10-24-2003, 01:06 PM
shanthy Wrote:1. சினிமா பார்ப்பது பொழுது போக்கிற்குத்தான். ஆனால் இங்கு தமிழைக்காக்க , எமது குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்கச் சினிமா உதவுகிறதெனப் பலரது நினைப்பு.
2.சொன்னாளே ஒரு தத்துவம் விஜஜ் உயிருடன் உள்ளவரை நான் சினிமா பார்ப்பேன். தமிழை மறவேன் என்றாள். விஜஜ் போல் பலபுதியவர்கள் வருவார்கள் அவர்கள் வரும்போது நீங்கள் நேசிக்கும் விஜஜ்கூட மறைந்து விடுவார் என்றதற்கு அவள் அப்பிடியொரு நிலைவந்தால் நான் தமிழையே மறந்து விடுவேன் என்றாள்.
இச்சம்பவம் தமிழ்ச்சினிமா எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிவீர்கள்.
நம்மவர்கள் கலைஞர்களை உருவாக்கவில்லை. இந்தியாவிலும் ஆரம்ப காலத்தில் கூத்தாடிகள் என்றுதான் கூறினார்கள். ஆரம்ப காலத்துக் கலைஞர்களை தீண்டாதவர்கள் , தாசிகள் போல்தான் பார்த்தார்கள்..................ஆனால் இன்று உலக அரங்கில் முகம் தெரியும் ஊடகம் சினிமா-தொலைக்காட்சி என்றாகிவிட்டது.
ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
என்பது போலாகியது.இவை காலத்தின் மாறுதல்.
அந்தக் குழந்தை மட்டுமல்ல ,ஊரில் எங்கள் வீடுகளிலும் சிவாஜி - MGR போட்டோக்கள் இருந்தனவே அதை நாங்களா வைத்தோம்?
நமது வீடுகளில் என்ன நடக்கிறதோ அதை வைத்துத்தான் குழந்தைகள் அடுத்த அடியை நகர்த்துகிறார்கள்.
சில தமிழ் வீடுகளில் 24 மணி நேரத்தில் 18 மணி நேரமாவது தமிழ் TV ஓடிக் கொண்டேயிருக்கிறது. பெற்றோர் சீரியல் பார்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
குழந்தைகள் Viva.Mtv,Music chanel போன்றவற்றை பார்த்து ரசிக்கிறார்கள்.அது போல ஆடுகிறார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட பெற்றோருக்கு நேரமில்லை. சீரியலில் ராதிகாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் போய்விடும்.
சீரியல் முடியும் வரை என்னோடு கூட சரியாகப் பேசவில்லை. இவை யாருடைய தவறு?
நீங்கள் சொல்வது போல விஜயின் ரசிகையாக அந்தக் குழந்தை இருப்பது தவறென்றால் இப்படிப் பட்டவர்களை எங்கு கொண்டு போய் விடுவது?
X Wrote:விஜய் அஜித்தை ஏன் சொன்னேன் என்றால் அவர்களை உமக்கு தெரியுமென்பதால் விஜய் திருமணம் முடித்திருப்பது தாயகத்தில் எனது பக்கத்து ஊர் பெண்தான். அஜித் வெளிநாடு வந்திருந்தால் அவரும் எங்கள் பெண்ணைத்தான் கல்யாணம் செய்திருப்பார்.
உமக்;கு ஈழத்து கலைஞர்களை தெரியுமா? உமக்;கு தெரியாது என்பதாலேயே அவர்களின் பெயரை சொல்லவில்லை.
உமக்கு ரமணனைத்தெரியுமா? தர்சனைத்தெரியுமா? அல்லது ராஜா அண்னனைத்தெரியுமா? இவர்கள் பற்றி உமக்குதெரிந்திருந்தால் தானே அவர்கள் பெயரை உமக்கு நான் சொல்லலாம்.
ரமனனுடன் தனிப்பட்ட ரீதியில் நான் பேசியிருக்கிறேன் என்பது உமக்குத்தெரியுமா? அவரின் கைத்தொலைபேசி இலக்கம் கூட என்னிடமுள்ளது.
உமது நன்மைக்கு அறிவுரைச்சென்னது எனது தப்பு
என்னை டாக்குதரிடம் போகசொல்லும் அளவுக்கு எனது மனதை புண்படுத்திவிட்டீர்.
??????????????????????????
அஜீவன்