10-24-2003, 04:10 PM
வணக்கம் அஜீவன் ! தங்கள் ஆதங்கம் புரிகிறது. நம்மவர்கள் கலைஞர்களை உருவாக்கில்லை என்பதை விட கலைஞர்களை உருவாகவிடவில்லை என்பது பொருத்தம் எனக்கருதுகிறேன்.
உலகின் முகம் தெரியும் சினிமாவுக்குள்ளிருந்து உலகத்தையும் பார்க்க வேண்டும் எம் இளையதலைமுறை.
சினிமா ஒரு கனவுலகு , பொழுது போக்குச் சாதனம் அது அப்படித்தான் இருக்கும் என்கின்ற வாதத்தைக்கூட ஏற்க நான் தயாரில்லை. கனவில் மட்டும் எத்தனை காலம் சினிமாவை வைத்திருக்கப் போகிறார்கள் இந்தச் சினிமாக்காரர்கள் ? தற்போது உலகு எத்தனையோ சுருங்கிவிட்டது.(உருண ;டையான உலகம் சுருங்கியதாக கருத்து இல்லை) உலக நடப்பை , உலகின் நிலவைரத்தைத் தொலைக்காட்சிகள் சொல்லும் வரை வளர்ந்துள்ளது. அத்கைய தொலைக்காட்சிகள் மனிதiனை மனநோயாளியாக்கும்படியாகச் சினிமாவைவோ சீரியல்களைளோ தருவதில் அதற்கு அடிமைகளாக நமது தலைமுறையை உருவாக்குவது கணணியுகத்துக் குழந்தைகளை எங்கே கொண்டு போகிறது ?
சிலவீடுகளில் நீங்கள் கூறியது போல் நடக்கிறது. அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது எது அல்லது யார் ?
நான்சொன்ன சம்பவத்துக்குரிய பிள்ளையில் நான் கோபப்படவில்லை. ஏனெனில் அவளை வழிநடத்தவேண்டியவர்கள் விழிஒளிக்காட்சிப்பெட்டிக்குள் ஒளிந்துள்ளதே காரணம். ஆனால் அவர்களை அடிமையாக்கி வைத்திருப்போர் எங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்புவதாய்க் கூறும் வீடியோக்கடைகளும் வியாபர ஊடகங்களுமே.
இன்று ஜெயா ரீவியில் ஒரு பட்டிமன்றம் போனது அதன் தொடக்கம் முடிவு தெரியாது. அதில் பாடலாசிரியர் சினேகனும் பங்குபற்றியிருந்தார். அவர் ஒரு கருத்தைச் சொன்னார். நல்ல பாடல்களையும் , நல்ல ரசனையையும் பெறவேண்டியவர்கள் மக்கள் என்றார். ஏனெனில் நல்ல பாடல்களை மக்கள் கேட்கிறார்களில்லை. தனக்கு விருதைப்பெற்றுத்தந்த பாடலை யாரும் ரசிக்கவில்லையாம். ஆனால் கல்யாணம் கட்டிப்போட்டு ஓடுவோம் என் பாடலை கோழிகொண்டைக்கோழி மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றதாம். எனவே நல்லதை ஏற்பது மக்கள் கையில் உள்ளது எனச்சொன்னார். இதையெல்லாம் நொண்டிச்சாட்டென்றே நான் சொல்கிறேன். மக்களுக்கு நல்ல பாடலை , நல்ல சினிமாவைக் கொடுங்கள் அவர்கள் நிச்சயம் நல்ல ரசனையாளர்களாவார்கள். ரசிப்பார்கள். அதற்காக ஓடிட்டுக்கட்டுவோமைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள் ஆகவேதான் அத்தகைய பாடல்களைக் கொடுக்கிறோம் என்பது என்ன நியாயம் ? இதை ஆரம்பித்து வைத்தவர்கள் சினிமா வியாபாரிகள்.
(கருத்தாளர்கள் மன்னிக்கவும் கருத்தாட எடுத்த விடயத்தைத்தாண்டிக் கருத்து எழுத வேண்டியதற்கு)
??????????????????????????
அஜீவன்[/quote][/quote]
உலகின் முகம் தெரியும் சினிமாவுக்குள்ளிருந்து உலகத்தையும் பார்க்க வேண்டும் எம் இளையதலைமுறை.
