Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<b>இத்தலைப்பில் முகத்தார் ஆரம்பித்திருந்தார். அதில் எதுவும் எழுதவில்லை. இப்ப ஒரு சிறு வயது ஞாபகத்தை இடுகிறேன். பழைய பகுதிகள் மீள கிடைக்கும் போது இரண்டையும் சேர்க்கலாம்.</b>
<b>ஆண் பூ பெண் பூ பார்ப்பதெப்படி</b>
<img src='http://img23.echo.cx/img23/2207/sp135ge0nn.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img23.echo.cx/img23/1749/mosquitoontridaxthumb14fz14va.jpg' border='0' alt='user posted image'>
இந்த பூவை உங்கள் யாருக்கும் தெரியுமா? எப்படி ஆண் பூவையும் பெண் பூவையும் பிரித்தறிவீர்கள். யாரும் மகரந்த கூட்டையும் குறி சூலகம் இரண்டையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அதி மேதாவித்தனமாக சொன்னால் ஆள் அவுட்.
நான் சொல்லப்போகும் முறையை கவனமாக பின் பற்றினால் இலகுவாக அறியலாம்.
பூவை நீண்ட காம்புடன் கொய்து கொள்ளுங்கள். பூவின் அடியும் காம்பும் இணையுமிடத்தில் பெருவிரலாலும் சுண்டுவிரலாலும் பிடித்து காம்பிலிருந்து பூவை துண்டியுங்கள் அப்போது பூ துள்ளி விழுந்தால் ஆண் பூ மெதுவாக விழுந்தால் பெண் பூ.
இப்படி தாங்க நாங்கள் முதலாம் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது கீழே காட்டப்பட்ட பூவில் ஆண் பூ பெண் பூ கண்டு பிடிக்கிறனாங்கள்.
நாங்கள் அப்ப எதிரில் இருக்கும் ஓராளிட்டை பூவை தயாராய் விரல்களுக்கை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பம். அவர் ஆண் பூ எண்டால் மெதுவாய் நுள்ளி மெதுவாய் விழ வைச்சு இல்லை இது பெண் பூ நீ சொன்னது பிழை எண்டுவம்.
முதலில் போட்ட பூ இங்க இப்ப நிறம்ப பூத்திருக்கு. அதை பாக்க பழைய ஞாபகங்கள் வந்திட்டுது. ஆனால் அது நம்ம ஊரில உள்ளது இல்லை. அதே தாவர குடும்பத்தை சேர்ந்த வேறு தாவரம்.இரண்டாவதா உள்ளது நம்ம ஊரில உள்ளது.
உங்களில யாருக்கும் இப்படி பார்த்து அனுபவம்.
குறிப்பு:
உண்மையில் இது பல பூக்களை கொண்ட பூந்துணர். இதில ஆயிரத்துக்கு மேற்பட்ட பூக்கள் உள்ளன.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி குளக்காட்டன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
உங்கள் பாடசாலையில் நடைபெற்ற மறக்க முடயாத சம்பவங்கள் அல்லது நகைச்சுவையான சம்பவங்களை கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ளலாமே.
அது மட்டும் அல்ல முதல் முதலாக நீங்கள் வெளிநாடு வந்த போது ஏற்ப்பட்ட நகைச்சுவையான அனுபவங்கள் அல்லது இன்றும் உங்கள் நெஞ்ஞங்களை விட்டு அகலாத பசுமையான நிகழ்வுகள் உங்கள் ஊரில் உங்கலால் மறக்க முடியாத மனிதர்கள் சம்பவங்கள் etc etc எதுவாக இருப்பினும் பகிர்ந்து கொள்ளலாமே.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அனைத்து பழைய ஞாபகங்களையும் ஞாபகம் வருதே தலைப்பில் பகிர்ந்து கொண்டால் நல்லது என்று நினைக்கின்றேன். அங்கு குளம் தன்னுடைய பழைய ஞாபகங்களை எழுதியுள்ளார். மற்றும் சிலர் எழுதியிருந்தவை யாழ் தாக்குதலோடு அழிந்து போய் விட்டது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இணைப்பு இதோ
http://www.yarl.com/forum/viewtopic.php?t=5410
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
நன்றிகள் அண்னா
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
எங்கட பாடசாலை நாளில.. கிபீரை மறக்க முடியாது. மணி அடிச்சாப்போல வரும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
கீபிர கண்ட உடன எங்கட பாடசாலைல Teachers மார் தான் முதல் எடுப்பினம் ஒட்டம்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அதுவா...அது யுத்த விமானத்தின் பெயர்
