10-26-2005, 12:28 AM
செல்வன் கூறியதுபோல் ஜேர்மனியில் இருந்து குறுந்தூரப்பயணம்(3 மணி நேரம்) நீண்டதூரப்பயணம் (12 மணி நேரம்) என பல நகரங்களில் இருந்தும் 134 பஸ்களில் ஜேர்மன் வாழ் தமிழீழ மக்கள் வந்து இருந்தனர் பஸ்களில் 60 இருக்கைகளும்,இரட்டுத்தட்டு பஸ்களில் 78 இருக்கைகளும் ஏறக்குறைய உள்ளன. இதனை விட மற்றும் ஐரோப்பியநாடுகளில் இருந்தும் 100 இற்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் கார், சிறியரகபஸ் (9 இருக்கைகள்) என ஐரோப்பியவாழ் தமிழ் மக்கள் வெள்ளம் பங்குபற்றியிருந்தனர். முழுவதையும் கணக்கிட்டு பாருங்கள் பெல்ஜிய பொலிசாருக்கு கூட வேலைப்பழுவை கொடுக்காமல் எமது தமிழர் அமைப்புக்களே முழுவதையும் நெறிப்படுத்தியமை அவர்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. நானும் இவ் பேரெழுச்சியில் ஆரம்பம் முதல் நிகழ்வின் இறுதிவரை நின்று இருந்தேன்
" "