04-11-2006, 07:45 PM
<b>திருகோணமலை அருகே கிளேமோர் தாக்குதலில் 11 பேர் பலி</b>
இலங்கையின் கிழக்கே திருகோணமலை அருகே தம்பலகாமம் 98ம் கட்டைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த ஒரு கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 10 கடற்படையினர் மற்றும் ஒரு ஓட்டுனர் ஆகியோர் பலியாகியுள்ளனர், மேலும் இரு சிவிலியன்கள் உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி வழியாக காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் ஒரு வாகனத் தொடரணியில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் இந்த 98ம் கட்டைப் பகுதிய்ல் கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடந்ததாக அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும், இராணுவ ஹெலிகாப்டர் மூலம் , கந்தளாய் மற்றும் அநுராதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரியான, பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவா நகரில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் வருகிறது.
- BBC
இலங்கையின் கிழக்கே திருகோணமலை அருகே தம்பலகாமம் 98ம் கட்டைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த ஒரு கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 10 கடற்படையினர் மற்றும் ஒரு ஓட்டுனர் ஆகியோர் பலியாகியுள்ளனர், மேலும் இரு சிவிலியன்கள் உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி வழியாக காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் ஒரு வாகனத் தொடரணியில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் இந்த 98ம் கட்டைப் பகுதிய்ல் கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடந்ததாக அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும், இராணுவ ஹெலிகாப்டர் மூலம் , கந்தளாய் மற்றும் அநுராதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரியான, பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவா நகரில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் வருகிறது.
- BBC