04-20-2006, 05:21 PM
தூயவன் Wrote:லக்கிலுக் உம்மை எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அரசியல்வாதிகள் மக்கள் ஞாபக மறதியை வைத்து மேடைகளில் ஒவ்வொருநாளும் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கின்றீர்
இப்போது புலிகளை அல்ல மக்களைத் தான் பிடிக்கும் என்கின்றீர். <b>நேற்று முன்தினம் கூட ஒரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலிகளைப் பற்றித் தாழ்த்தி கூறினார். </b>
ஆனால் <b>யாழ்களத்தில் சில மாதங்களுக்கு முன்பும், நீர் எழுதிய அதே தளத்திலும் எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அவரின் பற்றுறுதியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு நின்றீர்.</b> வேறு தளத்தில் அப்படிச் சொன்னதாக வேறு யாழ்களத்தில் எழுதினீர். ஏன் எம் உறவுகளுக்கு ஞபாக மறதி என்று நினைத்து விட்டீரா??
நீர் இப்போது \"றோ\" அப்படி இல்லை என்கின்றீர். ஆனால் தற்...தமிழில் \"கருணா\"வைப் பிரித்தது றோ என்று ஒப்புக் கொண்டு கருத்து எழுதுகினீர்.
ஒன்றைப் புரிந்து கொள்ளும். வெளிப்படையாக நடப்பது எல்லாம் உண்மையல்ல. பின்னணியில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்குள் றோவின் சம்பந்தம் எப்படி என்பது ஈஎன்டிஎல்எவ்காரர்கள் மட்டக்களப்பில் செத்தபோதும், TROகாரர்களைக் கடத்திய நிகழ்வும் ஆதாரம்.
இங்கே பிரச்சனைகள் நடக்கும்போது தனக்கு இலாபத்தை தேட இந்தியா முயலாது என்று சொன்னால் அது உமது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்திய அரசின் முட்டாள்தனத்தையும் தான் குறிக்கும். எனவே நாம் எப்போதும் \"றோ\"க் குறித்து அவதானமாகத் தான் இருப்போம். இருக்கப் போகின்றோம்..
[size=13]தூயவன்! நான் கூட லக்கிலுக்கின் இந்த இரட்டை வேடத்தை, பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டும் குணத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றிருந்தேன். அவர் புலியெதிர்ப்பு இந்தியர்கள் பெரும்பான்மையாகவுள்ள தளங்களில் ஒன்றைச் சொல்வார், யாழ் களத்தில் வேறொன்றைச் சொல்வார், நான் தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் போவதுண்டு. எத்தனையோ தமிழ்நாட்டுத் தமிழ்ச்சகோதரர்களிடம் பழகியிருக்கிறேன், அவர்கள் யாருமே லக்கிலுக் போன்றவர்களில்லை. அவர்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளார்கள். நிச்சயமாக, லக்கிலுக்கும் அவருடைய குழுவினரின் கருத்துக்களையும்பார்த்து எல்லா இந்தியத்தமிழ்ச் சகோதரர்களும் இவர்களைப் போன்றவர்கள் என்று கருத வேண்டாம்.
உண்மையான, ஈழத்தமிழர்களில் அக்கறையும், அன்பும், மானசீகமாகப் பிரபாகரனின் வீரத்தை எண்ணிப் பூரிக்கும், தமிழ்நாட்டுச் சகோதரர்கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பானமையினர், ஆனால் அவர்கள் ஏழைகள், அவர்களிடம் கணணிகளும் கிடையாது, காசும் கிடையாது. ஈழத்தமிழர்களுக்கெதிராக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு கூச்சலிடுபவர்கள், தமிழ்நாட்டின் வந்தான் வரத்தான்கள் உண்மையான தமிழர்களல்ல.
ஆரம்பத்தில் லக்கிலுக் கூட அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லக்கிலுக்கின் குடும்பத்தில் அனைவரையும், இழிவாகத் தாக்கியது மட்டுமல்ல, பயமுறுத்தலும் செய்தார்கள், அதற்குப் பின்பு தான் லக்கிலுக் அடக்கி வாசிக்கத் தொடங்கினார். தமிழீழ ஆதரவாளரான லக்கிலுக், ஈழத்தமிழர்களின் எதிரியாகி, ஈழத்தமிழர்களின் விடுதலைத் தலைவனை நச்சுச்செடியென்று பேசவைத்ததற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிகள் மட்டுமல்ல, யாழ் களத்தில் லக்கிலுக்கைக் கண்டபடி சீண்டிப் பார்த்து இன்பம் கண்டவர்களும் தான்.