10-26-2003, 09:34 PM
[quote]எனது குறும்படம் எச்சில்போர்வை யாழ்களத்தின் கடின உழைப்பில் களமாடி நிற்கிறது.
தவிர என்னோடு கரம் சேர்த்து உழைத்த புலம் பெயர் கலைஞர்களின் உழைப்போடும் தாகங்களுடனும் உருவான 13 நிமிட குறும்படத்துக்கு உங்கள் விமர்சனத்தை அல்லது கருத்தை முன் வையுங்கள்.
இதை நம் அனைத்துக் கலைஞர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.........
நாம் ஏன் நம்மவரது படைப்புகளை பார்க்காமல் ,அவற்றை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை பற்றிப் பேச வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் நாம் ஏதாவது நமக்காக செய்ய வேண்டும். அடுத்தவரிடமிருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்களை பற்றி ஏளனப் பேச்சு பேசி பேசியே நாமே நம்மை எள்ளி நகையாடப்பட வைத்து விடக் கூடாது என்று என்னோடு வேலை செய்யும் கலைஞர்களுக்கு சொல்வேன்.
எனக்குத் தெரிந்த எதையும் மறைக்காமல் சொல்லிக் கொடுப்பேன். என்னோடு இருப்பவர்கள் என் நண்பர்களல்ல,அவர்கள் எனக்குள் ஒரு அங்கம்.கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் என்னுள் ஓர் மூச்சுதான்.
நன்றி வணக்கம் சாந்தி.
கலை என் உயிர் மூச்சுக் காற்று அதுவே என் ஜீவன்................ -அஜீவன்
உங்கள் குறும்படங்கள் எதையும் இன்னும் பார்க்கும் வசதி கிடைக்கவில்லை. தாயகத்தில் வெளியான படங்களில் 90வீதமானவை பார்த்துள்ளேன். தங்கள் படங்களை எனக்கும் அனுப்பி வையுங்கள். எனது கருத்தினை எழுதுகிறேன்.
நாங்கள் எதிலும் நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விலக்கத்தயார். இவற்றைப் பிரித்தறியாது , பிரித்துப்பார்க்காது எல்லாவற்றையும் மொண்டுகொள்ளும் சமூகம் உருவாக நாம் வழிசமைக்கக்கூடாது. அதுவே என் விருப்பு.
உங்களுக்குத் தெரிந்த எதையும் மற்றவருக்குச் சொல்லிக்கொடுக்கும் பண்புள்ளம் உங்களிடம் இருக்கிறது. அதுவே உங்களை மேன்மைப்படுத்தும். உங்கள் போன்ற எமது கலைஞர்களை நமது கலையுலகு உள்வாங்க வேண்டும். உங்களிடமிருந்து நிறையக்கற்றுக் கொள்ள வேண்டும். திறக்க வேண்டிய கண்கள் விழிமடல் திறந்து உங்களை உள்வாங்க என் பிரார்த்தனையும் கூடவே உள்ளது.
தவிர என்னோடு கரம் சேர்த்து உழைத்த புலம் பெயர் கலைஞர்களின் உழைப்போடும் தாகங்களுடனும் உருவான 13 நிமிட குறும்படத்துக்கு உங்கள் விமர்சனத்தை அல்லது கருத்தை முன் வையுங்கள்.
இதை நம் அனைத்துக் கலைஞர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.........
நாம் ஏன் நம்மவரது படைப்புகளை பார்க்காமல் ,அவற்றை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை பற்றிப் பேச வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் நாம் ஏதாவது நமக்காக செய்ய வேண்டும். அடுத்தவரிடமிருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்களை பற்றி ஏளனப் பேச்சு பேசி பேசியே நாமே நம்மை எள்ளி நகையாடப்பட வைத்து விடக் கூடாது என்று என்னோடு வேலை செய்யும் கலைஞர்களுக்கு சொல்வேன்.
எனக்குத் தெரிந்த எதையும் மறைக்காமல் சொல்லிக் கொடுப்பேன். என்னோடு இருப்பவர்கள் என் நண்பர்களல்ல,அவர்கள் எனக்குள் ஒரு அங்கம்.கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் என்னுள் ஓர் மூச்சுதான்.
நன்றி வணக்கம் சாந்தி.
கலை என் உயிர் மூச்சுக் காற்று அதுவே என் ஜீவன்................ -அஜீவன்
உங்கள் குறும்படங்கள் எதையும் இன்னும் பார்க்கும் வசதி கிடைக்கவில்லை. தாயகத்தில் வெளியான படங்களில் 90வீதமானவை பார்த்துள்ளேன். தங்கள் படங்களை எனக்கும் அனுப்பி வையுங்கள். எனது கருத்தினை எழுதுகிறேன்.
நாங்கள் எதிலும் நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விலக்கத்தயார். இவற்றைப் பிரித்தறியாது , பிரித்துப்பார்க்காது எல்லாவற்றையும் மொண்டுகொள்ளும் சமூகம் உருவாக நாம் வழிசமைக்கக்கூடாது. அதுவே என் விருப்பு.
உங்களுக்குத் தெரிந்த எதையும் மற்றவருக்குச் சொல்லிக்கொடுக்கும் பண்புள்ளம் உங்களிடம் இருக்கிறது. அதுவே உங்களை மேன்மைப்படுத்தும். உங்கள் போன்ற எமது கலைஞர்களை நமது கலையுலகு உள்வாங்க வேண்டும். உங்களிடமிருந்து நிறையக்கற்றுக் கொள்ள வேண்டும். திறக்க வேண்டிய கண்கள் விழிமடல் திறந்து உங்களை உள்வாங்க என் பிரார்த்தனையும் கூடவே உள்ளது.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com