Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியாரின் நினைவு தினம் - புரட்டாதி 11
#1
<img src='http://www.tamilnation.org/images/literature/bharathiportarit.jpg' border='0' alt='user posted image'>

<b>பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே
நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே </b>



[size=18]செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான தமிழ்க் கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி!


<img src='http://www.tamilnation.org/images/literature/barathiyar.jpg' border='0' alt='user posted image'>
<b>Bharathy and his wife Sellamaal</b>

<b>பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.

'தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. [b]தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.</b>

ஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ!

"தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய்.

இவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்.

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்"

என்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.

'தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்"

தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.

ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்.! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! பிராமணியத்தி கொடுமை கொடி கட்டிப் பறந்த KஆஆளாMத்Hஊ. சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி!

அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர்.


பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு 'மனிதனுக்கு மரணமில்லை."

'காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை.! பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும், அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


வாழ்க நீ எம்மான்! இவ் வையத்தில் தமிழைப் போன்று;
Reply
#2
preethi Wrote:பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது.

<span style='color:blue'><i>பிரீத்தி,

பாரதியார் யானையால் இறக்கவில்லை என்பதை வலியுறுத்தும் ஒரு பதிவை மாலனின் வலையில் படித்தேன். அதை கீழே இணைக்கின்றேன்.</i>


[size=18]மனிதனுக்கு மரணமில்லை</span>

மகாகவி பாரதிக்கு யானையால் முடிவு ஏற்பட்டதாக ஒரு கருத்து பலகாலமாக நிலவி வருகிறது.ஆனால் அது உண்மை அல்ல. யானைச் சம்பவம் நடந்த்து 1921 ஜூனில். அதன் பின் செப்டம்பர் வரை அவர் உயிரோடு இருந்தார். ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சுதேசமித்ரனில் வேலைக்கும் போனார். வெளியூர் பயணங்கள் செய்தார். (இதைக் குறித்து துளசியின் பதிவில் இட்ட பின்னூட்டத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்)

உண்மையில் மகாகவியின் முடிவு எப்படி ஏற்பட்டது?

"1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு (டயரியா) ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது வயிற்றுக் கடுப்பாக (டிசன்ட்ரி) மாறியது. முதல் தேதியிலிருந்து லீவில் இருந்த பாரதி எப்போது வேலைக்க்குத் திரும்புவார் என்றறிய ஒரு சக ஊழியர் வந்து விசாரித்தார்.சரியாக செப்டம்பர் மாதம் 12ம் தேதி, திங்களன்று வேலைக்குத் திரும்பிவிடுவ்தாக பாரதி சொல்லியனுப்பினார். அன்றுதான் அவரது பூத உடல் எரிகாடு சென்றது.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காகக் செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ்.வே.சு ஐயர், நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரை பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். " பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

பாரதிக்கு சிகிச்சை அளித்தவர் டி.ஜானகிராம் என்ற ஹோமியோபதி வைத்தியர்.அவர் ஆந்திரக் கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசத்தின் சகோதரர். அவர் பாரதியை அணுகி, "உங்களுக்கு என்ன செய்கிறது?" என்று கேட்டதும் சீறினார்? "யார் உங்களை இங்கே அழைத்தது? எனக்கு உடம்பு சரியில்லை என்று யார் சொன்னது? எனக்கொன்றும் இல்லை" என்று கோபப்பட்டார்.

பாரதியின் கடைசி சில மணி நேரங்கள் பற்றி அவரது மகள் சகுந்தலா சொல்கிறார்:

" அப்பாவிற்கு மருந்து நீ கொடுத்தால் ஒரு வேளை கோபிக்காமல் சாப்பிடுவார் என்று என் தாயார் மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாம் என்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ, என் கையில் உள்ள கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்தார்." நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி" என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார்.எனக்கு அவரை மறுபடி இமசை பண்ண மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கி விட்டேன் போலும்"

பாரதியின் உடல்நிலையை முன்னிட்டு அவரது நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், லட்சுமண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று முடிவு செய்தார்கள். நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்:
"அன்றிரவு பாரதி, தமது நண்பர்களிடம், " அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லாகான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தார்.1914-15 மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டீஷ் அவர் மீது கருவிக் கொண்டிருந்தார்கள். முன்னிரவில் பெரும்பாலும் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால சொன்ன இந்த வார்த்தைகளே அவரது கடைசி வார்த்தைகளாகும்" என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.

