Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?
#1
தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?

<span style='font-size:25pt;line-height:100%'> அஸ்வின் தாயுமானவர்</span>

இரு மணம் இணையும் திருமணங்கள் இன்று பழமை தவறி, பல வழிகளில் நடந்தேறி வருகின்றன.

தமிழர் திருமண முறைகளை நாம் ஒட்டுமொத்தமாய் மறந்து வருகிறோம் அல்லது வசதிக்கேற்ப பிறழ்ந்து வருகிறோம். கால மாற்றத்திற்கேற்ப சுருக்கமாக, வழமையான முறையின்றி நடந்து வருகின்றன திருமணங்கள்.

வரதட்சணைக்கு வேலையே இல்லாத தமிழர் திருமணங்கள் முன்பு எப்படி நடந்தேறின தெரியுமா?.. மூத்தோர் வைத்துவிட்டுப் போயிருக்கும் முறைகள் தெரியுமா?

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா...

தமிழ் திருமண நிகழ்வுக்கான பொருட்கள்:

மஞ்சள், குங்குமம், திருநீறு, கற்பூரம், பச்சரிசி, தேங்காய், தேன், பன்னீர், முந்திரி, திராட்சை, கற்கண்டு, குங்குமப்பூ, வெற்றிலை, வெட்டுப் பாக்கு, வாழைப் பழம், எலுமிச்சை, அவல், சர்க்கரை, நவதானியம், வேள்விப் பொருட்கள் அனைத்தும் அடங்கிய பூரணாகுதி, பசும்பால், பசு நெய், கலசம், உதிரிப் பூக்கள், தாமரைப் பூ, அருகம்புல், 3 ¬முழம் பட்டுத் துண்டு, குத்துவிளக்கு, மாவிலை, பித்தளை செம்பு, நிறைகுடம் தண்ணீர், தலை வாழை இலை, அரிசி மாவு

(இந்தப் பட்டியலில் வரதட்சணை, தங்கம் இதெற்கெல்லாம் நம் மூத்தோர்கள் வேலையே வைக்கவில்லை என்பதைப் பாருங்கள்)

முன்னேற்பாடுகள்:

இறைவன், இறைவி நிறை குடம் வைக்கும் இடத்திலும், மணமக்கள் அமரும் இடத்திலும் "எட்டிதழ்த் தாமரை" மாக்கோலம் போட வேண்டும். அதன் மு¬ன்பாக நடத்துபவர் அமர்ந்து "ஐம்பெருந்தூய்மைகளை" செய்ய வேண்டும்.

அது என்ன ஐம்பெருந்தூய்மைகள்?:

ஒரு சொம்பில் தூய நீர் எடுத்துக் கொண்டு, அதனை நீரினில் நான்காய் நிகழ்ந்தாய் போற்றி எனப் போற்றி, வாச மலரைப் போற்றிய நீரில் இட்டு வணங்க வேண்டும்.

ஒரு பூவினை நீரினில் நனைத்துப் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி என்று போற்றித் தெளிக்க வேண்டும்.

தொடர்ந்து இறைவா! மண்ணும், நீரும், நெருப்பும், வளியும், வானும் உங்கள் அருளால் தூய்மையாகுக என வேண்ட வேண்டும். யாக்கைப் பொன்னெடுங்கோயிலாய்ப் புகுந்தாய் போற்றி, உயிருக்கு உயிரானாய் போற்றி எனப் போற்றி, உடல் மேல்தெளித்து உடல், ஆன்மத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

வழிபடும் பொருட்களின் மேல் எல்லாம் சிவனென நின்றாய் போற்றி செய்ய வேண்டும்.

தூய நற்சோதி ஆனவ போற்றிசெய்ய வேண்டும்.

. இந்த ஐம்பெருந்தூய்மைகள் நிறைந்த பின், நுனி வடக்கு நோக்கி இருக்கும்படி தாமரைக் கோலத்தின் மீது தலை வாழையை இட வேண்டும்.

அதன் மேல் நெல், பச்சரிசி பரப்பி ஐம்முக¬முக்கோணச் சக்கரத்தை வரைந்து அதில் ஓம் என எழுத வேண்டும்.

