04-20-2006, 09:57 AM
Quote:ஆனாலும் இவர்கள் இன்னமும் இந்தியா ஈழத்துக்கு எதிரானது... இந்திய "ரா" உளவு அமைப்பு அவர்களுக்கு எதிராக 5,000 பேரை பணியில் அமர்த்தி இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்போதைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் நடுநிலை
ƒÂ¡ lucky þந்தியா நடுநிலை? வகித்தால் சந்தோசமே ஆனால் நீங்கள் நினைப்பது போல் அவ்வாறு இல்லை. பலமாதங்களுக்கு பொலனறுவை காட்டுப்பகுதியில் ஒட்டுக்குழுமுகாம் அழிக்கப்பட்டபோது அங்கு இந்தியபாஸ்போட்கள் சில கண்டெடுக்கப்பட்டன.
90 பகுதியில் அவர்களோடு தொங்கிக்கொண்டு சென்ற பல கடாக்களை கொம்பு சீவி இப்போது வடக்குகிழக்கில் இறக்கியிருக்கிறார்கள்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட சில தமிழர்புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் தெரிவித்த விடயம் தம்மை கடத்தியவர்கள் இந்தியில் பேசினார்கள் என்று. இரு தரப்பினர் ஒப்பந்தத்தில் உள்ளபோது ஒரு தரப்பினர் மீது முன்றாம்தரப்பு வீணாக எதற்கு தாக்குதல்களை நடத்தினம்.
[quote]நாடு மலர்ந்தாலும் மகிழ்ச்சி என்ற நிலையிலேயே (மக்களின் பெருவாரியான நினைப்பும் இது தான்) நம் நாடு இருக்கிறது...
இது சந்தோசமே! அண்மையில் நடந்தமகாநாடுகள் முலம் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுமக்கள்
இதைவரவேற்றாலும், பார்ப்பனிய அரசியல் தலைமைகள் இதைஏற்றுக்கொள்ளுமா தெரியாது.
அதனால் தான் ஒருகாலத்தில் தமிழ்போராட்டங்களுக்கு வெளிப்படையாக உதவி செய்த அரசாங்கமே அது தனிநாட்டைநோக்கி போவதைக்கண்டு அழிக்கமுற்பட்டனர். இந்தியஇராணுவம் வந்த போது தமிழ்மக்கள் பெரும் சந்தோசப்பட்டார்கள். ஆனால் அவர்கள் செய்த அநியாயம் :twisted:
Quote:என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இலங்கை அரசை விட விடுதலைப்புலிகளே இந்தியாவுக்கு இப்போதைக்கு நம்பகமானவர்கள்... இலங்கை அரசு எத்தனையோ முறை அமெரிக்க ராணுவத்தளத்தை திரிகோணமலையில் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து, இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் அது நடக்காமல் போய் வருவதை நாம் அறிவோம்....
ஆனால், இந்த உண்மையை உங்கடைஅரசுகள் இலங்கை அரசு முதுகில் குத்தும்போது தான் உணர்வார்கள். 90 இல் நடந்ததையே மறந்துவிட்டார்கள்
Quote:உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...
தமிழ் ஒட்டுக்குழுக்களின் நன்றிவிசுவாசம். தன்மக்களுக்கு இல்லாவிட்டாலும், எலும்பு கொடுத்த, எஜமான் காலை எப்போதும் நக்குவார்கள்.