08-26-2005, 05:31 PM
<b>கந்திற்பாவை வருவது உரைத்த காதை</b>
சம்பாபதியின் ஆலயத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மணிமேகலையின் காதில் கந்திற்வாவை கூறியது கேட்டது. அவள் அலறிப் புடைத்துக் கொண்டு வந்து பார்க்க வெட்டுண்டு கிடந்தான் உதயகுமாரன். முற்பிறப்பில் அவன் தன்னுடைய கணவன் என்பதால் கண்ணீர்வடித்து கதறினாள். காயசண்டிகை உருவத்தை களைந்து தம் சுய உருவம் கொண்டவளாய் உதயகுமாரன் பக்கத்தில் சென்று பேசலனாள்,.கதறி அழுதாள் உடல் கிடந்த இடத்தின் பக்கம் சென்றாள். அப்போது போகாதே அவன்ருகே போகாதே எனக் கூறி காந்திற் தெய்வம் தடுத்து விட்டது. நீயும் உதயகுமாரனும் பல பிறவிகளில் கணவன் மனைவியாக இருந்து இருக்கலாம்! பிறவியை ஒழிக்க முயலும் நீ இனிமேல் இதைப் பற்றி எண்ணுவதே தவறாகும் என்றது
மணிமேகலை அத்தெய்வத்தை வணங்கி உதயகுமாரன் அப்படி இறப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்டாள். முற்பிறப்பிலே நீயும் உனது கணவனும் காயங்கரை ஆற்றின் கரையிலே அமர்ந்திருந்த பிரம தருமமுனிவருக்கு உணவளித்து சிறப்பிக்க எண்ணி விடியற்காலை சமையற்காரனை வர சொல்லி இருந்தீர்கள் அவன் நீங்கள் சொன்னது போல் வரமால் பொழுது புலர வந்தான். வந்தவன் கால் தடுக்கி அந்த பாத்திங்கள் மேலேயே விழுந்து விட்டான். இதனால் கோபங்கொண்டு உனது கணவன் வளால் வெட்டி கொண்டான். அத்தீவினையே அவன் இவ்வாறு இறக்க காரணமாவன். எனக் கூறியது. அத்துடன் மேலும் நடக்க இருப்பவைகளைக் கூறியது. கந்திற்பாவை மேலும் கூறியதாவது காஞ்சிநகர் மழை இன்றி வருந்தும் நீ அமுதசுரபியுடன் அங்கு சென்று மக்கள் துயர் துடைப்பாய். உன்னை மக்கள் எல்லொரும் புகழ்ந்துரைப்பார்கள். நீ சென்ற பிறகு அங்கு பல அற்புதங்கள் நடக்கும். தவ நெறியில் பற்றுதல் கொண்ட நீ மேலும் உயர் பெரும் தவநெறி வாழ்க்கை வாழ்ந்து உன்காலம் முழுவதையும் காஞ்சியிலே கழித்து அங்கேயே இறப்பாய். பின்னர் நீ உத்தர மாநாடு சென்று அங்கேயே பல பிறவிகளை எடுப்பாய். அந்தப் பிறவிகளில் ஆண் மகனாகவே பிறந்து புத்தரது தலை மாணவனாக் விளங்கி எவ்விதமும் இந்தப் பிறப்பை ஒழித்து மகிழ்வாய் என்றது. .
அன்புள்:ள மணிமேகலையே இன்னும் கேட்பாயாக நீ முன்னர் சாது சக்கர் என்னும் மாமுனிவருக்கு உணவு கொடுத்துச் சிறப்பித்ததனால் உன் முன்னோர்களில் ஒருவரை கடலிலிருந்து காப்பாற்றியது; அது போன்று உன்னை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு எடுத்தி சென்று உனது முற்பிறவி பற்றி அறியச் செய்தது என்று அத் தெய்வம் கூறி முடித்தது. இவையனைத்தையும் கேட்ட மணிமேகலை நிம்மதி பெருமூச்சு விட்டவளாய்வலயிலிருந்து விடுபட்ட மயில் போன்று மகிழ்ச்சி அடைந்தாள்.
