04-19-2006, 05:45 AM
[size=18]மொழிதான் நம் அடையாளம் மொழிதான் நமக்கு விழி - சுப.வீரபாண்டியன்
'தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை!, தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை! என்பது மூத்தோர் வாக்கு தமிழர்களே! ஏனெனில், மொழி என்பது ஒரு வார்த்தை மட்டுமே இல்லை, அதுதான் நம் வாழ்க்கை 'அறம் செய்ய விரும்பு என்று வாழ்வைச் சொல்லித் தருவது மொழி அகரத்தைக்கூட இப்படி அறமாகச் சொல்லிப் போதிப்பது நம் பண்பாடு!
தமிழின் மேன்மைதான் தமிழரின் மேன்மை தமிழின் அழிவு என்பது தமிழரின் அழிவு!
சாதியோடு யாரும் வாழ வேண்டாம், மதம் இல்லாமலும் வாழலாம் ஆனால், ஒரு மொழி இல்லாமல் யாரும் வாழ முடியாது. கருவி என்பது புறவயமானது மொழி என்பதோ அகவயமானது கணினி
என்ற கருவி இல்லாமல் என்னால் வாழ்ந்துவிட முடியும் ஆனால், எப்படி நான் சிந்திக்காமல் இருக்க முடியும்? ஏனெனில் மொழி என்பது மூளையோடு பின்னிப் பிணைந்தது'தாய் மொழி படி! என்று சொன்னால், வேறு மொழி எதையும் படிக்காதே என்று அர்த்தமல்ல ஒவ்வொருவரின் தேவைக்கும் திறமைக்கும் தகுந்தபடி எத்தனை மொழிகளை வேண்டுமானாலும்
படிக்கலாம் ஆனால், நீங்கள் எந்த மொழியைச் சரியாகப் படிப்பதற்கும் முதல் மொழி ஒன்று அவசியம் அந்த முதல் மொழி தாய் மொழியாகத்தான் இருக்க முடியும்பாரதிதாசன் புதுவையில் ஆசிரியராக இருந்தபோது 'அ எழுத்தை சொல்லித் தர 'அணில் படம் வரைந்திருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'குழந்தையின்
வாழ்க்கை அம்மாவில் இருந்து தொடங்க வேண்டுமே தவிர, அணிலில் இருந்து தொடங்கக்கூடாது என்று அவர் சொன்ன கருத்தை பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பாடப்
புத்தகத்தில் மாற்றம் செய்தது. ஆனால் இன்றோ, நம் பிள்ளைகளின் வாழ்க்கையை 'ஆப்பிள் முதல் தொடங்குகிறார்கள். அந்நிய உலகத்தைத் தெரிந்துகொள்வது நல்லதே ஆனால், தாய் மொழியைத் தவிர்ப்பதால், நாம் நம் வாழ்க்கைக்கே அந்நியமாகப்
போவதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?உலகமே கிராமமாகிவிட்ட பிறகு 'தமிழ் தமிழ் என்று ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்று எங்கள் மீது கோபம் வரலாம் உலகம் கிராமமாகவில்லை. உலகம் அமெரிக்காவாகி வருகிறது! அவர்கள் அங்கே விழித்திருக்கும்போது, அவர்களுக்காக இங்கே நம் கணிப்பொறிப்பிள்ளைகள் உறங்காமல் வேலை பார்க்கிறார்கள் எஜமானர்கள் தூங்கும்போது அடிமைகள் எப்படி உறங்க முடியும்?மாமாவுக்கும் சித்தப்பாவுக்கும் நம்மிடம் தனித்தனி உறவுப் பெயர்கள் உண்டு. அந்த உறவுகள் இல்லாத, கூட்டுக் குடும்ப வாழ்க்கையற்ற ஒரு மொழியில் இரண்டு வெவ்வேறு உறவுகளை
'அங்கிள் என்று அழைப்பதை நாமும் பயன்படுத்துவது மூடத்தனம்தானே?
மொழி கடந்து மனிதன் சிந்திக்க வேண்டும் என்பவர்களுக்கும் ஒரு செய்தி.
