08-25-2005, 09:57 PM
<b>அறவண அடிகளை தொழுத காதை</b>
அறவணடிகளைச் சந்திக்க வேண்டும் என்ற பேரவாவால் தன் தாயாருடனும் சுதமதியுடனும் புத்த பள்ளி சென்றாள். அறவணடிகள் எங்கு உள்ளார் என்று கேட்டு முதிய நிலையில் இருந்த அறவணடிகளை வணங்கி பணிந்து உபசரித்தாள்.. அடிகளிடம் மணிமேகலை தான் உவவனம் சென்றதையும்,அங்கு நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் ஒன்று விடாது கூறினாள். இவ்வாறு மணிமேகலை உரைத்ததும் அனைத்தும் கேட்டு அறிந்தார் அடிகள். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. மணிமேகலா தெய்வத்தின் அருள் பெற்ற மணிமேகலையை அவர் பெரிதும் பாராட்டியுரைத்தார்
அறவணடிகள் புத்த பெருமானின் பெருமைகளை கூறினார் அப்புறம் மணிமேகலையின் சிறப்புக்களை கூறினார்.
மணிமேகலா தெய்வத்தின் அருளைப் பெற்றவளே நீ இந்த நாட்டில் பலவிதமான அற்புதங்களை செய்ய போகிறாய். இவ்வாறு நீ நிகழ்த்த போகின்ற புதுமைகளுக்கு பிறகு தான் எனது அறிவுரைகள் உனது மனதில் ஆழமாகப் பதியும். உன்னுடன் வந்திருக்கும் மாதவி சுதமதி இருவரும் பாதபங்கஜ மலையை தரிசித்த பின்னர் புத்த பெருமானின் திருவடிகளை வணங்கி எல்லா விதமான தீய வினைகளிலிருந்தும் விலகி உயர் பெரும் வீட்டும் பேற்றையடைவார்கள். உன்னிடம் அளிக்கப்பட்ட அமுதசுரபியால் மக்கள் பசி மட்டுமன்றி தேவர்களின் பசியையும் போக்க வேண்டும்; இதுவே சிறந்த அறமாகும். எனவே இந்த உலகத்திலுள்ள அத்தனை உயிர்களின் பசிப்பிணியை தீர்த்து சிறப்புடன் வாழ்வாயாக என்று வாழ்த்த அவ்விதமே செய்வதாக மணிமேகலை பணிவுடன் கூறினாள்.
அறவணடிகளைச் சந்திக்க வேண்டும் என்ற பேரவாவால் தன் தாயாருடனும் சுதமதியுடனும் புத்த பள்ளி சென்றாள். அறவணடிகள் எங்கு உள்ளார் என்று கேட்டு முதிய நிலையில் இருந்த அறவணடிகளை வணங்கி பணிந்து உபசரித்தாள்.. அடிகளிடம் மணிமேகலை தான் உவவனம் சென்றதையும்,அங்கு நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் ஒன்று விடாது கூறினாள். இவ்வாறு மணிமேகலை உரைத்ததும் அனைத்தும் கேட்டு அறிந்தார் அடிகள். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. மணிமேகலா தெய்வத்தின் அருள் பெற்ற மணிமேகலையை அவர் பெரிதும் பாராட்டியுரைத்தார்
அறவணடிகள் புத்த பெருமானின் பெருமைகளை கூறினார் அப்புறம் மணிமேகலையின் சிறப்புக்களை கூறினார்.
மணிமேகலா தெய்வத்தின் அருளைப் பெற்றவளே நீ இந்த நாட்டில் பலவிதமான அற்புதங்களை செய்ய போகிறாய். இவ்வாறு நீ நிகழ்த்த போகின்ற புதுமைகளுக்கு பிறகு தான் எனது அறிவுரைகள் உனது மனதில் ஆழமாகப் பதியும். உன்னுடன் வந்திருக்கும் மாதவி சுதமதி இருவரும் பாதபங்கஜ மலையை தரிசித்த பின்னர் புத்த பெருமானின் திருவடிகளை வணங்கி எல்லா விதமான தீய வினைகளிலிருந்தும் விலகி உயர் பெரும் வீட்டும் பேற்றையடைவார்கள். உன்னிடம் அளிக்கப்பட்ட அமுதசுரபியால் மக்கள் பசி மட்டுமன்றி தேவர்களின் பசியையும் போக்க வேண்டும்; இதுவே சிறந்த அறமாகும். எனவே இந்த உலகத்திலுள்ள அத்தனை உயிர்களின் பசிப்பிணியை தீர்த்து சிறப்புடன் வாழ்வாயாக என்று வாழ்த்த அவ்விதமே செய்வதாக மணிமேகலை பணிவுடன் கூறினாள்.
<b> .. .. !!</b>