01-13-2006, 01:22 AM
Quote:ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......
<span style='color:green'>தளா! இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல, இப்படியும் ஒரு பச்சோந்தியாக, தன்னைத் தானே வெறுக்கும், தாழ்வு மனப்பான்மையுள்ளவராக, ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் இருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இப்பவும் கூட அவர் உண்மையிலே ஈழத்தமிழராக இல்லாது விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சிப் படுவேன். <b>நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்</b>
Quote:[size=13]ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு.... உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்..... அவர்களின் முக்கிய செயல்கள்.. தமிழீழ ஆதரவாளர் போல் பேசி மற்றயோரின் எதிர்ப்பை உண்டு பண்ணுவது..... அடிப்படை இல்லாத கருத்துக்களை விதைப்பது... (பொய்களை).... மக்களிடையே (யாழிலும்) ஒற்றுமையை சீர் குலைப்பது.... வேற்றுமையை உண்டு பண்ண நினைப்பது</span>.....
<span style='color:green'>தளா, உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு ஆத்திரமென்பதை விட அதிர்ச்சி தான் அதிகம். இப்படி தமிழர்களிடையே ஓற்றுமையைச் சீர்குலைப்பதும், தமிழீழ ஆதரவாளராக நடித்து ஈழவிடுதலையைக் களங்கப் படுத்துவதும் தான் அவருடைய நோக்கமென்றால், அவர், அவரையொத்த கூட்டத்துடன் தான் சேர்ந்திருக்கிறார். அப்படியான கூட்டத்தை அவருடன் இணைத்து வைத்த பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பது.
Quote:[size=14]ஆருரான் எனது நல்ல நண்பர்.... நான் அவரை இழக்க விரும்பவில்லை... அவர் தட்ஸ்தமிழில் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.... இப்போது தட்ஸ்தமிழ் உறுப்பினர்கள் கருத்துக்கு மாறுகிறார்கள்.... எனவே அங்கேயும் நான் அவரை எதிர்பார்க்கிறேன்... இதில் ஏதாவது தவறு உள்ளதா</span>
<span style='color:green'>நானும் LUCKYLOOK ஐ ஒரு நண்பராகத் தான் கருதுகிறேன், ஆனால் எனக்கும் அவருக்குமிடையில் பாரிய வேறுபாடுண்டு. LUCKYLOOK தன்னுடைய தனிப்பட்ட நட்புக்காகத் தமிழினத்தைக் கூட அடகு வைக்கத் தயங்காதவர். என்னைப் பொறுத்தவரையில், தமிழரின் எதிரிகளை, தமிழர்களை ஏளனம் செய்பவர்களை, தமிழர்களை நாட்டின் அடிப்படையில் பிரிப்பவர்களை எதிர்ப்பதில், எங்களின் தனிப்பட்ட நட்பு எந்த வேளையிலும் குறுக்கிடக் கூடாது என்று நினைப்பவன். கதிர்காமர் கூடத் தனிப்பட்ட நட்புக்காகத் தான் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தார்
..............
Quote:[size=12]Webmaster,
<b>Please put a another slot</b> to discuss \"World\", then you may get more forumers (Srilankan, Malaysian, EU & USA NRIs).... It will be more helpful to discuss other international topics also.....
Actually a Srilankan Friend Mr. Aaruran suggested this site for me and other thatstamiltamil members..... But, now he can't be active here</span>....
இந்த கோரிக்கையை அந்த வெப்மாஸ்டருக்கு நான் தான் வைத்தேன்.... அவர் அதை ஏற்று உடனடியாக ஈழம் பிரச்சினைகளை விவாதிக்க புது பகுதி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்.... நண்பர் ஆரூரான் அந்த பகுதியில் வந்து ஈழம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விவாதிக்கலாமே?
<span style='color:green'>Luckylook, Rajathirajah போன்றவர்களால் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்தியக் குடிமக்கள், மற்றவர்களின் ஆதிக்கத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்ளத் தயங்காதவர்கள்.