நீங்கள் சொல்வதும் நியாயம்தான் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியும்போது ஒரு லட்சம் இந்துக்கள், ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பாடம் நடத்துவதைவிட, 'மொத்தமாக இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்வது தான் மனிதநேயம். இந்தியாவின் பிரிவு, மதத்தால் வந்ததாகச் சொல்லலாம் ஆனால், பாகிஸ்தானும், வங்காள தேசமும் ஏன் பிரிந்தன?
இரண்டு நாட்டிலும் ஒரே மதம்தான் ஆனாலும், 'எங்கள் வங்காள மொழியின் செழுமையை எங்களால் இழக்க முடியாது என்று மதம் கடந்து மொழி நின்றதுதான் வரலாறு! ஆம், மனிதனையும் மொழியையும் பிரிக்க முடியாது நண்பர்களே!
'பணம் சேர் என்று கட்டளையிடாமல் 'திறமைக்கும், தகுதிக்கும் உரிய பணம் சம்பாதிக்க வேண்டும் 'தீதின்றி ஈட்டல் பொருள் என அந்தப் பணம் முறையற்ற வழியில் வரக் கூடாது என்று போதிப்பதும் மொழியின் வேலை அப்போதுதான் மனிதம் தழைக்கும்!
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு மொழி விழிப்பு உணர்வு தமிழகத்தில்தான் தொடங்கியது இன்று இந்தியாவிலேயே மொழி அறியாமை உள்ளவர்களும்
தமிழர்களாகத்தான் இருக்க முடியும். தமிழகத்திடம் இருந்து மொழி உணர்வைப் பெற்றன பக்கத்து மாநிலங்கள். இன்று, கன்னடம் தெரியாமல் யாரும் கர்நாடகாவில் படிக்க முடியாது,
மலையாளத்தை உயிருக்கு இணையாகக் கருதுகிறார்கள். மலையாளிகள் சுந்தரத் தெலுங்குதான் ஆந்திராவின் வீடுகளில் இன்றைக்கும் ஒலிக்கிறது. ஆனால், தமிழகத்தின் தமிழ்த்
தெருவில் மட்டும் தமிழ் இல்லை தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதை என்று நாம், நம் குழந்தைகளை வெறும் மதிப்பெண்களுக்காக இந்தப் பாடல்களை மனப்பாடம்
செய்யவைத்தோமோ, அன்று தொடங்கியது நம் வீழ்ச்சி!
முனுசாமிக்கும், கண்ணம்மாவுக்கும் பிறந்த குழந்தை பள்ளியில் தமிழில் பேசியதற்காக தண்டனை விதிக்கிறார்கள் 'அம்மா என்று மகன் அழைத்தால் அகம் மகிழாமல், 'இவ்வளவோ செலவு பண்ணி 'அம்மான்னு கூப்பிடவா உன்னை இங்கிலீஷ் மீடியம் சேர்த்தேன் 'மம்மீன்னு கூப்பிடு மகனே! என்று பிள்ளையை அடிக்கிறாள் தமிழ்த் தாய்!
ஆம், தமிழர்களின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி பயில்கிறார்கள் தமிழ் தெரியாத ஒரு தலைமுறை தமிழ்நாட்டிலேயே உருவாகி வருகிறது.
மருத்துவம் ஆங்கிலத்தில் இருந்தாலும் நோயாளிகள் தமிழர்களாகத்தானே வருகிறார்கள். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்கலாம் ஆனால், குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றம் வருபவர்கள் தமிழர்களாக இருக்கும்போது, தமிழ்தானே அங்கே தேவை.
'உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா! என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. தமிழர்கள் ஆங்கிலம் படிக்க விரும்பி, அதுவும் தெரியாமல், தமிழையும் சேர்த்துத் தொலைக்கிறார்கள்.தாய்மொழியைச் சரிவரக் கற்காத எந்த மனிதனும், வேறு மொழிகளை ஆழமாகக் கற்க இயலாது என்பது, அறிவியல் 'வல்லமை உள்ள மொழி வாழாதா? அதை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார்கள்.
மொழி வாழ்ந்தால்தான் அந்தச் சமூகம் வாழும், பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகச் சிறிய அளவே உள்ள இங்கிலாந்து வல்லரசாக இருப்பதற்கு, அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இருப்பதுதான் காரணம்!
