10-22-2003, 12:13 PM
shanthy Wrote:தென்னிந்தியத்தமிழ்ச் சினமாத்திரைப்படங்கள் எம்தமிழ்க்குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்க உதவுகிறதா ? உதவுகிறது எனச்சில பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபற்றி களமாடும் பெற்றோர்கள் , இளையவர்கள் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
சினிமா பார்ப்பது மொழி கற்பதற்கல்ல. முக்கியமாக அது ஒரு பொழுது போக்கு........................
எந்த நாட்டவரும் சினிமா பார்த்து மொழி கற்பதில்லை. அதற்கு ஒரு பாடசாலைக்குப் போக வேண்டும்.
நாம் வாழும் நாடுகளில் உள்ள மொழிகளைக் கற்க அந்தந்த மொழி சினிமா பார்த்து கற்கலாமே? அவை கொஞ்சம் உறுதுணையாகலாம். நாம் வாழும் நாடுகளிலேயே ஒரே மொழிக்குள் எத்தனையோ வித்தியாசங்கள்-ஒயில்கள்(சிலாங்).
நமது நாட்டில் கூட யாழ்பாணம்-மட்டக்களப்பு - மலைநாடு - மன்னார் -திருகோணமலை- கொழும்பு ............................. இப்படி எத்தனையோ பேச்சுவழக்கு தன்மைகள்................. இது போல் இந்திய தமிழிலும் எத்தனையோ பேச்சு வழக்குகள். இவற்றை பாகுபடுத்த அடிப்படை மொழிக் கல்வி அவசியம். இது ஆங்கிலத்துக்கும் இருக்கிறது , ஏனைய மொழிகளுக்கும் இருகக்கிறது.
நாங்களும்தான் சினிமா பார்க்கிறோம், ஆனால் பரதம் ஆடவோ , சங்கீத கச்சேரிகள் செய்யவோ,இசையமைக்கவோ முடியவில்லை. சினிமா பார்ப்பது மொழி கற்க என்றால் பாவம்...............எனவே முறையான ஒருவரிடம் கற்பது அறிவுடமை.
நீங்கள் சொல்வது போல் நினைப்பது , தண்ணீரில் தள்ளி விட்டால் நீந்த முடியும் என்பது போல் இருக்கிறது. தத்தளித்து சில வேளை உயிர் தப்பலாம்,தள்ளிவிடும் இடத்தைப் பொறுத்து. அது நீச்சல் தெரிந்த நிலையாகாது.
ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்தால் மட்டுமே அதை பாகு படுத்திப் பார்க்க இயலும். அவரவர் நாடுகளில் அவரவர் படைப்புகளை அவரவருக்காகத்தான் படைக்கிறார்கள். அதை நாம் மடியில் துாக்கி வைத்துக்கொண்டு குத்துது, குடையிது என்றால் யார் பொறுப்பு?
[size=15]
இவற்றை விட்டால்,நாங்கள் எதைப் பார்ப்பது என்று சொல்லுங்கள்?
பிரயோசனமாய் இருக்கும்..
எம்மால் முடியாத ஒன்றை நினைத்து வெட்கப்பட வேண்டுமே தவிர ,
அடுத்தவனை நிந்தித்து , அடுத்தவன் பெயர் பாடி நம் வயிறை வளர்ப்பது போன்ற கேவலம் அளவுக்கு படு கேவலமான செயல் வேறொன்றுமில்லை..........
-அஜீவன்
[scroll:869874d0bd][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்