03-28-2006, 07:19 PM
TRAITOR Wrote:தாய்மன் எழுதியது: "அதென்னய்யா எப்ப பாத்தாலும் பாரதியார் தமிழ் வளத்தார் காத்தார் என்டு கொண்டு இருக்கிறியள்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதும் கிடையாது எனடு யாருக்கு சொன்னவர்? அமெரிக்க காரனுக்கே?லண்டன் காரனுக்கே? தமிழை பற்றி தமிழனுக்கே சொல்லீட்டு போய்ட்டார். இது தமிழ் வளக்கிறதா? இதையே வெளிநாட்டுக்கானுக்கு சொல்லி இருந்தா அவனுக்கும் தமிழை பற்றி தெரிஞ்சிருக்கும். தமிழும் தன்னால வளந்திருக்கும். தமிழை வளக்கிறதுக்கே முதல்ல வேற மொழி தேவைப்படுது." :?
பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.
"நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன்".
பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.
ஐயா உங்களின் ஆதங்கம் புரிகிறது. தமிழில் முறையாகப் படித்திருந்தால் அந்த அறிவுடன் இங்கு கட்டாயம் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பீர்கள். :!:
சிலபேர் அதையே சாட்டாகச் சொல்லிக்கொண்டு தங்களது முயற்சி திறமை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு மூலையில் போட்டு விடுகின்றார்கள். நானும் எனது அண்ணாவும் தமிழில் தான் இலங்கையில் படித்தோம். நானாவது தரம் 9ல் கனடா வந்துவிட்டேன். அண்ணா உயர்தரம் படித்துக் குறையுடன் இங்கு வந்தார். இங்கு வந்து இரண்டு வருடம் ஆங்கிலத்தில் படித்து பல்கலைகழகத்திற்கு எடுபட்டு தற்பொழுது "PhD" பட்டத்திற்குப் படித்துக் கொண்டு இருக்கிறார். நானும் இங்து வந்து "high school"படித்துவிட்டு தற்பொழுது பல்கலைக்கழகத்தில் 2ம் வருட மாணவியாகவுள்ளேன்.
நல்ல நம்பிக்கை வேண்டும் முதலில். தமிழ்மொழியான என் தாய் மொழியில் ஆரம்பக்கல்வியைப் படித்தபடியால் இரண்டாம் மொழியான ஆங்கிலமும் சேர்ந்து ஒரு நல்ல தராதரத்தையடைய எங்களுக்கு உதவியது.
பெருந்தன்மையில் கூறவில்லை. உதாரணத்திற்குத் தான் என் குடும்பத்தையெடுத்து விளக்கினேன்.
அப்பிடி போடுங்க அருவால.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............