சினிமா ஒரு கனவுலகு , பொழுது போக்குச் சாதனம் அது அப்படித்தான் இருக்கும் என்கின்ற வாதத்தைக்கூட ஏற்க நான் தயாரில்லை. கனவில் மட்டும் எத்தனை காலம் சினிமாவை வைத்திருக்கப் போகிறார்கள் இந்தச் சினிமாக்காரர்கள் ? தற்போது உலகு எத்தனையோ சுருங்கிவிட்டது.(உருண ;டையான உலகம் சுருங்கியதாக கருத்து இல்லை) உலக நடப்பை , உலகின் நிலவைரத்தைத் தொலைக்காட்சிகள் சொல்லும் வரை வளர்ந்துள்ளது. அத்கைய தொலைக்காட்சிகள் மனிதiனை மனநோயாளியாக்கும்படியாகச் சினிமாவைவோ சீரியல்களைளோ தருவதில் அதற்கு அடிமைகளாக நமது தலைமுறையை உருவாக்குவது கணணியுகத்துக் குழந்தைகளை எங்கே கொண்டு போகிறது ?
சிலவீடுகளில் நீங்கள் கூறியது போல் நடக்கிறது. அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது எது அல்லது யார் ?
நான்சொன்ன சம்பவத்துக்குரிய பிள்ளையில் நான் கோபப்படவில்லை. ஏனெனில் அவளை வழிநடத்தவேண்டியவர்கள் விழிஒளிக்காட்சிப்பெட்டிக்குள் ஒளிந்துள்ளதே காரணம். ஆனால் அவர்களை அடிமையாக்கி வைத்திருப்போர் எங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்புவதாய்க் கூறும் வீடியோக்கடைகளும் வியாபர ஊடகங்களுமே.
இன்று ஜெயா ரீவியில் ஒரு பட்டிமன்றம் போனது அதன் தொடக்கம் முடிவு தெரியாது. அதில் பாடலாசிரியர் சினேகனும் பங்குபற்றியிருந்தார். அவர் ஒரு கருத்தைச் சொன்னார். நல்ல பாடல்களையும் , நல்ல ரசனையையும் பெறவேண்டியவர்கள் மக்கள் என்றார். ஏனெனில் நல்ல பாடல்களை மக்கள் கேட்கிறார்களில்லை. தனக்கு விருதைப்பெற்றுத்தந்த பாடலை யாரும் ரசிக்கவில்லையாம். ஆனால் கல்யாணம் கட்டிப்போட்டு ஓடுவோம் என் பாடலை கோழிகொண்டைக்கோழி மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றதாம். எனவே நல்லதை ஏற்பது மக்கள் கையில் உள்ளது எனச்சொன்னார். இதையெல்லாம் நொண்டிச்சாட்டென்றே நான் சொல்கிறேன். மக்களுக்கு நல்ல பாடலை , நல்ல சினிமாவைக் கொடுங்கள் அவர்கள் நிச்சயம் நல்ல ரசனையாளர்களாவார்கள். ரசிப்பார்கள். அதற்காக ஓடிட்டுக்கட்டுவோமைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள் ஆகவேதான் அத்தகைய பாடல்களைக் கொடுக்கிறோம் என்பது என்ன நியாயம் ? இதை ஆரம்பித்து வைத்தவர்கள் சினிமா வியாபாரிகள்.
(கருத்தாளர்கள் மன்னிக்கவும் கருத்தாட எடுத்த விடயத்தைத்தாண்டிக் கருத்து எழுத வேண்டியதற்கு)
X Wrote:விஜய் அஜித்தை ஏன் சொன்னேன் என்றால் அவர்களை உமக்கு தெரியுமென்பதால் விஜய் திருமணம் முடித்திருப்பது தாயகத்தில் எனது பக்கத்து ஊர் பெண்தான். அஜித் வெளிநாடு வந்திருந்தால் அவரும் எங்கள் பெண்ணைத்தான் கல்யாணம் செய்திருப்பார்.
உமக்;கு ஈழத்து கலைஞர்களை தெரியுமா? உமக்;கு தெரியாது என்பதாலேயே அவர்களின் பெயரை சொல்லவில்லை.
உமக்கு ரமணனைத்தெரியுமா? தர்சனைத்தெரியுமா? அல்லது ராஜா அண்னனைத்தெரியுமா? இவர்கள் பற்றி உமக்குதெரிந்திருந்தால் தானே அவர்கள் பெயரை உமக்கு நான் சொல்லலாம்.
ரமனனுடன் தனிப்பட்ட ரீதியில் நான் பேசியிருக்கிறேன் என்பது உமக்குத்தெரியுமா? அவரின் கைத்தொலைபேசி இலக்கம் கூட என்னிடமுள்ளது.
உமது நன்மைக்கு அறிவுரைச்சென்னது எனது தப்பு
என்னை டாக்குதரிடம் போகசொல்லும் அளவுக்கு எனது மனதை புண்படுத்திவிட்டீர்.
??????????????????????????
அஜீவன்[/quote][/quote]
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com