08-26-2005, 07:27 PM
<b>ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை.</b>
புண்ணியராசன் தம் மனைவியோடு அந்தச் சோலையில் புகுந்து தரும சாவகன் என்னும் மாமுனிவனை வணங்கி பின்னர் கையில் அமுதசுரபியுடன் நின்றமணிமேகலையை காட்டி யாரெனக் கேட்டான். இந்த நாவலந்தீவில் இந்த நங்கையை போன்று சிறப்புப் பெற்றவர் யாருமே இல்லை. என்று அவளைப் பற்றிக் கூறினார். மணிமேகலை மன்னனிடம் நீ இந்தப் பாத்திரத்தை மறந்து விட்டாயா? நீ உன் கையில் வைத்திருந்த அமுதசுரபி தான் இப்போது என் கையில் இஉர்ப்பதாகும். நீ உன் முற்பிறப்பை அறியாதவனாக இருக்கலாம். ஆனால் நீ ஆவின் வயிற்றில் பிறந்த இந்தப் பிறவியையாவது அறிந்து இருப்பாய் அல்லவா? மணிபல்லவம் சென்று புத்தர் பீடிகையை தொழுது வந்தால் உன்முற்பிறப்பு பற்றி நிச்சயம் தெரிந்து கொள்வாய் எனவே நீ தவறாது புத்தர் பீடிகைக்கு வர வேண்டும் என்று அன்புடன் த்ரிவித்துவிட்டு வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்தாள்.
மணிமேகலை வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்து புத்த பீடிகையை வலம் வந்து போற்றி வணங்கினாள். மணிமேகலை ஆபுத்திரனிடம் விபரங்களை கூறிசென்றபின்னர் அவன் தன் பழம் பிறப்பு பற்றி எண்ணிப் பார்ந்தான். மணிபல்லவத் தீவை நீண்ட நாளாக அடைந்து வலம் வர வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாகவே அவன் மனதில் எழுந்த வண்ணம் இருந்த்து இப்போது மணிமேகலை அதை வளர்த்து தூண்டி விட்டாள். எனவே அவன் அரச பொறுப்பை அமைச்சர் ஒருவனிடம் ஒப்படைத்து விட்டு மணிபல்லவம் புறப்பட்டன்.மணிபல்லவ தீவிற்ற்கு அவன் வருவான் என் எதிர்பார்த்திருந்த மணிமேகலை அவனைக் க்ண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். புத்த பீடிகையை வண்ங்கி எழுந்ததும் அவன் தன் பழம் பிறப்பை அறிந்தான். பின்னர் மணிமேகலையை அழைத்து கோமுகி என்ற பொய்கையை அடைந்து புன்னை மர நிழலிலே இளைபாறினான்.
அப்பொழுது தீவதிலகை தோன்றி ஆபுத்திரனுக்கு பழம் பிறப்பை உணர்த்தினாள். தீவதிலகை காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்த போது தனது எலும்புக்கூடு இருப்பதை க்ண்டு அஞ்சினான். அப்போது மணிமேகலை அரசே நீ அஞ்சவேண்டாம் உன்னை இங்கு வரழைத்தது நீ பழம் பிறப்பை அறிவதற்கே. உனது புகழ் பரவி நீ அறச்செயல்கள் செய்து நீடுழி வாழ்க வென வாழ்த்தினாள். மன்னவனே நீ இனி எதைபற்றியும் வருந்த வேண்டியது இல்லை நீ உன் நாட்டை விட்டுபிரிந்து வரவே தாங்கிக் கொள்ளாத நாட்டவர் உன்னை அழக்கிறார்கள் எனவே நீ உன் நாடு சென்று வளமுடன் பொலியச் செய் எனக்க்கூறி அவனை அனுப்பிவிட்டு வான் வழியாக வஞ்சி நகரை அடைந்தாள்.
புண்ணியராசன் தம் மனைவியோடு அந்தச் சோலையில் புகுந்து தரும சாவகன் என்னும் மாமுனிவனை வணங்கி பின்னர் கையில் அமுதசுரபியுடன் நின்றமணிமேகலையை காட்டி யாரெனக் கேட்டான். இந்த நாவலந்தீவில் இந்த நங்கையை போன்று சிறப்புப் பெற்றவர் யாருமே இல்லை. என்று அவளைப் பற்றிக் கூறினார். மணிமேகலை மன்னனிடம் நீ இந்தப் பாத்திரத்தை மறந்து விட்டாயா? நீ உன் கையில் வைத்திருந்த அமுதசுரபி தான் இப்போது என் கையில் இஉர்ப்பதாகும். நீ உன் முற்பிறப்பை அறியாதவனாக இருக்கலாம். ஆனால் நீ ஆவின் வயிற்றில் பிறந்த இந்தப் பிறவியையாவது அறிந்து இருப்பாய் அல்லவா? மணிபல்லவம் சென்று புத்தர் பீடிகையை தொழுது வந்தால் உன்முற்பிறப்பு பற்றி நிச்சயம் தெரிந்து கொள்வாய் எனவே நீ தவறாது புத்தர் பீடிகைக்கு வர வேண்டும் என்று அன்புடன் த்ரிவித்துவிட்டு வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்தாள்.
மணிமேகலை வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்து புத்த பீடிகையை வலம் வந்து போற்றி வணங்கினாள். மணிமேகலை ஆபுத்திரனிடம் விபரங்களை கூறிசென்றபின்னர் அவன் தன் பழம் பிறப்பு பற்றி எண்ணிப் பார்ந்தான். மணிபல்லவத் தீவை நீண்ட நாளாக அடைந்து வலம் வர வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாகவே அவன் மனதில் எழுந்த வண்ணம் இருந்த்து இப்போது மணிமேகலை அதை வளர்த்து தூண்டி விட்டாள். எனவே அவன் அரச பொறுப்பை அமைச்சர் ஒருவனிடம் ஒப்படைத்து விட்டு மணிபல்லவம் புறப்பட்டன்.மணிபல்லவ தீவிற்ற்கு அவன் வருவான் என் எதிர்பார்த்திருந்த மணிமேகலை அவனைக் க்ண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். புத்த பீடிகையை வண்ங்கி எழுந்ததும் அவன் தன் பழம் பிறப்பை அறிந்தான். பின்னர் மணிமேகலையை அழைத்து கோமுகி என்ற பொய்கையை அடைந்து புன்னை மர நிழலிலே இளைபாறினான்.
அப்பொழுது தீவதிலகை தோன்றி ஆபுத்திரனுக்கு பழம் பிறப்பை உணர்த்தினாள். தீவதிலகை காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்த போது தனது எலும்புக்கூடு இருப்பதை க்ண்டு அஞ்சினான். அப்போது மணிமேகலை அரசே நீ அஞ்சவேண்டாம் உன்னை இங்கு வரழைத்தது நீ பழம் பிறப்பை அறிவதற்கே. உனது புகழ் பரவி நீ அறச்செயல்கள் செய்து நீடுழி வாழ்க வென வாழ்த்தினாள். மன்னவனே நீ இனி எதைபற்றியும் வருந்த வேண்டியது இல்லை நீ உன் நாட்டை விட்டுபிரிந்து வரவே தாங்கிக் கொள்ளாத நாட்டவர் உன்னை அழக்கிறார்கள் எனவே நீ உன் நாடு சென்று வளமுடன் பொலியச் செய் எனக்க்கூறி அவனை அனுப்பிவிட்டு வான் வழியாக வஞ்சி நகரை அடைந்தாள்.
<b> .. .. !!</b>