03-29-2006, 02:11 AM
புலத்தில் தமிழ் அடையாளம்!
By ரூபன்
Jan 1, 2003, 03:07
புலம் பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினர் தாய்நிலத்தின் எண்ணங்களோடும் உணர்வோடும் வாழ்கின்றார்களா? அல்லது புலச் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றார்களா? என்பது பலர் மனங்களில் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு "இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளின் எதிர்காலம் இங்கேதான் நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு தாயகம் பற்றிய சிந்தனை அவசியமற்றது" என்ற கருத்துடைய சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகவே இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்குடன் தமிழ் அடையாளத்தின் தன்மைகள் அலசப்படவேண்டும். இளைய சந்ததியினர் மத்தியில் தமிழ் அடையாளம பற்றிய விரிவானதும் தெளிவானதுமான பார்வையை உருவாக்க வேண்டிய தேவையும் இன்றியமையாததாகின்றது.
ஓரு இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அந்த இனத்தின் மொழியும் அம்மொழி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களுமே. உலகத்தின் எந்த மூலையில் வாழ நேரும் போதும் இனத்தின் தனித்துவம் பேணப்படவேண்டும். நாம் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு. அதுவே அறிவுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பொருத்தமான செயலும் ஆகும். வாழுகின்ற சமூகம் பற்றிய தெளிவான அறிவை உள்வாங்குவதன் மூலமே எம்மை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனாலும் எமது இனத்துவ அடையாளங்களை நீங்கி "எப்படியும் வாழலாம்" என்ற முடிவுக்கு வருவோமாயின், நாகரிகமற்ற பண்பாடற்ற மனிதர்களாக, வாழ்வின் அர்த்தங்களை இழந்தவர்களாக வாழ நேரிடும்.
நோர்வேயில் வாழும் இளைய தமிழ்த் தலைமுறையினருக்கு இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையின் பாதிப்புக்கள் இருப்பதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம். இருமொழிப் பண்பாட்டுக்குள் சிக்கித் தடுமாறித் தவிக்க வேண்டிய சூழ்நிலைகளும் நிறையவே உண்டு. இந்த மக்களிடமுள்ள நல்ல பண்புகளையும் சிந்தனைகளையும் வரவேற்று பின்பற்றுவதே அறிவுடமையாகும். ஆனால் நாம் எமது சுயத்தை இழந்து விடலாகாது. தமிழ் உணர்வை விட்டுவிடக் கூடாது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பலருக்கு தமது பிள்ளைகள் தமிழை கற்க வேண்டும், பேச வேண்டுமென்ற ஆர்வம் நிறையவுண்டு. பெற்றோர்களுடைய இந்த ஆர்வமும் எண்ணமும் பல சமயங்களில் பல்வேறு காரணங்களால் ஈடேறுவதில்லை. ஆனாலும் மற்றைய புலம்பெயர் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் நோர்வேயில் வாழும் தமிழ் மழலைகள் தமிழை தெளிவான உச்சரிப்போடு சரளமாகப் பேசுகின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியதே. ஆனபோதும் இன்னும் பலர் தமது நண்பர்களுடனும் தம்மை ஒத்த வயதுடையவர்களுடனும் மிக அதிகமாக நோர்வேஜிய மொழியிலேயே உரையாடுகின்றார்கள் என்பது வேதனை நிறைந்த உண்மையாகும்.
இந்நிலை மாறவேண்டும். தமிழர் என்று சொல்வதையும் தமிழ்ப் பெயர் தாங்கி நிற்பதையும் பெருமையாகக் கொள்ளுகின்ற மனநிலை எல்லாத்தமிழ் இளைஞர்கள் நெஞ்சங்களிலும் உருவாக வேண்டும். எமது தாய் தேசத்தில் தமிழர்கள்
சொல்லில் அடங்காத துன்பங்ளுக்கும் அவலங்களுக்கும் முகம்கொடுத்தபடி வாழ்கின்றார்கள். போர்த்தீயில் தேசம் எரிந்த போதும் விடியல் வருமென்ற நம்பிக்கையோடு முன்னேறும் எமது உறவுகளின் உறுதி நிறைந்த வாழ்வு பற்றி அறிய வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்வின் வலிகளை இங்கு வாழும் இளைய சந்ததி உணர்ந்து கொள்ளவேண்டும்.
