10-17-2005, 01:57 AM
<i>காட்சி - ஒன்று</i>
<b>இடம் :</b> தமிழீழத்துக் கடற்கரையோரம் ஒரு குடிசை
<b>பாத்திரங்கள் :</b> சிற்பி, ஒரு பெரியவர்
<b>நேரம் :</b> மதியம்
(குடிசைக்குள் "டக் டக்" என்ற ஒலி எழும்பிக்கொண்டிருக்கிறது. தூரத்தே கடலலைகளின் ஓயாத இரைச்சல் ஒலித்துக்கொண்டிருக்கிறது...
குடிசையை நோக்கி அந்தப் பெரியவர் வந்து கொண்டிருக்கிறார்)
<b>பெரியவர்:</b> அதோ! ஒரு குடிசை தெரிகிறதே! அங்கே போய் யாராவது இருந்தால் உதவி கேட்போம்! ('டக் டக்' - ஒலி ஓயவில்லை)
குடிசைக்குள் யாரய்யா? (பெரியவருக்கு கீழ்மூச்சு - மேல் மூச்சு வாங்குகிறது)
<b>சிற்பி :</b> (குடிசைக்கு வெளியே ஓடி வந்து) வாருங்களய்யா! வாருங்கள்! இப்படி உடம்பெல்லாம் நனைந்து, மூச்சு வாங்க வருகின்றீரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன நடந்தது?
<b>பெரியவர்:</b> சொல்கிறேன்! ஐயா! (தடுமாறுகிறார்)
<b>சிற்பி :</b> ஐயா! இதோ இந்தக் கல்லின் மீது அமருங்கள்! சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு பேசலாம்!
<b>பெரியவர்:</b> ஐயா! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?
<b>சிற்பி :</b> ஓ! தாராளமாக! கொஞ்சம் இருங்கள், இதோ வந்து விடுகிறேன்!
(சிற்பி, குடிசைக்கு வெளியே சென்று, அங்கிருந்த இளநீர்
இரண்டையெடுத்து, அதன் தலையைச் சீவி உள்ளே எடுத்து வருகின்றான்)
<b>சிற்பி :</b> ஐயா! இதோ இந்த இளநீரைக் குடித்து உங்கள் தாகத்தை நீக்குங்கள்! இது தமிழீழத்து இளநீர்! மிகவும் இனிப்பாக இருக்கும்!
<b>பெரியவர்:</b> உங்கள் மக்களின் இனிமைப்பேச்சை விடவா? (சிரிக்கின்றார்)
<b>சிற்பி :</b> ஓ! ஓ! (மிகவும் ஆச்சரியத்துடன்) நன்றாகச் சொன்னீர்கள்! நம் செந்தமிழ் இனிமையான மொழிதானே! அதுதான் அப்படிச் சொல்லி விட்டீர்கள்!
(இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்)
<b>பெரியவர்:</b> அப்பாடா! இப்போது கொஞ்சம் களைப்பு நீங்கிவிட்டது ஊம்; இருந்தாலும் வெயிலின் கடுமை இன்னும் குறைந்த பாடில்லையே!
<b>சிற்பி :</b> இந்த ஓலைக் குடிசை 'குளு குளு' வென்று இருக்குமே! இங்கே, வெப்பம் அவ்வளவாக இருக்காதே!
<b>பெரியவர் :</b> ஆமாம்! ஆமாம்! (தலையை ஆட்டிவிட்டு) இதென்ன? கல்லில் எதையோ செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
<b>சிற்பி :</b> ஆமாம்! சொல்கிறேன், கேளுங்கள்! இது ஒரு சிலை! எங்கள் தமிழீழத்தின் மாபெரும் விடுதலை வீரன், தானைத் தளபதி, வெற்றி வேங்கை பிரபாகரன் அவர்களின் உருவத்தையே சிலையாக வடித்துக்கொண்டிருக்கிறேன்.
<b>பெரியவர் :</b> (ஆச்சரியத்துடன்) பிரபாகரனுக்குச் சிலையா?
<b>சிற்பி :</b> ஆமாம்! எங்கள் தமிழீழம் சுதந்திரம் பெற்று, இரண்டு நாட்களாகிவிட்டன. கேள்விப்படவில்லையா?