உதாரணத்துக்கு, எங்களைப் பெரும்பான்மைச் சிங்களவர் சிங்களம் கற்கச் சொல்லி வலியுறுத்தினால், நானும் இலங்கையன், இந்த நாட்டில் எனக்கும் சமவுரிமையுண்டு, என்னைச் சிங்களம் கற்கச் சொல்லி வற்புறுத்த உனக்கு உரிமையில்லை என்று இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பார்கள்,
இதே போல் Luckylook, Rajathirajah போன்ற இந்தியத் தமிழர்களிடம் சொன்னால், அதற்கென்ன படித்தால் போச்சு என்பார்கள், <b>அவர்களால் அதிலுள்ள உரிமைப் பிரச்சனையைப் பார்க்க முடியாது</b>. இது வெறும் உதாரணம் மட்டும் தான். <b>'தளா'வால் என்னைப் புரிந்து கொண்டது போல் அவ்ர்களால் புரிந்து கொள்ள முடியாது</b>.
ஈழத்தமிழருக்காக ஈழம் பகுதியை ஆரம்பிக்குமாறு தான் கேட்டதாகப் பெருமிதப் படுகிறார் நண்பர் Luckylook,
<b>ஆனால் எனக்கு ஆத்திரமூட்டியதே அது தான்.</b> ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழரிடம், ஈழத்தமிழர்களுக்கும் உங்களின் இணையத் தளத்தில் அனுமதி கொடுங்களென்று, ஒரு ஈழத்தமிழரின் இணையத் தளத்தில் ஈழவிடுதலையைப் பேச அனுமதியுங்கள் என்று, ஈழப்போராட்ட்டத்தை இன்றும் பயங்கரவாதம் என்று நினைக்கும், எனக்கு ஈழத்தமிழருக்கு விடுதலை கிடைப்பதில் விருப்பம், ஆனால் LTTE ஐ அழிக்க வேண்டுமென்று, தங்களின் ஈழத்தமிழரிலுள்ள வெறுப்புக்கு இனிப்புச் சாயம் போடும் கபடவேடக்காரருக்குத் தெரிந்தோ தெரியாமலோ, பந்தம் பிடிக்கும் Luckylook போன்றவர்க்ளும், ஈழத்தமிழரை வெறுக்கும், விடுதலைப் போராளிகளைத் தூற்றி, சிங்களவர்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் பரதேசிகளும் சிபாரிசு செய்ய வேண்டிய நிலையை எந்த மானமுள்ள ஈழத்தமிழனும் பொறுக்க மாட்டான்
Quote:[size=13]ஒரு வலை தளம் தொடர்பான செய்திகளை இனோர் வலை தள்த்தில் பெசுவது அநாகரிகம். நானும் அந்த கருத்து வலை தளத்தில் அங்கத்தினர். அந்த கருத்து களம் நன்றாகவே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது.
நண்பர் ஆருரான் அங்கு கருத்துகளை பதிவு செய்ய ஈழம் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கபட்டும் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை இங்கு வந்து பெரிதாக பார்க்கிறார்</span>.
<span style='color:green'>நண்பர் ராஜாதிராஜாவுக்கு இது இன்று தான் தெரிய வந்தது போலிருக்கிறது. யாழ் தளத்தைப் பற்றி தற்ஸ்தமிழ்க் களத்தில் தமிழெதிரிகளெல்லாம் வாய்க்கு வந்த படி விமர்சனம் செய்யும் போதும், <b>யாழ் களத்தை இயல்பிழக்கச் செய்வதற்காகப் பலர் சதி செய்த போதும் உங்களின் பொன்மொழியை ஏன் உதிர்க்கவில்லை</b>? ஊருக்குத் தான் உபதேசமாக்கும்?
ஒரு இனப்பற்றற்ற ஈழத்தமிழர், ஈழத்தமிழரை வசை பாடுபவர்களின் சிபாரிசின் பேரில், ஒரு சாட்டுக்கு உருவாக்கிய பகுதியில் போய்ப் பங்கு பற்றும் அளவுக்கு நானில்லை. <b>எனக்கு அவர் ஈழப் பிரிவு அமைக்கவில்லையென்று வருத்தமல்ல</b>. ஈழத்தமிழருக்கு எத்தனையோ தளங்களுண்டு, நான் விரும்பினால் ஒரு அவரைப் போன்ற இணையத் தளத்தை அமைக்கக் கூடியளவு நண்பர்களும், வழியும் எனக்குமுண்டு.
