04-25-2006, 04:39 AM
"லக்கி லுக்" ஆரம்ப காலங்களில் எழுதியவையையும். ஏனைய பிற இணையத்தளங்களில் எழுதியவையையும் ஒரு தடவை வாசித்து பார்த்தேன். ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி குழப்பகரமான கருத்துக்களை முன் வைப்பதே இவரது உள்நோக்கம்! ஈழ மக்களை நான் நேசிக்கிறேன் புலிகளின் தலைவரின் திறமைகளை நான் பாராட்டுகிறேன் என்று இவரே பலமுறை எழுதியிருக்கிறார். பின்பு அதே நாளிலேயே பிறிதொரு தளத்தில் துற்றியிருக்கிறார். சில வேளைகளில் "ஆ" அப்படியெல்லாம் ஈழத்தில் நடந்ததா? நான் அறிந்திருக்கவில்லை என்று சரணடைவது போலும் நடித்திருக்கிறார். இவர் யார் என்பதை அறிய கூடிய ஆற்றலும் அறிவும் எமக்கில்லாதிருப்பினும்...... இவரின் உள்மனதில் எதோ திட்டம் இருப்பதை உணர முடிகிறது. இல்லாவிடின் இவர் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும். அதற்கான சாத்திய கூறுகள் மிக சொற்பம். மிகவும் அறிவாகவே எழுதுகிறார். ஒரு கருத்திற்கு எதிர்கருத்து வைப்பது என்பது புத்திசாலிதனமில்லை. நாம் வைக்கும் கருத்தை அர்த்தப்பட வைக்க வேண்டும் அதுவே அறிவுடமை. இந்தியாவை ஈழ தமிழர்கள் எதிர்கிறார்கள்..... அப்படியானால் நான் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுடைய ஒரு இந்தியனால் எண்ண முடியும் என்று நான் எண்ணவில்லை. லக்கி லுக்கின் கோமாளி தனத்தால் நாம் இந்தியாவை வெறுப்பது போன்றது அது. தமிழகத்தையும் ஈழத்தையும் பிரிக்க முடியாது என்பது பலமுறை நிருபிக்க பட்டிருக்கின்றது இருப்பினும் சிலர் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். "முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை" என்பதற்காக பாலைவனத்தில் மீனுக்கு வலை வீசுவது நேரத்தை வீணடிப்பது தவிர வேறொன்றும் இல்லை. குள்ளநரி அரசியல்வாதிகள் ஆட்சி ஏறினால் கொஞ்சம் இடைவெளி தோன்றும் அவ்வளவுதான். அவரது ஆட்சி முடியும் போதே அந்த இடைவெளியும் குறைந்து விடும். தமிழகத்தை பொறத்தவரை படிப்பறிவு குறைந்தவர்களின் சனத்தொகை அதிகம். வெளியுலகம் அறியாதவரே பெரும்பாண்மையினர். அவர்களக்கு அவர்களது வயிற்று பிழைப்பை பார்க்கவே பெரிதும் போரட வேண்டியிருக்கிறது! இந்நிலையில் வெளிபிரச்சனைகளை வீண்பிரச்சனைகளாகவே இவர்கள் பார்ப்பார்கள். "உலகமயமாதல்" எனும் போருக்கு முகம் கொடுக்கும் போது அப்துல் கலாம் போன்ற அறிவுள்ளவர்கள் கதிரைகளை எட்டுவதை இந்தியா விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுகொண்டே தீர வேண்டும். அறிவுள்ள நல்லவர்கள் ஆட்சி ஏறினால் தர்மம் தலைதுக்குவதை தடுக்க முடியாது. அது தவிர இந்திய மக்களின் படிப்பறிவை கூட்டட வேண்டிய கட்டாய தேவை அங்கே வந்திருக்கிறது ஆகவே முதலீட்டாளர்களின் போட்டிக்கு முகம் கொடுப்பதற்கும் இந்தியா தன்னை தயர் செய்கிறதது. என்ன எப்படியெல்லாம் நடந்தாலும் இந்த "றோ" வால் எக்காலத்திலும் ஈழத்தவர்களாகிய எங்களை சகிக்க முடியாது. இந்திய பிரதமரை தவிர வேறு எந்த இந்தியராலும் அவர்களை அடக்கவும் முடியாது. போட்டான போட்டி போட்டும் எமது தலைமையை அவர்களால் நெருங்க முடியவில்லை. சொந்த நாட்டில் பட்டினியால் கூடபிறந்தவன் சாகிறான் ஆனால் புலிகளை அழிக்க கோடி கோடியாய் கொட்டுகிறார்கள். நாம் யானை என்றால் ஈழம் ஒரு எறும்பு என்று வாத்தை விட்டவர்களை சாதரண புலிகள் மூச்சை விட வைத்து விட்டார்கள் என்ற உள் கோபம் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும். பிரந்திய வல்லரசு எனும் போது எல்லாமே தனது கையடக்கத்திற்குள் இருக்கவே இந்தியா எண்ணுகிறது ஆனல் சிங்கள அரசாங்கமே அதற்கு சவாலாக இருக்கும். அதனால்தான் அண்மைகாலங்களில் இந்தியா தனது போக்கை அமெரிக்காவை பார்த்து கொப்பி அடித்து சிறிலங்கா அரசுக்கு உதவிசெய்து கையுக்குள் போட பார்கிறது. பாவம் றோ" இது கறக்க கூடிய நேரம் கறந்து விட வேண்டும் என்று இலங்கை பார்க்கிறது. இந்தியா இப்போது கொஞசம் புரிந்து விட்டது இது வீண் வேலை என்று அதுதான் நடு நிலைமை இப் கொஞ்ச நாட்களாய் பொங்கி வழுயுது. பத்து வருடங்களின் பின்பு உலகத்தில் பாரிய மாற்றங்கள் வரும் அதாவது வியாபராPதியில் அப்போது இந்தியாவின் போட்டியாளர்களுக்கு இலங்கை ஒரு முக்கிய நாடாக அமையும். அதுதான் யப்பான் இப்போதே சமாதானத்திற்கு முக்குகிறது. சீனா ஆயுத உதவிகளை அள்ளி வழங்குகிறது. "கசப்பானதுதான்" இலங்கைக்கு இப்போ அதிர்ஸ்ட காலம்தான்.
பின்பு தொடர்கிறேன்.....................
பின்பு தொடர்கிறேன்.....................
I dont hate anyland.....But Ilove my motherland