04-24-2006, 11:31 AM
சிலவற்றைத் தெளிவு படுதலாம் என்று நினைக்கிறேன்.
முதலில் புலத்தில் உள்ள தமிழர் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள், அவர்களின் சுய இருப்பை மையமாக வைத்து கூறப் படட வேண்டும்.அப்போது தான் அவர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை விளங்கி பிள்ளைக்களுக்கு தமிழ் படிப்பிப் பார்கள்.
இந்தக் காரணங்கள் எவை?
முதலில் புலத் தமிழருக்கு ,தாம் தமிழர் என்பதற்கான தேவை ஏன் உள்ளது?இப்போது பிரித்தானியாவை எடுத்துக் கொண்டோம் எனில்,வெள்ளயரைப் பொறுத்தவரை அனைத்து ஆசியர்களையும் ஒன்றாகவே நோக்குகின்றனர்.பெரும்பாலான ஆசியர்கள் இசுலாமியர்களாக இருகின்றனர்.ஒரு நாளும் வெள்ளை இனத்தவர்கள் தமது அரசியல் அதிகாரத்தை மற்றய இனத்தவருக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை.ஆகவே நாம் எமது நிறத்தையும்,பேரையும் மாற்றினால் ஒழிய நாம் வெள்ளயர் ஆகிவிட முடியாது. ஆகவே நாம் வெள்ளயர் ஆகிவிட முடியாது எனில் நாம் யார் என்று அடையாளம் காட்ட முடியும்?
இங்கே தம்மை பிரித்தானிய ஆசியர்கள் என்று அடையாளம் காட்ட சிலர் முற்படுகின்றனர்.ஆனால் இந்த அடையாளம்,ஆசியர்களில் பெரும்பான்மையினராக இருக்கும் பாகிஸ்த்தானிய,வங்காள தேச, மற்றும் இந்திய அடி ஒற்றிய சீக்கியர்,குஜராத்திகளின் கூட்டு அடையாளம் ஆக இருக்கிறது.அதோடு இவர்களின் அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்த பின் புலத்தில் பாகிஸ்த்தானிய மற்றும் இந்திய அரசுகள் செயற்படுகின்றன.அத்தோடு அவர்களும் செறிவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிறார்கள்,இதன் மூலம் உள்ளூர் பிரதினுத்துவத்தையும் தக்க வைத்துள்ளார்கள்.ஆனால் இசுலாமிய ஆசியர்களை பொறுத்தவரை ,சர்வதேச ரீதியாக அவர்களுக்கு இருக்கும் அடையாளப் பிரச்சினை இளய தலை முறையினரை ஆட் கொண்டுள்ளது.
நாம் தமிழராக எம்மை அடயாளப் படுத்தி ஒருங்கிணைப்பதன் மூலமும்,தமிழ் ஈழ அரசை நிறுவுவதன் மூலமும் பிரித்தானியாவில் எமது அரசியற் தரத்தை மேம் படுத்த முடியும்.இது ஏன் அவசியம் ஆகிறது.
இதற்கு உதாரணமாக சீனர்களை எடுத்துக் கொள்வோம்.சீனர்கள் தம்மை நிலை நிறுத்த தமது வியாபாரத்தை அதனால் வாழ்க்கையை வளம் படுத்த ,தமக்கிடயே ஆன தொடர்புகளை குடும்ப உறவுகளை வலுப்படுத்த தமது மொழியயைப் பாவிக்கின்றனர்.இவர்கள் சீனாவுக்குச் செல்லும் போது இவர்களுக்கு அவர்களின் மொழி அவசியமாகிறது.சீனாவில் இருக்கும் உறவினருடன் வியாபாரம் சம்பந்தமாக தொடர்புகொள்ள,சீன அரசுடன் ,கொங்கொங் அரசுடன் தொடர்புகொள்ள அங்கே ஒரு வியாபாரத்தை நடத்த மொழி இவர்களுக்கு அவசியமாகிறது.
ஆகவே வருங்காலத்தில் புலத் தமிழர்களின் சந்ததியினர் அரசியல் செல்வாக்குடன்,வியாபார வளத்துடன்,வேலை வாய்ப்புக்களுடன் வளமாக வாழ வேன்டின் அவர்கள் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.ஏனெனில் உலகில் நிரந்தரமான பேரரசுகள் கிடயாது.இன்றைய உலகப் பொருளாதார வளர்ச்சியானாது சீனாவையும்,இந்தியாவையும் அடி ஒற்றியதாகவே இருகிறது.இன்று மேற்குலகில் இருக்கும் வேலை வாய்ப்புக்கள் இப்படியே இருக்கும் என்று கூற முடியாது.இன்று மேற்குலகிற்குப் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் வேலை வாய்ப்பிற்காக மீண்டும் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.இது இன்று சீனர்களுக்கும்,இந்தியர்களுக்கும் நிதர்சனமான உண்மை.
