07-14-2005, 07:45 AM
<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Tamil/13895662_vaira120.jpg' border='0' alt='user posted image'>கவிஞர் வைரமுத்து தனது 53-வது பிறந்தநாளை, கவிஞர்கள் திருநாளாக நேற்று கொண்டாடினார்.
பொன்மணி மாளிகையில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவிஞர் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய 2 பேருக்கும் கவிஞர்கள் திருநாள் விருதும், தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
விருது பெற்ற 2 கவிஞர்களையும், அவற்றை வழங்கிய வைரமுத்துவையும் நீதிபதி கோகுல கிருஷ்ணன், கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் ஆகிய இருவரும் வாழ்த்தி பேசினார்கள்.
கவிஞர்கள் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய இருவரும் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.
காசி ஆனந்தன் பேசும்போது, தமிழ் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழிக்குள் ஏற்கனவே சமஸ்கிருதம் ஊடுருவியது. இப்போது ஆங்கிலம் ஊடுருவி 80 சதவீதம் அது வளர்ச்சி அடைந்து விட் டது. காதலை வெளிப்படுத்தும் போது கூட, நான் உங்களை காதலிக்கிறேன் என்று யாரும் சொல்வதில்லை. ஐ லவ்யூ' என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் என்றார்.
அவரைத் தொடர்ந்து வைரமுத்து பேசியதாவது
இந்தநாள் ஒரு தனி மனிதன் பிறந்தநாள் அல்ல. கவிஞர்கள் திருநாள் என்று கொண்டாடினாலும் கூட, எங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக கொண்டாடப்படுவது அல்ல.
இதுதான் நான் பெறும் முதல் விருது என்று கவிஞர் இன்குலாப் இங்கே பேசும்போது, என் கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கியது. இதுவே என் கடைசி விருதாகக் கூட இருக்கலாம் என்று அவர் சொன்னபோது, உடைந்து போனேன்.
எத்தனையோ சபைகளில் தான் நிராகரிக்கப்பட்டதாக கவிஞர் காசிஆனந்தன் பேசும்போது கூறினார். அதற்காக நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் நிராகரிக் கப்பட்டதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இவர் எழுதிய கவிதை வேண்டும். இவர் வேண்டாமா? சூடு வேண்டும். நெருப்பு வேண்டாமா? தண்ணீர் வேண்டும் மழை வேண்டாமா?, கவிதையும் கவிஞனும் சேர்ந்தே மதிக்கப்பட வேண்டும்.
2 கவிஞர்களும் ஒரே புள்ளியில் இயங்குபவர்கள். கொண்ட கொள்கையில் இருந்து விலகாதவர்கள். வாழ்க்கைக்காக, சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.
நாங்கள் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறோம். தங்கத்தில் சிறு செம்பு கலப்பது போல்... இது, தங்கத்தை மாசுபடுத்துவதற்காக அல்ல. தங்கத்தில் நகை செய்வதற்காக...
காசி ஆனந்தனின் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் ஈடுகட்டப்படும். தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். இதை தமிழன் செய்யாமல், வேறு யார் செய்வார்கள்?
இவ்வாறு வைரமுத்து பேசினார்.
நன்றி: தமிழ் சிபி
பொன்மணி மாளிகையில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவிஞர் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய 2 பேருக்கும் கவிஞர்கள் திருநாள் விருதும், தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
விருது பெற்ற 2 கவிஞர்களையும், அவற்றை வழங்கிய வைரமுத்துவையும் நீதிபதி கோகுல கிருஷ்ணன், கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் ஆகிய இருவரும் வாழ்த்தி பேசினார்கள்.
கவிஞர்கள் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய இருவரும் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.
காசி ஆனந்தன் பேசும்போது, தமிழ் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழிக்குள் ஏற்கனவே சமஸ்கிருதம் ஊடுருவியது. இப்போது ஆங்கிலம் ஊடுருவி 80 சதவீதம் அது வளர்ச்சி அடைந்து விட் டது. காதலை வெளிப்படுத்தும் போது கூட, நான் உங்களை காதலிக்கிறேன் என்று யாரும் சொல்வதில்லை. ஐ லவ்யூ' என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் என்றார்.
அவரைத் தொடர்ந்து வைரமுத்து பேசியதாவது
இந்தநாள் ஒரு தனி மனிதன் பிறந்தநாள் அல்ல. கவிஞர்கள் திருநாள் என்று கொண்டாடினாலும் கூட, எங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக கொண்டாடப்படுவது அல்ல.
இதுதான் நான் பெறும் முதல் விருது என்று கவிஞர் இன்குலாப் இங்கே பேசும்போது, என் கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கியது. இதுவே என் கடைசி விருதாகக் கூட இருக்கலாம் என்று அவர் சொன்னபோது, உடைந்து போனேன்.
எத்தனையோ சபைகளில் தான் நிராகரிக்கப்பட்டதாக கவிஞர் காசிஆனந்தன் பேசும்போது கூறினார். அதற்காக நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் நிராகரிக் கப்பட்டதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இவர் எழுதிய கவிதை வேண்டும். இவர் வேண்டாமா? சூடு வேண்டும். நெருப்பு வேண்டாமா? தண்ணீர் வேண்டும் மழை வேண்டாமா?, கவிதையும் கவிஞனும் சேர்ந்தே மதிக்கப்பட வேண்டும்.
2 கவிஞர்களும் ஒரே புள்ளியில் இயங்குபவர்கள். கொண்ட கொள்கையில் இருந்து விலகாதவர்கள். வாழ்க்கைக்காக, சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.
நாங்கள் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறோம். தங்கத்தில் சிறு செம்பு கலப்பது போல்... இது, தங்கத்தை மாசுபடுத்துவதற்காக அல்ல. தங்கத்தில் நகை செய்வதற்காக...
காசி ஆனந்தனின் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் ஈடுகட்டப்படும். தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். இதை தமிழன் செய்யாமல், வேறு யார் செய்வார்கள்?
இவ்வாறு வைரமுத்து பேசினார்.
நன்றி: தமிழ் சிபி