Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!
#34
நீ தமிழன்; எப்படி?
மொழியால், இனத்தால் பண்பாட்டால் நீ தமிழன். இந்த அளவுகோல்படி நீ தமிழனாக இருக்கிறாயா? இது என் கேள்வியல்ல _ தந்தை பெரியாரின் கேள்வி.

அறிஞர் அண்ணா தமிழர்கள் என்பதற்கு விளக்கம் சொன்னார் _ மொழியால், வழியால், விழியால் (பண்பாட்டில்) தமிழர் என்றார்.

உன் பெயர் முதலில் உன் தாய்மொழியில் இருக்கிறதா? உன் தாய்மொழி உன் வீதியில் இருக்கும் கோயிலுக்குள் ஒலிக்கிறதா?

உன் வீட்டு நிகழ்ச்சிகளில் தாய் மொழிக்கு இடம் உண்டா?

தமிழா, நீ கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் உள்ளே சென்று பூசை செய்ய முடியுமா?

முடியாது! காரணம் என்ன? நீ ‘‘சூத்திரன்’’, ‘‘பஞ்சமன்’’ _ சாஸ்திரப்படி மட்டுமல்ல; இன்றைய அரசமைப்புச் சட்டப்படியும் கூட!

அதனால்தானே தந்தை பெரியாரும் 10 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்களும் 1957 நவம்பர் 26_இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26_வது மதப் பாதுகாப்பு பிரிவினை _ ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தினர். மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையும் ஏற்றனர்.

இன்று வரை அதில் மாற்றம் இல்லையே _ பின் எப்படி நாம் மானமுள்ள தமிழர்கள்?

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் ‘‘நீச்ச பாஷை’’ என்பவர்தானே உமக்கு ஜெகத்குரு?

நீ கொண்டாடுவது ‘‘பண்டிகைகளே’’ தவிர விழாக்கள் அல்லவே!

தீபாவளியாக இருந்தாலும், வேறு எந்தத் தெருப் புழுதியாக இருந்தாலும் ‘‘தேவர்கள், அசுரர்களைக் கொன்றார்கள்’’ என்கிற கதை வராத பண்டிகைகள் உண்டா?

அசுரர்கள் எனக் கூறப்படுபவர்கள் எல்லாம் சுராபானம் குடிக்க மறுத்த திராவிடர்கள்தானே? சுரர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் சுரா பானம் குடித்த ஆரியர்கள் என்று விவேகானந்தர் முதல் நேரு உள்ளிட்டு பி.டி.சீனிவாச அய்யங்கார்கள் வரை எழுதியுள்ளனரே _ அவற்றைப் பற்றி ஒரு நொடி நேரம் அறிவைச் செலுத்தி சிந்தித்தது உண்டா?

சுரர்கள் அசுரர்களைச் சூழ்ச்சியால் அழித்தார்கள் என்று எழுதி வைத்த கதைகளை நம்பி அசுரர்களாக்கப்பட்ட நாமே நமது அழிவைப் பெருமைப்படுத்திக் கொண்டாடுவது, ஒரு இனத்தின் தன்மானத்துக்கு அழகாக இருக்க முடியுமா?

இதனைத் தானே அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 60 ஆண்டு காலத்திற்குமேல் படித்துப் படித்துச் சொன்னார். _ இதற்கு மேலும் நம் தோல் மரத்துக் கிடக்கலாமா?

தமிழன் படிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து மேல் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றுதானே ஓயாது பாடுபட்டோம். குலக் கல்வியை பெரியார் ஒழித்ததால்தானே தமிழன் இன்று படிப்பும், பதவியும் பெறும் நிலை!

ஜாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறாயே! தமிழா, நீ தமிழனாக, மானம் உள்ள மனிதனாக இருக்கவேண்டாமா? அதனைத் திசை திருப்பும் ஜாதிச் சாவுக் குழி வெட்ட வேண்டாமா? உன் உடன்பிறப்பையே ‘‘தீண்டத்தகாதவன்’’ என்கிறாயே _ உன்னைச் சூத்திரன் என்பவனை ‘சாமி’ என்கிறாயே!