<b>பெரியவர்:</b> (சற்று தாழ்வான குரலில்) சில நாள்கள் கடலில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த எனக்கு, இதெல்லாம் எப்படியய்யா தெரியும்?
<b>சிற்பி :</b> அப்படியா? தமிழீழம் விரைவில் விடுதலை பெற்றுவிடும் என்பதை அறிந்து கொண்ட நான், அந்த வெற்றி வீரனுக்கு ஒரு சிலை வைப்போமே! என்ற உணர்வின் மேலீட்டால், சுமார் மூன்று மாத காலமாக, இங்கே இந்தச் சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறேன்! அதற்கேற்றாற்போல், இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர தமிழீழம் அமைந்துவிட்டது. இல்லை, இல்லை! போர் செய்து வெற்றியுடன் அடைந்துவிட்டோம்.
<b>பெரியவர்:</b> மகிழ்ச்சி! பெரிய மகிழ்ச்சி! நான் அண்டை நாடான தமிழகத்தில் தூத்துக்குடியில் வாழ்கிறேன்! மீன் பிடிப்பது என் தொழில்! எனது மீன் பிடிக்கும் மரக்கலம் கடலில் உடைந்து போனதால், அலைகளில் போக்கில் நீந்தி, நீந்தி இக்கரையை அடைந்தேன்! கடலில் இருக்கும் போது இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லையே!
<b>சிற்பி :</b> பாதகமில்லை! எப்படியோ உயிர் பிழைத்து வந்து சேர்ந்து விட்டீர்கள்!
<b>பெரியவர்:</b> எப்போதும் கடற்படை ரோந்து கப்பல்களால் அமளி துமளிபடும் ஈழத்துக்கடல் ஏது? இவ்வளவு அமைதியாக இருக்கின்றதே! என்று பார்த்தேன்! ஆமாம்! எதிரிகள் என்னைப் பார்த்திருந்தால் விட்டு வைப்பார்களா, என்ன?
<b>சிற்பி :</b> இனிமேல் நமது கடற்பகுதியில் எதிரிகள் வாலாட்டமுடியாது! நீங்கள் நிம்மதியாக மீன் பிடிக்கலாம்!
(இருவரும் சிரிக்கின்றனர்.)
<b>பெரியவர்:</b> தமிழனுக்கென்று ஒரு நாடில்லை! அவர்களுக்கென ஒரு நாடு, அதுதான் தமிழீழம்; எப்போது அமையுமென்று நானெல்லாம் ஏங்கியதுண்டு.
<b>சிற்பி :</b> (இடைமறித்து) நீங்கள் மட்டுமல்ல! தமிழனாய்ப்பிறந்த ஒவ்வொருவரும், அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, அவர்களுக்கும் இந்த உணர்வு அதிகம் இருந்தது என்றே சொல்லலாம்!
<b>பெரியவர்:</b> ஆமாம்! உலகின் நாடற்ற மக்களாக இந்தத் தமிழர்கள் என்னதான் செய்ய முடியும்?
<b>சிற்பி :</b> உலகத்தில் சிறிய மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் சுதந்திர நாடுகளாக, மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. ஏறக்குறைய ஏழுக் கோடி மக்களைக்கொண்ட தமிழருக்கு ஒரு நாடு இல்லை; மிகவும் வேதனையாக இருந்தது.
<b>பெரியவர்:</b> (குறுக்கிட்டு) வேதனை மட்டுமல்ல; மிகவும் அவமானமாகவும் இருந்தது.
<b>சிற்பி :</b> அந்தச் சூழ்நிலை இப்போதில்லை; நாம் சுதந்தரத் தமிழீழத்தின் மக்கள்! இனிமேல் தமிழர் தலை நிமிர்ந்து வாழலாம்!
<b>பெரியவர்:</b> சரியாகச் சொன்னீர்கள்! ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் ஆண்டிருந்த தமிழினம் பலவிதக் கொடுமைகளால், அந்நியரிடம் அடிமைப்பட்டு, வாழ்ந்ததை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கின்றது.