தமிழர் தாயக பிரதேசம் எங்கும் குண்டுகளை பொழிந்து பல தமிழர்களின் உயிர்களை காவுகொன்ட கொடிய அரக்கன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
எல்லாரும் பழைய ஞாபகத்தை சொல்லேக்கை சாத்திரிக்கும் ஒரு ஞாபகம் வருகிது படிக்கிற காலத்திலை சாத்திரிக்கு கவிதையள் கொஞ்சம் எழுதவரும் பள்ளிகூடத்திலை(மானிப்பாய் இந்து) என்ரை வகுப்பு பெடியள் யாரும்பக்கத்திலை மானிப்பாய் மகளிர் கல்லூரி பெட்டையளுக்கு காதல் கடிதம் குடுக்கிறதெண்டா என்னட்டை வருவாங்கள் ஒருகவிதை இல்லாட்டி வருணிச்சு கடிதம் எழுதிதா எண்டு இப்பிடித்தான் ஒருமுறை ஒருநண்பனுக்கு கடிதம் எழுதிகுடுத்தனான் அதை பாத்து எழுதிகுடு எண்டு அவனும் அதை வாங்கி எழுதிற பஞ்சியிலை கீழை தன்ரை பெயரை போட்டிட்டு இடை வேளைநேரத்திலை மதிலாலை பாய்ஞ்சு போய் தான் விரும்பிற பெட்டையிட்டை குடுத்திட்டு வந்திட்டான்.வகுப்பு தொடங்கி கொஞ்சநேரத்தாலை தலைமை மாணவன் ஒருத்தர் வந்து அந்த நண்பனின் பெயரை கூப்பிட்டு அதிபர் வரட்டாம் எண்டு கூட்டி கொண்டு போனான்.எனக்கு விளங்கிட்டிது எங்கையோ பிரச்சனையெண்டு ஆனாலும் அவன்தானே கடிதம் எழுதி குடுத்தவன். என்னை காட்டி குடுக்மாட்டான் எண்டு நினைச்சு கொண்டிருக்க. அதே தலைமை மாணவன் வந்து என்ரை பெயரையும் சொல்லி அதிபர் வரட்டாம் என்றான்.கிழிஞ்சுது போ எண்டு நினைத்து கொண்டு அதிபரின் அறைக்கு போனன்.அப்ப அதிபராயிருந்தவர் சாறி அவற்ரை பேரை சொன்னாலே பள்ளிகூடம் நடுங்கும்.உள்ளை போனால் நண்பன் கடிதம் குடுத்த பெண் கண்ணை கசக்கியபடி. அவரின் வகுப்பாசிரியர் பத்திர காளி எண்டு கேள்விபட்டிருக்கிறன் அண்டைக்கு தான்பாத்தனான்அப்பிடி நிண்டார்.நண்பன் அப்பாவியாய் தலையை கவிண்டபடி நிண்டான்.அதிபர் என்னைபார்த்து வாரும் கவிஞரே எண்டார்எனக்கு விழங்கிட்டுது எல்லாத்தையும் நண்பன்(துரோகி) காட்டி குடுத்திட்டான் எண்டு.அதிபர் கடிதத்தை காட்டி இது யார்எழுதினது எண்டு கேட்டார் அப்பதான் எனக்கு தெரியும் அந்த அலுப்பு பிடிச்சவன் நான் எழுதினதை அப்பிடியே குடுத்து தானும் மாட்டுபட்டு என்னையும் மாட்டிவிட்டிட்டான் எண்டு.அதிபர் அவனுக்கு சில அடிபோட்டு அடுத்தநாள் பெற்றோரை கூட்டிவரும்படி அனுப்பிவிட்டு சாத்திரிக்கு நடந்திது பாருங்கோ சுத்தி சுத்தி.அடியை வாங்கி கொண்டு அதிபரை கேட்டன் சேர் கடிதம் குடுத்தது அவன் அவனுக்கு 4 5 அடி எனக்கேன் இப்பிடி போட்டு அடிக்கிறீங்கள் எண்டு கேக்க அவர் சொன்னார்.அவன் இதோடை கடிதம் குடுக்கிறதை விட்டிடுவான் ஆனால் உன்னை சும்மா விட்டா உன்னாலை கனபேர் கடிதம் குடுப்பினம் அதுதான் உனக்கு அடிகூட அதைவிட ஒரு வாத்தியின்ரை பிள்ளை இப்பிடி நடக்க கூடாது எண்டு அதுக்கும் 4 5 அடி இப்பிடி முந்தியே ஊர் சோலி பாத்து அடி வாங்கின்னான். இப்பையும் அந்த பழக்கம் விட்டு போகுதில்லை
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அப்ப இப்ப கொடுக்கிறேல்லையா லெட்டர் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாழிலை நாலைஞ்சு மொடல் லெட்டர் போட்டால் எங்கடை பொடியளும் அதை பார்த்து எழுதிக் கொடுப்பாங்களே சாதிரியார்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .
[b][size=18]
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அதுதான் போட்டு கொண்டிருக்கிறன் பாக்கேல்லையோ கவிதன்
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
சொல்லிப்போட்டால் உதவி.
ஏனென்றால் நீங்க போடுறதெல்லாம் ஒரேமாதிரித்தான் இருக்கு.
மொடல் லெற்றர் போட்டாம் நாம் பயன்பெறலாம் என்ற நப்பாசை<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
07-06-2005, 09:19 AM
(This post was last modified: 06-13-2020, 09:27 AM by admin.)
மேலும் கபீரைப் பற்றிய தகவல்களுக்கு,