04-20-2006, 02:16 PM
நல்ல விஞ்ஞான பூர்வமான கட்டுரைகளை இணைத்தமைக்கு நன்றிகள் அரவிந்தன்,
மேலே பலர் கூறியவற்றை நாம் வெகு ஆளமாகவும் நடைமுறை ரீதியாகவும் ஆராய வேண்டி உள்ளது.
முதலில் தாய் மொழி என்றால் என்ன என்பதில் பல பிரச்சினைகள் உள்ளன,இது புலத்தில் பிறந்து வளரும் பிள்ளைகளை அடிப்படையாக வைத்துச் சொன்னால், அவர்களின் தாயின் மொழி தான் தாய் மொழியா?அல்லது அவர்கள் அதிகமாக கேட்கும் அல்லது அமிழ்ந்துள்ள மொழி தான் தாய் மொழியா,இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
உதாரணத்திற்கு ஒரு பிள்ளை மூன்றுவயதை அடையும் மட்டும் பேசமால் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.கவலை அடையும் பெற்றோர் அவரை தமது வைத்திய நிபுணரிடம் அழைத்துச் செல்கின்றனர்.அவர் குழந்தயைப் பரிசோதிப்பதற்காக தமது உள்ளூர் மொழியில் கேள்விகளைக் கேட்கிறார்.குழந்தயோ தாய் தந்தையரின் மொழியயே அறிந்துள்ளது.இதனால் அக் குழந்தை குழப்பம் அடையாதா?
மேலும் ஆரம்பப் பாடசாலைகளில் மொழிக் கல்வியும்,அடிப்படை கணித பாடமும் படிப்பிக்கப் படிகிறது ,வீட்டில் அந்த அந்த மொழியிலயே கதைக்கும் குழந்தைகளுக்கு பாடசாலையில் சிறப்பாகச்செய்ய கூடிய அளவு சாத்தியம் இருகிறது.ஆரம்பப் பாடசாலைகளிலயே குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களின் திறமைகளுக்கு முத்திரை இடும் பழக்கம் எல்லா மேற்கத்திய பாடசாலைகளிலும் இருக்கிறது.இந்த தரத்திற்கு அமைவாகவே ஒரே வகுப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு வெவ்வேறாக பாடங்கள் நடாத்தப் படுகின்றன.இப்போ ஒரே வகுப்பிலயே இங்கிலாந்தை பொறுத்தவரை இரு வேறு தரத்தில் ஆங்கிலமும்,கணிதமும் படிப்பப்பிக்கப் படிகிறது.இதில் திறமையானவர்களாக ஆசிரியர்கள் மதிப்பிடும் பிள்ளைகள் மேலும் திறமை உடயவர்களாக ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.இதன் படி உள்ளூர் மொழியில் அவ்வளவாக பரீட்சயமயற்ற பிள்ளை திறமை குறைந்தவராக மதிப்படிடப் பட்டு அவரிற்கான போதனை மட்டுப் படுத்தப் பட்ட தரத்திலேயே நிகழ்கிறது.
மேலும் மொழிகளை கிரகிக்கும் திறன் என்பது மூளையின் ஒரு பகுதியில் இருக்கும் மடிப்புக்களின் எண்ணிக்கயில் தங்கி இருகிறது எனவும் சில ஆராச்சிகள் கூறுகின்றன.ஆகவே ஒரு குழந்தயில் இருந்து இன்னொரு குழந்தைக்கு மொழிகளை கிரகிக்கும் தன்மையும் வேறு படுகிறது.
நடைமுறையில் பெற்றோர் தமிழில் உரை ஆடினாலும் பிள்ளைகள் பதிலை உள்ளூர் மொழியிலயே அழிக்கிறார்கள்.மேலே சொன்னது போல் குழந்தைகளை வெருட்டி இங்கே எதனையும் செய்ய முடியாது.அது அவர்களுக்கு தமிழ் மேல் வெறுப்பையே உண்டு பண்ணும்.பெற்றோருடன் ஆன உறவும் மோசமாகும்.அவர்களுக்கு தமிழ் விளங்கினாலும் தமக்கு மிகவும் பரீட்ச்சயமான,தாம் அமிழ்ந்துள்ள மொழியிலயே அவர்கள் பதிலை அழிக்கிறார்கள்.இது எதனைக் காட்டுகிறது, அவர்கள் தாம் அதிகமாக அமிழ்ந்துள்ள மொழியிலயே அவர்கள் சிந்திக்கிறார்கள் என்றல்லவா?
ஆகவே தாய் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினாலும் நடைமுறை ரீதியாக இது எவ்வளவுக்கு சாத்தியமானது?