நிறை குடங்களுக்குள் நறும்புகை காட்டித் திறுநீறு, தூய சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம் கலந்த நீரை மூல மந்திரத்தை ஓதிக் கொண்டே நிறைகுடங்களில் ஊற்ற வேண்டும்.

ஒவ்வொன்றிலும் காசு இட்டு, மாவிலை வைத்து, மஞசள் பூசிய தேங்காய்களை அதன் மீது வைக்க வேண்டும். நிறைகுடங்களின் உள்ளும், தேங்காயின் மேலும் தருப்பையினால் கூர்ச்சமிட்டு வைக்க.

நிறைகுடங்களுக்குச் சந்தனம், மஞ்சள், பொன்னரிசி, குங்குமம் இட்டு, குடங்களுக்கு மாலையும் இட வேண்டும்.

வழிபாட்டைத் தொடங்கும் முன்:

1.பார்வையால் வேறுபடுத்தல்

"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு வலக்கை நடுவில், ஆள்காட்டி விரல்களை நீட்டி ஏனைய விரல்களை மடக்கி நுனி வாயிலாக பார்க்க வேண்டும்.

2. தெளித்தல்

"நம சிவாய" என ஓதிக் கொண்டு, ஒரு மலரை நீரில் நனைத்து வழிபாட்டுக்குரிய பொருட்களின் மேல் தெளிக்க வேண்டும்.

3. உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தல்

"நம சிவாய" ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களை மும்முறை தட்டுதல் (இவ்வாறு தட்டுவதால் அப்பொருட்களின் உள்ளிருக்கும் ஆற்றல் வெளிப்படும்.)

4. அமைதிப்படுத்தல்

"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களைச் சுற்றி, அதன் பின் கையைக் கவிழ்த்துக் காட்டுதல் (பொருட்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலை சுற்றிக் காட்டிய இடத்தினுள் அமைதிப்படுத்தி இருக்கமாறு செய்தல்)

திருமண நிகழ்வுகள்:

(மணமகன், அருகில் உள்ள திருக்கோயிலுக்குச் சென்று வந்த பின்னர், மணமக்களை உரிய இடத்தில் அமர்த்தி நிகழ்வுகளைச் செய்ய வேண்டும்)

மொத்தம் 17 வகை திருமண நிகழ்வுகள். அதன் விவரம்:

1. திருவிளக்கு வழிபாடு.

வழிபாடு நடைபெறும் இடத்தில் மங்கலப் பெண்டிரைக் கொண்டு விளக்கேற்றச் செய்ய வேண்டும். சோதியாய்ச் சுடராய் ஒளிவளர் விளக்காய் இறைவனைக் காணும் நம் நெறியில் பொருள்களை விளங்கச் செய்வதும், நன்மைக்குக் காரணமாகியதுமான விளக்கினை வழிபட வேண்டும்.

பேரொளிப் பிழம்பான அம்மையப்பனைக் கண்டு, கருதி, கைகூப்பித் தொழ வேண்டும்.. சுடரின் செம்பகுதி இறைவன், உள் ஒளிரும் நீல ஒளி இறைவி. ஆதலால் சுடரில் அம்மையும் அப்பனும் இணைந்து ஒளிருகிறார்கள் என்பது நம்பிக்கை.

"உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படு உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே" (திருநாவுக்கரசர் தேவாரம்)

"கோடாமல் என்றும் குறையாமல் எங்கள் குலம் என்றும்

வாடாமல் வாழ வரம் தருவாய்! மனம் மாயை வழி

ஓடாமல் உள்ளே ஒடுங்கும் தவ¬ம் உணர்வறிய

ஆடாமணியொளிச் சோதியே! பூவில் அமர்ந்தவனே! "

என ஓதி, இறைவன் எழுந்தருளியதற்கு அடையாளமாக உச்சியிலும், திருவடியிலும் மலரினை இட வேண்டும்.

"எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி!

எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லர் மழுவாட் படையாய் போற்றி!

கொல்லும் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி!

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி!

கற்றார் இடும்பை காளைவாய் போற்றி!

வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி!

வீரட்டம் காதல் விமலா போற்றி!
(திருநாவுக்கரசர் தேவாரம்)

எனப் போற்றி ஓதி, நறுமலர் அல்லது வில்வம் ¬தலிய தளிர் கொண்டு எட்டுப் போற்றிகளையும் "எண்மலர்" வழிபாடாகச் செய்ய வேண்டும்.

அப்பொழுதில் மணமக்கள் வேண்டுதல் (இருவரும்):

"இன்ப விளக்காக இருக்கின்ற பெருமானே! இன்று நாங்கள் தொடங்கும் இல்லற வாழ்வு என்றும் இன்ப ஒளி வளர்த்து ஓங்கி இன்புற அருள்வீராக".

2. நிறைகுடப் புனித நீர் வழிபாடு:

அம்மையப்பர் கலசங்களுக்குச் சற்றுத் தள்ளி வலப்புறமாக வைக்கப்பட்டுள்ள புனித நீர் நிறைகுடத்திற்கு வழிபாடு செய்யும் முறை.

"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்

குளித்துத் தொழுது ¬முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்

தெளித்துச் சுவைய¬து ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப

அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" (திருநாவுக்கரசர் தேவாரம்)

என ஓதி நிறைகுட நீரில் எல்லாச் சிவ தீர்த்தங்களும் நிரம்பியதாக ஏற்று வருணனை எழுந்தருளச் செய்ய வேண்டும். நறும்புகை விளக்கொளி காட்டி வழிபட வேண்டும்.

"கடல்களின் அரசே வருணா போற்றி

நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி

நீருக்கதிபதி நிறைவே போற்றி

மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி

புனிதன் சடைஅமர் வனிதை போற்றி

கங்கையென்னும் மங்கை போற்றி

யமுனை நதியெனும் நல்லாய் போற்றி

நருமதை நதியாம் நல்லருள் போற்றி

சிந்து நதியின் சிறப்பே போற்றி

துங்கா நதி நங்காய் போற்றி

காவிரி நதியாய் காப்பாய் போற்றி

வைகை நதியாய் வந்தாய் போற்றி

ஆன்பொருனை அரசி போற்றி

தண் பொருனைத் தாயே போற்றி!"

எனப் போற்றி, மலரிட்டக் கற்பூர ஒளி காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டியது:

"உமையொரு பாகன் சடையிடை அமர்ந்த கங்கைப் பெருந்தாயே! வைகை அன்னையே! எங்கள் உடலும் உள்ளமும் உயிரும் சூழலும் குளிர்ந்து என்றும் நலம் விளங்க அருளுக" என மணமக்கள் வேண்டியதும், மணமக்களைப் புனித நீர் நிறை குடத்திற்கு மலரிடச் செய்ய வேண்டும்.

நிறைகுட நீரினை, வழிபாட்டுப் பொருட்களின் மேலும், மணமக்கள் மேலும் மாவிலையால் தெளிக்க வேண்டும்.

3. திருநீறு அணிவித்தல்:

"காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் கைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணத் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே" (சம்பந்தர் தேவாரம்)

என்று திருநீற்றுச் சிறப்போதி, மணமக்கள் அணிந்து கொள்ளத் திருநீறு, சந்தனம், குங்குமம் தர வேண்டும்.

4. விநாயக பெருமான் வழிபாடு

எடுத்துக் கொண்ட செயல் எவ்வித இடையூறுமின்றி நடைபெற இன்றியமையாததான, மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை வழிபட வேண்டும்.

"கங்கையும் பணிவென் திங்களும் விரைத்த கடுக்கையும்

தொங்கலும் அரவும்

தங்குபொற்சடையும் முக்கணும் தாதை தாணு மென்றுணர்ந்த

மென் மலர்க்கை

அங்குச பாசமணிந்து வெற்பு உயிர்த்த ஆரணங்கு அன்னை

என்றுணர்த்தி

வெங்கலி¬முழுதும் துமித்தருள் எக்கியசாலை விநாயகரடி பணிவாம்"
என்றோதி, விநாயகப் பெருமானை எழுந்தருளச் செய்ய வேண்டும். பின்னர் உச்சியில் நீர் சொரிதல், உட்கொள்ள நீர் தருதல், திருவடிக் கமலங்களை நீராட்டுதல், திருமேனியை நீராட்டுதல் ஆகியன செய்ய வேண்டும். நறும்புகை, விளக்கொளி காட்டி, கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

"தேவர்க்கு இடையூறு யாவையும் தீர்த்தமைத் தேவா போற்றி!

மூவர்க்கு அரசளித்த ¬தன்மை நற்பொருளே போற்றி!

சேடிவக்கு அடிமையாக்கி சிறியனேன் தம்மை காப்பாய்

மேவிய புகழ்படைத்த விக்கினராசா போற்றி! போற்றி! "

எனப் போற்றி மலரிட வேண்டும்.

"அங்கம் வேதம் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

செங்கயலார் புனல் செல்வமிகு சீர்கொள் செங்காட்டம் குடியதனுள்

கங்குல் விளங்கெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காறவே"

"¬மும்மதத்தன் என்றொரு பெயர் தனக்கு மொய் கூந்தற்

கொம்மை வெம்முலைக் கொற்றொடிக் கொடிச்சியை இலைவேல்

கைமலர்ந்தனி இளவற்கும் கஃறெனும் கானத்து

அம்ம¬ந்து புக்கு உறுத்தவன் அடிமலர் பணிவாம்"

என்றோதிக் கற்பூரம் காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் வேண்டிட:

"எக்கிய சாலை விநாயகர் பெருமானே! எங்கள் இல்லற வாழ்வு அனைத்து வகையிலும் என்றும் இனிதே நிறைவுற அருளுக"

5. காப்பு அணிவித்தல்:

முக்கொம்புடைய விரலி மஞ்சளை வெற்றிலையில் மஞ்சள் நூலால் கட்டி பிள்ளையாருக்கு முன்பு வைத்து வழிபாடு செய்க. ஒரு தட்டில் முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து அதனை மணமகனைப் பிடித்துக் கொள்ளச் செய்து வலது கையில் காப்பினை அணிவிக்கவும். மணமக்களுக்கு இடது கையில் அணிவிக்கவும்.

"மாறிலா நிறை வளர்ந்தரு புகலியின் மணமீக்

கூறு நாளின் ¬முன்னாளினில் வேதியர் குழா¬ம்

நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு

ஆறு சூடினார் அருள்திருக் காப்பு நாண் அணிவார்" (பெரிய புராணம்)

எனவும்

"பங்கயனும் மாமகேசர் பாதபூசனை செய்து ஏத்தி

அங்குரந் தெளித்து முன் கைக்கங்கணம் ஆர்த்தல் செய்தார்"

என்றும் காப்பு அணியும்போது ஓத வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டிய குறள்:

"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (குறள் 43)

[size=18]அஸ்வின் தாயுமானவர்

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அருமையான தகவல்...நான் தேடிக் கொண்டிருந்த விடயம். நன்றி அண்ணா
[size=16][b].
Reply
#3
அஸ்வின் தாயுமானவர் (தொடர்ச்சி)

6. அம்மையப்பர் வழிபாடு

பிள்ளையார் வழிபாடு, காப்பணிதல் செய்த பின்னர் நிறைகுடங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

"வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக்

கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச் சுடர்த்திங்கள்

சடையானைத் தொடர்ந்து நின்றென்

தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி

தேவர்க்கு என்றும்

சேயானைத் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே

சிந்திக்கப் பெற்றேன் நானே. " (திருநாவுக்கரசர் தேவாரம்)

என்றோதி இறைவனையும்,

"புண்ணியம் செய்தனமே புதுப்பூங்குவளைக்

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்

பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே" (அபிராமி அந்தாதி)

என்றோதி அம்மையையும் நிறை குடங்களில் எழுந்தருளச் செய்திட வேண்டும்.

"நிலையான் காண் தோற்றவன் காண் நிறையானான் காண்

நீரவன் காண் பாரவன்காண் ஊர் மூன்று எய்த

சிலையவன் காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை

ஒருபாகம் சேர்த்தினான் காண்

கலையவன் காண் காற்றவன் காண்காலன் வீழக் கறுத்தவன்

காண் கயிலாயம் என்னும் தெய்வ

மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்

காணவன் என் மனத்துளானே"
என்று ஓதி, மலரிட்டு வழிபட வேண்டும். பின்னர் உச்சியில் நீர் சொரிதல் முதலியவற்றைச் செய்ய வேண்டும். நறும்புகை, விளக்கொளி, கற்பூரம் காட்ட வேண்டும்.

"முன்னியா நின்ற ¬முதல்வா போற்றி

மூவாத மேனி உடையாய் போற்றி

என்னியா எந்தை பிரானே போற்றி

ஏழிசையே உகப்பாய் போற்றி

மன்னிய மங்கை மணாளா போற்றி

மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி

கன்னியர் கங்கைத் தலைவா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி"(திருநாவுக்கரசர் தேவாரம்)

என்று இறைவனையும்

"பூமேவு குழல் போற்றி, பொற்புமிகு கருணை மொழி வதனம் போற்றி

மாமேவும் அறம் வளர்க்கும் வண்மை செறி திருக்கரம் ஒண்வசம் போற்றி

கோமேவும் மூவுலகும் ஈன்று சிறிதும் தளராக் கொங்கை போற்றி

தூமேவும் நான்மறைச் செஞ்சிலம்பு அலம்பும் அகிலாண்டேசுவரிதாள் போற்றி"
என்று இறைவியையும்

"பன்னிரு கரத்தாய் போற்றி

பசும்பொன் மாமயிலாய் போற்றி

முன்னிய கருணை ஆறு

முகப்பரம் பொருளே போற்றி

கன்னியர் இருவர் நீங்காக்

கருணை வாரிதியே போற்றி

என்னிரு கண்ணே கண்ணுள்

இருக்குமா மணியே போற்றி"என்னும் போற்றி கூறி முருகப் பெருமானையும் தளிரும் மலரும் தூவி வழிபட வேண்டும்.

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆர¬முத

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையானேன் தளக்குச்

செம்மையே ஆய சிவபாதம் அளித்த

செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்து அருளுவதினியே" (திருவாசகம்)

என்றோதி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

மணமக்களிடம் சிறிது மலரினைக் கொடுத்து,

"இன்ப வடிவாகிய இறைவனே! அருள் வடிவாகிய இறைவியே! எங்கள் இல்லற வாழ்வு அன்பும், அருளும் பெருகி மலர அருளுக" என வேண்டி மலரிடச் செய்ய வேண்டும்.

7. எரியோம்பல்:

வேள்விக் குண்டத்தின் நாற்புறமும் தருப்பைகளை வைக்க, பத்துத் திசைகளிலும் உள்ள காவலர்களுக்குத் திருநீறு, சந்தனம், மஞ்சளரிசி குங்குமம், மலர்கள் இட வேண்டும்.

"நீறணி பவளக்குன்றமே நின்ற நெற்றிக் கண் உடையதோர் நெருப்பே

வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத்தரசே

ஏறணி கொடியெம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசைமாறிசையே!"என்று ஓதி, வேள்வி நெருப்பில் முழுமுதற் பொருளாகிய சிவபரம் பொருளை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

மணமக்களிடம் மலர்களைக் கொடுத்து

"கதிரோன் ¬முதலான கோள்களே, கார்த்திகை முதலான வின்மீன்களே, நாங்கள் இல்லற வாழ்க்கை தொடங்கும் இந்த நல்ல நேரத்தில் உங்கள் இன்ப ஒளியை எமக்கு அருள்வீராக"

என்று ஒன்பான் கோள்களை வழிபடச் செய்ய வேண்டும்

மீண்டும் மணமக்களிடம் மலர்களைக் கொடுத்து:

"தன்னை அடைந்தவற்றைத் தன்மயாக்கும் எம் பெருமானே எங்கள் வாழ்வில் வந்து பொருந்துகின்ற அனைத்தும் என்றும் இன்பமாகவே மலர அருள்வீர்களாக" என்று வேண்டச் செய்ய வேண்டும்.

"செம்மலரான் உமையாள் குண்டத்துச் செந்தீயிட்டு

நிறை ஓமம் காட்ட¬ம் உரித்துச் சேர்ந்து பொம்மலுற்று

அடிசிருக்கு சிருவத்தால் நெய்பூரிப்ப விம்மலுற்று

எழுந்த தம்மா வேள்வித் தீ வலம் சுழித்தே" (திருவிளையாடற் புராணம்)

என்று ஓதி பின்னர் திசைக் காவலர்களுக்கு நறும்புகை, விளக்கொளி காட்ட வேண்டும்.