பாரதி அமரரான நேரம், சரியாக இரவு ஒரு 1:30 மணி.

பாரதியின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வக்கீல் துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், என்.திருமலாசாரியார், குவளைக் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 100 பவுண்டிற்கும் (45 கிலோ) குறைவாக இருந்த பாரதியின் உடலை குவளைக் கிருஷணமாச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியோர் காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பாரதிக்கு மகன் இல்லாததால் இறுதிச் சடங்குகளை யார் செய்வது என்ற பிரசினை எழுந்தது. நீலகண்ட பிரம்மசாரி அவருக்குக் கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள். உடனே அவர், " என்ன நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிக் கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்?" என்று மறுத்து விட்டார்.

முடிவில் பாரதியின் தூரத்து உறவின்ரான ஹரிஹர சர்மாதான் அவருக்குக் கொள்ளி வைத்தார்.

(நன்றி: ரா.அ.பத்மநாபனின் சித்ரபாரதி)


*
பாரதியின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது.பத்து நாட்களாக வயிற்றுக் கடுப்பு இருந்தும் ஏன் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை? அவருக்கு புதுவையில் இருந்த போது கஞ்சா பழக்கம் ஏற்பட்டது என்று தெரிகிறது. அது திடீரென்று நிறுத்தப்பட்டு withdrawal sympatoms ஏற்பட்டிருக்குமோ? அல்லது அந்தப் பழக்கம் அவரது உடல் நலத்தைப் பாதித்திருக்குமோ? " அவர்து தேகம் மெலிந்து போய் பழைய பாரதியின் சாயல் போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து திரும்பி வந்தார்" என்கிறது மித்ரன் தலையங்கம்.
(செப்டம்பர் 12ம் தேதி சுதேசமித்ரன் செய்தியும் வெளியிட்டு, ஓர் துணைத் தலையங்கமும் எழுதியது. 'அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி மதியம் இரண்டு மணியோடு வேலையை நிறுத்தப்படுவதால் ஏகபட்ட சமாசாரங்கள் இன்று மித்ரனில் பிரசுரமாகமாட்டா' என்ற ஓர் குறிப்பும் தலையங்கத்தில் காணப்படுகிறது.)

அவர் ஏன் மருந்து உட்கொள்ள மறுத்தார்? ஏதேனும் ஓர் காரணத்தால் மனச் சோர்வு, விரக்தி ஏற்பட்டிருந்திருக்குமோ? 'நிலச் சுமையென' வாழ்கிறோமோ என்று எண்ணியிருந்திருப்பாரோ? குடும்பத்தினர் மீது கோப்மோ? பணியிடத்தில் வருத்தம் இருந்த்தாகத் தெரியவில்லை. அவர்கள் எப்போது இவர் வேலைக்குத் திரும்புவார் என கேட்டனுப்புவதும், இவர் கட்டுரை ஒன்று எழுத வேண்டியிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லுவதும் இதைக் காட்டுகிறது. பாரதியின் கடைசிகால எழுத்துக்கள் ஆட்சியைப் பற்றிய விமர்சனமாக இல்லாமல், சமூக விமர்சனமாகவும், ஆன்மீக விசாரமுமாக இருக்கிறது. கடலூர் சிறையிலிருந்து வெளிவரும் போது எழுதிக் கொடுத்த் உறுதிமொழி அவர் கையைக் கட்டிப் போட்டிருக்கலாம். அத்னால் மனமொடிந்து போயிருந்திருக்கலாம். ஓர் எழுத்தாளனுக்கு எழுதுவதைத் தடை செய்வதைப் போல ஓர் தண்டனை இல்லை.

1921ம் ஆண்டு அவர் கருங்கல்பாளையத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுதான் கடைசிச் சொற்பொழிவு. அதன் தலைப்பு: மனிதனுக்கு மரணமில்லை.

