02-14-2005, 12:07 PM
காதல் என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. அது பல வடிவங்களில் இருக்கலாம். தாய் தந்தயிடம் மகனோ அல்ல மகளோ அன்பு செலுத்துவதும் காதலே. ஆனால் இன்றய இப் பொன்நாள் ஒரு காதலன் தன் காதலியிடமோ அல்ல காதலி தன் காதலனிடமோ தன் உணர்வை வெளிப்படுத்த உகந்த நன் நாள். அகத்தோடு மட்டும் நிற்பவை அல்ல காதல் உணர்வின் விளிப்பாடுகள். அகத்தில் தோன்றுகின்ற அன்பின் வெளிப்பாடு புறத்திலிம் எதிரொலிப்பதனை நாம் பல சந்தர்ப்பங்களில் காண்கின்றோம். சோகம் கூட ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அதன் எதிரொலியினை அழுகையின் வடிவில் நாம் புறத்தில் காண்கின்றோம்.
எனவே உணர்வுகள் அகத்தில் அடக்கி வைக்கப் படுபவை அல்ல அவை புறத்திலும் உணரப்படுபவை. சமத்துவத்தை வெளிப்படுட்த்தும் காதலர் தினம் புனிதமானதே. இப் புனித நாளை தமிழர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை.
எனவே உணர்வுகள் அகத்தில் அடக்கி வைக்கப் படுபவை அல்ல அவை புறத்திலும் உணரப்படுபவை. சமத்துவத்தை வெளிப்படுட்த்தும் காதலர் தினம் புனிதமானதே. இப் புனித நாளை தமிழர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை.