06-09-2005, 09:11 AM
stalin Wrote:யூட் அவர்களே நன்றிகள் பழைய வரலாற்று படத்துக்கு---------ஆங்கிலேயர் கூலிகளாக இந்தியர்களையயும் மற்ற நாட்டவரையும் தென்ஆபிரிக்கா மற்றும் நாடுகளுக்கு கொணடு சென்றமாதிரி இலங்கையிலுள்ள சிங்களவரயோ தமிழரையோ கொண்டுசெல்ல முடியவில்லை-----------------அந்நேரம் கூலிகளாக செல்ல மறுத்தார்கள் எனறு கூறப்படுகிறது உண்மையா?----------------------இது சம்பந்தமாக மேலும் தகவல்கள் உங்களிடம் எதிரபார்க்கிறோம்------------------------------------------------------------ஸ்ராலின்
யாழ்ப்பாணத்தமிழர்கள் மலேசியாவிற்கு பிரித்தனிய அரச ஊழியர்களாக போனார்கள். இலங்கை வளழுள்ள நாடு. குறிப்பாக சிங்கள பிரதேசம் நீர்வளமும் நிலவளமும் உள்ள பிரதேசம். இதனால் சிங்களவரும் தமிழரும் உள்ளுர் வளத்தில் நன்கு வாழக்கூடிய வசதிகளை கொண்டிருந்தனர். இந்திய தமிழரின் நிலை வேறு. தமிழநாடு பெரிய பிரதேசம். வறிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டே கூலிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இலங்கையின் சிங்களப்பகுதிகளில் பிரித்தானியர் வெளியேறுமட்டும் அவர்களுக்கெதிராக கலவரங்கள் நடந்தவண்ணம் இருந்தன. பிக்குமார் என்றுமே அடங்கிப்போகவில்லை. மதத்தை வைத்து பன்சாலைகள் மூலம் மக்களை ஐரோப்பியருக்கெதிராக தூண்டியவண்ணம் இருந்தனர். தமிழர்கள் வளம்குறைந்த பகுதியல் இருந்தாலும் கல்வி கேள்விகளில் சிறந்திருந்ததனால் ஐரோப்பியா கல்லூரிகளை கட்டி தமிழர்களை அரச ஊழியர்களாக வேலைக்கு திரட்டினார்கள். இலங்கையை விட்டு பிரித்தானியர் வெளியேறிய போது 80 வீதமான அரச ஊழியர்கள் தமிழர். எல்லா உயர்மட்ட அரச ஊழியர்களும் தமிழர்களாக இருந்தார்கள். இந்த நிலையில் இலங்கை தமிழர் கூலிகாளாக போக வேண்டிய தேவையை பிரித்தானியரே நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வாறான நிலை தான் இலங்கை தமிழருக்கு தலைக்கனத்தையும் இந்திய தோட்டத்தொழிலாளரை குறைவாக பார்க்கும் போக்கையும் கொடுத்தது. சிங்களவருக்கும் தமிழருக்கும் இந்திய தோட்டத்தொழிலாளாகள் வேலைக்காரராக வேலைசெய்தார்கள்.
வரலாற்றிலேயே இலங்கை தமிழர் பெருமளவில் கூலிக்கு வேலை செய்யும் நிலை இந்த போர் காரணமான புலப்பெயர்வாலேயே உருவானது.