தேவானந்தா குழுää சித்தார்த்தன் குழுää நுPசுடுகுஇ ராசிக் குழுää புளட் மோகன் குழுää ரெலோ வரதன் குழு போன்ற அரச படையின் தமிழ் ஒத்துழைப்பாளர்களினால் தமிழரின் உரிமைப்போராட்டம் பின்நோக்கி தள்ளப்படுகின்றது. புலிப்படையுடன் கரம் கோர்த்து அனைவரும் ஒன்றினைந்து போராடி இருந்தால் தமிழர் சேனைக்கு சிங்கள பேரினவாத படைகள் கதிகலங்கி புறமுதுகு காட்டி ஓடியிருக்கும்.

தமிழரின் சுதந்திரத்தினையும் விடுதலையினையும் நாசம் செய்யும் தமிழ் தேச விரோத குழுவினர் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் தமிழினத்தின் உரிமைகளை சங்காரம் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் சித்தார்த்தனின் கருத்தியலில் சிங்கள பேரினவாத அரசுடன் பேரம் பேசும் வல்லமை படைத்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதனை ஏற்றுக் கொண்டிருப்பது தெரிகிறது. பேச்சு வார்த்தை மேசையில் தம்மை விட புலிகளினால் தான் தமிழ் மக்களுக்கு அதிகூடிய உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதனையும் ஒப்புக் கொண்டிருக்கின்றார். தமிழர்களுக்கு அதிகூடிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் ஆற்றல் புலிகளைத் தவிர வேறு எந்த குழுவுக்கும் கிடையாது என்பது சித்தார்த்தனின் காலம் கடந்த ஞானம் பிறந்த தத்துவமாகும்.

மாற்றுக் குழுக்களை சிங்கள அரசு தனது தேவைகளுக்கு பயன்படுத்தும் தனது தேவைகள் முடிய தூக்கி எறிந்து விடும். இதுவே இன்று புளட் மோகனுக்கும்ää கருணா குழுவினருக்கும் நடந்தது. தமிழரின் ஆயுதக்குழுக்கள் கட்சிகள் இயக்கங்களாக பிரிந்தது மட்டுமன்றி இனம்ää சமயம்ää சாதிää வர்க்கம்ää பிரதேசவாதம் போன்ற பல்வேறு காரணங்களாலும் பிளவுண்டு போயுள்ளன. தமிழர்கள் அர்ப்பத்தனமான பிற்போக்கு மூட நம்பிக்கைகளில் சிந்தித்தே தமக்குள் தாம் முரண்படுவதை விடுத்து பொது எதிரிக்கு எதிராக போராட வேண்டும்.

தமிழர் தேசியம் பலம் பெற வேண்டும் தமிழர் தேசியத்திற்கு உறுதியான தலைவன் இருக்கிறான் தெளிவான தலைமை இருக்கிறது. தமிழரின் மூலதனமான விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியத்தின் சின்னமாக பரிணாம வளர்ச்சி பெற்று அத்துடன் தமிழர் சேனை மாபெரும் சக்தியாக மாண்புடன் இருக்கின்றது. புலிகளால் தமிழர் தன்னாட்சியினை நிறுவ முடியும் ஆனால் அரச படைகள் ஒத்துழைப்பாளர்களினால் பேரினவாதத்தின் பொம்மை அரசையே நிறுவ முடியும்.

சிறிலங்காவின் அரசியல் இராணுவ நுட்பங்களினால் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் பின் நோக்கி சென்றதை விட தமிழர்கள் தந்தை நாடு எனவும் தாய் நாடு எனவும் வணங்கிய இந்தியாவால் தமிழர் விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்ட வீதம் அதிகம். இந்திய அரசே தமிழர் சேனையின் ஒற்றுமையை குழப்புவதில் பெரும் வெற்றி கண்டது. தமிழினப்போர் வீரர்களை பிளவு படுத்தி பல ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டது. இந்தியாவின் சதிகார நடவடிக்கையின் பலனாக தமிழர் சேனை தனக்குள் பிளவுண்டு போனதினால் தமிழர் பலம் சிதறுன்டு போனது.