எனது அனுபவத்தில் இது சாத்தியப் படதா ஒன்றாகவே இருக்கும்.மேலெ எழுதிய பலர் இது அமைப்பு ரீதியாகச் செய்யப் பட வேண்டும் என்று எழுதிகிறார்கள் ஒழிய, நடை முறயில் எமக்கெல்லாம் தெரியும் இவ்வாறான அமைப்புக்களை அமைத்துச் செயற்பட ஒருவரும் இல்லை என்பதே புலத்தில் நிதர்சனமான உண்மை.
தமிழர் என்ற அடயாளம் ஏன் அவசியமானது என்பதற்கான காரணங்கள் மேலே சுட்டிக் காட்டப் பட்டுள்ளன,ஆனால் ஒரு நான்கு வயதுக் குழந்தைக்கு பெற்றோரால் மேலே சொன்ன வற்றை எவ்வாறு விளக்கப் படுத்த முடியும்?உனது தேசிய அடயாளத்தை,உனது வரலாற்றை நீ அறிய உனக்குத் தமிழ் தெரிய வேணும் என்று சொன்னால் எந்தக் குழந்தைக்கு அது விளங்கும்? புலம் பெயர்ந்த நீ என்றுமே ஆங்கிலேயனாக முடியாது என்பது எப்படி ஒரு குழந்தைக்கு விளங்கும்?டிவியில் நல்ல நல்ல காட்டூன் எல்லாம் ஆங்கிலத்தில போகுது ,எனது நண்பர்கள் எல்லாம் அதைப் பாக்கினம் அப்பா என்னடா எண்டா இந்த கிழவி ஒண்டு கரும்பலகைக்கு முன்னால் நிண்டு கொண்டு சோக்காலா எழுதி தமிழ் படிப்பிகிறன் எண்டு சொல்லிக் கொண்டு விசர் அலம்பிக் கொண்டிருக்கிற , நிகழ்ச்சியப் பாக்கச் சொல்லிறார் எண்டு தான் அந்தக் குழந்தை நினைக்கும்.
ஆகவே இரண்டாம் மொழியாகவேனும் தமிழ் படிப்பிக்கப் படுவதே நடை முறை ரீதியாக புலத்தில் சாதியப்படக் கூடிய ஒன்றாகும். நாம் என்ன தான் விரும்பினாலும் இதுவே நிதர்சனம்.புலத்தில் பெற்றோராக இருக்கும் எல்லாருக்கும் இது விளங்கும்.
மேலும் ஏன் தமிழ் படிக்க வேணும் என்பதற்காகச் சொல்லப்படும் காரணங்கள் கூட பிள்ளையை மையமாக வைக்காமல், அம்மா அப்பாவின் பராமரிப்பு முதற்கொண்டு இனோரன்ன பிற வெளிக் காரணங்களை மையமாக வைத்தே கூறப் படுகின்றன.இதனை எவ்வாறு வளர்ந்த சிந்திக்கும் ஆற்றல் உள்ள பிள்ளைகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்?
ஆகவே தமிழை ஏன் படிக்க வேன்டும் என்பதற்கான காரணங்கள் ,புலத்தில் உள்ள குழந்தைகளை மையமாக வைத்தே கூறப் பட வேணும்.ஏன் அவர்களுக்கு ஒரு தமிழ் அடையாளம் வேணும் என்பது, அவர்கள் தாம் வாழும் சமூகத்தில் எவ்வாறு நோக்கப் படுகிறார்கள்,அவர்களை ஏன் அந்தச் சமூகம் வெளியில் இருந்து வந்தவர்களாகக் கருதுகிறது என்பன போன்ற விடயங்கள் விளக்கப் படுத்தப் பட வேண்டும்.இது ஓரளவு சிந்திக்கத் தெரிந்த வயசிலயே சாத்தியப் படும்.இங்கிருக்கும் சிக்கல் சிந்திக்கும் வயசை அடையும் பிள்ளை தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் திறனை அந்த வயசில் இழந்து விடுகிறதா? இவை விஞ்ஞான பூர்வமாகவும் ஆரயப் பட வேணும்.
மேலும் யாழ்க்களத்தில் இருக்கும் இளயவர்களிடம் அதாவது புலத்தில் சிறு பிராயம் முதல் வளர்பவர்களிடம் அவர்கள் எந்த வயதில் எப்படி தமிழைக் கற்றார்கள்,அவர்கள் எந்த மொழியில் சிந்திக்கிறார்கள்? தமிழை ஆரம்பம் முதலே கற்ற படியால் அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் தாக்கம் எதாவது இருந்ததா? என்று அறிய முடியுமா.உங்கள் அனுபவங்கள் எண்ணங்கள் என்ன?