<b>சிற்பி :</b> ஆமாம்! நம் முன்னோர்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, செயல்படவில்லை யென்று சொல்லலாமா?
<b>பெரியவர்:</b> அதுதான் உண்மை! ஒற்றுமையின்றிச் சிதறுண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, எதிரியிடம் காட்டிக் கொடுத்து வாழ்ந்ததாலே, அவர்கள் நம்மை வெகு எளிதில் ஏமாற்றி ஏறி தலைமேல் உட்கார்ந்து விட்டனர்!
<b>சிற்பி :</b> (சற்று உரத்த குரலில்) இந்தக் கசப்பான உண்மைகள் தமிழ் மக்களுக்கொரு பாடம்!
அதோ! பாருங்கள்! ஒரு மாட்டுவண்டி வருகிறது! அதில் இள முல்லையென இரு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிங்கே சற்றுநேரம் தங்கி இளைப்பாறித்தான் செல்வார்கள்.
அவர்களோடு உங்களை நகருக்கு அனுப்பிவைக்கிறேன். அங்கே மக்கள் சத்திரத்தில் தங்கியிருந்து, நாளை மாலை சமுதாய வீதியில் நடைபெறவிருக்கும் 'சுதந்தரத் தமிழீழத்தின்' அறிவிப்பு விழாவில் கலந்து கொள்ளுங்கள்.
<b>பெரியவர்:</b> ஆகட்டும்! நண்பரே!
<b>சிற்பி :</b> நாளை உங்களைச் சத்திரத்தில் சந்திக்கிறேன்!
இந்தப் பெண்கள் சத்திரத்தில் பொதுச்சேவை செய்பவர்கள். உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்! சரி, புறப்படுங்கள்!
("சல்-சல்"- என்ற ஒலியுடன் மாட்டுவண்டி நகர்கின்றது).
இளமுல்லை : (பாடுகின்றாள்)
"கன்னித்தமிழ் ஈழத்திலே! " மணக்கும் கவிதை கொஞ்சம் பாடுங்களேன்!
(ஆய்! உர்! வேகமாய் ஓடுங்கள் காளைகளே! - கன்னித்தமிழ் ------
<b>இடம் :</b> தமிழீழத்துக் கடற்கரையோரம் ஒரு குடிசை
<b>பாத்திரங்கள் :</b> சிற்பி, ஒரு பெரியவர்
<b>நேரம் :</b> மதியம்
(குடிசைக்குள் "டக் டக்" என்ற ஒலி எழும்பிக்கொண்டிருக்கிறது. தூரத்தே கடலலைகளின் ஓயாத இரைச்சல் ஒலித்துக்கொண்டிருக்கிறது...
குடிசையை நோக்கி அந்தப் பெரியவர் வந்து கொண்டிருக்கிறார்)
<b>பெரியவர்:</b> அதோ! ஒரு குடிசை தெரிகிறதே! அங்கே போய் யாராவது இருந்தால் உதவி கேட்போம்! ('டக் டக்' - ஒலி ஓயவில்லை)
குடிசைக்குள் யாரய்யா? (பெரியவருக்கு கீழ்மூச்சு - மேல் மூச்சு வாங்குகிறது)
<b>சிற்பி :</b> (குடிசைக்கு வெளியே ஓடி வந்து) வாருங்களய்யா! வாருங்கள்! இப்படி உடம்பெல்லாம் நனைந்து, மூச்சு வாங்க வருகின்றீரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன நடந்தது?
<b>பெரியவர்:</b> சொல்கிறேன்! ஐயா! (தடுமாறுகிறார்)
<b>சிற்பி :</b> ஐயா! இதோ இந்தக் கல்லின் மீது அமருங்கள்! சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு பேசலாம்!
<b>பெரியவர்:</b> ஐயா! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?
<b>சிற்பி :</b> ஓ! தாராளமாக! கொஞ்சம் இருங்கள், இதோ வந்து விடுகிறேன்!
(சிற்பி, குடிசைக்கு வெளியே சென்று, அங்கிருந்த இளநீர்
இரண்டையெடுத்து, அதன் தலையைச் சீவி உள்ளே எடுத்து வருகின்றான்)
<b>சிற்பி :</b> ஐயா! இதோ இந்த இளநீரைக் குடித்து உங்கள் தாகத்தை நீக்குங்கள்! இது தமிழீழத்து இளநீர்! மிகவும் இனிப்பாக இருக்கும்!
