Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கள்ளமற்ற மழழைகள் கருகி துடித்ததை எண்ணி
#5
கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த பள்ளி குழந்தைகளிற்கு எமது... கண்ணீர் அஞ்சலிகள்.........!

தரத்தான் முடியுமா...

பள்ளிக்கே சென்றீர்...
பாலகர் நீர் பள்ளிக்கே சென்றீர்....
என்ன காலம் வந்தது உமக்கு....
முழிசாய் பத்து முடியவில்லை...
மரணம் உங்களை ஆட்கொண்டதென்ன?...

காத்திருந்தாற் போல் காவிச்சென்றானே பாவி...
கண்ணில்லையோ அந்த காலனுக்கு..
பாலகரை வதம் செய்தானே...
பள்ளி சென்ற பாலகர்க்கு
தீ வடிவில் வந்தானே...!

தீருமா இந்த இழப்பு...
கோடி கோடியாய் கொட்டிக் கெடுத்தாலும்....
ஒன்றா இரண்டா....
ஒன்றாக என்பது.... தாங்குமா பெற்ற மனம்...

தீயில் கருகும் போது என்ன எண்ணியிருப்பீர்
தீராத ஆசைகளையா?...
பாதில் பறி கொடுத்த பெற்றோரையா?
இல்லை...
நடப்பது ஏதென்று அறியமலே நின்றீரா?

ஒப்பாரியின் ஓலத்தை
ஒவ்வொரு வீட்டிலும் கேட்பீரா...
உம்மை ஈன்றவள்...
உயிரிழந்து தவிப்பதை நீர் அறிவீரா...?

உங்கள் உயிருக்கு உத்தரவாதம்
இல்லாமல் ஏன் போனது...
காலனின் கட்டலையா? இல்லை..
பணம் சேர்ப்பதில்.. அவசரமா?..
காலத்தில் பழியைப்போடுவார்களா?
இல்லை
உமது மடிவுக்கு.. நியாயம் கிடைக்குமா...?
என்ன தான் முடிவு வந்தாலும்....
அது உங்களை திருப்பி தருமா?
இல்லை தரத்தான் முடியுமா?
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 07-20-2004, 02:42 PM
[No subject] - by இளைஞன் - 07-20-2004, 03:36 PM
[No subject] - by tamilini - 07-20-2004, 03:42 PM
[No subject] - by tamilini - 07-20-2004, 04:48 PM
[No subject] - by வெண்ணிலா - 07-20-2004, 05:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)