08-26-2005, 02:07 AM
<b>உதயகுமாரன் அம்பலம் புகுந்த கதை.</b>
மணிமேகலை இவ்வாறு செய்வதை பெரிதும் விரும்பாத மாதவியின் தாயாரான சித்திராபதிக்கு கோவமும் வருத்தமும் ஏற்பட்டது. அவள் உதயகுமாரனை மாளிகை சென்று அவனைக் கண்டு அவன் மணிமேகலை மேல் கொண்ட ஆசையத் தூண்டி விட வேண்டும் என முடிவு செய்தாள். மணிமேகலை அடைய எண்ணி முயன்று பார்த்து தோல்வியுற்ற உதயகுமாரன் ஓரளவு அமைதியுடனே காணப்பட்டன் சித்திராபதின் தூண்டுதல் அவனிடம் மணிமேகலை பற்றிய எண்ணத்தை வளர்த்திட உதவியது. சித்திராபதியுன் தூண்டுதலால் எவ்விதமும் மணிமேகலையை அடைந்தே தீருவது என முடிவு செய்தான்.
உதயகுமாரன் மணிமேகலையை கண்டான். அவளது மாற்றத்துக்கு காரணம் யாதெனக் கேட்டான். மணிமேகலையும் பொறுமையுடன் அவனுக்கு அறிவுரை சொன்னாள். சொல்லிவிட்டு அவன் நின்ற இடத்தை விட்டு அகன்று சம்பாபதியின் கோயிலில் உட்பக்கம் சென்று விட்டாள். உண்மையான உருவத்துடன் இருத்தல் கூடாது என எண்ணியவளாய் வேற்றுருவம் கொள்ளும் மந்திரத்தை ஓதியபடி காயசண்டிகையின் உருவத்துடன் அமுதசுரபியைக் கைல் ஏந்தி வெளியே சென்றுவிட்டாள். உதயகுமாரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். தெய்வமே மணிமேகலை இன்றி என்னால் வாழ இயலாது என்ற நிலைக்கு ஆகிவிட்டேன் எனவே அவள் என்னுடன் வர இசைவது வரை நான் இங்குதான் இருப்பேன் என்று மணிமேகலையை எதிர்பார்த்து சூளுரைத்து நின்றான்.
மணிமேகலை இவ்வாறு செய்வதை பெரிதும் விரும்பாத மாதவியின் தாயாரான சித்திராபதிக்கு கோவமும் வருத்தமும் ஏற்பட்டது. அவள் உதயகுமாரனை மாளிகை சென்று அவனைக் கண்டு அவன் மணிமேகலை மேல் கொண்ட ஆசையத் தூண்டி விட வேண்டும் என முடிவு செய்தாள். மணிமேகலை அடைய எண்ணி முயன்று பார்த்து தோல்வியுற்ற உதயகுமாரன் ஓரளவு அமைதியுடனே காணப்பட்டன் சித்திராபதின் தூண்டுதல் அவனிடம் மணிமேகலை பற்றிய எண்ணத்தை வளர்த்திட உதவியது. சித்திராபதியுன் தூண்டுதலால் எவ்விதமும் மணிமேகலையை அடைந்தே தீருவது என முடிவு செய்தான்.
உதயகுமாரன் மணிமேகலையை கண்டான். அவளது மாற்றத்துக்கு காரணம் யாதெனக் கேட்டான். மணிமேகலையும் பொறுமையுடன் அவனுக்கு அறிவுரை சொன்னாள். சொல்லிவிட்டு அவன் நின்ற இடத்தை விட்டு அகன்று சம்பாபதியின் கோயிலில் உட்பக்கம் சென்று விட்டாள். உண்மையான உருவத்துடன் இருத்தல் கூடாது என எண்ணியவளாய் வேற்றுருவம் கொள்ளும் மந்திரத்தை ஓதியபடி காயசண்டிகையின் உருவத்துடன் அமுதசுரபியைக் கைல் ஏந்தி வெளியே சென்றுவிட்டாள். உதயகுமாரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். தெய்வமே மணிமேகலை இன்றி என்னால் வாழ இயலாது என்ற நிலைக்கு ஆகிவிட்டேன் எனவே அவள் என்னுடன் வர இசைவது வரை நான் இங்குதான் இருப்பேன் என்று மணிமேகலையை எதிர்பார்த்து சூளுரைத்து நின்றான்.
<b> .. .. !!</b>