தொழிலறிவு பெற தாய் மொழிக் கல்விதான் சிறந்த வழி என்பதற்கு ஜப்பான் நாடு கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஓர் உதாரணம். விதவிதமான கண்டுபிடிப்புகள், ரோபோக்களைத்
தாண்டியும் ஜப்பானியர்களிடம் கவிதையும் மொழியும் அதனோடு பிணைந்த வாழ்க்கையும் முக்கியமாக இருக்கிறது. வல்லரசுகளை மிரட்டுகிற தொழில்நுட்பம் இருக்கிற சீனாவில் பெருமையே அதன் தாய் மொழிப் பற்றுதான்.
போரினால் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துபோன தமிழர்கள்தான் ஈழ விடுதலையில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஈடுபாடு காட்டுகிறார்கள்.
ஜெர்மன் மொழியை இலக்கணச் சுத்தமாகப் பேசினாலும், 'நீ ஜெர்மானியன் இல்லையே என்று புறக்கணிக்கப்படுவதன் துயரத்தை உணர்ந்தால்தான் முடியும் ஆனால், இங்கேயோ தலைகீழ் தமிழில் படிக்கிற பிள்ளைகளுக்கு வேலையில் முன்னுரிமை இல்லாமல் போவது தமிழகத்தின் அவலம் நம் குடும்ப உறவுகளில் சிக்கல் பெருகியதற்கும் நாம் தாய் மொழியை மறந்ததற்கும் இறுக்கமான தொடர்பு உண்டு. நாம் நம் அறிவுச் செல்வத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் என்கிற உணர்வு நமக்கு எப்போது வரும்?
'கர்ணனுக்குப் பிறகு கொடையும் இல்லை, கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை என்று ஒரு சமூகம் பழமொழி சொல்வது எளிதன்று எம் முன்னோர் எத்தனை கார்த்திகைகளுக்குக் காத்திருந்து, அனுபவத்தால் உணர்ந்து இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்க வேண்டும்? ஆனால், சுட்டெரிக்கும் வெயில் பகுதியில் வாழும் என் பிள்ளைகள் 'ரெயின் ரெயின் கோ அவே என்று பாடுவது அறிவுடைமை ஆகாதே!
எம் வருத்தம் பிள்ளைகளின் மேல் இல்லை அதைச் சொல்லித்தருகிற கல்வி முறைக்கே வெட்கம் இல்லை அடுத்த தலைமுறை பற்றி அக்கறை இல்லாத அரசியல் தலைவர்கள் வாய்ப்பது சமூகத்துக்கு நன்மையாகாது வீடு, தமிழை விட்டு விட்டது அரசியல், தமிழை விற்றுவிட்டது இது உடனடியாகத் திருத்தப்பட்டு அடையாளம் நிலை நிறுத்தப்பட வேண்டும் ஏனெனில் அடையாளமின்றி யாரும் வாழ இயலாது
நாம் எந்த மொழியின் மூலம் உலகத்தைத் தெரிந்துகொள்கிறோமோ அதுவே நம் அடையாளம் இதை நமக்குச் சொல்வதும் நம் முன்னோர்தான். தன் பெயர், இனம், மதம், நாடு எதையும் தன் இலக்கியத்தில் சொல்லாத திருவள்ளுவர், தன் முதல் குறளிலேயே. முதல் சொல்லிலேயே தன்னைத் தமிழர் என்று சொல்லிக்கொள்கிறார். இறைவனுக்கு இணையாக மொழியைக் கருதியவர் திருவள்ளுவர்
'அகர முதல எழுத் தெல்லாம் என்று தன் மொழியின் அடையாளத்தோடு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் திருக்குறளைப் புறக்கணிக்கிற சமூகம், வளர்ச்சிக்குரிய சமூகமாகாது.
மொழிதான் நம் அடையாளம் மொழிதான் நமக்கு விழி தன் விரல் கொண்டு தன் விழியைக்குத்திக்கொள்கிற சமூகத்தை யார் தான் காப்பாற்ற முடியும்?