சம்பாபதியின் ஆலயத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மணிமேகலையின் காதில் கந்திற்வாவை கூறியது கேட்டது. அவள் அலறிப் புடைத்துக் கொண்டு வந்து பார்க்க வெட்டுண்டு கிடந்தான் உதயகுமாரன். முற்பிறப்பில் அவன் தன்னுடைய கணவன் என்பதால் கண்ணீர்வடித்து கதறினாள். காயசண்டிகை உருவத்தை களைந்து தம் சுய உருவம் கொண்டவளாய் உதயகுமாரன் பக்கத்தில் சென்று பேசலனாள்,.கதறி அழுதாள் உடல் கிடந்த இடத்தின் பக்கம் சென்றாள். அப்போது போகாதே அவன்ருகே போகாதே எனக் கூறி காந்திற் தெய்வம் தடுத்து விட்டது. நீயும் உதயகுமாரனும் பல பிறவிகளில் கணவன் மனைவியாக இருந்து இருக்கலாம்! பிறவியை ஒழிக்க முயலும் நீ இனிமேல் இதைப் பற்றி எண்ணுவதே தவறாகும் என்றது
மணிமேகலை அத்தெய்வத்தை வணங்கி உதயகுமாரன் அப்படி இறப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்டாள். முற்பிறப்பிலே நீயும் உனது கணவனும் காயங்கரை ஆற்றின் கரையிலே அமர்ந்திருந்த பிரம தருமமுனிவருக்கு உணவளித்து சிறப்பிக்க எண்ணி விடியற்காலை சமையற்காரனை வர சொல்லி இருந்தீர்கள் அவன் நீங்கள் சொன்னது போல் வரமால் பொழுது புலர வந்தான். வந்தவன் கால் தடுக்கி அந்த பாத்திங்கள் மேலேயே விழுந்து விட்டான். இதனால் கோபங்கொண்டு உனது கணவன் வளால் வெட்டி கொண்டான். அத்தீவினையே அவன் இவ்வாறு இறக்க காரணமாவன். எனக் கூறியது. அத்துடன் மேலும் நடக்க இருப்பவைகளைக் கூறியது. கந்திற்பாவை மேலும் கூறியதாவது காஞ்சிநகர் மழை இன்றி வருந்தும் நீ அமுதசுரபியுடன் அங்கு சென்று மக்கள் துயர் துடைப்பாய். உன்னை மக்கள் எல்லொரும் புகழ்ந்துரைப்பார்கள். நீ சென்ற பிறகு அங்கு பல அற்புதங்கள் நடக்கும். தவ நெறியில் பற்றுதல் கொண்ட நீ மேலும் உயர் பெரும் தவநெறி வாழ்க்கை வாழ்ந்து உன்காலம் முழுவதையும் காஞ்சியிலே கழித்து அங்கேயே இறப்பாய். பின்னர் நீ உத்தர மாநாடு சென்று அங்கேயே பல பிறவிகளை எடுப்பாய். அந்தப் பிறவிகளில் ஆண் மகனாகவே பிறந்து புத்தரது தலை மாணவனாக் விளங்கி எவ்விதமும் இந்தப் பிறப்பை ஒழித்து மகிழ்வாய் என்றது. .
அன்புள்:ள மணிமேகலையே இன்னும் கேட்பாயாக நீ முன்னர் சாது சக்கர் என்னும் மாமுனிவருக்கு உணவு கொடுத்துச் சிறப்பித்ததனால் உன் முன்னோர்களில் ஒருவரை கடலிலிருந்து காப்பாற்றியது; அது போன்று உன்னை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு எடுத்தி சென்று உனது முற்பிறவி பற்றி அறியச் செய்தது என்று அத் தெய்வம் கூறி முடித்தது. இவையனைத்தையும் கேட்ட மணிமேகலை நிம்மதி பெருமூச்சு விட்டவளாய்வலயிலிருந்து விடுபட்ட மயில் போன்று மகிழ்ச்சி அடைந்தாள்.
<b> .. .. !!</b>