02-02-2005, 05:10 PM
பொதுவாக எல்லா மொழிகளிலும் வேற்று மொழிக்கலப்பு ஏற்பட்டேயுள்ளது. ஆங்கிலத்தில் கூட நிறைய இலத்தீன் சொற்கள் கலந்துள்ளன. ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டுமாயின் புதுப்புதுச் சொற்கள் உருவாக வேண்டும். ஆனால் தமழில் ஒவ்வொருவரும் தமது மனம் போன போக்கில் சொற்களை உருவாக்கி உபயோகித்து வருகின்றனர். இதனால் பல குழப்பங்களே உருவாகின்றன. என்னைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்து சிறந்த தமிழ்மொழி வல்லுனர்களை தெரிவு செய்து அவர்கள் மூலம் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி அவரகள் மூலமாகவே புதுப்புதுச் சொற்களை உருவாக்கினால் தமிழ்மொழியும் வளர்ச்சியடையும் நாமும் பயன் பெறுவோம். எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களும் பொதுவான ஒரு முறையை பின்பற்றலாம். இதனால் எமது வருங்காலச் சந்ததியினரும் இலகுவாக தமிழ்மொழியை கற்றுக் கொள்ள சில இலகுவான வழிமுறைகளும் உருவாகலாம். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்மொழி எனும் தேரின் வடத்தைப் பிடித்திழுத்தால் மொழி வளர்ச்சி எனும் சக்கரம் சுற்றாமலா விடப்போகின்றது. ஒன்றாகவே முயற்சிப்போம்.