யாமறிந்த மனிதரிலே பாரதியைப் போல யாங்கணுமே கண்டதில்லை. இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
<b>மதன்,</b>

உங்களுடைய இணைப்புக்கு நன்றி. இதிலிருந்து தெரிகிறது, பாரதியாரின் வரலாற்றைக் கூட யாரோ திரித்து இருட்டடிப்புச் செய்து விட்டார்கள் என்பது. பாரதியைப் போன்று உலகத் தமிழர்களை நேசித்த ஒரு இந்தியனும் கிடையாது. பாரதியார் தான் <b>" விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா"</b> என்று உலகிலுள்ள பல தீவுகளிலும், கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் துன்பப்படும் தமிழர்களையெண்ணி விதியை நொந்து கொண்டவர்.

இன்று பலர் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் தமிழர் என்ற முறையில் ஒன்று சேர்வதை விரும்பாதவர்கள், ஆனால் ஈழத்தமிழர்களையும் தன்னுடைய சகோதரர்களாக எண்ணி <b>" சிங்கள்ம், புட்பகம், சாவகமாகிய தீவு பலவினும் அங்கு தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் கண்டு சால்புறக் கண்டவர் தாய் நாடு" </b>என்று பாடினார்.

பாரதியார் யானை முட்டி இறந்தார் என்று பலர் சொன்னாலும், பாரதியாரின் பார்ப்பன எதிர்ப்பாலும், சாதிக்கொடுமையை எதிர்த்தாலும், பார்ப்பனர்கள் தமிழர்களுக்குச் செய்யும் கொடுமையைக் கண்டு மனம் தாளாமல், தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் ஒரு பார்ப்பானல்ல, நான் ஒரு தமிழன் என்று கூறியது மட்டுமல்லாமல், தன்னுடைய பூணூலை ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவனுக்கணிவித்து, இவனும் பார்ப்பான் என்று சொன்னதால், ஆத்திரம் கொண்ட திருவல்லிக்கேணிப் பார்ப்பான்கள் அவரை அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றி வீடில்லாமல் அலைய விட்டார்கள்.

உண்மையிலேயே பாரதியாரை யானை முட்டவில்லை, அவர் மேல் ஆத்திரம் கொண்ட திருவல்லிக்கேணிப் பார்ப்பான்கள் தான், நலிந்து, மெலிந்து பஞ்சாய் இருந்த பாரதியாரை யானை மேல் தள்ளி விட்டார்கள் என்று கூட படித்த ஞாபகம். யார் செய்தார்களோ தமிழ் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞனை இளமையில் இழந்து விட்டது.

மகாகவி பாரதியின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
Reply
#4
உண்மையான மனிதநேயம் மிக்க மனிதனையும். உறுதியுள்ள தமிழனையும் இந்நாளில் நினைந்துகொள்வதில் நானும் மகிழ்ந்து பெருமையடைகின்றேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
<b>பாரதியின் தேசபக்திப் பாடல்

............

[b]Åó§¾ Á¡¾Ã ¦Áý§À¡õ - ±í¸û
Á¡¿¢Äò ¾¡¨Â ŽíÌÐ ¦Áý§À¡õ.</b><b> (Åó§¾)</b>

....................

<b>ƒ¡¾¢ Á¾í¸¨Çô À¡§Ã¡õ - ¯Â÷
ƒýÁÁ¢ò §¾ºò¾¢ ¦Äö¾¢É á¢ý
§Å¾¢Â Ã¡Â¢Û ¦Á¡ý§È - «ýÈ¢
§ÅÚ ÌÄò¾¢É Ã¡Â¢Û ¦Á¡ý§È

[b]®Éô À¨ÈÂ÷¸ §ÇÛõ - «Å÷
±õÓ¼ý Å¡úó¾¢í ¸¢ÕôÀÅ Ãý§È¡?
º£Éò¾ áöŢΠš§Ã¡? - À¢È
§¾ºò¾÷ §À¡üÀÄ ¾£í¸¢¨Æô À¡§Ã¡? (Åó§¾)

¬Â¢Ã ÓñÊíÌ ƒ¡¾¢ - ±É¢ø
«ýÉ¢Â÷ ÅóÐ Ò¸¦ÄýÉ ¿£¾¢? - µ÷
¾¡Â¢ý Å¢üÈ¢ü À¢È󧾡÷ - ¾õÓð
ºñ¨¼ ¦ºö¾¡Öõ º§¸¡¾Ã Ãý§È¡? (Åó§¾)

