04-25-2006, 05:41 AM
putthan Wrote:சிறிலங்காவில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள மீனவ சமூகம் 50 வருடங்களுக்கு முன் தமிழ் அவர்களுடைய பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்தது ஆனால் இப்போது அவர்களின் பிள்ளைகள் பேரபிள்ளைகள் எல்லோரும் சிங்கள மொழி தான் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாவும் மாறி அவர்கள் சிங்களவராக மாறியுள்ளார்கள். <b>இதற்கு காரணம் அவர்கள் சிங்கள சமுதாயத்தில் வாழ்ந்ததால்</b>.
காரணம் சிங்களச் சமுதாயத்தில் வாழ்ந்ததல்ல. அது திட்டமிட்டு செய்யப்பட்ட மாற்றங்கள். பாடசாலைகள் படிப்படியாச் சிங்களமயமாக்கப்பட்டன. குழந்தை பிறந்து பாடசாலை செல்லவேண்டும் எனில் தமிழ் பாடசாலைக்குப் போவதென்றால் தூர இடமொன்றிற்குச் செல்லவேண்டிய நிலை. அதன் பிறகு இருந்த பாடசாலைகளும் மாணவர்கள் வரவில்லை என்று திட்டமிட்டு சிங்களப் பாடசாலையாக மாற்றப்பட்டன. அதனால் அப்பகுதி தமிழ்மாணவர்கள் போவதற்கு வேறு இடமின்றி சிங்களப்பாடசாலைகளில் சேர்ந்தனர். அப்பகுதி மக்களிற்கு தம் குறைகளைக் கூறி தீர்வு பெறுவதற்கு அரசியலில் ஓர் பலம் இருக்கவில்லை. இன்றும் கூட சிங்களத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீடுகளிலும் தம் குடும்பத்தாருடனும் தமிழில் பேசுவதை காணலாம். தாம் திட்டமிட்டு சிங்களவராக மாற்றப்படுகிறோம் என்னும் கவலை அவர்களிற்கு உண்டு. ஆயினும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நிலையில் அவர்களிற்கு பின்புலம் இல்லை என்பதே உண்மையான விடயமாகும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.