ஒரு ஈழத்தமிழர் இந்தளவு சுயநலமும், சுயவெறுப்போடுமிருக்கிறாரே, இப்படியும்
ஈழத்தமிழர்களுண்டு என்பதை காட்டுவது தான் என்னுடைய நோக்கமே தவிர, <b>எனக்கொரு இடம் தாங்கோ என்று நான் அழவில்லை</b>
Quote:[size=13]இல்லை தலை !! நான் குறை சொல்லவில்லை. அந்த தளத்தின் உரிமையாளர் திரு ஆருரானை ஈழம் பிரிவில் எழுத சொன்னார், ஆனால் நண்பர் ஆருரான் பொது பிரிவிலும் , இந்திய பிரிவிலும் எழுதினார். மற்ற உறுப்பினர் குறை சொல்ல அவர் எழுத்யது நீக்க பட்டது.
அது தான் உண்மை .. நான் யார் மேலும் குறை சொல்ல விரும்மவில்லை. நாண்யத்திற்கு இரு பக்கம் உண்டு</span>.
<span style='color:green'> <b>என்னுடன் தனிப்பட்ட மடலில் அவர் தொடர்பு கொள்ளும் போது அங்கொரு ஈழம் பிரிவுமில்லை ஒருமண்ணுமில்லை</b>.
ராஜாதிராஜா ஏன் இந்தச் சுத்துமாத்து? அவர் என்னையும் ஈழவனைப் பதிவு செய்ய வேண்டாமென்று சொன்னது மட்டுமில்லை, என்னையும், மற்ற ஈழத்தமிழர்களென்று தான் நினைத்தவர்களையும் தடை செய்து விட்டார்.
அவர் தடையை நீக்கினாலும் நான் அங்கு போகப் போவதில்லை. அதை விட அவரும் யாழ் தளத்தில் பிரபலமான அங்கத்தவர் என்பது Luckylook இன் கருத்து. Luckylook உம் அவரும் நண்பர்களாமென்று Luckylook தற்ஸ்தமிழ்க் களத்தில் தெரிவித்தார். <b>எந்தப் புற்றில் எந்தப் பாம்புண்டென்று யாருக்குத் தெரியும்.</b>
Quote:[size=13]தலை ஒருவருக்கு வரும் தனி மடலை இப்படி பொது இடத்தில் பதிவும் செய்தால் பின் தனி மடல் அனுப்புவத்ற்கான உபயோகமே தேவை இல்லை. இது பின் லாடனக இருப்பினும் அவரின் நம்பிக்கை காப்பற பட வேண்டும்.</span>
<span style='color:green'>எனக்கு அவருக்குமிடையில் தனிமடல் தொடர்பு நடந்தது மூன்று நாட்களுக்கு முன்பு. அவர் எங்களுக்கிடையில் நடந்த தனிமடல் பரிமாற்றத்தைப் பற்றி அகங்காரமாக, நான் அவர்களைத் தடுத்து விட்டேனென்று வெளிப்படையாகக் கொக்கரித்துக் கருத்துத் தெரிவிக்கும் வரை நான் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை.
தனிமடல் தொடர்புகள், தனிப்பட்டவை என்பதிலும், ஒருவரின் நம்ம்பிக்கை காப்பாற்றப் பட வேண்டுமென்பதில் எனக்கும் நம்பிக்கையுண்டு. அவராகவே எங்களுக்கிடையில் நடந்த தனிமடல் பரிமாற்றம் பற்றியும் அவருடைய பதிலையும் பற்றி ஈழத்தமிழர்களைத் தூற்றுபவ்ர்களிடம் பகிரங்கமாக, நக்கல் விட்ட பின்பு எதற்காக நான் மட்டும் மெளனம் சாதிக்க வேண்டும்?
Quote:[size=12]நண்பர் தலை ஆருரான் பதிவிலிர்ந்து
எனக்கும் அவருக்குமிடையில் நடந்த E-MAIL பரிமாற்றமும், அவர் ஈழத் தமிழர்களைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் கீழே பதிக்கிறேன்</span>.
[size=14]எனக்கும் ராஜாதிராஜாவுக்குமிடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் என்ன பெயரில் தற்ஸ்தமிழ்க் களத்தில் உள்ளார் என்பதும் எனக்குத் தெரியாது. அவர் நான் சொன்னதை இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறாரென்று நினக்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->