இன்று புலம்பெயர் மண்ணில் வாழும் முதல் தலைமுறையினர் தமிழீழத்தில் பிறந்தவர்கள். அவர்களுடைய வேர் தமிழீழ மண்ணிலிருந்து படர்ந்தது என்பதால் உள்ளத்தில் கலந்த இன உணர்வும் மொழி உணர்வும் அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும் என்ற உத்தரவாதமுண்டு. ஆனால் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பை இங்கு பிறந்து வளர்பவர்களே கையேற்கப் போகின்றார்கள். அந்த கடமையை செழுமையாகச் செய்ய வல்ல ஆற்றலை அவர்கள் பெற்றிருக்க வேண்டுமல்லவா! அந்த வழிநடத்தலுக்குரிய நேர்த்தியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் பெற்றோருக்கும் உண்டென்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இங்கு பிறந்து வளர்ந்து வரும் தமிழ்ச்சந்ததிக்கும் தமிழீழத்திற்கும் இடையேயுள்ள தொப்புள்க்கொடி உறவு பலப்படுத்தப்படவேண்டும். தாயகம் நோக்கிய சிந்நனைகளும் செயற்பாடுகளும் வளரவேண்டும். தமிழர் வரலாறு, தமிழீழ விடுதலைப்போராட்ட நியாயங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை இங்குள்ள இளையவர்கள் பெற வேண்டும். நாளை மலரப்போகும் எங்கள் தாயகத்திற்கு அவர்கள் தமிழ்ப்பிள்ளைகளாகச் சென்று வரவேண்டுமென்ற எண்ணம் எல்லாப் பெற்றோர்களின் நெஞ்சங்களிலும் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.
ரூபன் சிவராஜா
http://www.yarl.com/m_pulam/article_91.shtml
By ரூபன்
Jan 1, 2003, 03:07
புலம் பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினர் தாய்நிலத்தின் எண்ணங்களோடும் உணர்வோடும் வாழ்கின்றார்களா? அல்லது புலச் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றார்களா? என்பது பலர் மனங்களில் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு "இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளின் எதிர்காலம் இங்கேதான் நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு தாயகம் பற்றிய சிந்தனை அவசியமற்றது" என்ற கருத்துடைய சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகவே இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்குடன் தமிழ் அடையாளத்தின் தன்மைகள் அலசப்படவேண்டும். இளைய சந்ததியினர் மத்தியில் தமிழ் அடையாளம பற்றிய விரிவானதும் தெளிவானதுமான பார்வையை உருவாக்க வேண்டிய தேவையும் இன்றியமையாததாகின்றது.
ஓரு இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அந்த இனத்தின் மொழியும் அம்மொழி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களுமே. உலகத்தின் எந்த மூலையில் வாழ நேரும் போதும் இனத்தின் தனித்துவம் பேணப்படவேண்டும். நாம் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு. அதுவே அறிவுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பொருத்தமான செயலும் ஆகும். வாழுகின்ற சமூகம் பற்றிய தெளிவான அறிவை உள்வாங்குவதன் மூலமே எம்மை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனாலும் எமது இனத்துவ அடையாளங்களை நீங்கி "எப்படியும் வாழலாம்" என்ற முடிவுக்கு வருவோமாயின், நாகரிகமற்ற பண்பாடற்ற மனிதர்களாக, வாழ்வின் அர்த்தங்களை இழந்தவர்களாக வாழ நேரிடும்.