மேற்கூறியவை வாழ்வியல் அல்லது பொருளாதாரக் காரணிகள்.
இனி ஒருவரிற்கான இனத்துவ ,மொழி அடயாளம் ஆனது ஒருவரின் ஆத்ம திருப்திக்கும்,உள வளத்திற்கும்,குடும்ப்ப உறவு நிலைகளுக்கும் அவசியமானதாகின்றது.மொழியில் இருந்தே ஒருவரின் பண்பாட்டு விழுமியங்கள் பகிரப் படுகின்றன.குடும்ப உறவு முறைகள் முரண் இல்லாது இருப்பதற்கு அந்த அந்த மொழியில் உள்ள பொதுவான பண்பாட்டு முறமைகள் ,ஊடகங்களினூடாக,உறவு நிலைகளிணூடாக பகிரப் பட வேண்டி உள்ளது.அத்தோடு சமூக ரீதியாக மொழி என்பது பல்வேறு நாடுகளில் பூகோள ரீதியாக பிரிக்கப்பட்டவர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது.இவ்வாறு ஏற்படும் உறவு முறையானது மனிதர்களுக்கு இருக்கும் சமூக உறவு என்னும் உளவளத் தேவயை நிறைவு செய்கிறது.இவை இன்று சிறுவர்களாக இருப்பவர்களால் உணர முடியாமல் விட்டாலும்,பின்னர் தாம் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று அவர்கள் பெரியவர்களானவுடன் உணரக்கூடும்.அப்போது தமது தாய் தந்தையரயே தமக்குத் தமிழைப் படிப்பிக்காததற்கு அவர்கள் குறை கூற முடியும்.
இவை பற்றிய ஆளமான அறிவோ ஆய்வோ இன்றி ,வருங்கால உலகம் பற்றிய தெளிவின்றி, நிகழ்காலத்தில் இருக்கும் உடனடித் தேவைகளைக் கொண்டே, பல புலத் தமிழர்கள் தமிழ் மொழியின் அவசியத்தை உணராமல் உள்ளனர்.
அடுத்ததாக தமிழ் மொழி படிப்பதில் உள்ள சிரமங்கள் நீக்கப் பட வேண்டும். நாம் இப்போதும் கரும்பலகையையும்,தமிழ் நாட்டுச் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களையுமே நம்பி உள்ளோம்.
புலத்தில் குழந்தைகளிற்கான கல்விச் செயற்பாடுகள் விளையாட்டினூடாகவே மேற் கொள்ளப்படுகின்றன.கற்பதென்பது இலகுவான விடயமாகப் பட்டு அது ஒரு விருப்பமான விடயமாக்கப் படுகிறது.ஆனால் தமிழ் படிப்பதென்பது பழமையான கற்பித்தல் நடைமுறைகளால் விருப்பம் இல்லாத ஒரு விடயமாகப் பட்டுள்ளது.எழுதப்பட்டுள்ள புத்தகங்களும் புலச் சூழலில் உள்ள விடயங்களை மையமாக வைத்து எழுதப் படாததனால் ,குழந்தைகளுக்கு அன்னியமாகா இருகின்றன.சிறுவயது முதல் தமிழை விரும்பிப் படிக்கும் துயாவிற்கே இன்னும் எழுத்துப்பிழை இன்றி தமிழை எழுத முடியாமல் இருக்கிறது என்றால், தமிழ் கற்பிக்கப்படும் முறமையில் மாற்றங்கள் வேண்டும் அல்லவா?
அத்தோடு தமிழ் வகுப்புக்கள் என்பது எல்லா இடத்திலும் இல்லை.தமிழர்கள் செறிவாக இருக்கும் இடங்களிலயே உள்ளன.அதோடு தேவைக்கேற்றவாறு தற்போது வகுப்புக்களில் இடம் கிடைப்பதில்லை.ஆகவே கற்றலை வகுப்புக்கள் என்றில்லாமல் விளயாட்டினூடாக, உதாரணத்திற்கு தமிழில் கணணியில் விளயாடக் கூடிய கேம்களை உருவாக்குவதன் மூலம், சிறுவர்களைக் கவரும் வண்ணம் காட்டூன் அனிமேசன்கள் மூலம் கற்பிக்கலாம்.இவ்வாறான விடயங்களை புலத்தில் கல்வி கற்கும் 'இளஞர்க'ள் உருவாக்க வேண்டும்.குழந்தைகள் தமிழ் கற்பதற்கான இணயத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றிற்கான தேவை உள்ளதால் வியாபார ரீதியாகக்கூட இவை வெற்றி அழிக்கும்.
மேடைப் பேச்சுக்களை விட இப்படியான செயற்பாடுகளே இப்போது புலத்தில் தேவயானதாக இருக்கின்றது.