தமிழர் ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு!
நன்றி-ஆனந்தவிகடன்
'தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை!, தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை! என்பது மூத்தோர் வாக்கு தமிழர்களே! ஏனெனில், மொழி என்பது ஒரு வார்த்தை மட்டுமே இல்லை, அதுதான் நம் வாழ்க்கை 'அறம் செய்ய விரும்பு என்று வாழ்வைச் சொல்லித் தருவது மொழி அகரத்தைக்கூட இப்படி அறமாகச் சொல்லிப் போதிப்பது நம் பண்பாடு!
தமிழின் மேன்மைதான் தமிழரின் மேன்மை தமிழின் அழிவு என்பது தமிழரின் அழிவு!
சாதியோடு யாரும் வாழ வேண்டாம், மதம் இல்லாமலும் வாழலாம் ஆனால், ஒரு மொழி இல்லாமல் யாரும் வாழ முடியாது. கருவி என்பது புறவயமானது மொழி என்பதோ அகவயமானது கணினி
என்ற கருவி இல்லாமல் என்னால் வாழ்ந்துவிட முடியும் ஆனால், எப்படி நான் சிந்திக்காமல் இருக்க முடியும்? ஏனெனில் மொழி என்பது மூளையோடு பின்னிப் பிணைந்தது'தாய் மொழி படி! என்று சொன்னால், வேறு மொழி எதையும் படிக்காதே என்று அர்த்தமல்ல ஒவ்வொருவரின் தேவைக்கும் திறமைக்கும் தகுந்தபடி எத்தனை மொழிகளை வேண்டுமானாலும்
படிக்கலாம் ஆனால், நீங்கள் எந்த மொழியைச் சரியாகப் படிப்பதற்கும் முதல் மொழி ஒன்று அவசியம் அந்த முதல் மொழி தாய் மொழியாகத்தான் இருக்க முடியும்பாரதிதாசன் புதுவையில் ஆசிரியராக இருந்தபோது 'அ எழுத்தை சொல்லித் தர 'அணில் படம் வரைந்திருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'குழந்தையின்
வாழ்க்கை அம்மாவில் இருந்து தொடங்க வேண்டுமே தவிர, அணிலில் இருந்து தொடங்கக்கூடாது என்று அவர் சொன்ன கருத்தை பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பாடப்
புத்தகத்தில் மாற்றம் செய்தது. ஆனால் இன்றோ, நம் பிள்ளைகளின் வாழ்க்கையை 'ஆப்பிள் முதல் தொடங்குகிறார்கள். அந்நிய உலகத்தைத் தெரிந்துகொள்வது நல்லதே ஆனால், தாய் மொழியைத் தவிர்ப்பதால், நாம் நம் வாழ்க்கைக்கே அந்நியமாகப்
போவதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?உலகமே கிராமமாகிவிட்ட பிறகு 'தமிழ் தமிழ் என்று ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்று எங்கள் மீது கோபம் வரலாம் உலகம் கிராமமாகவில்லை. உலகம் அமெரிக்காவாகி வருகிறது! அவர்கள் அங்கே விழித்திருக்கும்போது, அவர்களுக்காக இங்கே நம் கணிப்பொறிப்பிள்ளைகள் உறங்காமல் வேலை பார்க்கிறார்கள் எஜமானர்கள் தூங்கும்போது அடிமைகள் எப்படி உறங்க முடியும்?மாமாவுக்கும் சித்தப்பாவுக்கும் நம்மிடம் தனித்தனி உறவுப் பெயர்கள் உண்டு. அந்த உறவுகள் இல்லாத, கூட்டுக் குடும்ப வாழ்க்கையற்ற ஒரு மொழியில் இரண்டு வெவ்வேறு உறவுகளை
'அங்கிள் என்று அழைப்பதை நாமும் பயன்படுத்துவது மூடத்தனம்தானே?
மொழி கடந்து மனிதன் சிந்திக்க வேண்டும் என்பவர்களுக்கும் ஒரு செய்தி.