<b>பெரியவர்:</b> உங்கள் மக்களின் இனிமைப்பேச்சை விடவா? (சிரிக்கின்றார்)
<b>சிற்பி :</b> ஓ! ஓ! (மிகவும் ஆச்சரியத்துடன்) நன்றாகச் சொன்னீர்கள்! நம் செந்தமிழ் இனிமையான மொழிதானே! அதுதான் அப்படிச் சொல்லி விட்டீர்கள்!
(இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்)
<b>பெரியவர்:</b> அப்பாடா! இப்போது கொஞ்சம் களைப்பு நீங்கிவிட்டது ஊம்; இருந்தாலும் வெயிலின் கடுமை இன்னும் குறைந்த பாடில்லையே!
<b>சிற்பி :</b> இந்த ஓலைக் குடிசை 'குளு குளு' வென்று இருக்குமே! இங்கே, வெப்பம் அவ்வளவாக இருக்காதே!
<b>பெரியவர் :</b> ஆமாம்! ஆமாம்! (தலையை ஆட்டிவிட்டு) இதென்ன? கல்லில் எதையோ செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
<b>சிற்பி :</b> ஆமாம்! சொல்கிறேன், கேளுங்கள்! இது ஒரு சிலை! எங்கள் தமிழீழத்தின் மாபெரும் விடுதலை வீரன், தானைத் தளபதி, வெற்றி வேங்கை பிரபாகரன் அவர்களின் உருவத்தையே சிலையாக வடித்துக்கொண்டிருக்கிறேன்.
<b>பெரியவர் :</b> (ஆச்சரியத்துடன்) பிரபாகரனுக்குச் சிலையா?
<b>சிற்பி :</b> ஆமாம்! எங்கள் தமிழீழம் சுதந்திரம் பெற்று, இரண்டு நாட்களாகிவிட்டன. கேள்விப்படவில்லையா?
<b>பெரியவர்:</b> (சற்று தாழ்வான குரலில்) சில நாள்கள் கடலில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த எனக்கு, இதெல்லாம் எப்படியய்யா தெரியும்?
<b>சிற்பி :</b> அப்படியா? தமிழீழம் விரைவில் விடுதலை பெற்றுவிடும் என்பதை அறிந்து கொண்ட நான், அந்த வெற்றி வீரனுக்கு ஒரு சிலை வைப்போமே! என்ற உணர்வின் மேலீட்டால், சுமார் மூன்று மாத காலமாக, இங்கே இந்தச் சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறேன்! அதற்கேற்றாற்போல், இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர தமிழீழம் அமைந்துவிட்டது. இல்லை, இல்லை! போர் செய்து வெற்றியுடன் அடைந்துவிட்டோம்.
<b>பெரியவர்:</b> மகிழ்ச்சி! பெரிய மகிழ்ச்சி! நான் அண்டை நாடான தமிழகத்தில் தூத்துக்குடியில் வாழ்கிறேன்! மீன் பிடிப்பது என் தொழில்! எனது மீன் பிடிக்கும் மரக்கலம் கடலில் உடைந்து போனதால், அலைகளில் போக்கில் நீந்தி, நீந்தி இக்கரையை அடைந்தேன்! கடலில் இருக்கும் போது இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லையே!
<b>சிற்பி :</b> பாதகமில்லை! எப்படியோ உயிர் பிழைத்து வந்து சேர்ந்து விட்டீர்கள்!
<b>பெரியவர்:</b> எப்போதும் கடற்படை ரோந்து கப்பல்களால் அமளி துமளிபடும் ஈழத்துக்கடல் ஏது? இவ்வளவு அமைதியாக இருக்கின்றதே! என்று பார்த்தேன்! ஆமாம்! எதிரிகள் என்னைப் பார்த்திருந்தால் விட்டு வைப்பார்களா, என்ன?
