10-26-2003, 07:11 PM
shanthy Wrote:வணக்கம் அஜீவன் ! நான் முற்றுமுழுதாக சினிமா எதிர்பாளியல்ல. சினிமா , தொலைக்காட்சி அது கண்ணுணரும் ஒரு இனிய சாதனம். அது சமூகத்தைக் குழியில் புதைக்கும் கருத்துக்கள் பாடல்களைத் தருவதால் அந்தச்சமூகத்தின் ஆணிவேரே பாறுவதற்கு வழியமைக்கும். அந்த குறுக்குத்தனமான உளைப்பையே நான் எதிர்க்கிறேன். அது மணிரத்தினமாக இருந்தாலென்ன பாலுமகேந்திராவாக இருந்தாலென்ன அது நீங்களாக இருந்தாலும் நான் எதிர்ப்பேன்.
எனது குறும்படம் எச்சில்போர்வை யாழ்களத்தின் கடின உழைப்பில் களமாடி நிற்கிறது.
தவிர என்னோடு கரம் சேர்த்து உழைத்த புலம் பெயர் கலைஞர்களின் உழைப்போடும் தாகங்களுடனும் உருவான 13 நிமிட குறும்படத்துக்கு உங்கள் விமர்சனத்தை அல்லது கருத்தை முன் வையுங்கள்.
இதை நம் அனைத்துக் கலைஞர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.........
நாம் ஏன் நம்மவரது படைப்புகளை பார்க்காமல் ,அவற்றை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை பற்றிப் பேச வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் நாம் ஏதாவது நமக்காக செய்ய வேண்டும். அடுத்தவரிடமிருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்களை பற்றி ஏளனப் பேச்சு பேசி பேசியே நாமே நம்மை எள்ளி நகையாடப்பட வைத்து விடக் கூடாது என்று என்னோடு வேலை செய்யும் கலைஞர்களுக்கு சொல்வேன்.
எனக்குத் தெரிந்த எதையும் மறைக்காமல் சொல்லிக் கொடுப்பேன். என்னோடு இருப்பவர்கள் என் நண்பர்களல்ல,அவர்கள் எனக்குள் ஒரு அங்கம்.கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் என்னுள் ஓர் மூச்சுதான்.
எனவே உங்களைப் போன்றவர்கள் நல்லதை மட்டும் துாவி பயிரிட வேண்டி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம் சாந்தி.
கலை என் உயிர் மூச்சுக் காற்று அதுவே என் ஜீவன்................ -அஜீவன்