நீங்கள் சொல்வதும் நியாயம்தான் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியும்போது ஒரு லட்சம் இந்துக்கள், ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பாடம் நடத்துவதைவிட, 'மொத்தமாக இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்வது தான் மனிதநேயம். இந்தியாவின் பிரிவு, மதத்தால் வந்ததாகச் சொல்லலாம் ஆனால், பாகிஸ்தானும், வங்காள தேசமும் ஏன் பிரிந்தன?
இரண்டு நாட்டிலும் ஒரே மதம்தான் ஆனாலும், 'எங்கள் வங்காள மொழியின் செழுமையை எங்களால் இழக்க முடியாது என்று மதம் கடந்து மொழி நின்றதுதான் வரலாறு! ஆம், மனிதனையும் மொழியையும் பிரிக்க முடியாது நண்பர்களே!
'பணம் சேர் என்று கட்டளையிடாமல் 'திறமைக்கும், தகுதிக்கும் உரிய பணம் சம்பாதிக்க வேண்டும் 'தீதின்றி ஈட்டல் பொருள் என அந்தப் பணம் முறையற்ற வழியில் வரக் கூடாது என்று போதிப்பதும் மொழியின் வேலை அப்போதுதான் மனிதம் தழைக்கும்!
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு மொழி விழிப்பு உணர்வு தமிழகத்தில்தான் தொடங்கியது இன்று இந்தியாவிலேயே மொழி அறியாமை உள்ளவர்களும்
தமிழர்களாகத்தான் இருக்க முடியும். தமிழகத்திடம் இருந்து மொழி உணர்வைப் பெற்றன பக்கத்து மாநிலங்கள். இன்று, கன்னடம் தெரியாமல் யாரும் கர்நாடகாவில் படிக்க முடியாது,
மலையாளத்தை உயிருக்கு இணையாகக் கருதுகிறார்கள். மலையாளிகள் சுந்தரத் தெலுங்குதான் ஆந்திராவின் வீடுகளில் இன்றைக்கும் ஒலிக்கிறது. ஆனால், தமிழகத்தின் தமிழ்த்
தெருவில் மட்டும் தமிழ் இல்லை தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதை என்று நாம், நம் குழந்தைகளை வெறும் மதிப்பெண்களுக்காக இந்தப் பாடல்களை மனப்பாடம்
செய்யவைத்தோமோ, அன்று தொடங்கியது நம் வீழ்ச்சி!
முனுசாமிக்கும், கண்ணம்மாவுக்கும் பிறந்த குழந்தை பள்ளியில் தமிழில் பேசியதற்காக தண்டனை விதிக்கிறார்கள் 'அம்மா என்று மகன் அழைத்தால் அகம் மகிழாமல், 'இவ்வளவோ செலவு பண்ணி 'அம்மான்னு கூப்பிடவா உன்னை இங்கிலீஷ் மீடியம் சேர்த்தேன் 'மம்மீன்னு கூப்பிடு மகனே! என்று பிள்ளையை அடிக்கிறாள் தமிழ்த் தாய்!
ஆம், தமிழர்களின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி பயில்கிறார்கள் தமிழ் தெரியாத ஒரு தலைமுறை தமிழ்நாட்டிலேயே உருவாகி வருகிறது.
மருத்துவம் ஆங்கிலத்தில் இருந்தாலும் நோயாளிகள் தமிழர்களாகத்தானே வருகிறார்கள். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்கலாம் ஆனால், குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றம் வருபவர்கள் தமிழர்களாக இருக்கும்போது, தமிழ்தானே அங்கே தேவை.
'உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா! என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. தமிழர்கள் ஆங்கிலம் படிக்க விரும்பி, அதுவும் தெரியாமல், தமிழையும் சேர்த்துத் தொலைக்கிறார்கள்.தாய்மொழியைச் சரிவரக் கற்காத எந்த மனிதனும், வேறு மொழிகளை ஆழமாகக் கற்க இயலாது என்பது, அறிவியல் 'வல்லமை உள்ள மொழி வாழாதா? அதை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார்கள்.
மொழி வாழ்ந்தால்தான் அந்தச் சமூகம் வாழும், பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகச் சிறிய அளவே உள்ள இங்கிலாந்து வல்லரசாக இருப்பதற்கு, அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இருப்பதுதான் காரணம்!