படித்த இளைஞனே _ இரண்டு பேர் நீங்கள் சந்தித்தால் உங்களின் உரையாடல் என்ன? நம் இனத்தைப் பற்றியா _ மொழி உணர்வைக் குறித்தா? பண்பாட்டுத் தளத்தைப் பற்றியா? இல்லையே!

சினிமாவைப்பற்றிதானே சிரித்துச் சிரித்துப் பேசுகிறாய்!

சீரழிக்கும் சினிமாக்கள்தான் உன் குருதி ஓட்டமா? சினிமாக்காரர்கள்தான் உங்கள் கனவு லோக லட்சியப் புருடர்களா?

உலகில் சினிமாக்காரர்களுக்காக டிக்கெட்டுகளை விற்பதும், திரைப்படப் பெட்டிகளுக்கு ஊர்வலம் விடுவதும், அதில் யார் முந்தி என்பதில் அடித்துக் கொண்டு கொலை வரை நடப்பதும் இங்கல்லாமல் வேறு எங்கு?

இந்த நாட்டைப் பீடித்துள்ள அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று தொலைநோக்கோடு தந்தை பெரியார் கூறியதை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாயா?

விஞ்ஞானம் வளர்ந்தால் அறிவு வேட்கை வளரும் என்பது பொது நியதி. ஆனால், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?

தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனம் மற்றும் ஏடுகள், இதழ்கள் மூடத்தனத்தின், பிற்போக்குத்தனத்தின் மொத்த குத்தகையாகத்தானே செயல்படுகின்றன?

அஞ்ஞானத்தை, விஞ்ஞானத்தின் மூலம் பரப்புகிறார்களே _ இது அறிவு நாணயமா? படித்த தமிழனே, பகுத்தறிவை இழந்து இந்த வலையில் வீழ்வது விவேகம் தானா?

செல்போன், இணைய தளம் என்பது தேவையான விஞ்ஞான சாதனங்கள்தான். சினிமாக் கலாச்சாரத்தால் சீரழிந்துபோன உன் சிந்தனை அவற்றில் எவற்றைத் தேடிக் கொண்டு இருக்கிறது?

இளைஞனே, இலட்சியங்கள் உன்னை கொள்ளை கொள்ள வேண்டாமா? அவற்றிற்கு மாறாக பல்வேறு ‘‘போதைகள்’’ அல்லவா உன்னைப் பாதை மாற்றத்திற்குச் செலுத்துகின்றன.

போதைகளால் தடுமாறும் உனக்கு நாடு எக்கேடு கெட்டால் என்ன _ சமுதாயம் சீரழிந்தால் என்ன _ மொழி மூக்கறுபட்டால் என்ன _ பண்பாடு பாழ்பட்டால்தான் என்ன?

அளவுக்கு மீறி கேளிக்கை உணர்ச்சிகள் ஒரு சமூகத்தில் புகுத்தப்படுவதற்கு உள்நோக்கம் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?

உணவுக்கு உப்பு தேவைதான். ஆனால், உப்பே உணவாகலாமா?

தமிழனிடத்தில் இன உணர்வும், நாட்டு உணர்வும், இலட்சியக் கோட்பாடுகளும் ஆட்கொண்டு விடக் கூடாது என்கிற சூழ்ச்சிதானே!

கறுப்புச் சட்டை உனக்குச் சுயமரியாதையை ஊட்டியது _ பகுத்தறிவைக் கொடுத்தது _ சமூக நீதியைச் சொல்லிக் கொடுத்தது _ பெண்ணுரிமையைப் பேணும் பண்பாட்டை உணர்த்தியது.

அந்த மண்ணில் இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்ட காவிகள் காலடி எடுத்து வைத்தால், பழைய சரிதம் மறந்து, அவற்றிற்கு நடைபாவாடை விரிக்க மல்லுக்கட்டி நிற்கலாமா?

உன் இனத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்களை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்த சிலர் துடிக்கும் பொழுது, ‘ஏதோ ஒரு மயக்கத்தில்’ அவர்களுக்குக் கைலாகு கொடுக்கிறாய். கேட்டால் விமர்சனம் என்கிறாய் _ விமர்சனத்தின் விளக்கம் தெரியுமா உனக்கு?

