04-21-2006, 09:43 AM
துயா எத்தினை வயதில் இருந்து படித்தீர்கள்?ஏன் படித்தீர்கள்?
பெற்றோரின் வற்புறுத்தலாலா?ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் சிறு வயதில் இருந்து படிதீர்கள் என்றால் அந்த வயதில் ஏன் தமிழ் படிக்கிறேன், ஏன் இதைப் பெற்றோர் படிக்கச் சொல்கிறார்கள் என்ற கேள்விகள் உங்களுக்கு எழுந்ததா?இதற்கான பதில்கள், அந்தவயதில் உங்களுக்குச் சொல்லப் பட்டதா?அவை உங்களுக்குச் சரி எனப் பட்டதா?
ஏனெனில் பலரும் உணர்வுத் தளத்தில் இருந்து மட்டுமே இதனை நோக்குகின்றனர் குழந்தைகளின் நிலையில் இருந்தோ,பெற்றோரின் வாழ்வியல் நிலையில் இருந்தோ இதைப் பார்ப்பதில்லை.என்று நாம் இதனை குழந்தைகளின் நிலயில் இருந்தோ அன்றி புலத்தில் இருக்கும் பெற்றோரின் வாழ்வியல் நிலையில் இருந்தோ பார்கிறோமோ அப்போது தான் தமிழ் பரந்து பட்ட அளவில் புலத்தில் பாவிக்கப் படக் கூடிய வகையிலான அணுகுமுறைகளைக் கண்டு அறிய முடியும்.
மேலும் சும்மா உணர்வு ரீதியான மேடைப் பேச்சுக்களால் இது சாதியப் படப் போவதில்லை.தமிழ் அமைப்புக்கள்,ஆசிரியர்கள்,ஊடகங்கள்,பல்கலைக் கழகங்கள் இணைந்து ,பெற்றோரையும்,குழந்தைகளையும் கவரக் கூடிய வகயிலான நவீன கல்விகற்றல் நடைமுறைகளை தமிழ் கற்க புலத்துச் சூழலை, வாழ்வியல் நடைமுறையை மைய்யமாக வைத்து உருவாக்க வேண்டும்.இன்று இணயத்தில் எத்தனை தளங்கள் இருகின்றன தமிழில் பிள்ளைகளை மையமாக வைத்து?எத்தினை புத்தகங்கள் இருகின்றன?எத்தினை நிகழ்ச்சிகள், புல ஊடகங்களில் குழந்தைகளை மையமாக வைத்து இருகின்றன?அவற்றில் எத்தினை தரமானவையாக குழந்தைகளைக் கவரக் கூடிய வகையில் இருகின்றன?
பெற்றோரின் வற்புறுத்தலாலா?ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் சிறு வயதில் இருந்து படிதீர்கள் என்றால் அந்த வயதில் ஏன் தமிழ் படிக்கிறேன், ஏன் இதைப் பெற்றோர் படிக்கச் சொல்கிறார்கள் என்ற கேள்விகள் உங்களுக்கு எழுந்ததா?இதற்கான பதில்கள், அந்தவயதில் உங்களுக்குச் சொல்லப் பட்டதா?அவை உங்களுக்குச் சரி எனப் பட்டதா?
ஏனெனில் பலரும் உணர்வுத் தளத்தில் இருந்து மட்டுமே இதனை நோக்குகின்றனர் குழந்தைகளின் நிலையில் இருந்தோ,பெற்றோரின் வாழ்வியல் நிலையில் இருந்தோ இதைப் பார்ப்பதில்லை.என்று நாம் இதனை குழந்தைகளின் நிலயில் இருந்தோ அன்றி புலத்தில் இருக்கும் பெற்றோரின் வாழ்வியல் நிலையில் இருந்தோ பார்கிறோமோ அப்போது தான் தமிழ் பரந்து பட்ட அளவில் புலத்தில் பாவிக்கப் படக் கூடிய வகையிலான அணுகுமுறைகளைக் கண்டு அறிய முடியும்.
மேலும் சும்மா உணர்வு ரீதியான மேடைப் பேச்சுக்களால் இது சாதியப் படப் போவதில்லை.தமிழ் அமைப்புக்கள்,ஆசிரியர்கள்,ஊடகங்கள்,பல்கலைக் கழகங்கள் இணைந்து ,பெற்றோரையும்,குழந்தைகளையும் கவரக் கூடிய வகயிலான நவீன கல்விகற்றல் நடைமுறைகளை தமிழ் கற்க புலத்துச் சூழலை, வாழ்வியல் நடைமுறையை மைய்யமாக வைத்து உருவாக்க வேண்டும்.இன்று இணயத்தில் எத்தனை தளங்கள் இருகின்றன தமிழில் பிள்ளைகளை மையமாக வைத்து?எத்தினை புத்தகங்கள் இருகின்றன?எத்தினை நிகழ்ச்சிகள், புல ஊடகங்களில் குழந்தைகளை மையமாக வைத்து இருகின்றன?அவற்றில் எத்தினை தரமானவையாக குழந்தைகளைக் கவரக் கூடிய வகையில் இருகின்றன?