தொழிலறிவு பெற தாய் மொழிக் கல்விதான் சிறந்த வழி என்பதற்கு ஜப்பான் நாடு கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஓர் உதாரணம். விதவிதமான கண்டுபிடிப்புகள், ரோபோக்களைத்
தாண்டியும் ஜப்பானியர்களிடம் கவிதையும் மொழியும் அதனோடு பிணைந்த வாழ்க்கையும் முக்கியமாக இருக்கிறது. வல்லரசுகளை மிரட்டுகிற தொழில்நுட்பம் இருக்கிற சீனாவில் பெருமையே அதன் தாய் மொழிப் பற்றுதான்.
போரினால் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துபோன தமிழர்கள்தான் ஈழ விடுதலையில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஈடுபாடு காட்டுகிறார்கள்.
ஜெர்மன் மொழியை இலக்கணச் சுத்தமாகப் பேசினாலும், 'நீ ஜெர்மானியன் இல்லையே என்று புறக்கணிக்கப்படுவதன் துயரத்தை உணர்ந்தால்தான் முடியும் ஆனால், இங்கேயோ தலைகீழ் தமிழில் படிக்கிற பிள்ளைகளுக்கு வேலையில் முன்னுரிமை இல்லாமல் போவது தமிழகத்தின் அவலம் நம் குடும்ப உறவுகளில் சிக்கல் பெருகியதற்கும் நாம் தாய் மொழியை மறந்ததற்கும் இறுக்கமான தொடர்பு உண்டு. நாம் நம் அறிவுச் செல்வத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் என்கிற உணர்வு நமக்கு எப்போது வரும்?
'கர்ணனுக்குப் பிறகு கொடையும் இல்லை, கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை என்று ஒரு சமூகம் பழமொழி சொல்வது எளிதன்று எம் முன்னோர் எத்தனை கார்த்திகைகளுக்குக் காத்திருந்து, அனுபவத்தால் உணர்ந்து இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்க வேண்டும்? ஆனால், சுட்டெரிக்கும் வெயில் பகுதியில் வாழும் என் பிள்ளைகள் 'ரெயின் ரெயின் கோ அவே என்று பாடுவது அறிவுடைமை ஆகாதே!
எம் வருத்தம் பிள்ளைகளின் மேல் இல்லை அதைச் சொல்லித்தருகிற கல்வி முறைக்கே வெட்கம் இல்லை அடுத்த தலைமுறை பற்றி அக்கறை இல்லாத அரசியல் தலைவர்கள் வாய்ப்பது சமூகத்துக்கு நன்மையாகாது வீடு, தமிழை விட்டு விட்டது அரசியல், தமிழை விற்றுவிட்டது இது உடனடியாகத் திருத்தப்பட்டு அடையாளம் நிலை நிறுத்தப்பட வேண்டும் ஏனெனில் அடையாளமின்றி யாரும் வாழ இயலாது
நாம் எந்த மொழியின் மூலம் உலகத்தைத் தெரிந்துகொள்கிறோமோ அதுவே நம் அடையாளம் இதை நமக்குச் சொல்வதும் நம் முன்னோர்தான். தன் பெயர், இனம், மதம், நாடு எதையும் தன் இலக்கியத்தில் சொல்லாத திருவள்ளுவர், தன் முதல் குறளிலேயே. முதல் சொல்லிலேயே தன்னைத் தமிழர் என்று சொல்லிக்கொள்கிறார். இறைவனுக்கு இணையாக மொழியைக் கருதியவர் திருவள்ளுவர்
'அகர முதல எழுத் தெல்லாம் என்று தன் மொழியின் அடையாளத்தோடு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் திருக்குறளைப் புறக்கணிக்கிற சமூகம், வளர்ச்சிக்குரிய சமூகமாகாது.
மொழிதான் நம் அடையாளம் மொழிதான் நமக்கு விழி தன் விரல் கொண்டு தன் விழியைக்குத்திக்கொள்கிற சமூகத்தை யார் தான் காப்பாற்ற முடியும்?
தமிழர் ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு!
நன்றி-ஆனந்தவிகடன்
,
,
,