09-11-2005, 10:35 PM
பாரதியின் விடுபட்ட மேலும் ஒரு கவிதை
சத்தியப் போர்
பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப்
பாரினில் ஈடழிதல்
தொந்தமில் லாத சுக - வாழ்வைத்
தோற்றுவிப்போம் வாராய்!
இந்த உடல் சதமோ - இது
என்றும் இறப்பதுவே
தந்தை மரிப்பவனே - பெற்ற
தாயும் இறப்பவளே
மக்கள் மனைவி பொருள் - யாவும்
மாயன் வினைப் பொருளே
துக்கந் தரும் இவற்றை - உடன்
தூவென்று தள்ளிவிடு
மிக்க வெம்புல் அடிமை - நீங்கி
மேதகு வாழ்வு பெற
சத்தியப் போர் செய்குவாய் - அட
இந்தியனே யெழுவாய்!
கத்தி வில் வாள் கதைகள் - எறி
கற்கள் சூலாயுதங்கள்
பித்தர்கள் தங்களுக்கு - வெகு
பெட்புடை ஆயுதங்கள்
சத்தியம், ஈகை, அருள் - பக்தி
சான்ற மனப் பெரியோர்
நித்தியமான வுயர் ஆத்ம
நேர்படையே கொள்ளுவார்
வெற்றி அடைந்து விட்டால் - இங்கு
வேண சுகங்களை நீ
பெற்று அரசாண்டிடுவாய் - புவி
பேணி யுயர்ந்திடுவாய்!
நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள்.
1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார்.
சத்தியப் போர்
பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப்
பாரினில் ஈடழிதல்
தொந்தமில் லாத சுக - வாழ்வைத்
தோற்றுவிப்போம் வாராய்!
இந்த உடல் சதமோ - இது
என்றும் இறப்பதுவே
தந்தை மரிப்பவனே - பெற்ற
தாயும் இறப்பவளே
மக்கள் மனைவி பொருள் - யாவும்
மாயன் வினைப் பொருளே
துக்கந் தரும் இவற்றை - உடன்
தூவென்று தள்ளிவிடு
மிக்க வெம்புல் அடிமை - நீங்கி
மேதகு வாழ்வு பெற
சத்தியப் போர் செய்குவாய் - அட
இந்தியனே யெழுவாய்!
கத்தி வில் வாள் கதைகள் - எறி
கற்கள் சூலாயுதங்கள்
பித்தர்கள் தங்களுக்கு - வெகு
பெட்புடை ஆயுதங்கள்
சத்தியம், ஈகை, அருள் - பக்தி
சான்ற மனப் பெரியோர்
நித்தியமான வுயர் ஆத்ம
நேர்படையே கொள்ளுவார்
வெற்றி அடைந்து விட்டால் - இங்கு
வேண சுகங்களை நீ
பெற்று அரசாண்டிடுவாய் - புவி
பேணி யுயர்ந்திடுவாய்!
நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள்.
1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார்.
.
.
.