10-26-2003, 02:19 PM
வணக்கம் அஜீவன் ! குருவிகளின் கருத்துக்கள் உங்களுக்கு எனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என நம்புகிறேன். நான் முற்றுமுழுதாக சினிமா எதிர்பாளியல்ல. சினிமா , தொலைக்காட்சி அது கண்ணுணரும் ஒரு இனிய சாதனம். அது சமூகத்தைக் குழியில் புதைக்கும் கருத்துக்கள் பாடல்களைத் தருவதால் அந்தச்சமூகத்தின் ஆணிவேரே பாறுவதற்கு வழியமைக்கும். அந்த குறுக்குத்தனமான உளைப்பையே நான் எதிர்க்கிறேன். அது மணிரத்தினமாக இருந்தாலென்ன பாலுமகேந்திராவாக இருந்தாலென்ன அது நீங்களாக இருந்தாலும் நான் எதிர்ப்பேன்.
சினேகன் பேசிய பட்டிமன்றத்தில் இன்னும் பலர் பேசினார்கள். ஆனால் அவர்களின் பேச்சுக்கள் முழுவதையும் கேட்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அதுபற்றியும் சொல்லியிருக்கலாம். ஒரு நாளில் காலை 8இலிருந்து 5மணிவரையும் எனது நேரத்தில் பாதி பேரூந்தில் கழிகிறது. அங்குகூடப்பல விடயங்களைக் கேட்கிறேன். பார்க்கிறேன். அதில் என் கண்டனத்துக்குரிய பலவும் நடக்கின்றன. அதை எதிர்க்க எதிர்த்துக் கருத்துக்கூற உரிமையிருக்கிறது. அதற்காக அந்த நேரத்தை ஒதுக்க என்னால் முடியாது. ஏனெனில் நான் பேரூந்தில் பயணிக்க வேண்டிய தேவையிருக்கிறது.
குடிகுடியைக்கெடுக்கும். குடித்து விட்டுத்தான் குடி கெடுதியானது என்று சொல்கிறார்களா ? அல்லது எழுதுகிறார்களா ? அனுபவங்களே அதையெல்லாம் உணர்த்துகிறது.
ஓ இது வேலியே பயிரை மேயும் செயல் என்பதா கருத்து ?
சினேகன் பேசிய பட்டிமன்றத்தில் இன்னும் பலர் பேசினார்கள். ஆனால் அவர்களின் பேச்சுக்கள் முழுவதையும் கேட்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அதுபற்றியும் சொல்லியிருக்கலாம். ஒரு நாளில் காலை 8இலிருந்து 5மணிவரையும் எனது நேரத்தில் பாதி பேரூந்தில் கழிகிறது. அங்குகூடப்பல விடயங்களைக் கேட்கிறேன். பார்க்கிறேன். அதில் என் கண்டனத்துக்குரிய பலவும் நடக்கின்றன. அதை எதிர்க்க எதிர்த்துக் கருத்துக்கூற உரிமையிருக்கிறது. அதற்காக அந்த நேரத்தை ஒதுக்க என்னால் முடியாது. ஏனெனில் நான் பேரூந்தில் பயணிக்க வேண்டிய தேவையிருக்கிறது.
குடிகுடியைக்கெடுக்கும். குடித்து விட்டுத்தான் குடி கெடுதியானது என்று சொல்கிறார்களா ? அல்லது எழுதுகிறார்களா ? அனுபவங்களே அதையெல்லாம் உணர்த்துகிறது.
ஓ இது வேலியே பயிரை மேயும் செயல் என்பதா கருத்து ?
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com