முதலில் புலத்தில் உள்ள தமிழர் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள், அவர்களின் சுய இருப்பை மையமாக வைத்து கூறப் படட வேண்டும்.அப்போது தான் அவர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை விளங்கி பிள்ளைக்களுக்கு தமிழ் படிப்பிப் பார்கள்.
இந்தக் காரணங்கள் எவை?
முதலில் புலத் தமிழருக்கு ,தாம் தமிழர் என்பதற்கான தேவை ஏன் உள்ளது?இப்போது பிரித்தானியாவை எடுத்துக் கொண்டோம் எனில்,வெள்ளயரைப் பொறுத்தவரை அனைத்து ஆசியர்களையும் ஒன்றாகவே நோக்குகின்றனர்.பெரும்பாலான ஆசியர்கள் இசுலாமியர்களாக இருகின்றனர்.ஒரு நாளும் வெள்ளை இனத்தவர்கள் தமது அரசியல் அதிகாரத்தை மற்றய இனத்தவருக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை.ஆகவே நாம் எமது நிறத்தையும்,பேரையும் மாற்றினால் ஒழிய நாம் வெள்ளயர் ஆகிவிட முடியாது. ஆகவே நாம் வெள்ளயர் ஆகிவிட முடியாது எனில் நாம் யார் என்று அடையாளம் காட்ட முடியும்?
இங்கே தம்மை பிரித்தானிய ஆசியர்கள் என்று அடையாளம் காட்ட சிலர் முற்படுகின்றனர்.ஆனால் இந்த அடையாளம்,ஆசியர்களில் பெரும்பான்மையினராக இருக்கும் பாகிஸ்த்தானிய,வங்காள தேச, மற்றும் இந்திய அடி ஒற்றிய சீக்கியர்,குஜராத்திகளின் கூட்டு அடையாளம் ஆக இருக்கிறது.அதோடு இவர்களின் அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்த பின் புலத்தில் பாகிஸ்த்தானிய மற்றும் இந்திய அரசுகள் செயற்படுகின்றன.அத்தோடு அவர்களும் செறிவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிறார்கள்,இதன் மூலம் உள்ளூர் பிரதினுத்துவத்தையும் தக்க வைத்துள்ளார்கள்.ஆனால் இசுலாமிய ஆசியர்களை பொறுத்தவரை ,சர்வதேச ரீதியாக அவர்களுக்கு இருக்கும் அடையாளப் பிரச்சினை இளய தலை முறையினரை ஆட் கொண்டுள்ளது.
நாம் தமிழராக எம்மை அடயாளப் படுத்தி ஒருங்கிணைப்பதன் மூலமும்,தமிழ் ஈழ அரசை நிறுவுவதன் மூலமும் பிரித்தானியாவில் எமது அரசியற் தரத்தை மேம் படுத்த முடியும்.இது ஏன் அவசியம் ஆகிறது.
இதற்கு உதாரணமாக சீனர்களை எடுத்துக் கொள்வோம்.சீனர்கள் தம்மை நிலை நிறுத்த தமது வியாபாரத்தை அதனால் வாழ்க்கையை வளம் படுத்த ,தமக்கிடயே ஆன தொடர்புகளை குடும்ப உறவுகளை வலுப்படுத்த தமது மொழியயைப் பாவிக்கின்றனர்.இவர்கள் சீனாவுக்குச் செல்லும் போது இவர்களுக்கு அவர்களின் மொழி அவசியமாகிறது.சீனாவில் இருக்கும் உறவினருடன் வியாபாரம் சம்பந்தமாக தொடர்புகொள்ள,சீன அரசுடன் ,கொங்கொங் அரசுடன் தொடர்புகொள்ள அங்கே ஒரு வியாபாரத்தை நடத்த மொழி இவர்களுக்கு அவசியமாகிறது.
ஆகவே வருங்காலத்தில் புலத் தமிழர்களின் சந்ததியினர் அரசியல் செல்வாக்குடன்,வியாபார வளத்துடன்,வேலை வாய்ப்புக்களுடன் வளமாக வாழ வேன்டின் அவர்கள் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.ஏனெனில் உலகில் நிரந்தரமான பேரரசுகள் கிடயாது.இன்றைய உலகப் பொருளாதார வளர்ச்சியானாது சீனாவையும்,இந்தியாவையும் அடி ஒற்றியதாகவே இருகிறது.இன்று மேற்குலகில் இருக்கும் வேலை வாய்ப்புக்கள் இப்படியே இருக்கும் என்று கூற முடியாது.இன்று மேற்குலகிற்குப் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் வேலை வாய்ப்பிற்காக மீண்டும் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.இது இன்று சீனர்களுக்கும்,இந்தியர்களுக்கும் நிதர்சனமான உண்மை.