மேலே பலர் கூறியவற்றை நாம் வெகு ஆளமாகவும் நடைமுறை ரீதியாகவும் ஆராய வேண்டி உள்ளது.
முதலில் தாய் மொழி என்றால் என்ன என்பதில் பல பிரச்சினைகள் உள்ளன,இது புலத்தில் பிறந்து வளரும் பிள்ளைகளை அடிப்படையாக வைத்துச் சொன்னால், அவர்களின் தாயின் மொழி தான் தாய் மொழியா?அல்லது அவர்கள் அதிகமாக கேட்கும் அல்லது அமிழ்ந்துள்ள மொழி தான் தாய் மொழியா,இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
உதாரணத்திற்கு ஒரு பிள்ளை மூன்றுவயதை அடையும் மட்டும் பேசமால் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.கவலை அடையும் பெற்றோர் அவரை தமது வைத்திய நிபுணரிடம் அழைத்துச் செல்கின்றனர்.அவர் குழந்தயைப் பரிசோதிப்பதற்காக தமது உள்ளூர் மொழியில் கேள்விகளைக் கேட்கிறார்.குழந்தயோ தாய் தந்தையரின் மொழியயே அறிந்துள்ளது.இதனால் அக் குழந்தை குழப்பம் அடையாதா?
மேலும் ஆரம்பப் பாடசாலைகளில் மொழிக் கல்வியும்,அடிப்படை கணித பாடமும் படிப்பிக்கப் படிகிறது ,வீட்டில் அந்த அந்த மொழியிலயே கதைக்கும் குழந்தைகளுக்கு பாடசாலையில் சிறப்பாகச்செய்ய கூடிய அளவு சாத்தியம் இருகிறது.ஆரம்பப் பாடசாலைகளிலயே குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களின் திறமைகளுக்கு முத்திரை இடும் பழக்கம் எல்லா மேற்கத்திய பாடசாலைகளிலும் இருக்கிறது.இந்த தரத்திற்கு அமைவாகவே ஒரே வகுப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு வெவ்வேறாக பாடங்கள் நடாத்தப் படுகின்றன.இப்போ ஒரே வகுப்பிலயே இங்கிலாந்தை பொறுத்தவரை இரு வேறு தரத்தில் ஆங்கிலமும்,கணிதமும் படிப்பப்பிக்கப் படிகிறது.இதில் திறமையானவர்களாக ஆசிரியர்கள் மதிப்பிடும் பிள்ளைகள் மேலும் திறமை உடயவர்களாக ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.இதன் படி உள்ளூர் மொழியில் அவ்வளவாக பரீட்சயமயற்ற பிள்ளை திறமை குறைந்தவராக மதிப்படிடப் பட்டு அவரிற்கான போதனை மட்டுப் படுத்தப் பட்ட தரத்திலேயே நிகழ்கிறது.
மேலும் மொழிகளை கிரகிக்கும் திறன் என்பது மூளையின் ஒரு பகுதியில் இருக்கும் மடிப்புக்களின் எண்ணிக்கயில் தங்கி இருகிறது எனவும் சில ஆராச்சிகள் கூறுகின்றன.ஆகவே ஒரு குழந்தயில் இருந்து இன்னொரு குழந்தைக்கு மொழிகளை கிரகிக்கும் தன்மையும் வேறு படுகிறது.
நடைமுறையில் பெற்றோர் தமிழில் உரை ஆடினாலும் பிள்ளைகள் பதிலை உள்ளூர் மொழியிலயே அழிக்கிறார்கள்.மேலே சொன்னது போல் குழந்தைகளை வெருட்டி இங்கே எதனையும் செய்ய முடியாது.அது அவர்களுக்கு தமிழ் மேல் வெறுப்பையே உண்டு பண்ணும்.பெற்றோருடன் ஆன உறவும் மோசமாகும்.அவர்களுக்கு தமிழ் விளங்கினாலும் தமக்கு மிகவும் பரீட்ச்சயமான,தாம் அமிழ்ந்துள்ள மொழியிலயே அவர்கள் பதிலை அழிக்கிறார்கள்.இது எதனைக் காட்டுகிறது, அவர்கள் தாம் அதிகமாக அமிழ்ந்துள்ள மொழியிலயே அவர்கள் சிந்திக்கிறார்கள் என்றல்லவா?
ஆகவே தாய் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினாலும் நடைமுறை ரீதியாக இது எவ்வளவுக்கு சாத்தியமானது?