´ýÚÀ𠼡ÖñÎ Å¡ú§Å - ¿õÁ¢ø
´üÚ¨Á ¿£í¸¢ ĨÉÅ÷ìÌõ ¾¡ú§Å
¿ýȢР§¾÷¿¾¢¼ø §ÅñÎõ - இó¾
»¡ÉõÅó ¾¡üÀ¢ý ¿Á즸Р§ÅñÎõ? (Åó§¾)

±ôÀ¾õ Å¡öò¾¢Î §ÁÛõ - ¿õÁ¢ø
¡Å÷ìÌ Áó¾ ¿¢¨Ä¦À¡Ð Å¡Ìõ
ÓôÀÐ §¸¡ÊÔõ Å¡ú§Å¡õ - ţƢø
ÓôÀÐ §¸¡Ê ÓبÁÔõ Å£ú§Å¡õ. (Åó§¾)

ÒøÄÊ ¨Áò¦¾¡Æ¢ø §À½¢ô - ÀñÎ
§À¡Â¢É ¿¡ð¸Ùì ¸¢É¢ÁÉõ ¿¡½¢ò
¦¾¡ø¨Ä ¢¸ú¸û ¾£Ã - இó¾ò
¦¾¡ñÎ ¿¢¨Ä¨Á¨Âò Ð'¦ÅýÚ ¾ûÇ¢ (Åó§¾)
</b>

மனிதத்தில் பிரிவுகளுக்கு பாரதியை துனைக்களைக்கும் மனிதனுக்காக....
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#6
பாரதியின் மரணம் என்றும் மனதுக்குசுமையானது ஆயினும் அவன் கவிதையில் இறவாது வாழ்வான்.
<img src='http://img354.imageshack.us/img354/4566/barathi4qk.png' border='0' alt='user posted image'><img src='http://img399.imageshack.us/img399/7455/barathi12jp.png' border='0' alt='user posted image'>
.

.
Reply
#7
பார தீ


Reply
#8
பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்

மலர்:
வண்டு தேன் உண்ண வரில் இதழ் திறவேன்!

காந்தம்:
இரும்பெனை அணுகினால் யான் அதைத் தீண்டேன்

இயற்கைத் தெய்வம்:
மலரிலே வைத்ததேன் மலர்க்குரித் தன்று;
மலரிலே வைத்ததேன் வண்டினுக் குரியது!

இரும்பினை அணுகா திருப்பது காணின்
காந்தம் அன்று கருங்கல் அஃதே!

தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;

துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.

நன்றி ராணி 30/01/1994 இதழ்.
"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.
.

.
Reply
#9
பாரதியின் விடுபட்ட மேலும் ஒரு கவிதை

சத்தியப் போர்

பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப்
பாரினில் ஈடழிதல்
தொந்தமில் லாத சுக - வாழ்வைத்
தோற்றுவிப்போம் வாராய்!
இந்த உடல் சதமோ - இது
என்றும் இறப்பதுவே
தந்தை மரிப்பவனே - பெற்ற
தாயும் இறப்பவளே

மக்கள் மனைவி பொருள் - யாவும்
மாயன் வினைப் பொருளே
துக்கந் தரும் இவற்றை - உடன்
தூவென்று தள்ளிவிடு
மிக்க வெம்புல் அடிமை - நீங்கி
மேதகு வாழ்வு பெற
சத்தியப் போர் செய்குவாய் - அட
இந்தியனே யெழுவாய்!

கத்தி வில் வாள் கதைகள் - எறி
கற்கள் சூலாயுதங்கள்
பித்தர்கள் தங்களுக்கு - வெகு
பெட்புடை ஆயுதங்கள்
சத்தியம், ஈகை, அருள் - பக்தி
சான்ற மனப் பெரியோர்
நித்தியமான வுயர் ஆத்ம
நேர்படையே கொள்ளுவார்

வெற்றி அடைந்து விட்டால் - இங்கு
வேண சுகங்களை நீ
பெற்று அரசாண்டிடுவாய் - புவி
பேணி யுயர்ந்திடுவாய்!

நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள்.
1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார்.
.

.
Reply
#10
பாரதியின் நினைவுதினத்தை எங்களுக்கு நினைவுபடுத்தி அவரின் இறுதி கால வரலாறையும் அவரின் கவித்துளிகளையும் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்

Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)