அரசியல் கட்சிகள் விடையத்திலும் சரி ஆயுத இயக்கங்கள் குழுக்கள் விடையத்திலும் சரி தமிழர் ஒற்றுமையின் பலத்தை சிதைக்கும் நரி வேலையிலேயே இந்தியா ஈடுபட்டுள்ளது. அண்மையில் தமிழர் கூட்டமைப்பு கூட்டணி தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்தியா றோவிடம் பெருந்தெகையான பணத்தினை தேர்தல் காலத்தில் பெற்றதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

தமிழ் மிதவாத கட்சிகளையும் சரி தீவிரவாத இயக்கங்களையும் சரி தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன. இதில் பிரபாகரன் மட்டும் சுயத்தடன் இருக்கின்றார் ஏனையவாகள் சுயம் இழந்து பொம்மைகளாகி விட்டனர். தமிழ் தீவிரவாத இயக்கங்களில் இருந்தவர்கள் சுயமாக இயங்க முடியாததினால் ஜனநாயக அரசியலில் மிதவாதம் என்று கூறிக்கொண்டு சிறிலங்கா அரச படையின் துணைப்படையாக இயங்குவது தமிழர்களுக்கு தமிழர் செய்யும் சகித்துக் கொள்ள முடியாத நம்பிக்கை துரோகமாகும்.

இவ் அரச படை ஒத்துழைப்பாளர்களினால் தமிழர்களுக்கு குறுகிய காலத்திற்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க முடியுமே தவிர நீண்டகாலப் பார்வையில் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அதனை பேணிப்பாதுகாக்கவோ முடியாது. தமிழினத்தின் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் கொடும் செயற்பாட்டாளர்கள் இனியாவது மனம் திருந்தி துரோகச் செயற்பாட்டுக்கு முடிவு கட்டி விட்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும்.

தமிழர்கள் தம் உரிமைகளை பிரபாகரன் வாழும் காலத்தில் பெற்று விடவேண்டும் இல்லையேல் தமிழர் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவே மாறும் தடம் புரளாத நிலை குலையாத தலைவன் பிரபாகரனாலேயே தமிழரின் ஐக்கியத்தை பேண முடியுமே தவிர வேறு எந்தத் தலைவனாலும் இதற்கு மேல் தமிழ் இனத்தை ஐக்கியப்படுத்த முடியாது. எண்ணற்ற தியாககங்கள் புரிந்து எத்தனையோ உயிர் பலி கொடுத்து இத்தனை ஆண்டுகளாக கண்ணீரும் இரத்தமும் வியர்வையும் சிந்தி கட்டி எழுப்பிய சுதந்திர விடுதலைப் போராட்டத்தை ஆபத்தான சுழலுக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழின விரோதிகள் விடையத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காக்கை வன்னியனாகää எட்டப்பனாக. தமிழின விரோதிகளாக செயற்படும் காட்டிக் கொடுப்பாளர்கள் தமது காட்டிக்கொடுப்பு துரோகச் செயலுக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம். இது தங்கள் உயிர்களை பாதுகாப்பதுடன் தமிழர் விடுதலையினையும் சுதந்திரத்தினையும் விரைவு படுத்தும்.
நன்றி.தமிழ்நாதம்
Reply
#2
நன்றி
Reply
#3
அருமையான கட்டுரை. நன்றி
Reply
#4
யதார்த்தத்தை சொல்லியிருக்கிறார்..
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#5
இன்னும் திருந்தவில்லையே,இப்போவும் எத்தனை சதிகள்.
பாருங்கள் ல்ண்டன் விவேகானந்தனை.

ஒன்றுபிரித்தானியாவீல் நடைபெற்றது ம் புதிதல்ல. யாராக இருந்தாலும் கணக்கு வழக்கில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்...தாங்கள் பணக்காரனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக இருந்தால் போராடும் அமைப்பு கூட தங்களுக்கு கீழ் தான் என்று நினைப்பது ,விடுதலைப்புலிகளை பொறுத்த மட்டில் சரிவராது என்பது நிருபணமாகி விட்டது.
Reply
#6
<!--QuoteBegin-gururaja+-->QUOTE(gururaja)<!--QuoteEBegin-->ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்?
-சங்கரன்-
 