நோர்வேயில் வாழும் இளைய தமிழ்த் தலைமுறையினருக்கு இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையின் பாதிப்புக்கள் இருப்பதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம். இருமொழிப் பண்பாட்டுக்குள் சிக்கித் தடுமாறித் தவிக்க வேண்டிய சூழ்நிலைகளும் நிறையவே உண்டு. இந்த மக்களிடமுள்ள நல்ல பண்புகளையும் சிந்தனைகளையும் வரவேற்று பின்பற்றுவதே அறிவுடமையாகும். ஆனால் நாம் எமது சுயத்தை இழந்து விடலாகாது. தமிழ் உணர்வை விட்டுவிடக் கூடாது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பலருக்கு தமது பிள்ளைகள் தமிழை கற்க வேண்டும், பேச வேண்டுமென்ற ஆர்வம் நிறையவுண்டு. பெற்றோர்களுடைய இந்த ஆர்வமும் எண்ணமும் பல சமயங்களில் பல்வேறு காரணங்களால் ஈடேறுவதில்லை. ஆனாலும் மற்றைய புலம்பெயர் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் நோர்வேயில் வாழும் தமிழ் மழலைகள் தமிழை தெளிவான உச்சரிப்போடு சரளமாகப் பேசுகின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியதே. ஆனபோதும் இன்னும் பலர் தமது நண்பர்களுடனும் தம்மை ஒத்த வயதுடையவர்களுடனும் மிக அதிகமாக நோர்வேஜிய மொழியிலேயே உரையாடுகின்றார்கள் என்பது வேதனை நிறைந்த உண்மையாகும்.
இந்நிலை மாறவேண்டும். தமிழர் என்று சொல்வதையும் தமிழ்ப் பெயர் தாங்கி நிற்பதையும் பெருமையாகக் கொள்ளுகின்ற மனநிலை எல்லாத்தமிழ் இளைஞர்கள் நெஞ்சங்களிலும் உருவாக வேண்டும். எமது தாய் தேசத்தில் தமிழர்கள்
சொல்லில் அடங்காத துன்பங்ளுக்கும் அவலங்களுக்கும் முகம்கொடுத்தபடி வாழ்கின்றார்கள். போர்த்தீயில் தேசம் எரிந்த போதும் விடியல் வருமென்ற நம்பிக்கையோடு முன்னேறும் எமது உறவுகளின் உறுதி நிறைந்த வாழ்வு பற்றி அறிய வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்வின் வலிகளை இங்கு வாழும் இளைய சந்ததி உணர்ந்து கொள்ளவேண்டும்.
இன்று புலம்பெயர் மண்ணில் வாழும் முதல் தலைமுறையினர் தமிழீழத்தில் பிறந்தவர்கள். அவர்களுடைய வேர் தமிழீழ மண்ணிலிருந்து படர்ந்தது என்பதால் உள்ளத்தில் கலந்த இன உணர்வும் மொழி உணர்வும் அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும் என்ற உத்தரவாதமுண்டு. ஆனால் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பை இங்கு பிறந்து வளர்பவர்களே கையேற்கப் போகின்றார்கள். அந்த கடமையை செழுமையாகச் செய்ய வல்ல ஆற்றலை அவர்கள் பெற்றிருக்க வேண்டுமல்லவா! அந்த வழிநடத்தலுக்குரிய நேர்த்தியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் பெற்றோருக்கும் உண்டென்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இங்கு பிறந்து வளர்ந்து வரும் தமிழ்ச்சந்ததிக்கும் தமிழீழத்திற்கும் இடையேயுள்ள தொப்புள்க்கொடி உறவு பலப்படுத்தப்படவேண்டும். தாயகம் நோக்கிய சிந்நனைகளும் செயற்பாடுகளும் வளரவேண்டும். தமிழர் வரலாறு, தமிழீழ விடுதலைப்போராட்ட நியாயங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை இங்குள்ள இளையவர்கள் பெற வேண்டும். நாளை மலரப்போகும் எங்கள் தாயகத்திற்கு அவர்கள் தமிழ்ப்பிள்ளைகளாகச் சென்று வரவேண்டுமென்ற எண்ணம் எல்லாப் பெற்றோர்களின் நெஞ்சங்களிலும் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.
ரூபன் சிவராஜா
http://www.yarl.com/m_pulam/article_91.shtml
,
,
,