மேற்கூறியவை வாழ்வியல் அல்லது பொருளாதாரக் காரணிகள்.
இனி ஒருவரிற்கான இனத்துவ ,மொழி அடயாளம் ஆனது ஒருவரின் ஆத்ம திருப்திக்கும்,உள வளத்திற்கும்,குடும்ப்ப உறவு நிலைகளுக்கும் அவசியமானதாகின்றது.மொழியில் இருந்தே ஒருவரின் பண்பாட்டு விழுமியங்கள் பகிரப் படுகின்றன.குடும்ப உறவு முறைகள் முரண் இல்லாது இருப்பதற்கு அந்த அந்த மொழியில் உள்ள பொதுவான பண்பாட்டு முறமைகள் ,ஊடகங்களினூடாக,உறவு நிலைகளிணூடாக பகிரப் பட வேண்டி உள்ளது.அத்தோடு சமூக ரீதியாக மொழி என்பது பல்வேறு நாடுகளில் பூகோள ரீதியாக பிரிக்கப்பட்டவர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது.இவ்வாறு ஏற்படும் உறவு முறையானது மனிதர்களுக்கு இருக்கும் சமூக உறவு என்னும் உளவளத் தேவயை நிறைவு செய்கிறது.இவை இன்று சிறுவர்களாக இருப்பவர்களால் உணர முடியாமல் விட்டாலும்,பின்னர் தாம் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று அவர்கள் பெரியவர்களானவுடன் உணரக்கூடும்.அப்போது தமது தாய் தந்தையரயே தமக்குத் தமிழைப் படிப்பிக்காததற்கு அவர்கள் குறை கூற முடியும்.
இவை பற்றிய ஆளமான அறிவோ ஆய்வோ இன்றி ,வருங்கால உலகம் பற்றிய தெளிவின்றி, நிகழ்காலத்தில் இருக்கும் உடனடித் தேவைகளைக் கொண்டே, பல புலத் தமிழர்கள் தமிழ் மொழியின் அவசியத்தை உணராமல் உள்ளனர்.
அடுத்ததாக தமிழ் மொழி படிப்பதில் உள்ள சிரமங்கள் நீக்கப் பட வேண்டும். நாம் இப்போதும் கரும்பலகையையும்,தமிழ் நாட்டுச் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களையுமே நம்பி உள்ளோம்.
புலத்தில் குழந்தைகளிற்கான கல்விச் செயற்பாடுகள் விளையாட்டினூடாகவே மேற் கொள்ளப்படுகின்றன.கற்பதென்பது இலகுவான விடயமாகப் பட்டு அது ஒரு விருப்பமான விடயமாக்கப் படுகிறது.ஆனால் தமிழ் படிப்பதென்பது பழமையான கற்பித்தல் நடைமுறைகளால் விருப்பம் இல்லாத ஒரு விடயமாகப் பட்டுள்ளது.எழுதப்பட்டுள்ள புத்தகங்களும் புலச் சூழலில் உள்ள விடயங்களை மையமாக வைத்து எழுதப் படாததனால் ,குழந்தைகளுக்கு அன்னியமாகா இருகின்றன.சிறுவயது முதல் தமிழை விரும்பிப் படிக்கும் துயாவிற்கே இன்னும் எழுத்துப்பிழை இன்றி தமிழை எழுத முடியாமல் இருக்கிறது என்றால், தமிழ் கற்பிக்கப்படும் முறமையில் மாற்றங்கள் வேண்டும் அல்லவா?
அத்தோடு தமிழ் வகுப்புக்கள் என்பது எல்லா இடத்திலும் இல்லை.தமிழர்கள் செறிவாக இருக்கும் இடங்களிலயே உள்ளன.அதோடு தேவைக்கேற்றவாறு தற்போது வகுப்புக்களில் இடம் கிடைப்பதில்லை.ஆகவே கற்றலை வகுப்புக்கள் என்றில்லாமல் விளயாட்டினூடாக, உதாரணத்திற்கு தமிழில் கணணியில் விளயாடக் கூடிய கேம்களை உருவாக்குவதன் மூலம், சிறுவர்களைக் கவரும் வண்ணம் காட்டூன் அனிமேசன்கள் மூலம் கற்பிக்கலாம்.இவ்வாறான விடயங்களை புலத்தில் கல்வி கற்கும் 'இளஞர்க'ள் உருவாக்க வேண்டும்.குழந்தைகள் தமிழ் கற்பதற்கான இணயத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றிற்கான தேவை உள்ளதால் வியாபார ரீதியாகக்கூட இவை வெற்றி அழிக்கும்.
மேடைப் பேச்சுக்களை விட இப்படியான செயற்பாடுகளே இப்போது புலத்தில் தேவயானதாக இருக்கின்றது.