எனது அனுபவத்தில் இது சாத்தியப் படதா ஒன்றாகவே இருக்கும்.மேலெ எழுதிய பலர் இது அமைப்பு ரீதியாகச் செய்யப் பட வேண்டும் என்று எழுதிகிறார்கள் ஒழிய, நடை முறயில் எமக்கெல்லாம் தெரியும் இவ்வாறான அமைப்புக்களை அமைத்துச் செயற்பட ஒருவரும் இல்லை என்பதே புலத்தில் நிதர்சனமான உண்மை.
தமிழர் என்ற அடயாளம் ஏன் அவசியமானது என்பதற்கான காரணங்கள் மேலே சுட்டிக் காட்டப் பட்டுள்ளன,ஆனால் ஒரு நான்கு வயதுக் குழந்தைக்கு பெற்றோரால் மேலே சொன்ன வற்றை எவ்வாறு விளக்கப் படுத்த முடியும்?உனது தேசிய அடயாளத்தை,உனது வரலாற்றை நீ அறிய உனக்குத் தமிழ் தெரிய வேணும் என்று சொன்னால் எந்தக் குழந்தைக்கு அது விளங்கும்? புலம் பெயர்ந்த நீ என்றுமே ஆங்கிலேயனாக முடியாது என்பது எப்படி ஒரு குழந்தைக்கு விளங்கும்?டிவியில் நல்ல நல்ல காட்டூன் எல்லாம் ஆங்கிலத்தில போகுது ,எனது நண்பர்கள் எல்லாம் அதைப் பாக்கினம் அப்பா என்னடா எண்டா இந்த கிழவி ஒண்டு கரும்பலகைக்கு முன்னால் நிண்டு கொண்டு சோக்காலா எழுதி தமிழ் படிப்பிகிறன் எண்டு சொல்லிக் கொண்டு விசர் அலம்பிக் கொண்டிருக்கிற , நிகழ்ச்சியப் பாக்கச் சொல்லிறார் எண்டு தான் அந்தக் குழந்தை நினைக்கும்.
ஆகவே இரண்டாம் மொழியாகவேனும் தமிழ் படிப்பிக்கப் படுவதே நடை முறை ரீதியாக புலத்தில் சாதியப்படக் கூடிய ஒன்றாகும். நாம் என்ன தான் விரும்பினாலும் இதுவே நிதர்சனம்.புலத்தில் பெற்றோராக இருக்கும் எல்லாருக்கும் இது விளங்கும்.
மேலும் ஏன் தமிழ் படிக்க வேணும் என்பதற்காகச் சொல்லப்படும் காரணங்கள் கூட பிள்ளையை மையமாக வைக்காமல், அம்மா அப்பாவின் பராமரிப்பு முதற்கொண்டு இனோரன்ன பிற வெளிக் காரணங்களை மையமாக வைத்தே கூறப் படுகின்றன.இதனை எவ்வாறு வளர்ந்த சிந்திக்கும் ஆற்றல் உள்ள பிள்ளைகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்?
ஆகவே தமிழை ஏன் படிக்க வேன்டும் என்பதற்கான காரணங்கள் ,புலத்தில் உள்ள குழந்தைகளை மையமாக வைத்தே கூறப் பட வேணும்.ஏன் அவர்களுக்கு ஒரு தமிழ் அடையாளம் வேணும் என்பது, அவர்கள் தாம் வாழும் சமூகத்தில் எவ்வாறு நோக்கப் படுகிறார்கள்,அவர்களை ஏன் அந்தச் சமூகம் வெளியில் இருந்து வந்தவர்களாகக் கருதுகிறது என்பன போன்ற விடயங்கள் விளக்கப் படுத்தப் பட வேண்டும்.இது ஓரளவு சிந்திக்கத் தெரிந்த வயசிலயே சாத்தியப் படும்.இங்கிருக்கும் சிக்கல் சிந்திக்கும் வயசை அடையும் பிள்ளை தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் திறனை அந்த வயசில் இழந்து விடுகிறதா? இவை விஞ்ஞான பூர்வமாகவும் ஆரயப் பட வேணும்.
மேலும் யாழ்க்களத்தில் இருக்கும் இளயவர்களிடம் அதாவது புலத்தில் சிறு பிராயம் முதல் வளர்பவர்களிடம் அவர்கள் எந்த வயதில் எப்படி தமிழைக் கற்றார்கள்,அவர்கள் எந்த மொழியில் சிந்திக்கிறார்கள்? தமிழை ஆரம்பம் முதலே கற்ற படியால் அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் தாக்கம் எதாவது இருந்ததா? என்று அறிய முடியுமா.உங்கள் அனுபவங்கள் எண்ணங்கள் என்ன?