கற்பூரம் காட்டி திருவருட் சக்தியை நிறைகுடத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

8. தாய் தந்தையர் வழிபாடு

மணமக்களைத் தத்தம் பெற்றோரின் பாதங்களை நீராட்டிப் பால்விடச் செய்து, சந்தனம், மஞ்சளரிசி, குங்குமம் இடச் செய்து, மலரிடச் செய்க. பின்னர் அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கச் செய்ய வேண்டும். அப்பொழுது பெற்றோர்களிடம் மஞ்சளரிசியும் மலரும் கொடுத்து ஆசிர்வதிக்கச் செய்திட வேண்டும்.

மணமகன் வழிபடும்பொழுது:

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்

மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்

தோன்றாந் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே" (திருநாவுக்கரசர்)

என்றும்

மணமகள் வழிபடும்பொழுது:

"அப்பன் நீ! அம்மை நீ! ஐயனும் நீ!

அன்புடைய மாமனும் மாமியும் நீ!

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ!

ஒரு குல¬ம் சுற்ற¬ம் ஒர் ஊரும் நீ!

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!

துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ!

இப்பொன் நீ! இம்மணி நீ! இம்முத்தும் நீ!

இறைவன் நீ!ஏறு ஊர்ந்த செல்வன் நீ!"என்றும் ஓத வேண்டும்.

9. கொடுப்பதும் கொள்ளுதலும்

மணமகளின் பெற்றோர்கள் கூற வேண்டியது:

"எங்கள் அன்புத் திருமகள் (மணப்பெண்ணின் பெயரைச் சொல்லி) தங்களுடைய பண்புசால் திருமகன் (மணமகன் பெயரைச் சொல்லி) திருமணம் செய்தளிக்கிறோம்"

மணமகன் பெற்றோர் கூற வேண்டியது:

"எங்கள் பண்புசால் மகன் (மணமகன் பெயரைச் சொல்லி) தங்களுடைய அன்புத் திருமகள் (மணமகள் பெயரைச் சொல்லி) திருமணம் செய்து கொள்கிறோம்."

"கொடுப்பதும் கொள்வதும்" நிகழும்போது ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுக்க வேண்டும்.

10. மங்கல நாண் அணிவித்தல்

ஒரு தட்டில் முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, அதன் மேல் திருமாங்கல்ய நாணை வைத்து அவையோரிடம் ஆசி பெற வேண்டும்.

அ) "தண் கமலத்து இருந்து ஈசன் அடிக்கமலம் மனக்கமலம் தன்னில்

வைத்து வண் கமலக் கண்ணானை மணவாளன்

எனப்பெறுவான் மாதவம் செய்து

ஒண் கமலாயன் எனும் பேரொளி ஆர்த்த திருவாரூர் உகந்தணிந்த

பெண் கமலம் கைக்கமலம் பிடித்த ஒளிதனைத் தொழுது வாழ்வோம்"

ஆ) "மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னிக்

குணிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடை மேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே"

என்று ஓதி அம்மையப்பரைத் திருமாங்கல்யத்தில் எழுந்தருளச் செய்து, நறும்புகை, விளக்கொளி காட்ட வேண்டும்

மணமக்களிடம் மலர்கள் கொடுத்து,

"அருள் வடிவாக இருக்கும் இறைவனே! எங்கள் வாழ்வின் அடையாளமாக இருக்கின்ற இந்தத் திருத்தாலியிலே என்றென்றும் மகிழ்வுடன் எழுந்தருள்வீராக" என்று வேண்டுடி மலரிட்டு வணங்கச் செய்ய வேண்டும்.

வழிபாடுசெய்த திருத்தாலியை அனைவரிட¬ம் காட்டி வணங்கச் செய்து, நல்ல நேரத்தில் மணமகனை மணமகளுக்குத் திருமங்கல நாணை அணிவிக்கச் செய்ய வேண்டும்.

(தொடரும்)..
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஆங்கிலத்தில் அழைப்பிதழ் அச்சிடும் அறிவிலிகளுக்கு அவர் தம் அறியாமை அகற்ற இவண் நம் குலமுறை மணமுறை ஓதிய நன்னகத்தோய் நன்றி பல.
\"


\" -()
<i><b></b></i>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)