திராவிடன், தமிழன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கடைசியில் எதிரிகளின் காலடிக்குள் உன்னை அறியாமல் பதுங்கப் பார்க்கிறாய். புத்தம் அழிந்த வரலாறு தெரியுமா உனக்கு?

நண்பன் யார்? பகைவன் யார்? என்று அடையாளம் காணத் தெரியாவிட்டால் உன் எதிர்காலம் எங்கே போய் முடியும்?

‘போதை’யை விடு _ சமுதாயப் பாதையை தேர்ந்தெடு! இலட்சிய மிடுக்குடன் வீறு நடை போடு!

5 நட்சத்திர ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்படுகிறாய். சிக்கனம் என்பதைச் சிறுமையாகக் கருதுகிறாய் _ இது உன்னை எங்கு கொண்டு சேர்க்கும் என்று சிந்திக்க மறுக்கிறாய்.

தாயை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு, தாய் மூகாம்பிகைக் கோயிலுக்குக் கடன் வாங்கிக் குடும்பத்துடன் செல்கிறாய்!

ஏனிந்த போதைகள்?

உரத்தின் மூலம் உணவு விளையும் உண்மைதான்; அதற்காக உரத்தையே உண்ண முடியுமா?

-கீ.வீரமணி- நன்றி குமுதம்
,
,
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 11:40 PM
[No subject] - by vallai - 06-21-2004, 08:35 AM
[No subject] - by vasisutha - 06-21-2004, 08:35 PM
[No subject] - by tamilini - 06-21-2004, 09:33 PM
[No subject] - by kavithan - 06-22-2004, 04:44 AM
[No subject] - by Aravinthan - 03-20-2006, 05:41 AM
[No subject] - by Sujeenthan - 03-20-2006, 02:52 PM
[No subject] - by கந்தப்பு - 03-21-2006, 12:44 AM
[No subject] - by Aravinthan - 03-23-2006, 11:08 AM
[No subject] - by putthan - 03-23-2006, 11:58 AM
[No subject] - by Nitharsan - 03-24-2006, 06:51 AM
[No subject] - by Snegethy - 03-24-2006, 07:09 AM
[No subject] - by Aravinthan - 03-27-2006, 05:32 AM
[No subject] - by கந்தப்பு - 03-28-2006, 02:53 AM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:58 PM
[No subject] - by thaiman.ch - 03-28-2006, 02:32 PM
[No subject] - by thaiman.ch - 03-28-2006, 02:49 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 03:02 PM
[No subject] - by TRAITOR - 03-28-2006, 06:52 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 07:19 PM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 01:09 AM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 02:11 AM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 02:13 AM
[No subject] - by TRAITOR - 03-29-2006, 03:01 AM
[No subject] - by கந்தப்பு - 03-29-2006, 04:04 AM
[No subject] - by putthan - 03-29-2006, 07:09 AM
[No subject] - by Aravinthan - 04-19-2006, 05:45 AM
[No subject] - by narathar - 04-20-2006, 02:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 02:19 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 03:51 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:39 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:43 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:49 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:57 AM
[No subject] - by தூயா - 04-21-2006, 09:13 AM
[No subject] - by narathar - 04-21-2006, 09:43 AM
[No subject] - by தூயா - 04-21-2006, 11:09 AM
[No subject] - by கந்தப்பு - 04-22-2006, 02:36 AM
[No subject] - by தூயா - 04-23-2006, 07:45 AM
[No subject] - by putthan - 04-23-2006, 01:20 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 12:05 AM
[No subject] - by தூயா - 04-24-2006, 01:26 AM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 02:14 AM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 02:58 AM
[No subject] - by தூயா - 04-24-2006, 03:32 AM
[No subject] - by narathar - 04-24-2006, 11:31 AM
[No subject] - by putthan - 04-25-2006, 01:31 AM
[No subject] - by அருவி - 04-25-2006, 05:41 AM
[No subject] - by Aravinthan - 04-26-2006, 07:19 AM
[No subject] - by Aravinthan - 04-28-2006, 05:36 AM
[No subject] - by தூயா - 04-28-2006, 06:02 AM
[No subject] - by narathar - 04-28-2006, 08:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)