<b>சிற்பி :</b> இனிமேல் நமது கடற்பகுதியில் எதிரிகள் வாலாட்டமுடியாது! நீங்கள் நிம்மதியாக மீன் பிடிக்கலாம்!
(இருவரும் சிரிக்கின்றனர்.)
<b>பெரியவர்:</b> தமிழனுக்கென்று ஒரு நாடில்லை! அவர்களுக்கென ஒரு நாடு, அதுதான் தமிழீழம்; எப்போது அமையுமென்று நானெல்லாம் ஏங்கியதுண்டு.
<b>சிற்பி :</b> (இடைமறித்து) நீங்கள் மட்டுமல்ல! தமிழனாய்ப்பிறந்த ஒவ்வொருவரும், அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, அவர்களுக்கும் இந்த உணர்வு அதிகம் இருந்தது என்றே சொல்லலாம்!
<b>பெரியவர்:</b> ஆமாம்! உலகின் நாடற்ற மக்களாக இந்தத் தமிழர்கள் என்னதான் செய்ய முடியும்?
<b>சிற்பி :</b> உலகத்தில் சிறிய மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் சுதந்திர நாடுகளாக, மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. ஏறக்குறைய ஏழுக் கோடி மக்களைக்கொண்ட தமிழருக்கு ஒரு நாடு இல்லை; மிகவும் வேதனையாக இருந்தது.
<b>பெரியவர்:</b> (குறுக்கிட்டு) வேதனை மட்டுமல்ல; மிகவும் அவமானமாகவும் இருந்தது.
<b>சிற்பி :</b> அந்தச் சூழ்நிலை இப்போதில்லை; நாம் சுதந்தரத் தமிழீழத்தின் மக்கள்! இனிமேல் தமிழர் தலை நிமிர்ந்து வாழலாம்!
<b>பெரியவர்:</b> சரியாகச் சொன்னீர்கள்! ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் ஆண்டிருந்த தமிழினம் பலவிதக் கொடுமைகளால், அந்நியரிடம் அடிமைப்பட்டு, வாழ்ந்ததை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கின்றது.
<b>சிற்பி :</b> ஆமாம்! நம் முன்னோர்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, செயல்படவில்லை யென்று சொல்லலாமா?
<b>பெரியவர்:</b> அதுதான் உண்மை! ஒற்றுமையின்றிச் சிதறுண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, எதிரியிடம் காட்டிக் கொடுத்து வாழ்ந்ததாலே, அவர்கள் நம்மை வெகு எளிதில் ஏமாற்றி ஏறி தலைமேல் உட்கார்ந்து விட்டனர்!
<b>சிற்பி :</b> (சற்று உரத்த குரலில்) இந்தக் கசப்பான உண்மைகள் தமிழ் மக்களுக்கொரு பாடம்!
அதோ! பாருங்கள்! ஒரு மாட்டுவண்டி வருகிறது! அதில் இள முல்லையென இரு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிங்கே சற்றுநேரம் தங்கி இளைப்பாறித்தான் செல்வார்கள்.
அவர்களோடு உங்களை நகருக்கு அனுப்பிவைக்கிறேன். அங்கே மக்கள் சத்திரத்தில் தங்கியிருந்து, நாளை மாலை சமுதாய வீதியில் நடைபெறவிருக்கும் 'சுதந்தரத் தமிழீழத்தின்' அறிவிப்பு விழாவில் கலந்து கொள்ளுங்கள்.
<b>பெரியவர்:</b> ஆகட்டும்! நண்பரே!
<b>சிற்பி :</b> நாளை உங்களைச் சத்திரத்தில் சந்திக்கிறேன்!
இந்தப் பெண்கள் சத்திரத்தில் பொதுச்சேவை செய்பவர்கள். உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்! சரி, புறப்படுங்கள்!
("சல்-சல்"- என்ற ஒலியுடன் மாட்டுவண்டி நகர்கின்றது).
இளமுல்லை : (பாடுகின்றாள்)
"கன்னித்தமிழ் ஈழத்திலே! " மணக்கும் கவிதை கொஞ்சம் பாடுங்களேன்!
(ஆய்! உர்! வேகமாய் ஓடுங்கள் காளைகளே! - கன்னித்தமிழ் ------
----- -----