02-02-2005, 12:02 AM
வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.
<b> . .</b>