 
1980இல் வீறுகொண்டெழுந்த தமிழ் இழைஞர்களின் உணர்ச்சிகளின் பிரவாகம் தமிழ் ஈழத்தை எட்டியது. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதன்முதலில் ஈழம் என்ற தனி நாடே தமிழருக்கு தன்னாட்சியுடைய வாழ்வை தரும் என்ற கொள்கையை முன்வைத்தவர் \"அடங்காத்தமிழன்\" சுந்தரலிங்கம். தனது பாராளுமன்ற அங்கத்துவத்தை துறந்து தனிநாட்டு கொள்கையின் அடிப்படையில் 1950 - 60 வரையிலான காலப்பகுதியில் மக்கள் முடிவைக் கேட்டு போட்டியிட்ட சுந்தரலிங்கம் மாகாணசுயாட்சி கோரிக்கையுடன் போட்டியிட்ட தமிழரசு கட்சியிடம் தோல்வியடைந்து பாராளுமன்ற அரசியலை கைவிட்டார். பிரித்தானியாவில் பல்கலைக்கழக ஆசிரியராக இருந்த போது பிரித்தானிய மகாராணிக்கு கணிதம் கற்று கொடுத்தவர் சுந்தரலிங்கம். 1958 கலவரத்தில் தமிழர்களை கொல்ல லொறிகளில் வவுனியா வந்த சிங்களவர்ளை தான் பாராளுமன்றத்தில் \"காடெல்லாம் சுடுவோம்\" என்று சூழுரைத்தபடியே இளைஞர்களை பயிற்றுவித்து சுட்டு விரட்டியவர். இவரது காட்டு காணிகளே பின்னர் காந்திய நிறுவனத்தின் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இடங்களாக அமைந்தன.

<!--QuoteBegin-gururaja+-->QUOTE(gururaja)<!--QuoteEBegin--> தமிழீழம் தனியரசு ஒன்றே இலக்கு என்று தமிழ் இளைஞர்கள் பொங்கியதால் தமிழர் போராட்டம் விடுதலையின் சிகரத்தை எட்டியது. ஆனால் பின்னர் பலர் தமது கொள்கையில் தடம் புரண்டு தமிழர் விடுதலைக்கு தடைக்கற்களாகினர். இம் மாற்றுக் குழுக்களின் செயற்பாட்டினால் தமிழரின் விடுதலையும் சுதந்திரமும் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. தமிழ் இளைஞர்களின் தலைமையில் ஏற்பட்ட தலைமைத்துவ ஒழுக்கவியல் முரண்பாட்டால் தமிழரின் உரிமைப் போராட்டத்தையும் விடுதலையையும் அதால பாதாளத்துக்குள் தள்ளியது. 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு\" என்பது போல் தமிழ் இளைஞர்கள் ஐக்கியப்பட்டிருந்தால் தமிழீழம் என்ற தனிநாடு அன்றே உருவாகியிருக்கும்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் பின்ணணியில் பலமான புவிசார் அரசியல் அமைந்திருக்கிறது. சிவகுமாரன் போன்றவர்கள் தன்னிச்சையாக ஆயுதம் ஏந்தியது ஒரு புறம் இருக்க, முதலாவது இயக்கமாக உருவான ரெலோ கடத்தலில் ஈடுபட்வர்களை திரட்டி இந்திய புலனாய்வு பிரிவு தமது நோக்கங்களுக்காக உருவாக்கிய அவர்களது இராணுவத்தின் ஒரு இரகசிய பிரிவான ஐந்தாம் படையாகவே அமைந்திருந்தது. ஏனைய பல இயக்கங்களும் தமிழர்விடுதலைக் கூட்டணியும் கூட இந்திய புலனாய்வு பிரிவின் தேவைகளுக்கே அறிந்தும் அறியாமலும் பயன்பட்டனர். விடுதலைப்புலிகள் மட்டுமே குறிப்பிட்ட ஒருவரின் (தலைவர் பிரபாகரனின்) மிகவும் அவதானமான எவரையும் நம்பாத போக்கினால் இந்திய புலனாய்வுதுறையால் பயன்படுத்தப்பட முடியாதவர்களாக அமைந்தனர்.

இந்திய புலனாய்வு பிரிவு காடையர்களையும், கூலிக்கு கொலை செய்பவர்களையும் திரட்டி எல்லாமாக 47 "விடுதலை இயக்கங்களை" உருவாக்கி, ஆயுதங்களும் கொடுத்து அனுப்பி வைத்தது. இவைகளை முடிந்தவரை அழிப்பதை தவிர விடுதலைப்புலிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை. இதிலே ஐக்கியம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
i
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)